<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-33343731</id><updated>2012-02-15T23:37:58.728-08:00</updated><title type='text'>ஆன்மீக பயணம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>341</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-7315395097158839275</id><published>2011-12-29T15:02:00.000-08:00</published><updated>2011-12-29T15:16:11.229-08:00</updated><title type='text'>நமசிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க!  சண்டேச அனுகிரஹமூர்த்தி!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-eeyy7U8lj3g/TvzzS3FqOSI/AAAAAAAAGOM/5h4rgLY8Bn4/s1600/images%25E0%25AE%259A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 222px; height: 227px;" src="http://4.bp.blogspot.com/-eeyy7U8lj3g/TvzzS3FqOSI/AAAAAAAAGOM/5h4rgLY8Bn4/s320/images%25E0%25AE%259A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691691534440347938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சோழநாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஊர் திருச்சேய்ஞலூர் ஆகும்.  சூரனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான் இந்தத்தலத்தில் ஈசனை வணங்கி உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார்.  சர்வசங்காரப் படை என்றும் கூறுவர்.  சேய் வழிபட்ட ஊராகையால் சேய் நல் ஊர் என்பது மருவி திருச்சேய்ஞலூர் என்றாகித் தற்காலத்தில் சேங்கலூர் என வழங்கப் படுகிறது.  காவிரியின் கிளைநதியாகிய மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்திற்கு மண்ணியாறே தீர்த்தமாகவும் அமைந்துள்ளது.  இவ்வூரில் யக்ஞதத்தன் என்னும் பெயர் கொண்ட அந்தணன் ஒருவனுக்கும் பத்திரை என்னும் அவன் மனைவிக்கும் ஒரு ஆண்மகவு பிறந்தது.  அந்தக் குழந்தைக்கு விசாரசருமன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள்.  பிறக்கையிலேயே தெளிந்த அறிவோடு பிறந்த அந்தக் குழந்தைக்கு யாரிடமும் பயிலாமலேயே தானே அனைத்தையும் உணரும் அறிவு இருந்தது.  வேதங்களை நன்கு உணர்ந்திருந்தான்.  உரிய வயதிலே தகப்பனால் உபநயனமும் செய்விக்கப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேத ஆகமங்களின் வழி நடந்த அந்த இளைஞன் ஈசன் ஒருவனே நம்மை வழிநடத்த வல்லான் என்ற பேரறிவை மிகச் சிறு வயதிலேயே பெற்றிருந்தான்.  அன்றாடம் சிவ வழிபாடு செய்து வந்தான். அவனுடைய நண்பன் ஒருவன் பசுக்களை மேய்க்கையில் ஒரு பசு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றது கண்டு அதை அடித்தான்.  இதைக் கண்ட விசாரசருமனுக்கு மனம் துடித்தது.  வாயில்லாப் பிராணியான பசுவை அடிக்கக் கூடாது என நினைத்துத் தானே அன்று முதல் பசுக்களை மேய்க்கும் பணியை வலிந்து ஏற்றான்.  பசுக்களை தெய்வமாய்க் கண்டதால் அவற்றைச் சிறப்பான முறையில் பராமரித்து வந்ததோடு, வழிபாடுகளும் செய்து வந்தான்.  பசுக்களை மேய்க்கையிலேயே நேரத்தை வீணாக்காமல் அந்த மண்ணியாற்றங்கரையிலேயே அங்குள்ள அத்திமரத்தின் கீழே மணலால் சிவலிங்கம் அமைத்து, கருவறை, மண்டபம், சுற்றுச்சுவர்கள், கருவறை விமானம், கோபுரங்கள் போன்றவை அமைத்துக் கோயில் போலக் கட்டி வழிபாடுசெய்தான்.  பசுக்கள் விசாரசருமனின் பராமரிப்பில் செழித்துக் காணப்பட்டதோடு பாலையும் தாராளமாய்ச் சொரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பசுக்களின் பாலைக் கறந்து தான் கட்டிய மண்ணாலான கோயிலின் வழிபாட்டிற்கும், அபிஷேஹத்துக்கும் அந்தப் பாலைப் பயன்படுத்திக்கொண்டான் விசாரசருமன்.  நாளாவட்டத்தில் இது அன்றாட நடவடிக்கையானது.  பசுக்களின் சொந்தக்காரர் பொறுத்துப் பார்த்தும் முடியாமல் விசாரசருமனின் தந்தையிடம் புகார் செய்தார்.  அவர் அனைத்தையும் கேட்டுவிட்டுத் தன் மகனைத் தாம் கண்டிப்பதாய்க் கூறினார்.  அதன் பேரில் மறுநாள் பசுக்களை மேய்ச்சலுக்கு விசாரசருமன் அழைத்துச் சென்றதும் தந்தையார் பின் தொடர்ந்தார்.  என்ன நடக்கிறது என்று பார்க்கையில் மணலால் கோயில் கட்டி மகன் வழிபாடுகள் செய்வதையும், கறக்கும் பாலெல்லாம் அதற்கே செலவாவதையும் கண்டார்.  மகனைக் கண்டித்தார்.  ஆனால் தன் வழிபாட்டில் ஆழமாக ஒருமித்த நினைப்போடு மூழ்கி இருந்த விசார சருமனுக்குத் தந்தையின் குரல் காதில் விழவில்லை.  தந்தை அவர் முதுகில் ஓங்கி அடித்தார்.  அப்போதும் விசாரசருமனின் ஒருமித்த வழிபாடு கலையவில்லை.  தந்தையார் கோபத்துடன் பால்குடங்களை எட்டி உதைத்தார்.  எல்லாப் பாலும் மணலில் கொட்டிக் கவிழ்ந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்த்த விசார சருமர் கோபத்துடன் கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துத் தந்தையை ஓங்கி அடித்தார்.  என்ன ஆச்சரியம்! அவர் கையில் எடுத்த கம்பு மழுவாக மாறி விசாரசருமரின் தந்தையாரின் காலை வெட்டிவிட்டது.  துடித்துப் போனார்கள் இருவரும். தந்தை அப்போதே இறந்தார் என்றும் கூறுவார்கள். அப்போது அங்கே அன்னையோடு காட்சி கொடுத்த ஐயன் தன் சடாமுடியில் சூடிக்கொண்டிருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்து, தம் அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தையும் அவருக்குக் கொடுத்து, “விசாரசருமா!  உம் தொண்டை நாம் மெச்சினோம். இன்று முதல் உன் தந்தை நாமே!  எம் அடியார்களுக்கெல்லாம் இன்று முதல் நீ தலைவனாக இருப்பாய்.  எம்மைத் தரிசிக்க எவர் வந்தாலும் உன்னையும் தரிசித்து உன்னிடம் தாங்கள் எம்மைத் தரிசித்ததைச் சொல்லிவிட்டுப் போவார்கள்.  இன்று முதல் நீ சண்டேசன் என்ற பதவியைப் பெறுவாய்!” எனக் கூறித் தம் திருக்கரங்களால் சண்டேசருக்கு அனுகிரஹம் செய்தார்.  தம் திருக்கரங்களால் பரிவட்டத்தையும் சூட்டிக் கொன்றை மாலையையும் சூட்டினார்.&lt;a href="http://3.bp.blogspot.com/--B41kzpP87M/Tvz0IAIkhoI/AAAAAAAAGOY/XxHpLXyT-_4/s1600/spectacular.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 113px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/--B41kzpP87M/Tvz0IAIkhoI/AAAAAAAAGOY/XxHpLXyT-_4/s320/spectacular.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691692447401543298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://poetryinstone.in/lang/ta/2008/10/28/a-masterpiece-of-sculptural-beauty-from-gangai-konda-cholapuram.html#comments&gt;படம் நன்றி விஜய்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரே சண்டேச அனுகிரஹ மூர்த்தி என்பார்கள்.  சண்டேசருக்குப் பரிவட்டத்தைச் சூட்டும் கோலத்தில் காணப்படுவார்.  சேங்கனூர் என்னும் திருச்சேய்ஞலூரில் சண்டேசர் பிறை, சடை, குண்டலம் போன்றவற்றோடு காணப்படுவார் என்கிறார்கள்.  திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் திருச்சேய்ஞலூர் தேவாரத்தில் கீழ்க்கண்ட பாடல் ஈசனின் இந்தத் திருவிளையாடலைப் பாடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை&lt;br /&gt;வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்&lt;br /&gt;தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே&lt;br /&gt;சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.     521&lt;br /&gt;&lt;br /&gt;கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலான இது கட்டுமலை மேல் உள்ளது.  கர்பகிரஹத்தைச் சுற்றிக் கட்டுமலை மேல் ஒரு பிராகாரமும், கீழே ஒரு பிராஹாரமும் உள்ளன.   இறைவன் இஙே சத்யகிரீஸ்வரர் என்ற பெயரோடும், அன்னை சகிதேவியம்மை என்ற பெயரோடும் அருள் பாலிக்கின்றனர்.  சண்டேசர் அன்று முதல் இறைவனின் மகனாக ஆனதால் இறைவனது நிர்மாலியத் தொட்டிக்கும் சண்டேசரின் கோயிலுக்கும் குறுக்கே எவரும் செல்லமாட்டார்கள்.  தஞ்சைப் பெரிய கோயில் சண்டேச சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச சிற்பம் ஆகியன அவற்றின் எழில் அமைப்பால் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட குறிப்புகள் அனைத்தும் சென்னையில் இருப்பதால் இணையத்தில் இருந்தும், விக்கிபீடியா, சைவம் ஆர்க் தளங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டி எழுதி உள்ளேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-7315395097158839275?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/7315395097158839275/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=7315395097158839275' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7315395097158839275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7315395097158839275'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/12/blog-post_29.html' title='நமசிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க!  சண்டேச அனுகிரஹமூர்த்தி!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-eeyy7U8lj3g/TvzzS3FqOSI/AAAAAAAAGOM/5h4rgLY8Bn4/s72-c/images%25E0%25AE%259A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-8975687951333175209</id><published>2011-12-12T17:11:00.000-08:00</published><updated>2011-12-12T17:15:06.686-08:00</updated><title type='text'>பெரிய பாளையம் பவானி அம்மன் ! வேப்பிலை ஆடை அணியும் பக்தர்கள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-eJrMakWETcw/Tuam7mSXwlI/AAAAAAAAGKU/F9c6kIvx2fc/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 245px;" src="http://2.bp.blogspot.com/-eJrMakWETcw/Tuam7mSXwlI/AAAAAAAAGKU/F9c6kIvx2fc/s320/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685415122421924434" /&gt;&lt;/a&gt;சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியபாளையம்.  அங்கே உள்ள பவானி அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆனது.  அந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடாக வேப்பிலையால் ஆடை அணிந்து கொண்டு நிறைவேற்றுவார்கள்.  ஆகவே நாங்கள் சுருட்டப்பள்ளி சென்ற போது அங்கேயும் செல்ல நினைத்துச் சென்றோம். நாங்கள் போனபோது சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைத்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்.  பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் ஒரு கூற்று உண்டு.   அம்மன் கையில் சக்கரமும் உள்ளது; கபாலமும் உள்ளது.  அந்தக் கபாலத்தில் முப்பெரும் தேவியர் அடக்கம் எனப் படுகிறது.  அம்மன் அவ்வளவு சக்தி வாய்ந்தவள் என்கின்றனர். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-yt3VRa1wjKY/Tuam4bX7QKI/AAAAAAAAGKI/AHPM5AOC9A4/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 180px;" src="http://1.bp.blogspot.com/-yt3VRa1wjKY/Tuam4bX7QKI/AAAAAAAAGKI/AHPM5AOC9A4/s320/%25E0%25AE%25AA%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685415067952824482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இங்கே கோயில் கொண்டிருப்பது பவானி அம்மனா? ரேணுகா தேவியா?? சந்தேகம் துளைத்தது.  ஆகவே கோயில் தல வரலாற்றைக் கேட்டோம். தல வரலாற்றின் மூலம் ரேணுகா தேவியே இங்கே பவானி அம்மன் என்ற பெயரில் வீற்றிருப்பதாய்த் தெரிய வந்தது.  தலவரலாறு வருமாறு:  ஆந்திராவில் இருந்து குறிப்பிட்ட நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள்.  அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்தும் வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர்.  தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு.  வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார்.  அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள்.  தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள்.  அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார்  முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார்.  அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;பின்னர் எழுந்து அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம்.  அதிர்ச்சி அடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது.   கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது.  ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார்.  முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார்.  இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது.  கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகா தேவி.  நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன்.  சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன்.  நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள்.  வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார்.  பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார்.  ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார்.  உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர்.  ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு அல்லாமல் ரத்தமும் பீறிடத் தொடங்கியது.  மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரஹம் அகப்பட்டது.  அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது.  செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது.  அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது.  சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள்.  அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர். &lt;br /&gt; &lt;br /&gt;ஆக ரேணுகா தேவியே இங்கே பவானி என்ற பெயரில் பவனின் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள் என்று சொல்கின்றனர்.  கோயில் பல வருடங்கள் வரையிலும் மூலஸ்தானமும்,  ஒரே ஒரு மண்டபத்துடனும் தான் இருந்திருக்கிறது.  நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது.  கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும்.  அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம்.  அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம்.  வெளிப் பிரஹாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கு ஒரு சந்நிதியும் காணப்படுகிறது.  பரசுராமர் இங்கே வந்திருப்பதன் காரணம் இவள் ரேணுகா தேவி என்பதால் இருக்கலாம்.  நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர்  என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள்.  மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர்.  இங்குள்ள முக்கியமான பிரார்த்தனை வேப்பிலைகளால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்வது தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-8975687951333175209?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/8975687951333175209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=8975687951333175209' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8975687951333175209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8975687951333175209'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/12/blog-post_12.html' title='பெரிய பாளையம் பவானி அம்மன் ! வேப்பிலை ஆடை அணியும் பக்தர்கள்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-eJrMakWETcw/Tuam7mSXwlI/AAAAAAAAGKU/F9c6kIvx2fc/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-8872771369150426672</id><published>2011-12-11T14:07:00.001-08:00</published><updated>2011-12-11T14:13:32.547-08:00</updated><title type='text'>ஆகாச மாரியம்மனைத் தெரியுமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-wOzAhOvKblk/TuUpsoGq7QI/AAAAAAAAGJY/Y3E2QtS7rNs/s1600/DSC00904%25E0%25AE%2586%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25BF.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-wOzAhOvKblk/TuUpsoGq7QI/AAAAAAAAGJY/Y3E2QtS7rNs/s320/DSC00904%25E0%25AE%2586%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25BF.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684995951281499394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள நாச்சியார் கோயிலில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயில் இது. இங்கே எந்நாளும் இப்படி தீபம் மட்டுமே எரியும் கருவறை இருக்கிறது. இங்கே அம்மனுக்கெனத் தனியாக சுதைச் சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது. ஏனெனில் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாயும், அது முதல் அவன் வேண்டுகோளின்படி ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுக்கச் சம்மதித்ததாகவும் கோயிலின் தல வரலாறு கூறுகிறது. இது அறுநூறு ஆண்டுகள் முன்னர் நடந்ததாகவும் சொல்லப் படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப் படுகிறது. ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல்வெள்ளிக்கிழமை அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது. ஊரே கூடி நடத்தும் விழா கடைசிநாளன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு முடிகின்றது. அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர். பத்து நாட்களும் செப்புக்குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும் அம்மனுக்குச் சார்த்தப்படும் எலுமிச்சை மாலையின் எலுமிச்சம்பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத் தரப்படும். தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காண முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாளன்று வளர்ந்து இராஜராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள். அதன் பின்னர் அம்பாளுக்குப்பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப் பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர். நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ கிடையாது. இந்தக்கோயில் ஒன்று தான் உள்ளது. இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள். திருவிழா சமயத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன் என்றாலும் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனின் புனிதத் தன்மை கருதிப் படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. இப்போது சமீபத்தில் சென்ற போது ஜோதி வடிவில் காட்சி அளித்த அம்பிகையைப் படம் எடுத்துக் கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-8872771369150426672?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/8872771369150426672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=8872771369150426672' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8872771369150426672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8872771369150426672'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/12/blog-post.html' title='ஆகாச மாரியம்மனைத் தெரியுமா?'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-wOzAhOvKblk/TuUpsoGq7QI/AAAAAAAAGJY/Y3E2QtS7rNs/s72-c/DSC00904%25E0%25AE%2586%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25BF.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-7877770449858127009</id><published>2011-11-30T15:37:00.001-08:00</published><updated>2011-11-30T15:41:59.341-08:00</updated><title type='text'>பேச்சியம்மா!  பேச்சியம்மா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-0ov1Q8aAg5I/Tta-aHSyfZI/AAAAAAAAGDU/7vbpfAirESs/s1600/MOV00665pechiamman.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-0ov1Q8aAg5I/Tta-aHSyfZI/AAAAAAAAGDU/7vbpfAirESs/s320/MOV00665pechiamman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680937335818190226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பேச்சி அம்மன் வரலாறு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி சொல்லப்படுகிறது. இங்கே பேச்சி அம்மன் மன்னனையும், ராணியையும் காப்பாற்றிவிடுகிறாள் என்கின்றனர். எங்க ஊர் மாரியம்மன் கோயிலின் நுழை வாசலில் பல வருடங்களாய் மாரியம்மனுக்குத் துணை இருக்கும் பேச்சி அம்மன் இவள். இவளைப் பற்றிய கதை பல விதங்களில் சொல்லப் படுகிறது. அதில் ஒன்று பெரியாச்சியும், பேச்சியும் ஒருவரே என்பது. இதைப் பலரும் நிரூபித்திருக்கின்றனர். முக்கியமாய்த் தஞ்சை மாவட்டத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூரில் குடியேறிய பலருக்கும் பெரியாச்சி என்ற பேச்சியம்மனே குலதெய்வமாக இருந்து வருவதை திரு நா. கணேசன் சுட்டுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் கொடுத்த சுட்டியின்படி வல்லாளன் என்ற பாண்டிய அரசன் கொடுங்கோலனாக இருந்ததாயும், அவன் மனைவி கர்ப்பவதியாய் இருந்த சமயம், அந்தக் குழந்தை பிறந்தால் கொடுங்கோலனின் குழந்தையும் தன் கொடூரத்தால் இவ்வுலகையே அழிக்கும் என மக்கள் பயந்ததாகவும் கூறப் பட்டுள்ளது. ராணிக்குப் பிரசவ வலி எடுக்க, தக்க மருத்துவம் செய்யவேண்டி அரசன் மருத்துவச்சியின் உதவியை நாடுகிறான். மன்னன் தன் வீரர்களை அனுப்புகின்றான் மருத்துவச்சியைக் கூட்டி வரச் சொல்லி. ஆனால் எல்லாருமே பயப்படுகின்றனர் என்பதோடு வரவும் மறுக்கின்றனர். கோபம் கொண்ட மன்னன் தானே தக்க மருத்துவச்சியை அழைத்துவரச் செல்லுகையில் அவன் எதிரே கடுமையான முகத்தோற்றத்தோடு கூடிய ஓரு பெண்மணி தென்பட்டாள். அவள் தன் பெயரைப் பெரியாச்சி என்று கூறினாள். மன்னன் தேடும் மருத்துவச்சி அவள் தான் என்றாள். ஆனால் உண்மையில் அவள் அசுரர்களுக்கும், துர்தேவதைகளுக்குமான தலைமைக் கடவுள். ஆனால் மன்னனுக்கு இந்த உண்மை தெரியாது. பிரம்மா அசுரர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் படைத்தபோது தேவர்களும், மனிதர்களும் ஒரே கடவுளரை வணங்கி வர, அசுரர்களும், துர் தேவதைகளும் தங்களுக்கெனத் தனியான கடவுளை வணங்கினார்கள். அத்தகையதொரு பெண் தேவதையே பெரியாச்சி அம்மன் ஆவாள். இதை அறியாத மன்னனும் தன் மனைவியின் பிரசவத்திற்காக அவளை அரண்மனைக்கு அழைத்து வருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசவம் நல்லபடியாக நடக்கிறது. ராணியின் வேதனையைப் பெருமளவு குறைக்கிறாள் பெரியாச்சி. அதோடு குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாகவும் விடவில்லை அவள். அதற்குப் பதிலாகக் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்துகிறாள். பிரசவம் ஆனதும் மன்னனிடம் பிரசவம் பார்த்ததற்குத் தனக்குப் பரிசுகள் தருமாறு கேட்கிறாள் பெரியாச்சி. ஆனால் மன்னனோ, ஒரு சாதாரண மருத்துவச்சியான அவள் ஒரு பேரரசனிடம் பணமும், பரிசும் கேட்டதற்குப் பெரியாச்சியை இகழ்ந்து பேசுகிறான். தர மறுக்கிறான். வைத்தியத்திற்கான செலவையும் கொடுக்க மறுக்கிறான். பெரியாச்சியைத் தன்னுடைய அடிமை என்றும், தான் சொல்வதைக் கேட்டு நடப்பது அவள் கடமை என்றும் உறுதியாகக் கூறுகிறான். கோபம் கொண்ட பெரியாச்சி தன் சுய உருவைக் காட்டுகிறாள். எண்ணற்ற கரங்களோடும், நீண்ட நாக்குடனும், பயங்கரத் தோற்றத்தோடு காட்சி அளித்த பெரியாச்சி மன்னனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக்கொண்டு ராணியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் குடல்களைத் தன் கரங்களால் வெளியே எடுக்கிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;குடலைத் தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். அதைக் கண்ட மன்னன் தன் அன்பு மனைவி பெரியாச்சியின் கரங்களில் சின்னாபின்னமானதைக் கண்டு வருந்துகிறான். ஆனால் பெரியாச்சியோ மன்னனையும் கொன்று விடுகிறாள். அவன் குழந்தையும் இந்த பூமியில் காலை வைக்கா வண்ணம் தன் கரங்களிலேயே ஏந்திக்கொண்டு தடுத்துவிடுகிறாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னனுக்கும், அவனுக்குப் பல விதங்களிலும் துணை போன அவன் மனைவிக்கும், பிறக்கையிலேயே அசுரனாகப் பிறக்கவிருந்த அவன் குழந்தைக்கும் இவ்விதம் பெரியாச்சியின் மூலம் முடிவு கிடைக்க, மக்களுக்கு நன்மை விளைகிறது. இந்தப் பெரியாச்சி வேறு யாரும் இல்லை என்றும் மஹாகாளியின் இன்னொரு அவதாரமே என்றும் கூறுகின்றனர். ஏனெனில் அசுரர்களின் தேவதை என்று கூறப்பட்ட இவள் நாட்டு மக்களுக்காக வேண்டி நன்மையை விளைவித்ததாலும், தன்னுடைய சக்தியை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தியதாலும், இவள் அனைவராலும் அன்றிலிருந்து குலதெய்வமாக வணங்கப்பட்டாள் என்றும், குழந்தைப் பேறு அடையவும், குழந்தைப் பேறு அடைந்தவர்களின் குழந்தையைக் காக்கவும், சுகப் பிரசவம் நடக்கவும் இவளைப் பிரார்த்தித்துக்கொள்வது மக்களின் வழக்கமாயிற்று என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தஞ்சையில், கும்பகோணத்தில் வழங்கும் கதை சற்றே மாறுபட்டது. அதை நாளைக் கேட்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;காப்புரிமை: ரமேஷ்குமார் &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் காணப்படுவது எங்கள் குலதெய்வமான மாரியம்மன் கோயிலில் மாரியம்மனுக்குத் துணையாக வீற்றிருக்கும் பேச்சி அம்மன் சிலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-7877770449858127009?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/7877770449858127009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=7877770449858127009' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7877770449858127009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7877770449858127009'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/11/blog-post_30.html' title='பேச்சியம்மா!  பேச்சியம்மா!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-0ov1Q8aAg5I/Tta-aHSyfZI/AAAAAAAAGDU/7vbpfAirESs/s72-c/MOV00665pechiamman.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-6283987549805337437</id><published>2011-11-16T16:58:00.000-08:00</published><updated>2011-11-16T17:02:25.059-08:00</updated><title type='text'>மாரியம்மா, மாரியம்மா!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-PYeJXIcG5EU/TsRcxPekCXI/AAAAAAAAFis/dfjaOdKYzew/s1600/mariamman.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 175px; height: 131px;" src="http://3.bp.blogspot.com/-PYeJXIcG5EU/TsRcxPekCXI/AAAAAAAAFis/dfjaOdKYzew/s320/mariamman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675763431431735666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலே காண்பது எங்கள் பூர்வீக ஊரான பரவாக்கரையில் உள்ள எங்கள் குலதெய்வமான மாரியம்மன்.  இவளுக்குத் துணையாகப் பேச்சியம்மன் இருக்கிறாள்.  அவளைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மஹாமாரியம்மனைப் பற்றி இப்போது பார்க்கலாமா?? கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன்&lt;br /&gt;கோயிலில் அம்மன் வரலாற்றைப் பற்றிக் கேட்டேன். யாருக்கும் சரியாய்த்&lt;br /&gt;தெரியவில்லை. படங்கள் எடுக்கவும் அநுமதி கொடுக்கவில்லை. திருவிழா வேறு நடந்து&lt;br /&gt;கொண்டிருந்தது. அங்கே தான் பச்சைக்காளி, பவளக்காளியாக படைவெட்டி மாரியம்மனின்&lt;br /&gt;தோழிகளாக இருவரும் வீற்றிருக்கின்றனர். பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும்&lt;br /&gt;காளியாட்டத்தின் போது போட்டியும் வருமாம். கூட்டம் தாங்காது என்றார்கள். அங்கே&lt;br /&gt;தெரிந்தவர்கள் எவரும் இல்லை. மேலும் மறுநாள் எங்க ஊர்க் கோயிலில்&lt;br /&gt;கும்பாபிஷேஹத்தின் யாகம் ஆரம்பம். ஆகவே அதற்குப்போயாக வேண்டும். மாரியம்மன்&lt;br /&gt;வரலாற்றைத் தேட ஆரம்பித்தேன். கடைசியில் இரு விதங்களில் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம்&lt;br /&gt;பல வகையிலும் துன்புறுத்தி வந்தான். பல்வேறு விதமான நோய்களையும்&lt;br /&gt;உண்டாக்கினான். அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய். இந்த நோய் வந்தவர்களை&lt;br /&gt;எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை. உடல் முழுதும் கொப்புளங்கள்&lt;br /&gt;உண்டாகிக் கண்பார்வையும் மறைக்கப் பட்டுத் துடிதுடித்த மக்களைக் காக்கவேண்டி&lt;br /&gt;அம்பிகை தன்னிலிருந்து உருவாக்கியவளே மஹாமாரி ஆவாள். இந்த மஹாமாரி&lt;br /&gt;அவதரித்ததுமே மஹாமாறனைக் கொன்றாள். அவனால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை&lt;br /&gt;எல்லாம் தன்னருகில் அம்பிகை அனுப்பி வைத்த கண்டா கர்ணன் என்னும் தேவதையின்&lt;br /&gt;உதவியோடு தீர்த்து வைத்தாள். அன்று முதல் மக்களின் ஆரோக்கியத்திற்கு அன்னையாக&lt;br /&gt;விளங்கி வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விதத்தில் கூறுவது என்ன வெனில் தேவாசுர யுத்தத்தில் ஜெயித்த&lt;br /&gt;தேவர்களைப் பழிவாங்க எண்ணிய அசுரர்கள் குல குருவான சுக்கிராசாரியார் மூலம்&lt;br /&gt;அவர்கள் உடலில் அம்மைக் கொப்புளங்களை உருவாக்கினார்கள். தாங்க முடியாத&lt;br /&gt;வலியாலும், துன்பத்தாலும் துடித்த தேவர்கள் ஈசனை நாடி அவன் பாதங்களைப் பணிந்து&lt;br /&gt;வேண்ட, ஈசன் தன் ஜடாமுடியிலிருந்து அன்னை மாரியைத் தோற்றுவித்தார். தலையின்&lt;br /&gt;கங்கை இருக்கும் இடத்திலிருந்து தோன்றிய இவளை சீதளா என அழைத்தனர். அல்லல்&lt;br /&gt;பட்டுத் துன்புற்ற மக்களைத் தன் தண்மையான பார்வையாலும், கருணையாலும் காப்பாற்றி&lt;br /&gt;நோயை நீக்கிப் பூரண ஆரோக்கியத்தை அளித்தாள் மஹாமாரி. உடனே தேவர்கள் அனைவரும் தங்களைக் கடுந்துயரிலிருந்து காத்த அன்னை இதே கோலத்தில் அனைத்து எல்லைகளிலும் குடி கொண்டு மக்களைக் கொடும் நோயிலிருந்து காத்தருள வேண்டும் என வேண்ட அவ்விதமே ஆகட்டும் என ஆசியளித்த அன்னை அவ்விதமே இன்றளவும் காத்து வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று கண்களுடனும், நான்கு கைகளுடனும், தீ ஜ்வாலை போல் மேல் நோக்கிய&lt;br /&gt;கூந்தலுடனும், காட்சி அளிக்கும் அன்னை, கறுப்பு ஆடையில் தோளில் கால சர்ப்பங்களை&lt;br /&gt;ஆபரணமாகப் பூண்டு, வலக்காதில் ஸ்ரீசக்ர வடிவான தாடங்கமும், இடக்காதில் தோடும்&lt;br /&gt;அணிந்து திருமேனியிலும் ஆபரணங்களைத் தரித்துக்கொண்டு, ஒரு காலை&lt;br /&gt;மடித்துக்கொண்டும், மறுகாலைத் தொங்க விட்டுக்கொண்டும், வட்ட வடிவான ஜோதியின்&lt;br /&gt;நடுவே தோன்றினாள். இந்தக் கோலத்திலேயே இவள் எல்லாக் கோயில்களிலும் பிரதிஷ்டை&lt;br /&gt;செய்யப் படுகிறாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-6283987549805337437?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/6283987549805337437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=6283987549805337437' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6283987549805337437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6283987549805337437'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/11/blog-post_16.html' title='மாரியம்மா, மாரியம்மா!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-PYeJXIcG5EU/TsRcxPekCXI/AAAAAAAAFis/dfjaOdKYzew/s72-c/mariamman.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-3250356576848100845</id><published>2011-11-09T04:37:00.000-08:00</published><updated>2011-11-09T04:39:27.324-08:00</updated><title type='text'>பச்சைக்காளியும், பவளக்காளியும்</title><content type='html'>அடுத்துப் பார்க்கப் போவது பச்சைக்காளி, பவளக்காளி பற்றி. அநேகமாய் எல்லாப் பெண் தெய்வங்களுமே அம்பிகையின் அம்சம் என்றாலும் காளி அம்பிகையின் முக்கியமானதொரு அம்சம் ஆவாள். இங்கேயும் அசுரன் வருகிறான். காளி அழிக்கிறாள். ஆனால் ஒரே காளியே வெவ்வேறு உருவில் வருகிறாள். தஞ்சை நகருக்கு அப்போது அழகாபுரி எனப் பெயர் என்கின்றனர். அந்த அழகாபுரியில் ஆண்டு வந்தவன் தஞ்சன் என்பவன். இந்தத் தஞ்சன் நல்லரசனாக இல்லாமல் மக்களைத் துன்புறுத்திக் கொடுமை செய்யும் கொடுங்கோலனாக இருந்தான். ஆனாலும் சிவபக்தனாக இருந்தமையால் அவனை அழிக்க எவராலும் இயலவில்லை. ஆகவே ஈசனையே தஞ்சம் அடைந்தனர் அனைவரும். அவரும் தன்னில் ஒரு பாகமான அம்பிகையிடம் பொறுப்பை ஒப்படைக்க ஆனந்தவல்லியான அவளும் தஞ்சனை அழிக்க வேண்டி பச்சைக்காளியாக மாறினாள். அவள் எவ்வளவு முயன்றும் மீண்டும் மீண்டும் தஞ்சன் தோன்றிக்கொண்டிருந்தான். கோபம் கொண்ட பச்சைக்காளியின் முகம் சிவந்து போய்க் காணப்பட்டது. பவளத்தைப் போன்ற சிவந்த அந்த நிறத்தைக்கண்டு அனைவரும் அன்னையைப் பவளக்காளி என்றழைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பவளக்காளியாக விஸ்வரூபமெடுத்து அன்னை தஞ்சனைக் கொன்றாள். அவன் ரத்தம் ஆறாக ஓட அந்த ரத்தச் சிவப்பில் அன்னையின் நிறமே சிவந்து காணப்பட, பவளக்காளி என்ற பெயரும் நிலைத்தது அவளுக்கு. தஞ்சன் கோடி முறை அவதாரம் எடுத்தமையால் அவனைக் கொன்ற அன்னைக்கு கோடியம்மன் என்ற பெயரும் ஏற்பட்டது. ஈசனின் பிரதிநிதியாக வந்து இங்கே அசுரனை அழித்ததால் அன்னை தன் தலையில் ஈசனையே சூடி இருப்பதாய் ஐதீகம். ஆகவே அம்மனுக்குப் பச்சைக்காளி, பவளக்காளியாக இருக்கையில் நந்தியே வாகனம் என்கின்றனர். தஞ்சையில் கோடியம்மன் கோயில் என்ற பெயரிலேயே கோயில் உள்ளது. மூலவர் கோடியம்மன் ஆவாள். உற்சவர் பச்சைக்காளி, பவளக்காளி இருவருமே.&lt;br /&gt;&lt;br /&gt;மாசி அல்லது பங்குனி மாதம் பச்சைக்காளி, பவளக்காளி உற்சவம் நடக்கையில் பச்சைக்காளி, பவளக்காளியின் உருவச் சிலைகளைச் செய்து வீடு வீடாக எடுத்துச் செல்வார்கள். காளியாட்டமும் நடக்கும், சிலர் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் ஆடுவதாய் நேர்த்திக்கடனும் செய்து கொள்கின்றனர். அப்படி நேர்ந்து கொள்பவர்கள் விரதம் இருத்தல் வேண்டும். காளியின் முகம் மட்டும் செய்யப் பட்டு அவர்கள் முகத்தின் மேலே பொருத்தப்படும். அப்படிப் பொருத்தப்பட்ட அறுவரைக் கும்பகோணத்தில் பார்த்தோம். ஆறுபேரும் பெண்கள். ஆனால் படம் எடுக்க அநுமதிக்கவில்லை. ஆறுபேரும் உணர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தனர். ஆகவே படம் எடுத்தால் விபரீதமாய் முடியும் என எச்சரிக்கப் பட்டோம். அநேகமாய் ஆண்களே காளியாட்டம் ஆடுவார்கள் எனவும் , இங்கே இந்தப்பெண்கள் நேர்த்திக்கடனுக்காகக் காளியாட்டம் மேற்கொண்டிருப்பதாயும் கூறினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்குக் காளிக்குக் கோரைப்பற்கள் இருப்பது போன்ற பற்கள் தானாகவே தோன்றும் என்றும் சொல்கின்றனர். இது குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை. &lt;br /&gt;ஆனால் கோயிலின் பூசாரியோ அல்லது பரம்பரையாகக் காளிவேடம் புனைந்து காளியாட்டம் ஆடுபவரோதான் காளியாக வேஷம் தரிக்கின்றனர் என்றாலும் நேர்த்திக்கடனுக்காக வேஷம் தரிப்பவர்களும் இருக்கின்றனர். காளியாட்டம் ஆடும் முன்னர் திருவிழாவுக்காகக் காப்புக் கட்டியதுமே காளியின் முகம் தயாராகி அதை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் செல்லுகின்றனர். காளியே நேரில் வந்திருப்பதாக மக்கள் ஐதீகம். எனவே அனைத்து மரியாதைகளூம் செய்யப் படுகின்றன. அதன் பின்னரே திருவிழா முடிந்து காளியாட்டம் நடக்கிறது. இதிலே பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும் போட்டியும் உண்டு என்கின்றனர். இது குறித்துச் சரியான தகவல் யாருக்கும் சொல்லத் தெரியலை. மேற்கொண்டு விசாரிக்கவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-3250356576848100845?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/3250356576848100845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=3250356576848100845' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3250356576848100845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3250356576848100845'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/11/blog-post_09.html' title='பச்சைக்காளியும், பவளக்காளியும்'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-3042030512433091341</id><published>2011-11-05T15:13:00.000-07:00</published><updated>2011-11-05T15:14:50.429-07:00</updated><title type='text'>பாவாடை ராயனைத் தான் பத்தினியே தானழையும்!</title><content type='html'>பாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் நாலைந்து இடங்களில் வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;"பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்"   என இரு இடங்களிலும், பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார்  என்றொரு இடத்திலும் பாவாடை ராயனும் பல தேவரும் வாழி என்றொரு இடத்திலும் வருகிறது. இந்தப் பாவாடை ராயன் யாருனு புரியாமல் யோசனையிலே இருந்தேன்.  அப்புறமாத் தான் காவல் தெய்வமாய் இருக்குமோ என ஒரு சந்தேகம்.  காவல் தெய்வங்கள் பற்றிய ஒரு புத்தகத்தில் தேடினப்போ கிடைச்சது பாவாடை ராயனும், அவரோட எஜமான் ஆன பருதேசியப்பரும். &lt;br /&gt;&lt;br /&gt;பருதேசினு ஊர் ஊராச் சுத்தறவங்களைச் சொல்றது உண்டு.  இங்கேயும் அப்படிச் சுத்தின ஒருத்தரைத் தான் சொல்றாங்க.  அவர் வேறே யாரும் இல்லை.  நம்ம சிவனார் தான்.  அதுவும் சனி படுத்தின பாடாம் அது.  எல்லாரையும் பிடிக்கவேண்டிய சனிஸ்வரனுக்கு அப்போ சிவனிடம் போகவேண்டிய நேரம்.  ஆனால் அவர் கிட்டே போனால் நெற்றிக்கண்ணைத் திறந்துடுவாரே?  என்ன செய்யறது?  நாரதர் இன்னும் கொஞ்ச நாட்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் கல்யாணம் நடக்கப் போறது. அப்போப் பிடிச்சுக்கலாம்னு சொல்லி வழி காட்டறார்.  சரினு எல்லாருமா கல்யாணத்துக்குப் போறாங்க.  அங்கே பிரம்மாதான் கல்யாணம் நடத்தி வச்சுண்டு இருந்தார்.  கல்யாணம் முடிஞ்சதும் வழக்கப்படி புரோகிதம் பண்ணின பிரம்மாவுக்கு மரியாதை செய்யறாங்க சிவனும், பார்வதியும்.  அப்போ பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் ஈசன் மாதிரியே. &lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து தலைகளுக்கும் தீபம் காட்டணும், நாலுக்குக் காட்டியாச்சு. ஐந்தாவது தலைக்கு எந்தத் திசையிலே காட்டறதுனு யோசிக்கும்போது, அந்தச் சமயம் நாரதர் சைகை காட்ட சனி ஈசனின் கையில் புகுந்து கொள்ள, அவர் கோபத்தோடு அந்த ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிய, பிரம்மாவுக்கும் கோபம் வந்து என்னோட இந்தத் தலை திருவோடாக உம் கையில் மாறி நீர் ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுக்கவேண்டும்னு சாபம் கொடுக்கிறார்.   முன்னைப்பழம்பொருளுக்கும் முன்னைப்பழம்பொருள் ஒரு ஆண்டியைப் போல, பித்தனைப் போல பிச்சை எடுக்கிறார்.  பிக்ஷாடனராக ஒவ்வொரு ஊராக வந்து பிச்சை கேட்கிறார்.  எங்கேயும் பிரம்ம கபாலத்தில் அவர் வாங்கும் பிச்சையால் கபாலம் கையை விட்டுப் போகவில்லை.  அப்போது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாம் செல்லும் இடங்களிலெல்லாம் அற்புதங்களை நடத்திய பருதேசியப்பரால் தன் கைக் கபாலத்தைக் கைகளிலிருந்து எடுக்க முடியாதா?? இறைவனுக்குத் தெரியாதா? எல்லாம் வல்லவனுக்கு இது ஒரு கஷ்டமான காரியமா?  எனினும் எடுத்துக்கொண்ட விளையாடலை பூரணமாக விளையாடி முடிக்கவேண்டுமே.  ஆகவே கடைசியாகக் கொள்ளிடக் கரையில் இருக்கும் வல்லம்படுகை வந்து சேர்கிறார் ஈசனாகிய பரதேசி.  நமக்கெல்லாம் ஞானப் பிச்சை அளிக்கும் அவன் நம்மிடமிருந்து பிச்சையாக வாங்குவது நம்முடைய வினைப்பயன்களையும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அன்றோ. அவற்றை வாங்கிக்கொண்டு அவன் நமக்குத் திரும்பத் தருவதோ மாபெரும் செல்வம் அல்லவோ!   ஆனால் இதை எத்தனை பேர் அறிவார்கள்? அப்படியே பாவாடை ராயனும் அறியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் அடங்கியவேளையிலே பரதேசிக் கோலத்தில் வந்து சேர்ந்த பருதேசியப்பரைக் கண்ட ஊர்க்காவல்காரனான பாவாடைராயன்  இவ்வுலகத்து மாந்தருக்கெல்லாம் வேண்டியது தருபவர் ஆன அவர் மேல் சந்தேகம் கொண்டு அந்தப் பொன்னான அருள் தரும் அபயக்கரங்களுக்கு விலங்கிட்டுச் சிறையில் அடைக்கிறான்.  காலையில் விசாரணை செய்து கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பிச் சென்று இரவு முழுதும் ஓய்வு எடுத்துக்கொண்டு காலை திரும்பினான் பாவாடை ராயன்.  வந்து பார்த்தால்??&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, இது என்ன அற்புதக் காக்ஷி, இந்தக் கண்கள் காண்பது கனவா? நனவா? தன் சுய உருவோடு நின்றிருந்த ஈசனைக் கண்ட பாவாடைராயன் நடுநடுங்கிப் போனான்.  "என் ஐயனே, உன்னையா சிறையிலடைத்தேன்!" என்று கதறி அழுதவண்ணம் ஈசன் காலடிகளில் விழுந்தான்.  தன்னை மன்னிக்கும்படியும், தான் அடியவனாய் இருந்து பணிவிடைகள்  ஆற்ற விரும்புவதாயும், சாபம் தீரும்வரையிலும் ஈசன் அங்கே குடிகொள்ளவேண்டும் எனவும் வேண்ட, ஈசனும் சம்மதித்து அங்கே குடியேறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பருதேசியப்பருக்குக் கையில் பிக்ஷாபாத்திரமாகக் கபாலத்தை மட்டுமே ஏந்திய இவருக்குக் காவல்காரனாம் பாவாடைராயன்.  இவர்கள் கோயில் கொண்டிருக்கும் இடம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள அழகிய கிராமம் ஆன வல்லம்படுகையில் உள்ளது. மூலவர் பருதேசியப்பர்.  இவருக்குக் காவலாக  விநாயகர், முருகன், முத்தாலம்மன், பேச்சியம்மன், முனீஸ்வரர் ஆகியோர் பிராகாரங்களில் இடம் பெற்றிருக்க ஆலயத்தின் பின்னால் உள்ள கொட்டகையில் தன் இரு மனைவிமாரான முத்துநாச்சி, அரியநாச்சி ஆகியோருடன் பாவாடைராயன் காணப்படுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பருதேசியப்பர் கோயிலின் எதிரே சற்றுத் தள்ளி காணப்படும் ரயில் தண்டவாளத்தை 300 ஆண்டுகள் முன்னர் முதல்முதல் அமைக்கும்போது ஆங்கிலேயர்கள் கருவறையைத் தகர்த்துவிட்டு ரயில் பாதையை அமைக்கத் திட்டம் போட்டுக் கோயிலை இடிக்க முயன்றிருக்கிறார்கள்.  அதன் முன்னர் வரும் கோயிலின் அருகே உள்ள இடங்களில் தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது.  கோயிலை இடிக்க உத்தரவு கொடுத்துவிட்டுப் போனால் மறுநாள் ஏற்கெனவே பதிக்கப்பட்ட தண்டவாளங்கள் வேறு திசையில் தூக்கி வீசப்பட்டிருந்தன.  அதிர்ந்த ஆங்கிலேய அதிகாரி மீண்டும் அதே இடத்தில் பதிக்க மீண்டும் தண்டவாளங்கள் தூக்கி வீசி எறியப்பட, மூன்றாம் முறை முயன்றபோது இஞ்சினியரின் கண்பார்வையே பறிபோனதாம்.  பின்னர் உள்ளூர் மக்கள், பெரியதனக்காரர்களின் வேண்டுகோளையும், பருதேசியப்பரின் சக்தியையும் கண்டு வியந்த ஆங்கிலேயர் கோயிலில்  இருந்து சற்றுத் தள்ளி தண்டவாளங்களை அமைத்தனராம்.  அவர்களுக்குப் பரிகாரமாக மண்குதிரை செய்து வைக்கச் சொல்ல அப்படியே செய்தும் வைத்திருக்கின்றனர்.  இந்தப் பாவாடைராயன் கதையைப் படித்ததும், மாரியம்மன் தாலாட்டின் பொருள் நன்கு புரிய ஆரம்பித்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவாடைராயனின் படம் கிடைக்கவில்லை.  அந்தப் பக்கம் பயணம் போகையில் எடுக்க முயல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: மீள் பதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-3042030512433091341?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/3042030512433091341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=3042030512433091341' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3042030512433091341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3042030512433091341'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/11/blog-post_05.html' title='பாவாடை ராயனைத் தான் பத்தினியே தானழையும்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-2471256886325778107</id><published>2011-11-01T14:52:00.000-07:00</published><updated>2011-11-01T18:30:47.884-07:00</updated><title type='text'>பச்சை வாழி அம்மன்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-jCLT1Il58tQ/TrBq83iUAMI/AAAAAAAAFb8/rgVuxlu1TrA/s1600/indexgreenamman.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 183px;" src="http://2.bp.blogspot.com/-jCLT1Il58tQ/TrBq83iUAMI/AAAAAAAAFb8/rgVuxlu1TrA/s320/indexgreenamman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670149524792017090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்து நாம் பார்க்கப் போவது பச்சை அம்மன், பச்சை வாழி அம்மன் என்று அனைவராலும் கொன்டாடப் படும் தேவி குறித்து. இவளும் அன்னையின் அம்சமே ஆவாள்.  இதற்கான வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.&lt;br /&gt; &lt;br /&gt;திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும் ஓர் வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம்.  ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள் கண்கள் என்கின்றனரே, அது உண்மையா”,  என வினவினாள் அன்னை.  அனைத்தும் அறிந்தவளுக்கு அனைவரையும் தன் சக்தியால் பரிமளிக்கச் செய்பவளுக்குத் தெரியாத ஒன்றா? புரியாத ஒன்றா?  இல்லை; இதன் மூலம் அன்னை ஏதோ மனதில் திருவிளையாடல் செய்ய எண்ணி இருப்பதைப் புரிந்து கொண்டார் ஐயன்.  “ஆம் இருவரும் என் கண்களே”  என்றார்.  உடனே அன்னை தன்னிரு தளிர்க்கைகளாலும் ஐயனின் கண்களைப் பொத்த அன்டசராசரங்களிலும் காரிருள் சூழ்ந்தது.  அத்தனை ஜீவராசிகளும் திடீரென ஏற்பட்ட இந்தக் காரிருளைக் கண்டு நடுங்கித் தவித்தன.  தேவாதிதேவர்கள் மஹாபிரளயமோ என அலறிக்கொண்டு ஈசனிடம் ஓடி வந்தனர்.  வந்ததும் தான் புரிந்தது அன்னையின் விளையாட்டு என்பது.  அதற்குள் ஐயன் தன் நெற்றிக்கண்ணைச் சிறிதே திறக்க அனைத்து உலகும் ஒளியால் மீண்டும் பிரகாசிக்க ஆரம்பித்தது.&lt;br /&gt; &lt;br /&gt;தன் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டால் நடுங்கிப் போன அண்டசராசரத்து மக்களையும் நினைத்து வருந்திய அன்னையவள், தான் மாபெரும் பாவம் செய்துவிட்டதை உணர்ந்தாள். ஐயனை விட்டுப் பிரிந்து சென்று கடும் தவம் செய்து இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள விரும்பினாள்.  ஐயனிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அன்னையின் நோக்கம் புரிந்த ஈசனும் காஞ்சிமாநகரில் கம்பா நதிக்கரையில் தவம் செய்யச் சொல்லிக் கட்டளை இட்டார்.  ஐயனின் கட்டளையைச் சிரமேற்றாங்கி அன்னையவளும் கம்பாநதிக்கரையில் சுற்றிலும் அக்னியை வளர்த்து பஞ்சாக்னிக்கும் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள்.  அவள் கடுந்தவத்தைப் பார்த்த ஈசன் சற்றே சோதிக்க எண்ணிக் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார்.  வெள்ளம் தான் பிரதிஷ்டை செய்திருக்கும் லிங்கத் திருமேனியை அடித்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது எனக் கலங்கிய அன்னை தன்னிரு கைகளாலும் லிங்கத்தைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.  அப்போது ரிஷபவாஹனராய்க் காட்சி தந்தார் ஈசன்.  அன்னை அவரை வணங்கி அவரில் தான் பாதியாக விரும்புவதைக் கூறினாள்.  அதற்கு அருளுமாறு கேட்டுக்கொள்ள, ஈசனோ அது அவ்வளவு சுலபம் இல்லை எனவும், இங்கே இருந்து தெற்கே  ஜோதியே மலையாக மாறி இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்றும் அங்கே ஊசி முனையில் தவம் இருக்குமாறும் கூறி மறைந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;அதன்படியே திருவண்ணாமலைக்குப் பயணமானாள் அன்னை.  செல்லும் வழியில் அவளால் இயன்ற வரையில் சிவ வழிபாடு செய்து கொண்டே சென்றாள்.  அதற்கு நீரும் வேண்டுமே என நினைத்த அன்னைக்கு, அவள் குமாரன் ஆன சிவகுமாரன் ஓரிடத்தில் மலையைக் குடைந்து நதி ஒன்றைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தான்.  (இன்று சேயாறு என அழைக்கப் படும் ஆறு அதுவே என்கின்றனர்.)  அதே போல் கடும் தவம் செய்யும் அன்னைக்குக் குளிர்ச்சியாக இருக்க வேண்டி நதிக்கரையில் வாழைமரங்களால் ஆன பந்தல் ஒன்றையும் அமைத்தாராம் சிவகுமாரன். அன்னை அந்தச் சேயாற்றில் நீராடிவிட்டு வாழைப்பந்தலின் கீழ் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துக்கொன்டு பயணத்தைத் தொடர்ந்தாள்.  வாழைப்பந்தல் அமைந்த இடம் இன்றும் வாழைப்பந்தல் என்னும் பெயரிலேயே விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாழைப்பந்தலில் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துவிட்டுத் திருவண்ணாமலையை அடைந்தாள் தேவி.  தேவியின் வருகையை எதிர்நோக்கி அங்கே கெளதம மஹரிஷி, சதாநந்தர், பிருகு போன்றோர் காத்திருந்தனர்.   அம்பிகையை வரவேற்று அவள் தவத்திற்கான சகல ஏற்பாடுகளையும் மனமுவந்து செய்து கொடுத்தனர்.  காலின் ஒற்றை விரலால் அதாவது கட்டைவிரல் நுனியில் நின்று கொண்டு கடுந்தவம் செய்ய ஆரம்பித்தாள் அன்னை.  இந்தச் சமயம் தான் மஹிஷாசுரனின் அராஜகமும் அதிகம் ஆனது.  தேவி ஒருத்தியால் தான் அவனை அடக்க முடியும்.  ஆனால் தேவியோ கடுந்தவத்தில் இருக்கிறாளே! என்ன செய்வது எனப் புரியாமல் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷி முனிவர்களும் திருவண்ணாமலையில் தவமிருந்த மற்றவரிடம் முறையிட அவர்களும் தவமிருந்த அன்னையைப் பிரார்த்தித்தனர்.  தவத்தில் இருந்த அன்னைக்குப் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் தெரியவர, தன் தவ வலிமையால் துர்காபரமேஸ்வரியை உருவாக்கினாள் அன்னை.  மஹிஷனை அழிக்க அவளை அனுப்பி வைத்தாள்.  அன்னையின் அம்சமான துர்கா படை, பரிவாரங்களோடு சென்றாள்.&lt;br /&gt; &lt;br /&gt;மஹிஷாசுரன் பல்வேறு வடிவங்களும் எடுத்து அன்னையைத் தடுமாற வைக்கத் திட்டம் போட்டான்.  அன்னையின் அம்சமான துர்கையோ சற்று நேரம் பொறுமை காத்தாள்.  பின்னர் அவன் உண்மை உருவான மஹிஷ உருவில் அவன் வரும்போது அந்த மஹிஷத்தின் தலையை வெட்டி வீழ்த்தினாள் துர்கை.  அப்போது அவன் கழுத்திலிருந்து ஒரு லிங்கம் கீழே விழுந்தது.  ஆஹா, இது என்ன??&lt;br /&gt; &lt;br /&gt;மஹிஷாசுரன் மன்னத முனிவர் என்பவர் சிவபூஜை செய்கையில் அவரையும் அவர் வழிபட்ட சிவலிங்கத்தையும் ஒரே விழுங்கில் விழுங்க, சிவலிங்கம் அவன் கண்டத்திலேயே தங்கி விட்டது.  அந்த லிங்கம் தான் எருமைத் தலையை துர்கை வெட்டியதும் கீழே விழுந்ததாம்.  சிவலிங்கம் கீழே விழுந்துவிட்டால் அபசாரம் என நினைத்த துர்கை தன்னிரு கைகளால் அந்த லிங்கத்தை ஏந்தினாளாம். அவள் கையை விட்டு அந்த லிங்கம் அகலாமல் உள்ளங்கையிலேயே ஒட்டிக்கொண்டது.  பதறிய துர்கை அன்னையை நாடி ஓடினாள்.  அன்னை பார்த்துவிட்டுச் சிரித்தாள்.  சிவபக்தனான மஹிஷனைக் கொன்றதால் அவனைக் கொன்ற பாவத்தினால் உன் கைகளை விட்டு இந்த லிங்கம் அகலவில்லை.  உன் கையில் இருக்கும் கட்கம் என்னும் வாளால் தரையைக் கீறிக் கிளம்பும் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் உனக்குக் கையிலிருக்கும் லிங்கம் அகன்று பாவ விமோசனமும் கிடைக்கும் என்று சொல்ல அப்படியே தனது கட்கம் என்னும் வாளால் துர்கை கீற அங்கே ஓர் தீர்த்தம் தோன்றியது.  அதை இன்றும் கட்க தீர்த்தம் என்னும் பெயரிலேயே அழைக்கின்றனர்.   துர்கையின் கைகளில் இருந்த லிங்கமும் கீழே விழுந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;அன்னை அதன் பிறகு ஈசனோடு இரண்டறக் கலந்து அர்த்த நாரீச்வரராக ஆனாள்.  ஆனால் அன்னை அடியெடுத்து வைத்த நாளில் இருந்து அந்தப் பிரதேசமே ஜோதி மயமாகவும், பசுமையாகவும் மாறியதால், மக்கள் அனைவரும் இந்த இடம் என்றும் இப்படியே ஜோதி வடிவாகவும், பசுமையாகவும் காட்சி அளிக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள அன்னையும் அவ்விதமே ஆகட்டும் என அருளிச் செய்தாள்.  அன்னையை அவர்கள் அன்று முதல் பச்சையம்மனாக வழிபட்டனர்.  பயிர், பச்சையை வாழச் செய்தமையால் பச்சை வாழி அம்மன் எனவும் அழைக்கப் பட்டாள்.   &lt;br /&gt; &lt;br /&gt;இன்னொரு வரலாற்றில் வாழைப்பந்தலில்  பந்தலை அன்னையே அமைத்ததாகவும், மணலால் லிங்கம் பிடிக்க நீர் வேண்டி விநாயகனையும், குமரனையும் கேட்டதாயும், அவர்கள் வர நேரமானதால் அன்னையே நீரைத் தன் கைப்பிரம்பால் தட்டி உற்பத்தி செய்ததாகவும் பின்னர் விநாயகனும், முருகனும் கொண்டு வந்த நீரும் சேர்ந்து மூன்று நதிகளாக மாறியதாகவும் அதுதான் முக்கூட்டு என்னும் இடம் எனவும் கூறுகின்றனர்.  அப்போது அருகே இருந்த கதலிவனத்தில் அசுரன் ஒருவன் அன்னையின் தவத்துக்கும், வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் நோக்கில் வந்ததாயும் அவனை ஈசனும், விஷ்ணுவும் சேர்ந்து வாழ்முனி, செம்முனி என்னும் உருவில் வதம் செய்து அன்னைக்கு உதவியதாகவும் கூறுகிறது.  இவர்களோடு சேர்ந்து இன்னும் ஐவரும் அன்னைக்கு உதவியதாகவும் கூறுகின்றனர்.  அவர்கள் முறையே வாழ்முனி, செம்முனி, சடாமுனி, கருமுனி, வீர முனி, முத்து முனி, வேதமுனி ஆகியோர். செம்முனி கோபக்காரன் என்பதால் இவரைக் கட்டுப் படுத்தக் காலில் விலங்கு இருக்கும் என்கின்றனர்.  பச்சையம்மன் கோயில்களில் வெட்ட வெளியில் பிரம்மாண்டமாக இந்த ஏழு முனிவர்கள் சிலைகளையும் காணலாம். இவர்களைத் தவிர, கெளதமர் உள்ளிட்ட சப்தரிஷிகளின் உருவங்களும் சிறியதாய்ப் பின்னால் காணப்படும்.  &lt;br /&gt; &lt;br /&gt;பச்சையம்மன் கோயில்களில் கணபதிக்கும்,  முருகனுக்கும் இடம் உண்டு.  பச்சை நிற ஆடையிலேயே காட்சி அளிக்கும் பச்சையம்மனுக்கு உகந்த நாட்களாய்த் திங்கட்கிழமைகளே சொல்லப் படுகின்றன.  அம்மனுக்குப் படையலும் சைவப் படையல் தான்.  அம்மனுக்காக நேர்ந்து கொண்டு பெரிய யானை, குதிரைச் சிலைகள் வைக்கின்றனர்.  இரவில் குதிரையில் ஏறி அம்மன் நகர்வலம் வருவதாக ஐதீகம்.  ஆகவே குதிரைகள் அம்மன் குதிரை என்றே அழைக்கப் படுகின்றன. ஈசனும் இங்கே மன்னாதீஸ்வரர் என்ற பெயரில் தெற்குப் பார்த்து வீற்றிருப்பார்.  வட ஆற்காடு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் பச்சை அம்மன் எனப்படும் பச்சைவாழி அம்மனே குலதெய்வம் ஆவாள்.  எனினும் வாழைப்பந்தலில் முதல் முதல் அம்மன் குடிகொண்ட இடமே பச்சையம்மன் குடி கொண்ட முதல் இடமாகக் கருதப் படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-2471256886325778107?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/2471256886325778107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=2471256886325778107' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2471256886325778107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2471256886325778107'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/11/blog-post.html' title='பச்சை வாழி அம்மன்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-jCLT1Il58tQ/TrBq83iUAMI/AAAAAAAAFb8/rgVuxlu1TrA/s72-c/indexgreenamman.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-2226735315250231931</id><published>2011-10-30T15:08:00.000-07:00</published><updated>2011-10-30T15:20:28.287-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நீலகண்டர்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-m6sYxdwWx7I/Tq3Nf4gdnGI/AAAAAAAAFbs/0U4glo4OuYA/s1600/sivarppanam.bmp"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 258px; height: 195px;" src="http://4.bp.blogspot.com/-m6sYxdwWx7I/Tq3Nf4gdnGI/AAAAAAAAFbs/0U4glo4OuYA/s320/sivarppanam.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5669413453557505122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாசுகி கக்கிய விஷத்தோடு சேர்ந்து பாற்கடலில் இருந்து வந்த ஹாலாஹாலமும் சேர்ந்து எங்கும் விஷப்புகை.  தேவர்களும், அசுரர்களும் மயங்கி விழுந்தனர்.  என்ன செய்வதெனத் தவித்த தேவர்தலைவன், ஈசனை நாட, அவர் தம்முடைய அவதார ரூபியான ஆலாலசுந்தரரை அவ்விடத்தை இவ்விடம் கொண்டு வா எனப் பணிக்க ஆலாலசுந்தரரும் சென்று அந்த விடத்தை எடுத்துச் சென்று நாவல்பழம்போல் உருட்டி ஈசனிடம் கொடுக்க அவரும் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு விட்டார்.  ஆஹா!  இது என்ன!  அனைத்துக்கும் ஆதிப்பரம்பொருளான ஈசன் உள்ளே விஷம் போனால் அனைத்து உயிர்களுக்கும் அது தாக்காதோ?  அருகே இருந்த அன்னைக்குக் கவலை பிறக்கத் தன் செந்தளிர்க்கரங்களால் ஈசனின் தொண்டையை மென்மையாகத் தடவிக் கொடுக்க விஷம் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்றது. இதனால் ஈசனின் கண்டம் என்றென்றைக்கும் நீலமாகிவிட நீலகண்டர் என்னும் திருநாமத்தைப் பெற்றார் ஈசன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விடமுண்ட கண்டரைத் தரிசிக்கவேண்டுமானால் சென்னைக்கருகே உள்ள அரக்கோணம் பக்கத்தில் சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் பள்ளி கொண்ட கோலத்தில் காணலாம். விஷமுண்ட கண்டரைத் தன் மடியில் போட்டுக்கொண்டு விஷத்தைத் தொண்டையிலேயே நிறுத்திவிட்டு அமுதத்தை தேவர்களுக்குக் கிடைக்கச் செய்த அமுதாம்பிகையாக அன்னை இங்கே காட்சி அளிப்பாள்.  இதைத் தவிரவும், நேபாளத்தில் காட்மாண்டுவில் பூடா நீல்கண்ட் என்னும் கோயிலிலும் கைலை செல்லும் வழியில் விஷம் உண்ட மயக்கத்தில் ஈசன் படுத்து இருப்பதைக் காணலாம்.  இவரை ஒரு கோணத்தில் பார்த்தால் விஷ்ணுவாகவும் காட்சி அளிப்பார்.  ஈசன் விஷத்தை உண்டுவிட்டுக் கைலை சென்றதாகவும் வழியில் மயக்கம் வரவே படுத்து இளைப்பாறியதாகவும் அங்கே கோயிலின் பூசாரிகள் கூறுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி அந்தாதியில் "பொருந்திய முப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால் வருத்திய மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே" என்று அபிராமி பட்டர் இதைத் தான் கூறுகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-2226735315250231931?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/2226735315250231931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=2226735315250231931' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2226735315250231931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2226735315250231931'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/10/blog-post.html' title='நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நீலகண்டர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-m6sYxdwWx7I/Tq3Nf4gdnGI/AAAAAAAAFbs/0U4glo4OuYA/s72-c/sivarppanam.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-3686480415523275928</id><published>2011-09-23T17:59:00.000-07:00</published><updated>2011-09-23T18:22:06.727-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க! நீல கண்டர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-udRakPnjSGw/Tn0wVzqfTAI/AAAAAAAAFW8/Qjr9rw5i4fY/s1600/imagesparkadal.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 187px;" src="http://2.bp.blogspot.com/-udRakPnjSGw/Tn0wVzqfTAI/AAAAAAAAFW8/Qjr9rw5i4fY/s320/imagesparkadal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655729858251017218" /&gt;&lt;/a&gt;அடுத்து நாம் காணப் போவது நீலகண்டர்.  விடமுண்ட கண்டன்.  விஷத்தை உண்பது என்பது எளிதல்ல.  ஆனால் மகேச்வரன் அதையும் உண்டான்.  உலக மக்கள் உய்யுமாறு அவர்கள் நலனுக்கெனத் தான் விஷத்தை உண்டான். நம்மிடம் எப்போதுமே மரண பயம் உண்டு.  அதைத் தவிர மற்ற சில பயங்களும், கவலைகளும் உண்டு.  எதற்கேனும் கவலைப்படுவோம். இது இல்லையே அது இல்லையே என ஏங்குவோம். இவை அனைத்தையும் வென்றாலேயே நாம் சுகித்திருக்க முடியும்.  ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை நம்மால்.  சாதாரணமான பயங்களையும், கவலைகளையும், ஏக்கங்களையும், விருப்பங்களையும் விட நம் அனைவரையும் ஆட்டிப்படைப்பது மரணபயமே.  பிறந்த குழந்தை கூடப்பாதுகாப்பை நாடும்.  உயிரின் இயல்பு அதுவே. இந்த மரணத்தை வெல்லவே யோகியர்களும், சித்தர்களும், ஞானிகளும் சாதனைகள் செய்து வருகின்றனர். பலதரப்பட்ட தெய்வீக மூலிகைகளின் மூலம் சித்தர்கள் தங்கள் உடலை வஜ்ரம் போல் செய்துகொண்டால், யோகியர்களோ யோக சாதனைகள் மூலம் அவற்றை அடைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தேவர்களோ அமுதம் உண்டதன் மூலம் அமரத்துவம் பெற்றனர் என்பதைப் படித்திருக்கிறோம்.  தேவர்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு.  நம்மைப்போலவே அவர்களும் என்றாலும் அமரத்துவம் அவர்களை நம்மிலிருந்து வேறுபடுத்திக்காட்டும். இத்தகைய நிலையை அவர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பதைப்பார்ப்போமா!  பிரஜாபதியான காச்யபரின் குழந்தைகளே தேவர்களும், அசுரர்களும்.  இவ்வுலக நியதிக்கேற்ப சகோதரச் சண்டை எப்போதும், எந்நேரமும்.  தேவர்கள் அசுரர்களுடனான சண்டையில் ஒரு சமயம் ஜெயித்தாலும் தோல்வியும் வாட்டியது.  மேலும் எப்படிப்பட்ட ஆயுதங்களைப் பிரயோகித்தாலும் சிதையாத உறுதியான தேகம், இறவாப் பெருநிலை அடையவேண்டும் என யோசித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரஜாபதிக்கெல்லாம் மூலகர்த்தாவான பிரம்மனிடம் சென்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர். அவரோ மஹாவிஷ்ணுவைப்பிரார்த்திக்கச் சொன்னார்.  அவரது திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும் என்றார்.  அதற்கு மஹாவிஷ்ணுவின் உதவி இல்லாமல் இயலாது என்றார்.  அமிர்தம் கிடைத்ததோ அளவற்ற வலிமையும், இறவா நிலையும் பெறலாம் என ஆலோசனை கூறினார்.  தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று பாற்கடலைக்கடைய வேண்டும் என உதவி கேட்டு நின்றனர்.  மஹாவிஷ்ணுவோ பாற்கடலைத் தேவர்களால் மட்டும் தனியாய்க் கடையமுடியாது என்றும், அசுரர்களையும் உதவிக்கு அழைக்குமாறு கூறினார். அசுரர்களும் தேவர்களுக்குக் கிடைக்கப்போகும் அமிர்தத்தில் பங்கு கொடுக்குமாறு ஆகிவிடுமே என தேவர்கள் பயந்தனர்.  மஹாவிஷ்ணுவோ தைரியமாய் அழைக்குமாறும், அசுரர்கள் அமிர்தம் உண்ணாமல் இருப்பது தம் பொறுப்பு எனவும் உறுதி கொடுத்தார்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-xxxMPiGNIRs/Tn0wZL_BihI/AAAAAAAAFXE/f3uzxC-OVs0/s1600/imageskadal.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://1.bp.blogspot.com/-xxxMPiGNIRs/Tn0wZL_BihI/AAAAAAAAFXE/f3uzxC-OVs0/s320/imageskadal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655729916319205906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் மேல் அசுரர்களையும் அழைத்தனர்.  இருவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைய முடிவு செய்தனர்.  மத்து வேண்டுமே. மந்திரமலை மத்தானது. ஆனால் மந்திரமலையைப் பெயர்க்க முடியவில்லை.  மீண்டும் மஹாவிஷ்ணு உதவிக்கு வந்தார்.  கருடன் மூலம் மந்திரமலை பாற்கடலுக்கு வந்து சேர்ந்தது.  மத்தைச் சுற்றக் கயிற்றுக்கு எங்கே போவது?? இவ்வளவு பெரிய மலைக்குச் சாதாரணக் கயிறு போதாதே?  யோசித்துவிட்டு தங்கள் சகோதர முறையாகும் அஷ்டமா நாகங்களின் ஒன்றான வாசுகியைப் போய்க் கேட்டனர்.  வாசுகியும் கயிறாக இருக்கச் சம்மதம் கொடுத்தது.  வாசுகியை மந்தரமலையைச் சுற்றிக் கட்டித் தலைப்பக்கம் தேவர்களும், வால் பக்கம் அசுரர்களும் நிற்க அசுரர்களோ பெரும் வீரர்களும் தேவர்களை வென்றவர்களும் ஆன தாங்கள் வால்பக்கம் நிற்பது தங்கள் வீரத்துக்கு இழுக்கு எனக்  கருத, மாற்றி நின்று கொண்டனர்.  கடைய ஆரம்பித்தனர். ஆனால் என்ன இது??&lt;br /&gt;&lt;br /&gt;மந்தரமலை உள்ளே அழுந்தியது. அசையவே இல்லை.  சுற்றிச் சுற்றி வரவேண்டாமோ? மாறாக தேவர்களுக்கும், அசுரர்களுக்குமே தலை சுற்ற ஆரம்பித்தது. யோசித்தனர்.  அடியில் ஏதேனும் வைத்து மலையைத் தாங்கிப் பிடித்தால் மலை உள்ளே அழுந்திக்கொள்ளாது என்ற யோசனை உருவாக என்ன செய்யலாம் என மீண்டும் யோசனை! இவ்வளவு பெரிய மலையை யார் தாங்குவார்கள்?? மஹாவிஷ்ணுவே சரணம்!&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-pdPZSgsPH0Q/Tn0wcJrF0qI/AAAAAAAAFXM/TBqGsmNtDfs/s1600/imagesaamai.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-pdPZSgsPH0Q/Tn0wcJrF0qI/AAAAAAAAFXM/TBqGsmNtDfs/s320/imagesaamai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655729967238337186" /&gt;&lt;/a&gt;  பலத்த யோசனைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பின்னர் ஆமை உருவில் மந்தரமலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு மஹாவிஷ்ணு பாற்கடலுக்கு அடியே செல்ல மீண்டும் கடைய ஆரம்பித்தனர். நாட்கள் சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாற்கடலில் இருந்து எதுவும் வரவில்லை. பாற்கடலோ பொங்கித் ததும்ப ஆரம்பித்தது.  வாசுகிக்கோ வலி பொறுக்க முடியவில்லை. தனது ஆயிரம் வாய்களாலும் விஷத்தைக் கக்கப் பாற்கடலில் இருந்தும் விஷம் பொங்கிப் பிரவாஹித்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-3686480415523275928?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/3686480415523275928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=3686480415523275928' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3686480415523275928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3686480415523275928'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/09/blog-post.html' title='நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க! நீல கண்டர்'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-udRakPnjSGw/Tn0wVzqfTAI/AAAAAAAAFW8/Qjr9rw5i4fY/s72-c/imagesparkadal.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-5703241759686014740</id><published>2011-08-20T02:07:00.000-07:00</published><updated>2011-08-20T02:11:31.192-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க! ஸ்ரீசரப மூர்த்தி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-WW_JXMxwF7Y/Tk96GDu2xgI/AAAAAAAAFTo/Jd3zwyP1Wr4/s1600/images2sarabar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 197px; height: 131px;" src="http://4.bp.blogspot.com/-WW_JXMxwF7Y/Tk96GDu2xgI/AAAAAAAAFTo/Jd3zwyP1Wr4/s320/images2sarabar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5642863102618158594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சரபர் நரசிம்ம மூர்த்தியோடு சம்பந்தப்பட்டவர்.   ஹிரண்யாக்ஷன் இறந்ததும், ஹிரண்யகசிபுவுக்கு விஷ்ணுவின் மீதும் அவர் பக்தர்கள் மேலும் அடங்காத கோபம் வந்தது.  அந்தக் கோபம் நாளாவட்டத்தில் வன்மமாக மாறுகிறது.  ஆகவே விஷ்ணுவின் பெயரையே குடிமக்கள் சொல்லக் கூடாது; ஆசிரியர்கள் கற்றுத்தரக் கூடாது; என்றெல்லாம் அவன் போட்ட சட்டங்களும், அதை மீறிய அவன் குமாரன் பிரஹலாதன் பற்றியும் நாம் நன்கறிவோம். பிரஹலாதனைக் கொல்ல முயற்சி செய்த ஹிரண்யகசிபுவிடமிருந்து அவனைக்காக்க வேண்டி தோன்றிய நரசிம்மம் ஆனது ஹிரண்யகசிபுவைக் கொன்று அவன் ரத்தத்தைக் குடித்த பின்னரும் கோபம் தணியாமல் இருக்கவே ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி சாந்தப் படுத்தச் சென்றாள்.  ஆனால் அவளாலும் இயலாமல் போகவே தேவர்கள் கவலை கொண்டனர்.  இதற்குச் சரியான ஆலோசனையை ஈசனாலேயே தர இயலும் என்பதால் ஈசனை நாடுகின்றனர்.  தன்னால் தான் நரசிம்மத்தின் கோபத்தை அடக்க இயலும் என்று ஈசன் எடுத்த வடிவமே ஸ்ரீசரபமூர்த்தி என்பார்கள்.  ஒரு சிலர் ஈசன் வீரபத்திரரைப்பணித்ததாகவும், வீரபத்திரரே ஸ்ரீசரபராக மாறினார் எனவும் கூறுகின்றனர். லிங்க புராணத்தில் வீரபத்திரர் சரபராக வந்ததாய்க் குறிக்கப் பட்டிருக்கும் என்றும் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டுக் கால்களோடும், இரண்டு முகங்களோடும், (இரண்டும் சிங்க முகங்கள்) ஆனால் மனித உடலில் பொன்னிறமான இரு இறக்கைகள் பறவைகளைப் போலவும், சிங்கத்தைப் போன்ற கூரிய நகங்களுடன் கூடிய நான்கு கால்கள், வால் நீண்டு விலங்கைப் போலவும் காட்சி கொடுத்த இந்த அதிசய வடிவம் ஸ்ரீசரப மூர்த்தி ஆவார்.  இவர் பகைவர்களுக்கெல்லாம் பகைவர்.  நரசிம்மரையே அடக்கியதால் நரசிம்ம சம்ஹாரி என அழைக்கப் படுகிறர்.  ஸ்ரீ சரபரை வழிபட்டால் இவரின் அளவற்ற சக்தியால் இயற்கைச் சீற்றங்கள், பேராபத்துக்களிலிருந்து தப்பலாம் எனவும், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத நோய் அகலும் எனவும் கூறுகின்றனர்.  மேலும் பரிகாரம் செய்ய முடியாத எந்தக் கஷ்டமானாலும் சரியாகிவிடும் எனவும், மரண பயம் ஏற்படாது எனவும் கூறுகின்றனர்.  &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-LGmNqkAzTE4/Tk96J0PrDpI/AAAAAAAAFTw/XQv7r34CuXs/s1600/indexsarabar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 80px; height: 112px;" src="http://4.bp.blogspot.com/-LGmNqkAzTE4/Tk96J0PrDpI/AAAAAAAAFTw/XQv7r34CuXs/s320/indexsarabar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5642863167180312210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அதி உக்ரமூர்த்தியை ஆகாச பைரவர் எனவும் கூறுகின்றனர்.  இவருக்கும் ஈசனைப் போல் மூன்று கண்கள் உண்டு.  சூரியன், சந்திரன் ஆகிய இருகண்களைத் தவிர அக்னி நெற்றிக்கண்ணாக விளங்குகிறது.  இரண்டு இறக்கைகளையும் முறையே காளியாகவும், துர்க்கையாகவும் கூறுவார்கள்.  நாக்கை பூமியின் பாத வலையம் எனவும், கால் நகங்களில் இந்திரன் இருப்பதாகவும், வயிற்றில் காலாக்னியும், இரு தொடைகளும் முறையே காலன், ம்ருத்யுவாகவும் திகழ்கின்றதாய்ச் சொல்வார்கள்.   வலிமை வாய்ந்த சரபரைத் துதிப்பதால் கொடிய பகைவனையும் வெல்ல முடியும் என்றும், போர்களில் வெற்றி கிடைக்கும் எனவும் சொல்லப் படுகிறது.  பெரும்பாலும் தெலுங்கு பேசும் ஆந்திர மாநிலத்தை ஆண்ட சாளுக்கிய மன்னர்களாலேயே ஸ்ரீ சரபர் வழிபடப் பட்டதாய்த் தெரிய வருகிறது.  தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர் காலத்திலேயே சரபர் வழிபாடு பிரபலம் அடைந்ததாயும் தெரிய வருகிறது.  சிதம்பரம் கோயிலில் சரபருக்கு எனத் தனி சந்நிதி இருப்பதை ஏற்கெனவே சிதம்பர ரகசியம் தொடரில் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட கும்பகோணத்தை அடுத்த திரிபுவனத்தில் சரபருக்குத் தனி சந்நிதி உண்டு.  ஆனால் முதன் முதல் கும்பகோணத்தை அடுத்த வீர சோழீச்சுரம் கோயிலில் தான் சரபருக்கு முதல் சிற்பம் அமைக்கப்பட்டதாய் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கோயிலில் ஐராவதேஸ்வரர் கோயிலின் ராஜகம்பீர மண்டபம் எனப்படும் வெளி மண்டபத்தில் ஸ்ரீ சரபரை வணங்கிய வண்ணம் நரசிம்மர் காட்சி கொடுப்பதைக் காணலாம்.  புகைப்படம் எடுக்க முடியவில்லை.  ப்ரத்யங்கிரா எனப்படும் காளியும், சூலினி எனப்படும் துர்கையும் இவரின் சக்திகளாய்ச் சொல்லப் படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;      &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-5703241759686014740?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/5703241759686014740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=5703241759686014740' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/5703241759686014740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/5703241759686014740'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/08/blog-post_20.html' title='நமச்சிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க! ஸ்ரீசரப மூர்த்தி'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-WW_JXMxwF7Y/Tk96GDu2xgI/AAAAAAAAFTo/Jd3zwyP1Wr4/s72-c/images2sarabar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-4789954373746152522</id><published>2011-08-10T05:05:00.001-07:00</published><updated>2011-08-11T01:52:22.953-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-1T1XYED3o0w/TkOX8Xq3rHI/AAAAAAAAFMc/ouEne1Ee5Dw/s1600/imagesashta%2Bpairavar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 277px; height: 182px;" src="http://2.bp.blogspot.com/-1T1XYED3o0w/TkOX8Xq3rHI/AAAAAAAAFMc/ouEne1Ee5Dw/s320/imagesashta%2Bpairavar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5639518221799763058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பைரவர்களின் எட்டு வடிவங்களும், அவருக்கு ஏற்ற பெண் தெய்வங்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;அஷ்டாங்க பைரவர்- பிராம்மி&lt;br /&gt;ருரு பைரவர்- மாஹேஸ்வரி&lt;br /&gt;சந்த பைரவர்- கெளமாரி&lt;br /&gt;க்ரோத பைரவர்- வைஷ்ணவி&lt;br /&gt;உன்மத்த பைரவர்- வாராஹி&lt;br /&gt;கபால பைரவர்-நாரசிம்ஹி&lt;br /&gt;பீஷண பைரவர்- சாமுண்டி&lt;br /&gt;சம்ஹார பைரவர்- சண்டிகா&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு பைரவர்களையும் இயற்கையின் எட்டு சக்திகளாய்க் குறிப்பிடப் படுவது உண்டு.  அவை மண், விண், காற்று, நீர், நெருப்பு, சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா.  இவர்களில் காசியில் இருப்பவரைக் காலபைரவர் என்று அழைப்பார்கள்.  ஆனாலும் காசியில் அஷ்ட பைரவர்களுக்கும் எட்டு இடங்களில் சந்நிதி இருப்பதாகவும், தீவிர சிவ பக்தர்கள் இந்த இடங்களுக்கு “அஷ்ட பைரவ யாத்திரை” செல்வதாகவும் அறிகிறோம்.  சீர்காழியிலும் தோணியப்பர் சந்நிதியின் வெளிப் பிரகாரத்தின் தென்பகுதியில் அஷ்ட பைரவர்களைக் காண முடியும்.  தமிழ் நாட்டிலும் அஷ்ட பைரவத் தலங்கள் உள்ளன.  அவை செட்டிநாடு என அழைக்கப் படும் காரைக்குடிப் பக்கம் திருப்பத்தூர், அழகாபுரி, வைரவன்பட்டி, பெருஞ்சிக்கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய இடங்கள் அஷ்ட பைரவத் தலமாகப் போற்றப் படுகிறது.  ஆந்திராவின் தேவார வைப்புத்தலமான ராமகிரியில் விஜய பைரவர் என்ற பெயரில் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய பைரவர் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் அறிகிறோம்.  அங்கே பைரவரின் பீடத்தின் கீழே பைரவ சக்கரமும் ஸ்தாபித்திருப்பதாய் அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் பைரவ வழிபாடு மிகவும் பிரசித்தியாக இருந்தது என்பதற்கு அடையாளமாக, நாயன்மார்களில் முக்கியமானவரான சிறுத்தொண்ட நாயனார், பைரவ சமயத்தைச் சார்ந்திருப்பதை வைத்து அறிகிறோம்.  மேலும் இயற்பகை நாயனாரும் பைரவ சமயம் என்றும் ஈசன் இவர்களை எல்லாம் பைரவ வடிவிலேயே காட்சி கொடுத்து அருளியதாகவும் அறிகிறோம். வடுகர், க்ஷேத்திரபாலகர் போன்ற பெயர்களும் பைரவருக்கு உரியது.  பழைய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே க்ஷேத்திரபாலபுரம் என்ற பெயரில் பைரவருக்குத் தனியாகக் கோயில் உள்ளது.  சீர்காழிக் கோயிலில் கட்டுமலையில் தோணியப்பர் சந்நிதிக்கு மேலே உள்ள தென்கோடி விமானத்தின் தேவர் வடுகநாதர், சட்டைநாதர் என்றெல்லாம் வழங்கப் படும் பைரவரே ஆவார்.  ஆண் மகன் தன் குழந்தைப் பருவத்தைக்கடந்து வாலிபப் பருவத்தை எய்தும் முன்னர் இருக்கும் நிலையே வடுகன் எனப்படும்.  அந்தக் கோலத்திலேயே இருப்பதால் இவருக்கு வடுகநாதர் என்று பெயர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வடுகநாதர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அவருக்கு அபிஷேஹம் கிடையாது.  புனுகு சார்த்துவார்கள்.  இவருக்குப் பூஜையும் இரவு நேரத்திலேயே நடைபெறும்.  பெண்கள் தலையில் மலர் சூடிக்கொண்டு இவரைத் தரிசிப்பதைத் தவிர்க்கச் சொல்லுவார்கள்.  வெள்ளிக்கிழமைகளில்  நள்ளிரவு நேரத்தில் வடுக நாதருக்குப் புனுகு சார்த்தி, நெய்யில் வடைமாலை சாற்றி, முழுத்தேங்காயை நிவேதனம் செய்தல் சிறப்பாகச் சொல்லப் படும்.  மேற்கண்ட எட்டு பைரவர்களைத் தவிர ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அனைவரிலும் சிறப்பாக வழிபடுபவர்.  சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் இடப்பக்கம் இருக்கும் விக்கிரஹங்களில் சந்திரசேகரருக்கு அடுத்து ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இடம் பெற்றிருப்பார்.  ஒரு காலத்தில் இவரே தில்லை வாழ் அந்தணர்களின் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்ததாகச் சொல்கின்றனர்.  தினசரி காலை சந்நிதி திறக்கையில் அங்கே ஓர் ஓலைச்சுவடியில் பொற்காசுகள் வைக்கப் பட்டிருக்கும் எனவும், அதை தீக்ஷிதர்கள் தங்களுக்குள் குடும்பத் தேவைக்கு ஏற்பப் பிரித்துக்கொள்வார்கள் எனவும் கூறுகின்றனர்.  இன்றும் பணக் கஷ்டம் ஏற்பட்டால் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு அபிஷேஹ, ஆராதனைகள் செய்தல் கடைப்பிடிக்கப்படுகிறது.  திருமணம் நிறைவேற வேண்டியும் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை, அபிஷேஹம் செய்யலாம்.  எல்லாச் சிவன் கோயில்களிலும் தினசரி வழிபாடுகள் சூரியனில் ஆரம்பித்து இரவு பைரவரில் முடியும்.  என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் இவரையும் ஈசனாகவே கருதுவார்கள்.  பைரவர் சந்நிதி கிழக்குப் பார்த்து இருப்பது நல்லதில்லை என்றும் ஐதீகம்.  பொதுவாக பைரவர் கோயில்களில் வடக்குப்பார்த்தே இருப்பார்.  தெற்குத் திசையில் சந்நிதி அமைந்திருக்கும். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-t9G6uJolWOE/TkOYACHtMeI/AAAAAAAAFMk/jv2A0MCXJz0/s1600/imageskala%2Bpairavar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 184px; height: 274px;" src="http://3.bp.blogspot.com/-t9G6uJolWOE/TkOYACHtMeI/AAAAAAAAFMk/jv2A0MCXJz0/s320/imageskala%2Bpairavar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5639518284734607842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துப் பார்க்கப் போவது சரபர், ஏனெனில் இவரும் பைரவரின் ஒரு வடிவமே எனக் கருதப்படுகிறார். &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-4789954373746152522?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/4789954373746152522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=4789954373746152522' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/4789954373746152522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/4789954373746152522'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/08/blog-post.html' title='நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-1T1XYED3o0w/TkOX8Xq3rHI/AAAAAAAAFMc/ouEne1Ee5Dw/s72-c/imagesashta%2Bpairavar.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-759600539153660577</id><published>2011-07-27T03:02:00.000-07:00</published><updated>2011-07-27T04:54:20.164-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-ie6VE7obKis/Ti_8MRpHubI/AAAAAAAAFEs/GFGcJFLFThw/s1600/200px-Bhairav.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 132px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-ie6VE7obKis/Ti_8MRpHubI/AAAAAAAAFEs/GFGcJFLFThw/s320/200px-Bhairav.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633998946688285106" /&gt;&lt;/a&gt;சதுர்முகன் ஆணவத் தலையினைக்&lt;br /&gt;கொய்தான் சத்தோடு சித்தானான்” &lt;br /&gt;&lt;br /&gt;என்று ஸ்வர்ணாகர்ண பைரவாஷ்டகம் கூறுகிறது.  பைரவரின் அவதாரத்தின் காரணமும் சதுர்முகனின் தலையைக் கொய்வது தான். ஈசனைப் போலவே ஐந்து முகங்களுடனே இருந்தான் பிரம்மாவும்.  சதுர்முகனின் ஐந்து முகங்களையும் ஒரு சமயம் ஒரு சேரப்பார்த்த தேவியே ஈசனுக்கும், சதுர்முகனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு கண நேரம் மயங்க சதுர்முகனின் ஆணவம் தலைக்கு ஏறியது.  மதிமயங்கிய சதுர்முகன் சிவநிந்தனை செய்யத் துவங்க, அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் அந்த ஐந்தாவது சிரத்தைத் துண்டிக்க எண்ணி பைரவரைத் தோற்றுவித்தார்.  வடுகனாக, (சின்னஞ்சிறு பிரம்மசாரியை வடு என்பார்கள்) சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் ஜடாமுடிகளுடனும், அந்த சிவந்த ஜடாமுடியில் குளிர் நிலவான சந்திரப் பிறையுடனும், கைகளில் உடுக்கை, சூலம், ஏந்தியவண்ணம், பாசக்கயிற்றையும் ஏந்திய வண்ணம் தோன்றிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுக்க அதுவும் அவர் கரங்களில் தங்கலாயிற்று.  நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக மாறி வாகனமாக மாற, மூன்று கண்களோடும், இவ்வுலகையும், மற்றும் அனைவரையும் காப்பாற்றும் க்ஷேத்திர பாலகராய், பூத, பிசாசுக்கூட்டங்களுக்கும் தலைவனாய்த் தோன்றினார் பைரவர்.  இவரை வடுக பைரவர் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையை பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிய கதையோடும் சம்பந்தப்படுத்தி, அதிலே பிரம்மா பொய்யுரைத்ததால் பிரம்மாவின் சிரத்தை அறுக்குமாறு கட்டளையிட்டதாயும் ஒரு கூற்று உண்டு.  எப்படி இருந்தாலும் பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கத் தோன்றியவரே பைரவர்.  இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் என்பார்கள்.  ஈசனின் அட்ட வீரட்டானத் தலங்களில் முதன்மையான வீரமும் இதுவே.  முதன்மையான வீரட்டானத் தலமும் இதுவே.  பிரம்மாவின் சிரத்தைக் கொய்த பைரவருக்கு இங்கே தனிச் சந்நிதி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம்.  பிரம்மாவின் சிரத்தைக் கொய்தவண்ணம் காணப்படும் சிற்ப அதிசயம் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம்.  இதிலே பிரம்மா தன் ஐந்தாவது தலையை இழந்துவிட்டு அந்த பயத்துடனேயே நிற்பது போல் காட்சி அளிக்கிறார் என்றும் தெரிய வருகிறது.  கொஞ்சம் கோபத்துடன் பைரவர் காணப்படுவார்.  இவ்வுலகைக்காக்கும் பொறுப்பை ஈசன் பைரவருக்கு அளித்திருப்பதாயும், இரவெல்லாம் தன் வாகனமும், தோழனுமான நாயுடன் பைரவர் சுற்றி வந்து காவல் புரிவதாயும் ஐதீகம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம்.  பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார்.  வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப் படுகிறார்.  வைரவன் பட்டி என்ற பெயரில் ஒரு தலம் செட்டிநாட்டுப் பகுதியில் காண முடியும்.  சில இடங்களில் ஒரே ஒரு நாயுடனேயே காணப்படுவார்.  சிவன் கோயில்களின் வெளிபிரஹாரத்திலேயே குடி கொண்டிருக்கும் வைரவர் என்னும் பைரவரின் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்துவிடுவார் என்றும் மறுநாள் காலை வரை சாவி அந்த இடத்திலெயே இருக்கும் என்று செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பைரவ வழிபாடு பிரபலமான ஒன்று என்றாலும் ராஜஸ்தானிலும், நேபாளத்திலும், காசியிலும் மிகச் சிறப்பாக வழிபடுகின்றனர்.  பெளத்தர்களுக்கும் பைரவ வழிபாடு உண்டு என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது.  இது குறித்த உறுதியான தகவல் இல்லை.  பைரவரை எட்டு விதமாக வழிபடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கால பைரவர்&lt;br /&gt;அஸிதாங்க பைரவர்&lt;br /&gt;சம்ஹார பைரவர்&lt;br /&gt;ருரு பைரவர்&lt;br /&gt;க்ரோத பைரவர்&lt;br /&gt;கபால பைரவர்&lt;br /&gt;ருத்ர பைரவர்&lt;br /&gt;உன்மத்த பைரவர்&lt;br /&gt;கால பைரவர் தான் சனி பகவானின் குரு என்றும் கருதப்படுகிறார்.  சிங்களத்திலும் பைரவ வழிபாடு உண்டு.  சொத்துக்களைப்பாதுகாப்பவராய்க் கருதப் படுகிறார்.  தமிழ்நாட்டிலோ வைரவர் என்ற பெயரில் எட்டுத் திக்கையும் காக்கும் கிராம தேவதையின் உருவிலோ, அல்லது வைரவர் என்ற பெயரிலோ வணங்கப் படுகிறார்.  சிவ வழிபாட்டின் அகோர வழிபாடு என்னும் பிரிவில் பைரவர் முக்கியமான அங்கம் வகிக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-759600539153660577?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/759600539153660577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=759600539153660577' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/759600539153660577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/759600539153660577'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/07/blog-post_27.html' title='நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ie6VE7obKis/Ti_8MRpHubI/AAAAAAAAFEs/GFGcJFLFThw/s72-c/200px-Bhairav.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-3525243692013531960</id><published>2011-07-19T03:57:00.000-07:00</published><updated>2011-07-19T03:59:13.785-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!</title><content type='html'>அஞ்சையும் அடக்கி ஆற்றலுடையனாய் அநேக காலம்&lt;br /&gt;வஞ்ச மிள் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு&lt;br /&gt;வெஞ்சின முகங்களாகி விசையொரு பாயுங்கங்கை&lt;br /&gt;செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!&lt;br /&gt;&lt;br /&gt;திருநாவுக்கரசரின் இந்தப் பாடல் ஐம்புலன்களையும் அடக்கித் தவம் புரிந்து கங்கையை விண்ணிலிருந்து மண்ணுக்குக் கொண்டு வந்த பகீரதனின் எல்லையற்ற ஆற்றலையும் பகீரதனுக்காகப் பன்முகங்களுடன் விரைந்து வந்த கங்கையையும் திருச்சேறை என்னும் ஊரில் உள்ள ஈசன் தன் செஞ்சடையில் ஏற்று அருள் புரிந்ததாகப் பாடி இருக்கிறார். இந்தத் திருச்சேறையில் தான் ஸ்ரீருணவிமோசன லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதை அறிந்து பார்க்க வேண்டிச் சென்றோம்.  சென்ற சமயம் கோயிலில் குருக்கள் இல்லை.  வரக் கொஞ்சம் நேரம் ஆகும் என்றதால் அரை மணி போல் காத்திருந்துவிட்டுத் திரும்பிவிட்டோம்.   கருவறையை லேசாய் மூடி இருந்தனர்.  அதில் உள்ள இடைவெளி மூலம் தரிசனம் செய்து கொண்டோம். சுயம்புலிங்கம் என்று சொன்னார்கள்.  மேலும் இந்தக் கோயிலில் துர்க்கைக்கு மூன்று சந்நிதிகள் காணப்பட்டன.  இங்குள்ள பைரவரும் அப்பரால் பாடப்பட்டவர் என்றார்கள்.  பைரவரைக்குறித்த பாடல்,&lt;br /&gt;&lt;br /&gt;“விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருங்கை&lt;br /&gt;தரித்ததோர் கோலே கால பைரவனாகி  வேழம்&lt;br /&gt;உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்&lt;br /&gt;சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!”&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வண்ணம் பூமிக்கு வந்தாள் கங்கை.  இமவானின் மூத்தமகளாகக் கருதப் படும் கங்கையைத் தன் சடையில் ஈசன் தாங்கிக்கொண்ட கோலமே ஸ்ரீகங்காதரர் ஆகும்.  கங்காதரரின் திருவுருவம் யோகபட்டத்தோடு, ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் விரிசடையில் ஆமை, மீன், முதலை போன்ற உயிரினங்களோடு கங்கையின் திருமுகம் காணப்படும் என்றும் ஈசனின் கரங்கள் மான், மழுவைத் தாங்கி, சின் முத்திரை காட்டிய வண்ணம் இன்னொரு கீழ்க் கை வரத முத்திரையும் காட்டிக்கொண்டு காட்சி அளிக்கும் என்று வர்ணிக்கப் படுகிறது. இந்தப் படம் கிடைக்கவில்லை.  மீன்களோடு ஒரு படம் இருந்தது.  அதையும் கூகிளில் தேடினேன்.  வரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஈசன் தன் செஞ்சடையில் இருந்து கங்கையை எடுத்து வெளியே விடும் வண்ணம் காட்சி அளிக்கும் திருவடிவங்களே பல ஆலயங்களிலும் காண முடியும்.  அருகே சற்றே முகத்தைத் திருப்பிய வண்ணம் எழிலார்ந்த கோலத்தில் அன்னையும், வணங்கிய நிலையில் பகீரதனும் காணப்படுவார்கள்.  நந்தி ஈசன் விடும் கங்கை நீரை வாங்கி உமிழும் கோலத்தில் காணப்படுவார். மிக அரிய சிற்பம் இது.  இன்னும் காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில், புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களிலும் காணமுடியும்.  இதிலே காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் பலமுறை தரிசித்தும் சரியாய் நினைவில் இல்லை.  அதேபோல் மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாளையும் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகின்றன.  ஆனால் கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலிலும், தாராசுரத்திலும், திருவிடைமருதூரிலும் இருப்பதாய்க்கேள்விப்படுகிறோம்.  அடுத்த முறை அங்கே செல்லுகையில் கட்டாயமாய்ப் பார்த்துப் படங்கள் எடுத்து வரவேண்டும்.  சிதம்பரத்தில் கங்கைக்குத் தனியே சந்நிதி உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அடுத்து நாம் காணப் போவது நெடுநாளாகக் காண வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவர். பைரவர் ஈசனின் பல்வேறு வடிவங்களில் மிக முக்கியமானவர்.  இவரே கோயில்களின் பாதுகாப்புக்கும் உரிய கடவுள் ஆவார்.  ஈசன் கோயில்களை பைரவரே காத்து வருவதாக ஐதீகம்.  முன்காலங்களில் கோயில்களைப் பூட்டிச் சாவியை வெளிப் பிராஹாரத்தில் காணப்படும் பைரவர் சந்நிதியில் வைத்துவிடுவார்களாம்.  பைரவர் தன் வாகனம் ஆன நாயுடன் கோயிலைச் சுற்றி உலா வந்து கொண்டிருப்பார் என்றும் பலர் கண்களிலும் பட்டிருக்கிறார் என்றும் கூறுவார்கள்.  சிதம்பரத்தில் பைரவர் தனம் தருபவராக இருந்திருக்கிறார்.  தில்லை வாழ் அந்தணர்கள் தங்கள் பிழைப்புக்குப் பணமோ, பொருளோ இல்லாமல் வருந்த ஈசன் பைரவருக்கு ஆணை யிட ஒவ்வொரு நாளும் இரவில் பைரவர் பொற்காசுகளை நடராஜர் சந்நிதியில் வைத்து விடுவார் என்றும் அதைக் காலையில் அன்றாட வழிபாட்டுக்கு வரும் தீக்ஷிதர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் சிதம்பரம் வாழ் தீக்ஷிதர்கள் கூறுவார்கள்.  சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதிக்கு அருகேயே கீழ்ப்பக்கமாக பைரவருக்கும் தனி இடம் உண்டு.  அவருக்கு அபிஷேஹமும் உண்டு.  இங்கே பைரவருக்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர்.  இனி பைரவர் குறித்த செய்திகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-3525243692013531960?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/3525243692013531960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=3525243692013531960' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3525243692013531960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3525243692013531960'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/07/blog-post_19.html' title='நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-4001074187128429156</id><published>2011-07-10T00:26:00.001-07:00</published><updated>2011-07-10T00:31:34.691-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ZUVqHJ0VXLw/ThlVFl7i0vI/AAAAAAAAFBM/RbRQ1Yqq9LI/s1600/indexbagirathan.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/-ZUVqHJ0VXLw/ThlVFl7i0vI/AAAAAAAAFBM/RbRQ1Yqq9LI/s320/indexbagirathan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5627622763945710322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி, கங்கை பூமிக்கு வந்து பாதாளத்துக்கும் பாய்ந்து அவர்களை மோக்ஷம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டான்.  கங்கை, “அப்பா, பகீரதா! உன் நோக்கம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றே!  நானும் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன்.  ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்குவாளா? அவளால் இயலாது.  நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்ய முடியுமா உன்னால்? அப்படி எனில் நான் வருகிறேன்.”  என்று கூறினாள்.  பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும், பூமியின் மகா பராக்கிரம சாலிகளையும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான்.  ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்தனர்.   பின்னர் மஹாவிஷ்ணுவை பகீரதன் வேண்ட, அவரோ, “இது ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும்.  அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர்.  அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெற்று அவர் மூலம் கங்கையை வரவழை.” என்று கூறிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;பகீரதனும் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்ட, மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்தார்.  “பகீரதா, உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம்;  உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும், உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன்.  கங்கையை பூமிக்கும், பின்னர் பாதாளத்துக்கும் அழைத்து வர நான் உதவுகிறேன்.  எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன்.  கங்கை அதிலே குதிக்கட்டும்.  அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன்.”  என்றார்.  பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க, அவளும் மகிழ்வோடு வரச் சம்மதித்தாள்.  “ஹோ” வென்ற ஆரவாரமான சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்தாள் கங்கை.  ஈசன் தன் சடையை விரித்துப் பிடிக்க, கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது.  ஆஹா, நம் வேகம் என்ன?  இந்த சடாபாரத்தின் பலம் என்ன?? இதனால் நம்மைத் தாங்க இயலுமா என்ன?  என் ஆற்றலையும், வேகத்தையும் இந்தப் பிக்ஷாடனனால் தாங்க இயலுமா?” என யோசித்தாள்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-bkhqwceig5U/ThlVI9wN3hI/AAAAAAAAFBU/4Jd44hMXxxI/s1600/180px-Ravi_Varma-Descent_of_Ganga.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 275px;" src="http://4.bp.blogspot.com/-bkhqwceig5U/ThlVI9wN3hI/AAAAAAAAFBU/4Jd44hMXxxI/s320/180px-Ravi_Varma-Descent_of_Ganga.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5627622821880258066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டம் புரிந்து கொண்டவராய், நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார் சுருட்டி. திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவிக்க, பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைய, ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.  அவன் முன் தோன்றிய ஈசன், கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு, கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார்.  அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட, கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள்.  பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான்.  வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது.  கங்கை வந்த வேகத்தில் தன் நீர்க்கரங்களால் அந்த ஆசிரமத்தை முற்றிலும் உருட்டித் தள்ளிக்கொண்டு முனிவரையும் நீர்ப்பெருக்கோடு உருட்டித் தள்ள ஆயத்தமானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபம் கொண்ட முனிவர், கங்கையை அப்படியே தன் கைகளால் எடுத்து அள்ளிக் குடித்து ஆசமனம் செய்துவிட்டார்.  கங்கை மீண்டும் சிறைப்பட்டாள்.  பகீரதன் கலங்கியே போனான்.  முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும், கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான்.  அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார்.  இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன்.  அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் எலும்புகள் மற்றும் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான்.  சகரபுத்திரர்களுக்கு நற்கதி கிடைத்தது.  அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்ததாக ஐதீகம்.  இந்தக் கங்கையைத் தலையில் தாங்கிய ஈசனே கங்காதரர் எனப்பட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-4001074187128429156?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/4001074187128429156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=4001074187128429156' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/4001074187128429156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/4001074187128429156'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/07/blog-post_10.html' title='நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ZUVqHJ0VXLw/ThlVFl7i0vI/AAAAAAAAFBM/RbRQ1Yqq9LI/s72-c/indexbagirathan.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-558366792694397933</id><published>2011-07-03T02:37:00.000-07:00</published><updated>2011-07-03T02:41:08.609-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-U0gH0cvg8UA/ThA4--k82rI/AAAAAAAAE_4/oF2EOHDohrI/s1600/imagesgangai.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://2.bp.blogspot.com/-U0gH0cvg8UA/ThA4--k82rI/AAAAAAAAE_4/oF2EOHDohrI/s320/imagesgangai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5625058589186775730" /&gt;&lt;/a&gt;அடுத்து நாம் காணப் போவது கங்காதரரை.  கங்கையை ஈசன் தலையில் சுமந்த காரணத்தையே இப்போது நாம் அறியப்போகிறோம்.  இக்ஷ்வாகு குலத்து அரசன் ஆன சகரனுக்கு முதல் மனைவி மூலம் இரு மகன்களும், இரண்டாம் மனைவி மூலம் அறுபதினாயிரம் புதல்வர்களும் இருந்தனராம். சகரன் அஸ்வமேத யாகம் செய்ய உத்தேசித்து, அஸ்வமேதக் குதிரையை நன்கு அலங்கரித்து மூவுலகையும் சுற்றிவர அனுப்பி வைத்தான்.  அந்தக் குதிரையை தேவேந்திரன் கவர்ந்து கொண்டு சென்று பாதாளத்தில் ஒளித்து வைக்கிறான்.  ஒளித்து வைத்த இடம் கபில முனிவரது ஆசிரமம்.  இந்த விஷயம் சகரனுக்குத் தெரியாது.  குதிரையைக் காணோமே என்று தேடுகிறான்.  யாகத்திற்கு எனக் காப்புக் கட்டிக் கொண்டுவிட்டான்.  ஆகவே யாகசாலை எல்லையைத் தாண்டி அவன் செல்ல முடியாது.  ஆகவே தன் அறுபதினாயிரம் புதல்வர்களையும் குதிரையைத் தேடி வரும்படி அனுப்பி வைக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;தேவலோகத்திலும், பூலோகத்திலும் குதிரையைத் தேடிக் காணாமல் ஏமாற்றம் அடைந்த சகரனின் புதல்வர்கள், கடைசியில் பாதாளத்திற்கு வருகின்றனர்.  அங்கே கபில முனிவரது ஆசிரமத்திற்கு அருகே குதிரை இருப்பதைக் கண்டு அங்கே சென்றனர்.  குதிரையைக் கபிலர் தான் பிடித்து வைத்திருப்பாரோ எனச் சந்தேகமும் கொண்டனர்.  இவர்களின் தேடுதலாலும் அத்து மீறி நுழைந்ததாலும் கோபம் கொண்ட கபிலர் அவர்களைச் சாம்பலாகும்படி சபிக்க, அவர்களும் அப்படியே எரிந்து சாம்பலாயினர்.  தன் புதல்வர்கள் திரும்பி வராததைக் கண்ட சகரன், அடுத்துத் தன் பேரன் ஆன அம்சுமான் என்பவனை அனுப்பி வைக்கிறான்.  அனைவரையும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பி வைத்தான்.  அம்சுமானும் கிளம்பி விண்ணிலும், மண்ணிலும் குதிரையைத் தேடிவிட்டுப் பின்னர் பூமிக்கு அடியில் பாதாளத்தில் செல்ல வேண்டி அஷ்ட நாகங்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு அவற்றின் உதவியோடு பாதாளத்தை அடைந்தான்.  அங்கே கபிலரின் ஆசிரமத்தையும் அடைந்தான்.  அங்கே சென்று கபிலரை வணங்கிப் பணிந்து தான் வந்த காரியத்தைக் கூற மனம் வருந்திய கபிலர் தாம் அவர்களை எரிந்து சாம்பலாகும்படி சபித்ததைக் கூறி வருந்தினார். யாகக் குதிரையையும் அம்சுமானிடம் திரும்பக் கொடுத்தார்.  முனிவரின் செய்தியோடு ஆசிகளையும் பெற்றுக்கொண்ட அம்சுமான் குதிரையை ஓட்டிக்கொண்டு வந்து தன் பாட்டன் சகரனிடம் ஒப்படைத்தான்.  மனம் வருந்திய சகரன் தன் பிள்ளைகளின் நிலையைக் குறித்தும் அவர்களின் கதியை நினைத்தும் மனம் வருந்தினாலும் யாகத்தை  நிறுத்தாமல் முடித்துவிட்டுப் பின்னர் பிள்ளைகளின் நற்கதிக்குத் தவம் இருந்தான்,  அவன் கோரிக்கை நிறைவேறாமலேயே இறந்தும் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் பேரன் அம்சுமான் பல காலம் ஆண்டு விட்டுத் தன் குமாரன் திலீபனுக்கு அரசாட்சியை அளித்தான். இறந்த முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்கத் தவம் மேற்கொண்டும் இருவராலும் அது நிறைவேறவே இல்லை.  திலீபன் தன் மகன் பகீரதனுக்கு அரசுரிமையை அளித்துவிட்டு இறந்தான்.  பகீரதன் வழிவழியாகச் சொல்லி வந்த தன் குலத்து முன்னோர்களின் கதையைக் கேட்டிருந்தான்.  ஆகவே அவன் தன் முன்னோர்களுக்காகத் திருக்கோகர்ணத்தில் தவமிருந்து பிரம்மனை வேண்டினா.  அவன் தவம் மிகக் கடுமையாக இருக்கக் கடைசியில் பிரம்மா தோன்றி அவனை வாழ்த்தினார்.  பின்னர் அவனிடம் அவன் குலத்து முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் விண்ணில் ஓடும் கங்கையை பாதாளத்திற்குக் கொண்டு வந்து அந்தப் புனித நீரால் சாம்பலைக் கரைத்து எலும்புகளை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று ஆலோசனையும் கூறுகிறார்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-RoOVRjSTPTs/ThA5D1KNyjI/AAAAAAAAFAA/f3Xk4qs_pBk/s1600/mahabalipuram.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 277px; height: 182px;" src="http://3.bp.blogspot.com/-RoOVRjSTPTs/ThA5D1KNyjI/AAAAAAAAFAA/f3Xk4qs_pBk/s320/mahabalipuram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5625058672558066226" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-558366792694397933?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/558366792694397933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=558366792694397933' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/558366792694397933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/558366792694397933'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/07/blog-post_03.html' title='நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-U0gH0cvg8UA/ThA4--k82rI/AAAAAAAAE_4/oF2EOHDohrI/s72-c/imagesgangai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-991624410343481409</id><published>2011-07-02T03:13:00.000-07:00</published><updated>2011-07-02T03:14:15.607-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க!  கிராத மூர்த்தி!</title><content type='html'>கோபம் கொண்ட அர்ஜுனன், வேடனாகிய ஈசனைப் பார்த்து, இந்தப் பன்றியைத் தன்னுடைய வில்லில் இருந்து கிளம்பிய அம்பே கொன்றதாகவும், ஆகவே பன்றி தனக்குத் தான் சொந்தம் எனவும் கூறிவிட்டுக் குனிந்து செத்த பன்றியைத் தூக்க முனைந்தான். வேடுவன் அவனைத் தன் காலால் தடுத்தான். அதைக் கண்டு திகைப்புற்ற அர்ஜுனன் நிமிர்ந்து பார்க்க வேடன், “வா, நாம் இருவரும் போர் புரிவோம்.  உன்னால் இயன்றால் உன் பாணங்களால் என்னை அடித்துப் போட்டுவிட்டுப் பின்னர் அந்தப்  பன்றியை எடுத்துச் செல்வாய்!” என்று கூறிய வண்ணம் போருக்கு ஆயத்தமானார்.  கோபம் கொண்ட அர்ஜுனனும் போருக்குத் தயாரானான்.  அந்த வேடன் மீது அம்பு மழை பொழிந்தான்.  ஆனால் என்ன ஆச்சரியம்!  அர்ஜுனனின் அம்உகளோ, அஸ்திரங்களோ அந்த வேடனைப்பாதிக்கவே இல்லை.  வேறு வழியில்லாமல் தனது காண்டீபத்தையே தூக்கி அதனால் வேடனை அடிக்க முனைந்தான் அர்ஜுனன்.  ஆனால் அந்த வேடனோ காண்டீபத்தைப் பறித்துக் கொன்டு அர்ஜுனனோடு மல்யுத்தம் செய்து அவனை அப்படியே மேலே தூக்கிக் கீழே அடிக்க, அர்ஜுனன் மூர்ச்சை அடைந்து விழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்த அர்ஜுனன் தன்னருகே ஒரு சிவலிங்கத்தைக் கண்டான்.  உடனே பக்தியுடன் எழுந்து அதை வணங்கிக் காட்டுப் பூக்களைக் கொண்டு ஒரு மாலை கட்டி சிவலிங்கத்திற்குச் சாற்றி வழிபட்டான்.  பின்னர் அவனுக்குத் தான் கீழே விழுமுன்னர் நடந்தவை நினைவில் வர வேடனைத் தேடிக் கண்டு பிடித்தான்.   வேடன் போகும்போது காண்டீபத்தை வேறு கொண்டு போய்விட்டான். ஆகவே வேடனைக் கண்டதும் மீண்டும் போருக்கு ஆயத்தமான அர்ஜுனனுக்கு  என்ன ஆச்சரியம்! சிவலிங்கத்தின் தலையில் தான் சாற்றிய மாலையை இந்த வேடன் தன் தலையில் அணிந்து கொண்டிருக்கிறானே.  பதறிய அர்ஜுனன் ஓடோடியும் வந்து லிங்கம் இருந்த இடத்தைப் பார்த்தான்.  லிங்கத்தின் தலையில் அவன் சாற்றி வழிபட்ட மாலை அப்படியே இருந்தது.  மீண்டும் ஓடிப் போய்ப் பார்த்தால் வேடன் தலையிலும் அதே.  உண்மை விளங்க வேடன் காலடியில் விழுந்து வணங்கினான் அர்ஜுனன்.   மல்யுத்தம் செய்கையில் தழுவிக் கொண்டு சண்டை போட்ட அர்ஜுனனை இப்போது ஈசன் பாசத்தோடும், பரிவோடும் ஆரத் தழுவினார்.  அவனை மனமார ஆசீர்வதித்து, அவன் வீரத்தைப் பாராட்டி, சக்தி வாய்ந்த, ‘பிரம்ம சிரஸ்’ எனப்படும் பாசுபத அஸ்திரத்தையும் அவனுக்கு அளித்து, அதைப் பயன்படுத்தும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார்.  காண்டீபத்தையும் திரும்ப அளித்தார்.  விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிய அவர்கள் பங்கிற்கு இந்திரன், அக்னி, எமன் போன்றவர்களும் அர்ஜுனனுக்கு ஆயுதங்களை அளித்து வாழ்த்த அர்ஜுனன் பெரும்பேறு பெற்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மஹாபாரதக் கதை, ஆரண்ய பர்வத்தில் வரும்.  இந்த பாசுபதம் பெற்ற திருத்தலமாகத் தமிழ்நாட்டின் திருவேட்களம் சொல்லப் படுகிறது.  சிதம்பரத்திற்கு அருகேயே அமைந்துள்ளது.  (இன்னும் பார்க்காத கோயில்களில் இதுவும்), ஈசனின் பெயரே பாசுபத நாதர் என்பதாகும்.  அம்பிகை சகல நற்குணங்களையும் கொண்டு சற்குணாம்பிகை என அழைக்கப் படுகிறாள்.  இந்தக் கோயிலில் இந்தத் தல புராணத்தை விளக்கும் சிற்பங்களைக் காணலாம் எனத் தெரிய வருகிறது.  பாசுபத நாதர் இடக்கையில் வில்லை ஏந்தியும், வலக்கையில் அம்பை ஏந்தியும், ஜடாமகுடம் தரித்து, கழுத்தில் வேடுவர்களுக்கே உரிய கொம்பு மாலையுடனும், காலில் வீரக் கழலுடனும் காட்சி அளிப்பதாய் அறிகிறோம்.  இதைத் தவிர பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருவேட்டக்குடி என்னும் ஊரிலும் அர்ஜுனனுக்கு அருள் புரிந்த தலமாய்க் கருதப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிரக் கிராதமூர்த்தியை நாம் காண்பது கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலில் தான்.  ஆனால் அர்ஜுனனுக்கும் இங்கே காண்பவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  மஹாபிரளயத்தின்போது படைப்பதற்குரிய மஹாவித்துக்களை வைத்த குடத்தை அமுதத்தால் நிறைத்து மிதக்க விட அது மிதந்து ,மிதந்து கும்பகோணம் இருக்குமிடத்தை அடைகிறது.  மீண்டும் சிருஷ்டியைத் தொடங்க வேண்டி ஈசன் கிராதமூர்த்தியாக வந்து தன் அம்பால் அமுதக்குடத்தை உடைக்கிறார்.  உடைந்த குடத்து அமுதம் மணலில் கலக்க, அங்கே சிவலிங்கம் தோன்ற அதைப் பூஜிக்கிறார் பிரம்மா.  சிருஷ்டி ஆரம்பம் ஆனது.  கும்பகோணத்தில் குடம் வந்து சேர்ந்ததாலேயே இந்த ஊருக்குக் குடமூக்கு என்று பெயர் ஏற்பட்டதாகவும், குடம் வைக்கப் பட்டிருந்த இடம் குடவாயில் என அழைக்கப் படுவதாயும் தெரிந்து கொள்கிறோம்.  வேடுவனாகிய ஈசன் பாணங்களைத் தொடுத்த இடம் பாணாதுறை என இப்போதும் அழைக்கப் படுகிறது.  இந்தத் தலத்தின் ஆதிமூர்த்தியாகக் கிராத மூர்த்தியே சொல்லப் படுகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-991624410343481409?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/991624410343481409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=991624410343481409' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/991624410343481409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/991624410343481409'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/07/blog-post.html' title='நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க!  கிராத மூர்த்தி!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-2445385142377196230</id><published>2011-06-27T02:37:00.001-07:00</published><updated>2011-06-27T02:39:09.128-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, கிராத மூர்த்தி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-NBxI3i_gJ2Q/TghPXuPlH_I/AAAAAAAAE9w/Aei07dKaZGo/s1600/indexkiraathamurthy.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-NBxI3i_gJ2Q/TghPXuPlH_I/AAAAAAAAE9w/Aei07dKaZGo/s320/indexkiraathamurthy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622831403741028338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்து நாம் காணப் போவது கிராத மூர்த்தியை.  கிராதன் என்ற சொல்லிற்கு வேடன் எனப் பொருள்.   ஈசன் வேடனாகக் காட்சி அளித்த கோலத்தையே கிராத மூர்த்தி அல்லது திருவேடீசர் என்கின்றனர்.  இது மஹாபாரதக் கதையுடன் தொடர்பு கொண்டது.  பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, அக்ஞாத வாசமும் முடிந்தாலும் கெளரவர்களுக்குப் பாண்டவர்களின் உரிமையைத் திரும்பக் கொடுக்க மனம் வரவில்லை.  கண்டிப்பாய் மறுத்தனர்.  துரியோதனனின் இந்தப் பிடிவாதத்தால் தவிர்க்க இயலாது போர் உருவாகும் என்பதைப் பாண்டவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா எடுத்துச் சொன்னார்.  ஆகவே போருக்குத் தயாராகும்படி அறிவுறுத்தினார்.  முக்கியமாய் வில்லில் சிறந்த அர்ஜுனனை சர்வ வல்லமை பெற்ற சர்வேசுவரனிடமிருந்து இன்னும் அதிக வல்லமை பெற்று வர அறிவுறுத்தினார்.  ஈசனின் பாசுபத அஸ்திரத்தைத் தவம் இருந்து பெற்று வர வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசுபத அஸ்திரத்தை ஈசனிடமிருந்து பெற்று வரும் வழிகளையும் விளக்கிக் கூறினார்.  அதன்படி திருக்கைலையில் இந்திரநீல பர்வதத்தின் சாரலில் அர்ஜுனன் நான்கு பக்கமும் அக்னியை மூட்டி ஆகாயத்தின் சூரியனை ஐந்தாவது அக்னியாக மனதில் வரித்துக் கொண்டு, கடும் தவம் செய்தான். பஞ்ச அக்னியின் நடுவே அவன் செய்த தவத்தால் ஏற்பட்ட உக்கிரம் அதிகமாக, அதிகமாக அர்ஜுனனிடமிருந்து ஜ்வாலைகள் வெளிப்பட்டன.  ரிஷி, முனிவர்களால் அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.  ஈசனிடம் சென்று அர்ஜுனனின் தவத்தைப் பற்றிக் கூறினார்கள்.  ஈசனுக்குத் தெரியாதா?  எனினும் அர்ஜுனனுக்கு அவ்வளவு எளிதில் பாசுபத அஸ்திரத்தைக் கொடுக்க முடியுமா?  அவனைச் சோதனை செய்ய எண்ணினார் சர்வேசன்.  ஆகவே வில்லையும், அம்புகளையும் ஏந்தி ஒரு வேடனாக மாறினார்.  கூடவே வேட்டுவச்சியாக அம்பிகையும் உடன் வர இந்திர நீல பர்வதச் சாரலில் அர்ஜுனன் தவம் செய்யும் இடத்திற்கு அருகே வந்து சேர்ந்தனர்.  அப்போது அங்கே ஒரு காட்டுப் பன்றி ஒன்று அர்ஜுனன் மேல் பாயத் தயாராக ஓடோடி வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பன்றி வேறு யாருமல்ல; மூகாசுரன் என்னும் அசுரன்.  அர்ஜுனனை எவ்வாறேனும் கொன்றுவிட்டால் பாண்டவர்களின் பலத்தை ஒடுக்கலாம் என எண்ணிப் பன்றி வடிவெடுத்துக் கொல்ல வந்தான்.  காட்டுப் பன்றியின் ஹூங்காரத்தால் தவம் கலைந்த அர்ஜுனன் கண் விழித்தான்;  பன்றியின் மீது ஓர் அம்பைத் தொடுத்தான்.  அதே கணம் அங்கே வந்த ஈசனும் தன் வில்லில் இருந்து ஒரு பாணத்தைத் தொடுக்க, பன்றி இறந்து விழுந்தது.  அதன் உடலில் இரு அம்புகள் இருப்பதைக் கண்ட அர்ஜுனனுக்கு வியப்பு.  நிமிர்ந்து பார்த்தபோது வேட்டுவச்சி ஒருவளோடு ஒரு வேடன் நிற்பதைக் கண்டான்.  &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-3apr-B5tRso/TghPbTzZBlI/AAAAAAAAE94/HSD071yecac/s1600/index2kiratha.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-3apr-B5tRso/TghPbTzZBlI/AAAAAAAAE94/HSD071yecac/s320/index2kiratha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622831465362949714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நீ யாரப்பா வேடா?  நான் அம்பெய்து வீழ்த்திய பன்றியை நீயும் ஏன் மீண்டும் இரண்டாம் முறையாக அம்பெய்து வீழ்த்தினாய்?” அர்ஜுனன் கேட்டான் வேடுவனாகிய ஈசனிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈசன், “ஆஹா, இது என்ன புதுக் கதை! நான் யாராய் இருந்தால் உனக்கென்னப்பா? நீ இங்கே இந்த நடுக்காட்டில் என்ன செய்கிறாய்?  தவம் செய்கிறாயா?? தவம் செய்பவனுக்கு வேட்டை எதற்கு?  இந்தப் பன்றி என் அம்பால் விழுந்தது.  இது எனக்கே சொந்தம்; உனக்கல்ல.  நீ பாட்டுக்குத் தவம் செய்ய மீண்டும் செல்வாய்!”  என்றார் ஈசன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் சரியாக் கிடைக்கவில்லை. :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-2445385142377196230?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/2445385142377196230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=2445385142377196230' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2445385142377196230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2445385142377196230'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/06/blog-post_27.html' title='நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, கிராத மூர்த்தி!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-NBxI3i_gJ2Q/TghPXuPlH_I/AAAAAAAAE9w/Aei07dKaZGo/s72-c/indexkiraathamurthy.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-4042515406459413269</id><published>2011-06-25T01:13:00.000-07:00</published><updated>2011-06-25T01:24:38.905-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அர்த்தநாரீசுவரர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-kkeOQQizhNY/TgWbDstvR1I/AAAAAAAAE6k/oVqj4o4jVxw/s1600/artha1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-kkeOQQizhNY/TgWbDstvR1I/AAAAAAAAE6k/oVqj4o4jVxw/s320/artha1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622070197686847314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இறைவன் படைத்த அனைத்து உயிர்களிலும் இருமைத் தத்துவம் நீக்கமற நிறைந்துள்ளது.  எல்லா உயிர்களிலும் ஆண், பெண் என இரு பாலினமும் உண்டு.  இவை தனித்தனியே பிரிந்திருந்தால் உலகு வளர்ச்சியுறாது என்பதாலேயே இரண்டு ஒன்றுபட்டு வாழ்கின்றன.  பஞ்ச பூதங்களிலும் இந்த இருமை உண்டு.  இருள்-ஒளி, தோற்றம்-அழிவு, ஆண்-பெண் எனப் படைப்பின் மொத்த வடிவாய்த் திகழ்வதுவே அர்த்தநாரீசுவர வடிவம்.  இவ்வுலகின் அனைத்துப் பொருட்களையும் இயக்கும் சக்தியே அன்னை என்றால் அதன் அமைதியான வடிவே சிவம் ஆகும்.  சிவம் அமைதி, சும்மா இருத்தல் என்று கொண்டால், சக்தி ஆற்றலையும் இயக்கத்தையும் குறிக்கும்.  அந்த சக்தி தனியே எவ்வாறு இயங்கும்? சிவத்தோடு சேர்ந்தால் அல்லவோ இயக்கம் வரும்? ஆகவே அர்த்தநாரீசுவரராக இணைந்து சிவமும், சக்தியும் ஒன்றாகக் காண்பதையே சிவசக்தி ஐக்கியம் என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்&lt;br /&gt;வண்ண மார்பின் தாருங் கொன்றை;&lt;br /&gt;ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த&lt;br /&gt;சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;&lt;br /&gt;கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை&lt;br /&gt;மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;&lt;/span&gt;&lt;br /&gt;பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை&lt;br /&gt;பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;&lt;br /&gt;எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,&lt;br /&gt;நீரறவு அறியாக் கரகத்துத்,&lt;br /&gt;தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியமான புறநானூற்றில் மேற்கண்டவாறு ஈசனின் அர்த்தநாரீசுவர வடிவைச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.  ஐங்குறு நூற்றிலும் கூறப்பட்டிருப்பதாய்த் தெரிய வருகிறது.  இளங்கோவடிகளும் அர்த்தநாரீசுவர வடிவைப் பற்றிக் கூறியுள்ளார். முற்காலச் சோழர்களால் கட்டப் பட்ட சிவன் கோயில்களின் கருவறையின் மேற்குக் கோஷ்டத்தில் அர்த்தநாரீசுவர வடிவே இருந்து வந்ததாயும் இதுவே பின்னர் மாறி விட்டதாயும் தெரிய வருகிறது. இந்த அர்த்தநாரீசுவர வடிவை உற்சவக் கோலத்தில் திருவண்ணாமலையில் கர்ப்பகிரஹத்தை ஒட்டிய பிரஹாரத்தில் தனி சந்நிதியில் தரிசிக்க முடியும்.  இவரே திருக்கார்த்திகைத் தீபத்திருநாளன்று பக்தர்களுக்கு ஆடிக்கொண்டே வந்து தரிசனம் கொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு சிற்பசாஸ்திர நூல்களிலே குறிப்பிடப் படும் இந்த அர்த்தநாரீசுவர வடிவின் வலப்பக்கம் ஈசனும், இடப்பக்கம் அன்னையும் காணப்படுவாள்.  அதற்கேற்ப ஆடை அலங்காரமும் காண முடியும். வலப்பக்கம் ஜடாமுடி, மகுடம் மற்றும் பிறைச்சந்திரனும், இடப்பக்கம் அம்பிகையின் தலையில் முடிந்த அழகிய கூந்தல் அல்லது மகுடம் காணப்படும்.  ஈசனாய்த் தோற்றமளிக்கும் வடிவின் வலக்காதில் மகர குண்டலம், அல்லது சர்ப்ப குண்டலம், வலது நெற்றியில் ஈசனின் நெற்றிக்கண்ணின் பாதியும் காண முடியும்.  இடப்பக்கம் அம்பிகையின் காதில் குண்டலமும், மை எழுதிய நீண்ட கண்களும், நெற்றியில் குங்குமப் பொட்டின் பாதி பாகமும் காண முடியும். வலப்பக்கம் புலித்தோல் ஆடையணிந்து வலக்கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டிய வண்ணமும் மற்றொன்று மழுவை ஏந்தியும் காணப்படும்.  சில கோலங்களில் வரத ஹஸ்தமும் சூலமும் ஏந்தியும் காணலாம்.  இடக்கரத்தில் அம்பிகையானவள் நீலோத்பல மலரை ஏந்தியோ அல்லது கிளியை ஏந்தியோ காணப்படுவாள்.  இடப்பக்கம் மாலைகள், நவரத்ன அணிகலன்கள் எனப் பெண்களுக்கே உரித்தான ஆபரணங்களுடன் காட்சி அளிக்க, வலப்பக்கமோ சர்ப்பத்தை இடையில் அணிந்து காணப்படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றான இறைவனே இரு வேறுபட்ட தன்மைகளோடு காட்சி அளிக்கிறான்.  ஏனெனில் உலக உயிர்கள் அனைத்தும் தம்முள் கூடிக் களித்து மகிழ்ந்து நல்வாழ்வு வாழவேண்டுமானால் சிவமும், சக்தியும் இணைய வேண்டும்.  தன்னந்தனியே இருந்தால் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை;  நிறைவும் கிடைக்காது.  ஒன்றுபட்டாலே நிறைவும் ஏற்படும்; வாழ்வின் அர்த்தமும் இருக்கும்.  ஆனால் இருவரில் எவர் உயர்வு? எவர் தாழ்வு?  அந்தப் பேதங்கள் இருக்கலாகாது என்பதன் பொருளே இந்த அர்த்தநாரீசுவரக் கோலம்.  இருவருமே ஒருவருக்கொருவர் சரிசமமாகவும், துணையாகவும், தங்களுக்குள் உள்ள பாலின பேதத்தையும் மற்ற பேதங்களையும் மறந்து இயங்கச் செய்ய வைப்பதே அர்த்தநாரீசுவரக் கோலத்தின் உண்மையான தத்துவம்.  கணவன், மனைவிக்குள் ஏற்படும் பேதங்களைப் போக்க அர்த்தநாரீசுவர வழிபாடு சிறந்தது என ஆன்றோர் கருத்து.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-H2TmkJoRM1s/TgWbGyKFEVI/AAAAAAAAE6s/PqgmjPLqRxc/s1600/imagesthiruchengode.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 251px; height: 201px;" src="http://4.bp.blogspot.com/-H2TmkJoRM1s/TgWbGyKFEVI/AAAAAAAAE6s/PqgmjPLqRxc/s320/imagesthiruchengode.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622070250687500626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரரை அர்ச்சிக்கையில் ஒரு நாமம் அம்பிகையின் நாமமாகவும், மற்றொரு நாமம் ஈசனின் திருநாமமாகவும் அர்ச்சிக்கப் படுவதாய்க் கேள்விப் படுகிறோம்.அங்கு மூலவரான அர்த்தநாரீசுவரர் சிற்பம் கற்சிலையோ, சுயம்புவாய்த் தோன்றியதோ அல்ல என்றும், சித்தர்களால் வெண்பாஷாணம் என்னும் மருந்துகளைக் கூட்டிச் செய்யப் பட்டது என்றும் தெரியவருகிறது.  இந்தத் திருமேனியின் அபிஷேஹ நீர்ப் பிரசாதம் தோல் வியாதிகளுக்குச் சிறந்ததொன்று எனவும் கூறப் படுகிறது.  ஈசனின் பாதத்தில் இருந்தும் சுனைநீர் தீர்த்தமாகக் கொடுக்கப் படுவதாயும் அறிகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்,&lt;br /&gt;தான் பாதி உமை பாதி என்றானவன்.&lt;br /&gt;சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அடுத்துக் காணப் போவது கிராத மூர்த்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-4042515406459413269?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/4042515406459413269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=4042515406459413269' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/4042515406459413269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/4042515406459413269'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/06/blog-post_25.html' title='நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அர்த்தநாரீசுவரர்'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-kkeOQQizhNY/TgWbDstvR1I/AAAAAAAAE6k/oVqj4o4jVxw/s72-c/artha1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-8911478410308111401</id><published>2011-06-24T02:16:00.001-07:00</published><updated>2011-06-24T02:17:28.837-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, அர்த்தநாரி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/--8Pbc1Tk8Ao/TgRWCKawdSI/AAAAAAAAE6c/FRSZRcIk6ps/s1600/indexarthanari.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://3.bp.blogspot.com/--8Pbc1Tk8Ao/TgRWCKawdSI/AAAAAAAAE6c/FRSZRcIk6ps/s320/indexarthanari.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621712830021530914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறந்த சிவபக்தர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் தினந்தோறும் ஈசனை வலம் வந்து வணங்கியபின்னரே உணவு உண்ணும் வழக்கமுள்ளவர்.  ஆனால் ஈசனை மட்டுமே வலம் வந்து வணங்குவாரே தவிர, அருகேயே இருக்கும் அன்னையை வணங்கவே மாட்டார். ஒருநாள் இரண்டு நாள் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அன்னைக்கு ஒருநாளும் அவர் தன்னை வணங்கவே மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டதும், வருத்தமும் கோபமும் வந்ததாம்.  ஆஹா, வெறும் சிவம் மட்டுமே அவன் இயக்கத்திற்குப் போதுமா? சக்தி தேவையில்லையா? அன்னை பிருங்கி முனிவரின் உடலின் உள்ள சக்தியின் கூறான, ரத்தம், தசை போன்றவற்றை நீக்கி வெறும் எலும்புக்கூடாய் மாற்றினாள்.  ஆனால் பிருங்கி முனிவரோ அப்போதும் ஈசன் ஒருவனே தன் இறைவன்.  இதில் எந்த மாற்றமும் இல்லை; சிவன் ஒருவனே பரம்பொருள், என்றே வாழ்ந்து வந்தார்.  உடலின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியெல்லாம் போய்விட்டதும் அவரால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.  ஈசனை வலம் வராமல் எப்படி உணவு உண்ணுவது? தவித்துப் போனார்.  ஆனால் அந்த நிலையிலும் ஈசனை வணங்கினார் அவர்.  ஈசனோ அவருடைய பக்தியைக் கண்டு மனம் இரங்கி அவருக்கு ஊன்றுகோல் ஒன்றைக் கொடுத்து உதவினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் பிருங்கி முனிவர் அன்னையை வணங்கவே இல்லை.  அன்னை மனம் வருந்தித் தானும் ஈசனுடன் அவர் உடலிலேயே இடம்பெறவேண்டும் என்னும் ஆசையைத் தெரிவித்தாள்.  ஈசனும் அதற்கு அவளைத் தவமிருக்கச் சொன்னார்.  அவ்விதமே அன்னையான பார்வதி தேவி கடுமையாகத் தவம் இருந்தாள்.  அவர் உடலின் இடப்பாகத்தைப் பெற்றாள்.  அம்மையும், அப்பனும் சேர்ந்திருக்கும் அந்தக் கோலமே அர்த்தநாரீசுரக் கோலம் ஆகும். கொங்கு நாட்டின் புகழ்பெற்ற தலமான திருச்செங்கோடு அர்த்தநாரீசுரத் திருமேனியை மூலவராய்க் கொண்ட தலங்களுள்முதன்மையான தலம் ஆகும்.  கொடிமாடச் செங்கன்னூர் என்னும் பெயர் கொண்ட இந்தத் தலம் அழகிய மலைக்கோயிலாக அமைந்துள்ளது.  ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட சண்டையில் மேருமலையானது தூக்கி எறியப் பட்டு இங்கே விழுந்த துண்டு சிவந்த நிறத்தில் காணப்பட்டதால் செங்கோடு எனப் பெயர் பெற்றதாய்க் கூறுவார்கள்.  இங்கே மலையே லிங்கம் என்பதால் மலைக்கு எதிரே நந்தி காணப்படும்.  இந்தத் தலத்தின் மலையில் ஏறப் படிகள் 1200 இருப்பதாய்த் தெரிய வருகிறது.  இங்கே இன்னமும் சென்று தரிசனம் செய்ய இயலவில்லை.  மலையின் உயரம் சுமார் இரண்டாயிரம் அடிகள் எனத் தெரிய வருகிறது. அன்னையின் பெயர் பாகம்பிரியாள் எனப்படும்.  ஈசனின் இடப்பாகத்தை எந்நாளும் பிரியாமல் இருப்பதை இது குறிக்கும்.  கணவனின் இதயத்தில் இருக்க வேண்டியவள் மனைவியே என்பதற்கேற்ப இதயம் இருக்கும் இடப்பகுதியில் அன்னை இடம் பெற்றாள். இதைத் தவிரவும் திருவண்ணாமலையிலும் அன்னை இடப்பாகம் பெற்றதையே திருக்கார்த்திகைப் பெருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. &lt;br /&gt;பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்&lt;br /&gt;தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்&lt;br /&gt;புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்&lt;br /&gt;சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே//&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி பட்டர் அம்பிகை இடம் கொண்டு சிறந்ததை மேற்கண்ட வண்ணம் பாடித் துதிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்&lt;br /&gt;விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை&lt;br /&gt;அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்&lt;br /&gt;பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே//&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையவள் இடப்பாகம் கொண்டு சிறந்து இருப்பதோடல்லாமல் அண்டமெல்லாம் பழிக்கும்படி பரத்திற்கும் மேல் பரதெய்வமாகச் சிறந்து விளங்குவதையும் இந்தப் பாடல் குறிக்கும். அர்த்த நாரீசுவரரை மேலும் பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-8911478410308111401?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/8911478410308111401/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=8911478410308111401' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8911478410308111401'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8911478410308111401'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/06/blog-post.html' title='நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, அர்த்தநாரி'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--8Pbc1Tk8Ao/TgRWCKawdSI/AAAAAAAAE6c/FRSZRcIk6ps/s72-c/indexarthanari.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-3548553025650134244</id><published>2011-05-29T01:36:00.000-07:00</published><updated>2011-05-29T01:37:46.605-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! சங்கர நாராயணர்!</title><content type='html'>தமிழ்நாட்டின் சங்கரன் கோயிலைத் தவிர கர்நாடகாவிலும் ஸ்ரீசங்கரநாராயணர் கோயில் ஒன்று உண்டு.  கர்நாடகா மாநிலம் தாவன்கெரே மாவட்டத்தில் ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது ஹரிஹர் என்னும் ஸ்தலம்.  பெங்களூரில் இருந்து சுமார் 300கி.மீட்டர் தூரத்திலுள்ள இத்தலத்தில் மூலவர் ஸ்ரீசங்கரநாராயணராய்க் காட்சி அளிக்கிறார்.  சிவன் காட்சி தரும் வலப்பக்கம் உமை அன்னையும், திருமால் காட்சி அளிக்கும் இடப்பக்கம் ஸ்ரீலக்ஷ்மி தேவியும் இடம் பெற்றுள்ளனர்.  இந்தக் கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்களால் கட்டப்பட்டது. இதைக் கூஹாரண்யம் என அழைத்ததாய்க் கேள்விப் படுகிறோம்.   இதைக் குறித்த ஒரு தலபுராணக் கதை கீழே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூஹாசுரன் கடும் தவத்தால் எவராலும் வெல்ல முடியாத வரங்களைப் பெற்று அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.  இவனை சம்ஹாரம் செய்ய வேண்டி விஷ்ணுவோடு இணைந்த வடிவாக தோன்றி அசுரனை அழித்தாராம் ஈசன்.  ஆகவே இந்த ஊருக்கே ஹரிஹர் என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்கின்றனர்.  தக்ஷிண கைலாயம் எனப் பெயர் பெற்றிருக்கிறது இந்த ஊர்.  அதோடு சிவமோகா எனப்படும்ஷிமோகாவுக்கு அருகிலுள்ள கூடலி என்னும் ஊரில் துங்காவும் பத்ராவும் சங்கமம் ஆவதையும் துங்கை திருமாலின் அம்சம் எனவும் பத்ரா ஈசனின் அம்சம் எனவும் கூறுகின்றனர்.  சங்கரநாராயண அம்சமாகத் தோன்றும் திருமேனியில் வலப்பக்கம் சிவனாய்க் காட்சி அளிக்கும் பாகத்தில் முகம் நெற்றிக்கண்ணில் பாதியைக் கொண்டு உக்கிரமாயும், இடப்பக்கம் உள்ள திருமாலின் முகம் அதிசுந்தரமாக சாந்தமாகவும் காட்சி அளிக்கும்.  வலக்கரமோ மழுவைத் தாங்கியும், இடக்கரம் சங்கு, சக்கரத்தோடும் திகழும், அதே நேரம் சிவ பாகம் புலித்தோலை உடுத்து வெண்ணிறமாகவும், விஷ்ணு பாகம் கருநீல நிறத்தோடு மஞ்சள் பட்டாடை உடுத்தியும் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னைப் பழம்பொருளுக்கும், மூத்த பழம்பொருளான பரம்பொருளுக்கு ஒரே திருமேனியில் இரண்டு உருவம் இருக்கின்றன.  ஈசனிடமிருந்து அவரது அருளாய் வெளிப்படும் சக்தியின் புருஷாகார வடிவையே திருமால் என்கிறோம்.  ஆகவே சங்கரநாராயணர் உருவின் சிறப்பே ஹரியும், சிவனும் ஒன்று என்பதைக் குறிப்பது தான்.  இந்தத் திருவடிவின் வலப்பக்கம் வாகனமாய் ரிஷபமும், இடப்பக்கம் கருடனும் காணப்படும்.  இந்தச் சங்கரநாராயணர் திருக்கோலத்தைத் திருஞான சம்பந்தர் , “பாதியா உடல் கொண்டது மாலையே!  மாலும் ஓர் பாகம் உடையார்” என்றெல்லாம் போற்றிப்பாட, அப்பரோ, “திருமாலும் ஓர் பாகத்தின் குடமாடி இடமாகக் கொண்டார்” எனப் போற்றுகிறார்.  ஆழ்வார்களின் திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர் இந்த அரிய திருக்கோலத்தைப் போற்றிப் பாடி மகிழ்ந்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமங்கையாழ்வார், “பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து”, என ஆரம்பித்தும், மலைமங்கை தன் பங்கனை பங்கில் வைத்துகந்தான்”, என்றும் பாட, பேயாழ்வாரோ, திருவேங்கடத்தின் பெருமானைச் சங்கரநாராயணராய்க் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“தாழ் சடையும் நீள்முடியும் ஒண் மழுவும் சக்கரமும்&lt;br /&gt;சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்-சூழும்&lt;br /&gt;திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு&lt;br /&gt;இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.” &lt;br /&gt;&lt;br /&gt;என்று கூறுகிறார் பேயாழ்வார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-3548553025650134244?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/3548553025650134244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=3548553025650134244' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3548553025650134244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3548553025650134244'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/05/blog-post_29.html' title='நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! சங்கர நாராயணர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-7868747120072551790</id><published>2011-05-11T02:17:00.000-07:00</published><updated>2011-05-11T02:24:35.079-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!  சங்கரநாராயணர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-cwER1y5KUCM/TcpVufFPgJI/AAAAAAAAEbA/ZZoB2YAWIn4/s1600/sankaranarayanar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 176px; height: 256px;" src="http://1.bp.blogspot.com/-cwER1y5KUCM/TcpVufFPgJI/AAAAAAAAEbA/ZZoB2YAWIn4/s320/sankaranarayanar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5605386943321833618" /&gt;&lt;/a&gt;உமா மகேசருக்கு அடுத்து சங்கரநாராயணரைப் பார்க்கலாம்.  அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு என்பது ஒரு வழக்கு. அது போல் சிவன், விஷ்ணு என்பதெல்லாம் நம் செளகரியத்திற்காகத் தான்.  ஒரே அம்மாவே எத்தனை அவதாரங்கள் எடுக்கிறாள்?  அவள் தாய், தந்தையருக்கு மகள், சகோதர, சகோதரிகளுக்கு சகோதரி, மாமியார், மாமனாருக்கு மருமகள், கணவனுக்கு மனைவி, குழந்தைகளுக்குத் தாய் என எத்தனை பெயர் அவளுக்கு?  அப்படி எல்லாம் வல்ல பரம்பொருளும் ஒவ்வொரு சமயங்களில் ஒவ்வொரு பெயருடன் காணப்படுகிறது.  என்றாலும் இதிலும் பேதங்கள் பார்க்கிறவர்கள், கற்பிக்கின்றவர்கள் உண்டே! அப்படித் தான் சங்கனுக்கும், பதுமனுக்கும் தோன்றியதாம்.  இவ்வுலகத்துப் பிரஜைகளுக்கெல்லாம் பிரஜாபதியான காச்யபரின் நாக வம்சத்துப் பிள்ளைகளான வாசுகி, ஆதிசேஷன் இருவரும் முறையே சிவனின் ஆபரணமாகவும், விஷ்ணுவின் படுக்கையாகவும் ஆகும் பேறைப் பெற்றனர்.  இவர்களின் வழியே வந்த அஷ்டமாநாகங்களில் இருவரான சங்கனுக்கும், பதுமனுக்கும் சகல சாஸ்திரங்களிலும் பாண்டித்தியமும், பரிச்சயமும் இருந்தாலும், சங்கனுக்கு சிவனிடமும், பதுமனுக்கு விஷ்ணுவிடமும் ஈடுபாடு அதிகம் இருந்தது.  அதற்கேற்ப வாசுகி மூலம் சிவதீக்ஷை பெற்றான் சங்கன், ஆதிசேஷன் மூலம், நாராயண மந்திர உபதேசம் பெற்றான் பதுமன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இருவரும் தங்கள் தெய்வம் தான் உயர்ந்தது என்ற எண்ணத்திலேயே இருந்து வந்தார்கள்.  இது குறித்துப் பலரிடமும் கருத்துக் கேட்டனர்.  யாராலும் தெள்ளத் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை.  ஒருவர் சிவனைப் பரம்பொருள் என்றால் அதை பதுமன் ஒத்துக்கொள்ள மாட்டான், ஒருவர் விஷ்ணுவைப் பரம்பொருள் என்றால் அதை சங்கன் ஏற்க மறுத்தான்.  ஆகவே இருவரும் தேவர்கள் தலைவன் ஆன இந்திரனிடம் போய்த் தங்கள் வழக்கை முன் வைத்தனர்.  இந்திரனுக்கும் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் தங்கள் குருவை நாட, அவர் கூறினார்: இருவரும் ஒருவரே.  ஈசன் தன் மேனியின் இடப்பாகத்தில் விஷ்ணுவுக்கும் இடம் அளித்துள்ளார்;  இந்த வடிவைக் குறித்த விளக்கத்தை உமாதேவிக்கும் கூறி அருளினார். இது ஞானம், செல்வம் இரண்டையும் தரும் வடிவம் எனக் கூறி உள்ளார்.  அன்னையானவள் அந்த வடிவைக் காண விரும்ப, கடும் தவம் இருந்தாலொழிய இத்தகையதொரு அற்புதக் காட்சியைக் காண முடியாது என ஈசன் கூறினார்.  அன்னையும் பூலோகத்தின் தென்பாகத்தில் பொதியமலைச்சாரலில் உள்ள புன்னை வனம் ஒன்றுக்குச் சென்று தவம் இருக்கலானாள்.  அங்கே தேவர்கள் அனைவரும் மரங்களாக மாறி வந்து அன்னையின் வழிபாட்டுக்கும், தவத்துக்கும் தேவையான பூக்கள், பழங்கள், தேன் போன்றவற்றைக் கொடுக்க தேவலோகத்து மாந்தர்களோ பசுக்களாக மாறிப்  பாலைச் சொரிந்தனர்.  அக்னி விளக்காக மாற, வாயு தன் இனிமையான காற்றினால் அந்த இடத்தைச் சுத்தம் செய்து கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடும் தவத்தின் பின்னர் அன்னைக்கு ஒரு ஆடிமாதப் பெளர்ணமி நன்னாளில் ஈசன் சங்கரநாராயணராகக் காட்சி அளித்தார்.  நீங்களும் அத்தகைய தவம் இருந்தால் அந்தக் காட்சியைக் காணலாம்.  என்று தேவகுரு சங்கனுக்கும், பதுமனுக்கும் எடுத்துக் கூறினார்.  இருவரும் புன்னைவனம் வந்து தவம் இருந்தனர்.  தவம் இருந்த அவர்களுக்கு ஈசன் சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.  வலப்பாகம் முழுதும் சிவவடிவிலே தலையிலே கங்கையும் சந்திரனும் காட்சி அளிக்க, காதில் நாகாபரணத்தோடும், நெற்றியின் ஒரு பாதியில் திருநீறும், கையில் மழுவை ஏந்திய வண்ணம், கொன்றைமலர் சூடிக்கொண்டு, பொன்னாலாகிய பூணூல் தரித்துக்கொண்டு, அரையில் புலிக்கச்சையுடன், காலில் நாகாபரணமான வீரக் கழலோடும் &lt;br /&gt;&lt;br /&gt;இடப்பாகத்தில் நெற்றியில் நீலமணிக் கஸ்தூரிப் பொட்டும், சிரசில் ரத்தினக் கிரீடத்துடனும், காதில் அழகின மீன்வடிவ மகரகுண்டலத்தோடும், கையில் சங்கை ஏந்திக்கொண்டும், துளசிதளங்களால் ஆன மாலை தரித்துக்கொண்டும், இடுப்பில்  அழகிய மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரத்தோடும், காலின் பொன்னால் ஆன வீரக் கழலோடும் அழகிய கோலத்தில் இளமுறுவல் ததும்பக் காட்சி அளிக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-7868747120072551790?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/7868747120072551790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=7868747120072551790' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7868747120072551790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7868747120072551790'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/05/blog-post_11.html' title='நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!  சங்கரநாராயணர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-cwER1y5KUCM/TcpVufFPgJI/AAAAAAAAEbA/ZZoB2YAWIn4/s72-c/sankaranarayanar.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-8028876473392135955</id><published>2011-05-01T01:11:00.000-07:00</published><updated>2011-05-01T01:14:00.565-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!  உமா மகேசர், சீர்காழி தொடர்ச்சி!</title><content type='html'>&lt;a href='http://3.bp.blogspot.com/-sH1PzHt1nCI/Tb0Vxl_57II/AAAAAAAAEYU/KWfNZWULMvY/s1600/DSC00641.JPG'&gt;&lt;img src='http://3.bp.blogspot.com/-sH1PzHt1nCI/Tb0Vxl_57II/AAAAAAAAEYU/KWfNZWULMvY/s320/DSC00641.JPG' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;div style='clear:both; text-align:LEFT'&gt;&lt;a href='http://picasa.google.com/blogger/' target='ext'&gt;&lt;img src='http://photos1.blogger.com/pbp.gif' alt='Posted by Picasa' style='border: 0px none ; padding: 0px; background: transparent none repeat scroll 0% 50%; -moz-background-clip: initial; -moz-background-origin: initial; -moz-background-inline-policy: initial;' align='middle' border='0' /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்தச் சிற்பம் பிரபலமான திருப்பனந்தாள் காசிமடத்தின் தூணில் காணப்பட்டது.  இதிலே ஈசன், அம்பிகையோடு ரிஷபத்தில் அமர்ந்து தரிசனம் கொடுக்கும் காட்சி அற்புதமான சித்திரமாய்க் காண முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக சீர்காழியின் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில்  உள்ள கட்டுமலையின் நடுப்பகுதியில் தோணியப்பராகக் காட்சி தருபவரும் உமாமகேசரே என்கின்றனர்.  சீர்காழிக்குப் போய்விட்டு வந்து பல மாதங்கள் ஆகியும் அந்தக் கோயில் குறித்த விபரங்களை இன்னமும் பகிர்ந்து கொள்ளவில்லை.  இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.  சீர்காழி என்ற உடனே நம் அனைவருக்கும் திருஞானசம்பந்தர் தான் நினைவில் வருவார் இல்லையா?? இங்கே தான் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடந்தது.  வியாசரின் மகன் சுகப்பிரம்மம் எப்படிப் பிறவி ஞானியோ அவ்வாறே ஞானசம்பந்தரும் பிறவி ஞானி ஆவார்.  மேலும் இவரைக் குமரக் கடவுளின் திரு அவதாரம் என்றும் கூறுவார்கள்.  இப்போ முதலில் பிரம்மபுரீஸ்வரரைப் பார்ப்போம்.  சீர்காழி மிகப் பழமையான ஊராகும்.  இங்கே ஈசன் கட்டுமலையில் காட்சி அளிக்கிறான்.  கீழே ஒரு சந்நிதி, கட்டுமலையில் முதலில் ஒரு சந்நிதி, அதன் மேலே இன்னொரு சந்நிதி.  கீழே இருக்கும் சந்நிதியில் ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடன்  காட்சி அளிக்கின்றார்.  கட்டுமலையின் நடுவே தோணியப்பர், உமாசகிதராகக் காட்சி அளிக்கிறார்.  மேலே சென்றால் சட்டைநாதராகக் காட்சி அளிக்கிறார்.  இந்தச் சட்டைநாதர் வரலாறும் ஆச்சரியமான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;நீதி நெறி வழுவாமல் மஹாபலிச் சக்கரவர்த்தி ஆண்டபோது அவன் இந்திரபதவி அடைந்துவிட்டால் சரியாக இருக்காது என்ற எண்ணத்திலும், மஹாபலிக்கு இருந்த அளவு கடந்த ஆணவத்தை அழிக்கவும், விஷ்ணு வாமனனாக அவதரித்துத் திரிவிக்கிரமனாக மாறி அவனைப் பாதாளத்தில் தள்ளிய வரலாறு அறிவோம்.  மஹாபலிக்குச் சிரஞ்சீவிப் பட்டம் கொடுத்தாலும், விஷ்ணுவிற்கு இந்த மாதிரியான ஒரு பக்தனைப் பாதாளத்தில் தள்ளியது வருத்தத்தைக் கொடுத்தது.  அதன் தோஷமும் அவரைப் பீடித்தது.  விஷ்ணுவின்  தோலைச் சட்டையாக அணிந்தார் ஈசன்.  அதுவும் பைரவக் கோலத்தில் இருக்கையில்.  அஷ்டபைரவர்களின் சக்தியும் சேர்ந்த ஒரே பைரவராகச் சட்டைநாதராகக் காட்சி அளித்தார்.  ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மியோ மஹாவிஷ்ணு எங்கேயோ காணாமல் போய்விட்டாரோ எனக் கவலை கொண்டு ஆபரணங்கள் பூணாமல், தலைவாரிப் பூச்சூடாமல் விஷ்ணுவையே எண்ணி, எண்ணி வருந்தினாள்.  அவளிடம் தான் வேறு, விஷ்ணு வேறல்ல எனக் காட்டினாராம் ஈசன்.  இங்கே அம்பிகையே மஹாலக்ஷ்மி சொரூபமாக சக்தி பீடத்தில் அமர்ந்திருப்பதாய் ஐதீகம்.  &lt;br /&gt;&lt;br /&gt;கோயிலினுள் சென்றதும்  ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததும் கீழே பிரம்ம புரீஸ்வரர் சந்நிதி உள்ளது.  கிழக்கு நோக்கி திருக்குளத்தின் அருகே காண முடியும்.  வலப்பக்கம் கையில் கிண்ணம் ஏந்தி திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் காட்சி கொடுப்பார்.  கோயிலின் வடப்பக்கம் அமைந்திருக்கும் திருநிலைநாயகி அம்பிகை சந்நிதிக்கு அருகே காணப்படும் பிரம்ம தீர்த்தத்தில் தான் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடைபெற்றது.  கோயிலைச் சுற்றி வருகையில் வெளிப் பிரகாரத்தில் கோயிலின் அறநிலையத் துறை ஊழியரின் அலுவலகம் எதிரே கட்டுமலை காணப்படும். இந்தக் கட்டுமலையின் காரணமும் சீர்காழியின் வரலாறும் அடுத்துக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுமலை உருவான வரலாறு:   ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்கள் இருவரில் யாருக்கு வலிமை அதிகம் என்ற போட்டி ஏற்பட ஆதிசேஷன் தன் முழு உருவால் கைலையை மூட, வாயுவால் அதைத் துளிக்கூட அசைக்க முடியவில்லை.  பெரும்பிரயத்தனம் செய்தும் அசைக்க முடியாத வாயு, தேவர்களை வேண்ட, அவர்களும் ஆதிசேஷனிடம் தலையைச் சற்றே தூக்குமாறு கூற, ஒரு தலையை மட்டும் ஆதிசேஷன் தூக்க, அந்த இடத்தை மட்டும் வாயு தன் ஆற்றலால் பெயர்த்தெடுத்தான்.  அந்தப் பெயர்த்தெடுத்த மலைப்பாகத்தை 20 பறவைகள் தூக்கி வந்தனவாம்.  அவை தான் இங்கே கட்டுமலையாக உருப்பெற்றது என்று தலவரலாறு கூறுகிறது.  உரோமச முனிவரும் ஈசனை வேண்டிக்கொண்டாராம். தென் திசை மக்கள் மகிழ்வுற அம்பிகையோடு திருக்கயிலையில் தரிசனம் கிடைப்பது போல் எழுந்தருளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாராம்.  ஆகவே இங்கே ஈசன், அம்பிகை மட்டுமல்லாது, விஷ்ணு, மஹாலக்ஷ்மி, பிரம்மா, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவரோடும் இங்கே ஒன்று சேரக் காட்சி அளிக்கின்றார்.  இத்தகையதொரு அபூர்வ தரிசனம் மற்றெந்தக் கோயில்களிலும் கிட்டாத ஒன்று.&lt;br /&gt;அதோடு பைரவர்களும் அஷ்டபைரவர்களாக இங்கே எழுந்தருளி இருக்கின்றனர்.  அசிதாங்க பைரவர், ருரு பைரவர், க்ரோத பைரவர், சண்ட பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர்,பீஷ்ண பைரவர், அகால பைரவர் என எட்டு பைரவர்களும் இங்கே உள்ளனர்.  தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு வழிபாடும் உண்டு.  இந்த பைரவர்கள் சந்நிதியில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது.  கீழிருக்கும் சிவன் கோயில் பிரஹாரத்தில் ஓர் இடத்தில் இருந்து பார்த்தால் உயரே கட்டுமலை மேலே குடியிருக்கும் சட்டை நாதர் தெரிகிறார்.  பிரஹாரத்தில் அந்த இடத்தில் சட்டை முனியின் ஜீவசமாதி இருப்பதாகவும், இதன் பீடத்தின் மேலிருந்தே சட்டைநாதரும் தெரிகிறார் என்றும் சொல்கின்றனர்.  இந்தச் சட்டைநாதரைத் தரிசனம் செய்வது அவ்வளவு எளிதல்ல.  இரவு பனிரண்டு மணிக்குத் தான் தரிசனம் நடைபெறும் எனக் கூறுகின்றனர்.   இரவு பத்து மணி அளவில் கீழிருக்கும் ஜீவசமாதியின் பீடத்திற்கு  அபிஷேஹம் முடித்துப் பின்னர் மேலிருக்கும் சட்டைநாதருக்கு இரவு பனிரண்டு மணிக்குப் புனுகு சாத்தி  நெய்வடை மாலையும், பாசிப்பருப்புப் பாயாசமும் நிவேதனம் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் வேறு பெயர்கள்: பிரம்மபுரம், கழுமல வளநகர், வேணுபுரம், புகலி, தோணிபுரம், வெங்குரு, சிரபுரம், பூந்தராய், புறவம், சண்பை, ஸ்ரீகாளிபுரம் என்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது.  பிரம்மன் பூஜித்ததால் பிரம்மபுரம், மூங்கில் வடிவமாய் ஈசன் தோன்றியதால் வேணுபுரம், தேவர்களுக்குப் புகலிடம் கொடுத்தமையால் புகலி, தோணியில் ஈசன் வந்ததால் தோணிபுரம்,  வியாழபகவான் வழிபட்டதால் வெங்குரு, காளியும், காளிங்கனும் வழிபட்டதால் ஸ்ரீகாளிபுரம், வராஹ மூர்த்தி வழிபட்டதால் பூந்தராய், ராகு வழிபட்டதால் சிரபுரம், சிபிச்சக்கரவர்த்தி வழிபட்டதால், புறவம், கண்ணன் வழிபட்டதால் சண்பை எனவும்  பெயர்க்காரணங்கள் ஆகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-8028876473392135955?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/8028876473392135955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=8028876473392135955' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8028876473392135955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8028876473392135955'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/05/blog-post.html' title='நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!  உமா மகேசர், சீர்காழி தொடர்ச்சி!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-sH1PzHt1nCI/Tb0Vxl_57II/AAAAAAAAEYU/KWfNZWULMvY/s72-c/DSC00641.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-8057377205946741771</id><published>2011-04-23T00:12:00.001-07:00</published><updated>2011-04-23T01:07:37.193-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க!  உமாமகேசர், தோணியப்பர்!</title><content type='html'>எல்லாவற்றுக்கும் மேலாக சீர்காழியின் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில்  உள்ள கட்டுமலையின் நடுப்பகுதியில் தோணியப்பராகக் காட்சி தருபவரும் உமாமகேசரே என்கின்றனர். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-_CubzICYcnk/TbKIH2BNe_I/AAAAAAAAEXU/1EfALKFJHl8/s1600/imagessattainathar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://1.bp.blogspot.com/-_CubzICYcnk/TbKIH2BNe_I/AAAAAAAAEXU/1EfALKFJHl8/s320/imagessattainathar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5598686955116002290" /&gt;&lt;/a&gt; சீர்காழிக்குப் போய்விட்டு வந்து பல மாதங்கள் ஆகியும் அந்தக் கோயில் குறித்த விபரங்களை இன்னமும் பகிர்ந்து கொள்ளவில்லை.  இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.  சீர்காழி என்ற உடனே நம் அனைவருக்கும் திருஞானசம்பந்தர் தான் நினைவில் வருவார் இல்லையா?? இங்கே தான் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடந்தது.  வியாசரின் மகன் சுகப்பிரம்மம் எப்படிப் பிறவி ஞானியோ அவ்வாறே ஞானசம்பந்தரும் பிறவி ஞானி ஆவார்.  மேலும் இவரைக் குமரக் கடவுளின் திரு அவதாரம் என்றும் கூறுவார்கள்.  இப்போ முதலில் பிரம்மபுரீஸ்வரரைப் பார்ப்போம்.  சீர்காழி மிகப் பழமையான ஊராகும்.  இங்கே ஈசன் கட்டுமலையில் காட்சி அளிக்கிறான்.  கீழே ஒரு சந்நிதி, கட்டுமலையில் முதலில் ஒரு சந்நிதி, அதன் மேலே இன்னொரு சந்நிதி.  கீழே இருக்கும் சந்நிதியில் ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடன்  காட்சி அளிக்கின்றார்.  கட்டுமலையின் நடுவே தோணியப்பர், உமாசகிதராகக் காட்சி அளிக்கிறார்.  மேலே சென்றால் சட்டைநாதராகக் காட்சி அளிக்கிறார்.  இந்தச் சட்டைநாதர் வரலாறும் ஆச்சரியமான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;நீதி நெறி வழுவாமல் மஹாபலிச் சக்கரவர்த்தி ஆண்டபோது அவன் இந்திரபதவி அடைந்துவிட்டால் சரியாக இருக்காது என்ற எண்ணத்திலும், மஹாபலிக்கு இருந்த அளவு கடந்த ஆணவத்தை அழிக்கவும், விஷ்ணு வாமனனாக அவதரித்துத் திரிவிக்கிரமனாக மாறி அவனைப் பாதாளத்தில் தள்ளிய வரலாறு அறிவோம்.  மஹாபலிக்குச் சிரஞ்சீவிப் பட்டம் கொடுத்தாலும், விஷ்ணுவிற்கு இந்த மாதிரியான ஒரு பக்தனைப் பாதாளத்தில் தள்ளியது வருத்தத்தைக் கொடுத்தது.  அதன் தோஷமும் அவரைப் பீடித்தது.  விஷ்ணுவின்  தோலைச் சட்டையாக அணிந்தார் ஈசன்.  அதுவும் பைரவக் கோலத்தில் இருக்கையில்.  அஷ்டபைரவர்களின் சக்தியும் சேர்ந்த ஒரே பைரவராகச் சட்டைநாதராகக் காட்சி அளித்தார்.  ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மியோ மஹாவிஷ்ணு எங்கேயோ காணாமல் போய்விட்டாரோ எனக் கவலை கொண்டு ஆபரணங்கள் பூணாமல், தலைவாரிப் பூச்சூடாமல் விஷ்ணுவையே எண்ணி, எண்ணி வருந்தினாள்.  அவளிடம் தான் வேறு, விஷ்ணு வேறல்ல எனக் காட்டினாராம் ஈசன்.  இங்கே அம்பிகையே மஹாலக்ஷ்மி சொரூபமாக சக்தி பீடத்தில் அமர்ந்திருப்பதாய் ஐதீகம்.  இந்தச் சட்டைநாதரைத் தரிசிக்கச் செல்லும் ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் தலையில் பூவைக்காமலும் செல்லவேண்டும் என்பது ஐதீகம்.  அப்படியே பூ வைத்துக்கொண்டு சென்றாலும், அதைக் களைந்து கீழேயே வைத்துவிட்டுக் கட்டுமலையில் மேலே சென்று தோணியப்பரையும், அதற்கும் மேலே சென்று சட்டை நாதரையும் தரிசித்துப் பின்னர் கீழே இறங்கிப் பூவை மறுபடி வைத்துக்கொள்ள அனுமதிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;கோயிலினுள் சென்றதும்  ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததும் கீழே பிரம்ம புரீஸ்வரர் சந்நிதி உள்ளது.  கிழக்கு நோக்கி திருக்குளத்தின் அருகே காண முடியும்.  வலப்பக்கம் கையில் கிண்ணம் ஏந்தி திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் காட்சி கொடுப்பார்.  கோயிலின் வடப்பக்கம் அமைந்திருக்கும் திருநிலைநாயகி அம்பிகை சந்நிதிக்கு அருகே காணப்படும் பிரம்ம தீர்த்தத்தில் தான் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடைபெற்றது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-A3khsYpX0Gs/TbKH9FZhTkI/AAAAAAAAEXE/b440Iu-l7v4/s1600/imagesbrahmathirtham.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://2.bp.blogspot.com/-A3khsYpX0Gs/TbKH9FZhTkI/AAAAAAAAEXE/b440Iu-l7v4/s320/imagesbrahmathirtham.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5598686770265935426" /&gt;&lt;/a&gt; கோயிலைச் சுற்றி வருகையில் வெளிப் பிரகாரத்தில் கோயிலின் அறநிலையத் துறை ஊழியரின் அலுவலகம் எதிரே கட்டுமலை காணப்படும். இந்தக் கட்டுமலையின் காரணமும் சீர்காழியின் வரலாறும் அடுத்துக் காணலாம். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-p9XAVAoXkKc/TbKICTGeJWI/AAAAAAAAEXM/AsjYaSNiKRU/s1600/imagesjnanasambandhar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 170px; height: 256px;" src="http://4.bp.blogspot.com/-p9XAVAoXkKc/TbKICTGeJWI/AAAAAAAAEXM/AsjYaSNiKRU/s320/imagesjnanasambandhar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5598686859843478882" /&gt;&lt;/a&gt;உலகம் அழியும் வகையில் ஏற்பட்ட பிரளயகாலத்தில் ஈசன் அறுபத்தி நான்கு கலைகளையும் ஆடையாக அணிந்து, பிரணவத்தையே தோணியாக அமைத்து அதில் அன்னையையும் அழைத்துக்கொண்டு கிளம்ப தோணி சீர்காழிப் பகுதிக்கு வந்ததும்,  அனைத்து இடங்களும் அழிந்திருக்கும் இந்தப் பிரளய வெள்ளத்தில் அழியாமல் இருந்த பகுதியான சீர்காழியைக் கண்டார். இனி வரப் போகும் யுகங்களின் சிருஷ்டிக்கு இதுவே மூலத்தலம் எனக் கூறி உமை அன்னையுடன் அங்கே தங்கினார்.  முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் தோற்றுவிக்கப் பட்டு தொழில் தொடங்கினார்கள்.  பிரம்மா இங்கே ஈசனை வணங்கி சிருஷ்டியை ஆரம்பித்தார்.  ஆகவே இங்கே குடி கொண்டிருக்கும் ஈசனை பிரம்மபுரீஸ்வரர் என்னும் பெயரால் அழைக்கின்றனர்.  என்றாலும் பெரும்பாலும் சட்டைநாதர் என்ற பெயரே வழக்கத்தில் இருந்து வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-8057377205946741771?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/8057377205946741771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=8057377205946741771' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8057377205946741771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/8057377205946741771'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/04/blog-post_23.html' title='நமச்சிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க!  உமாமகேசர், தோணியப்பர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-_CubzICYcnk/TbKIH2BNe_I/AAAAAAAAEXU/1EfALKFJHl8/s72-c/imagessattainathar.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-2731433953001444250</id><published>2011-04-19T20:57:00.000-07:00</published><updated>2011-04-19T21:34:50.805-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! உமா மகேசர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-WZu1g1h6jg0/Ta5iJ7X6oKI/AAAAAAAAEWg/HaCDkhVTdnc/s1600/imagesumamahesar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 193px; height: 260px;" src="http://2.bp.blogspot.com/-WZu1g1h6jg0/Ta5iJ7X6oKI/AAAAAAAAEWg/HaCDkhVTdnc/s320/imagesumamahesar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597519309564453026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மன்மதனை அழைத்து ஈசன் மீது மலர்பாணங்களைச் செலுத்தி அவர் அன்னையை மணக்கும்படிச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.  ஆனால் மன்மதன் பயந்தான்.  ஈசனின் கோபம் தன்னை என்ன செய்யுமோ என்று பயந்தான்.  ஆனால் அனைவரும் வற்புறுத்தினார்கள்.  வேறு வழியில்லாமல் மன்மதன் ஒத்துக்கொண்டான்.  தென்றலாகிய தேரில் ஏறிக்கொண்டு, கரும்புவில்லையும், மலர்ப்பாணங்கள் ஐந்தையும்,  தாமரை, அசோகா, மா, மல்லிகை, நீலோற்பலம் ஆகியன. தாழை மடலாகிய வாளையும் எந்திக்கொண்டு கிளம்பினான் மன்மதன்.  ரதியும் உடன் கிளம்ப அவளையும் அழைத்துக்கொண்டான்.  கயிலை மலைச் சாரல்.  ஈசன் கடும் மோனத்தில் இருந்தார்.  அங்கே காவலுக்கு இருந்த நந்திதேவரைக் கண்ட மன்மதன் அவரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு மேற்கு வாயில் வழியாக உள்ளே சென்றான்.  அங்கே யோகத்தில் ஆழ்ந்திருந்த ஈசன் மேல் மலர்க்கணையைச் செலுத்த ஈசனின் மோனம் கலைந்தது.  கண் விழித்த ஈசன் மன்மதனைக் கண்டதும், தன் நெற்றிக்கண்ணைத் திறந்து விழிக்க, அந்த அக்னியின் வெப்பம் தாங்காமல் மன்மதம் சாம்பலானான்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கண்ட ரதி துடித்தாள்.  புலம்பினாள், அழுதாள், அரற்றினாள். அவள் நிலை கண்டு இரங்கிய ஈசன் மன்மதனை அவள் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு அநங்கனாக உயிர்ப்பித்தார். பின்னர் தேவாதி தேவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு அம்மையைத் திருமணம் செய்து கொள்ள இசைந்தார்.  அங்கே தவத்தில் ஆழ்ந்திருக்கும் அம்மையை வயோதிக வடிவில் ஈசனே சோதனை செய்து பார்த்துத் தெளிந்து அன்னையை ஏற்றுக்கொள்வேன் என உறுதியும் கூறினார்.  பின்னர் திருமண ஏற்பாடுகள் செய்யப் பட்டன.  திருமணத்திற்குக் குவிந்த கூட்டத்தினால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததும், அதைச் சமன் செய்ய அகத்தியர் தெற்கே வந்ததும் தெரிந்த கதை.  அப்படித் திருமணம் ஆன பின்னர் ஐயனும், அம்பிகையும் ரிஷபத்தில் அமர்ந்த வண்ணம் திருக்கயிலையில் உமாமகேசராக அருள் பாலித்தனர்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-k0k4PUIna7c/Ta5iM9NEBtI/AAAAAAAAEWo/oiXtzO33m74/s1600/imagesumapathi.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 207px; height: 155px;" src="http://4.bp.blogspot.com/-k0k4PUIna7c/Ta5iM9NEBtI/AAAAAAAAEWo/oiXtzO33m74/s320/imagesumapathi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597519361595410130" /&gt;&lt;/a&gt;அமைதியாக மோனத் தவம் செய்த சிவம் அமைதிநிலை உடையது.  நிலையானது.  அது இயங்க வேண்டுமெனில் சக்தி, ஆற்றல் தேவை.  சலனம் என்று கூறினாலும் இங்கே சரியாக இருக்கும்.  தற்காலங்களில் சலனம் என்பது மனச் சஞ்சலத்தைக் குறிக்கும் சொல்லாக மாறி உள்ளது.  ஆனால் இங்கே சலனம் என்பது இயக்கத்தையே சுறுசுறுப்பான ஆற்றல் வாய்ந்த சக்தியின் இயக்கத்தையே குறிக்கும்.  நிலையான சிவத்தோடு ஐக்கியம் ஆகும் ஆற்றல் வாய்ந்த சக்தியினாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.  உலகப்பொருட்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்தும் காண்கின்றோம்.   இந்த உமாமகேச வடிவங்கள் இந்தியாவைத் தவிர வெளிநாடுகளான நேபாளம், திபெத் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காணப்படுவதாய் அறிகிறோம்.  இதைத் தவிர அகத்தியரைத் தென்னாட்டைச் சமன் செய்ய அனுப்பியதால் அவருக்குத் தமிழ்நாட்டில் பல இடங்களில் உமாசகிதராக ஈசன் காட்சி அளித்ததாகத் தெரிகிறது.  வேதாரண்யம், திருவேற்காடு, திருநல்லூர் போன்ற தஞ்சை மாவட்டக் கோயில்களிலும் உமாசகிதராக ஈசன் அருள் பாலிக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-2731433953001444250?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/2731433953001444250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=2731433953001444250' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2731433953001444250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2731433953001444250'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/04/blog-post_19.html' title='நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! உமா மகேசர்'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-WZu1g1h6jg0/Ta5iJ7X6oKI/AAAAAAAAEWg/HaCDkhVTdnc/s72-c/imagesumamahesar.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-2955113604351514056</id><published>2011-04-16T02:50:00.001-07:00</published><updated>2011-04-16T02:50:53.394-07:00</updated><title type='text'>நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, உமா மகேசர்!</title><content type='html'>திரு உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ளதலம் எனத் தவறாய்க் குறிப்பிட்டுவிட்டேன்.  தவறுக்கு மன்னிக்கவும்.   முன் காலத்தில் இந்த ஊர் கல்யாணபுரம் என்ற பெயரில் அழைக்கப் பட்டிருந்திருக்கிறது.  இந்த ஊருக்குக் கல்யாணபுரம் என்ற பெயர் வந்ததற்குக் காரணமாய் அம்பிகை வேதியர் குடும்பத்தில் பிறந்து மங்களநாயகி என்ற பெயரோடு வளர்ந்து ஈசனைத் திருமணம் செய்துகொண்டதால் ஈசன் இந்த ஊர் கல்யாணபுரம் என அழைக்கப் படும் எனத் திருவாய் மலர்ந்தருளியதாய் ஒரு கூற்று.  ஆனால் தற்காலத்தில் இந்த ஊரானது உத்தரகோசமங்கை என்று அழைக்கப் படுகிறது.  மங்கையாகிய பார்வதி தேவிக்கு அவள் கேட்ட கேள்விகளின் மூலம் மகத்தானதொரு ரகசியமான பிரணவப்பொருளை ஈசன் உபதேசித்ததால் இந்தப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள்.  மாணிக்க வாசகர் தமது திருவாசகத்தில் உத்தரகோசமங்கையின் ஈசனைக் குறித்துத் தமது நீத்தல் விண்ணப்பத்தில் குறிப்பிடுகிறார்.  இந்த ஊரில் மாணிக்கவாசகருக்கெனத் தனிச் சந்நிதி இருப்பதாயும் கேள்விப் படுகிறோம்.  இங்கே கட்டுமலை அமைப்பில் கோயில் இருப்பதாயும், அந்தக் கட்டுமலையில், ஈசன் மடியில் அம்பிகை அமர்ந்திருக்கும் கோலத்தில் அம்பிகையை அணைத்தவண்ணம், சின் முத்திரை காட்டி அம்பிகைக்கு உபதேசிக்கும் கோலத்தில் ஐயன் காணப்படுவார் எனவும் கூறுகின்றனர்.  முதன்முதல் இந்தப் பிரணவப் பொருளை உபதேசம் பெற்றது அம்பிகையே ஆவாள்.  அவளே குருவாக இருந்து தனது அருள் பார்வையால் அனைத்து ஆன்மாக்களுக்கும் இவற்றை உணர்த்தினாள் என்பது ஆன்றோர் வாக்கு.  சைவ மரபின் முதல் ஏழுகுருமார்களில் அம்பிகையும் ஒரு குருவாகக் கருதப் படுகின்றாள். //&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து உமாமகேசர்.  எப்போதும் அம்பிகையைப் பிரியாமல் தன்னுடனேயே வைத்திருக்கும் ஈசன்.  இமவானுக்கும் அவன் மனைவி மேனைக்கும் மகளாய்ப் பிறந்து வளர்ந்தாள் அம்பிகை.  அவள் தோன்றும்போது ஆயிரத்தெட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலரின் மீது தோன்றினாள்.  அந்தக் குழந்தையைத் தன் மனைவியிடம் கொடுத்து பார்வதி என்ற பெயரில் வளர்ந்த குமாரியானவள் ஈசனையே திருமணம் செய்து கொள்ளப் போவதாயும், அதற்காகத் தவம் செய்யப் போவதாயும் கூறித் தந்தையின் உதவியோடு பர்ணசாலை அமைத்துக் கடுந்தவம் இருக்க ஆரம்பித்தாள்.  இங்கே ஈசனோ கடும் யோகத்தில்  யோகாசன மூர்த்தியாக அமர்ந்திருந்தார்.  அவரை நெருங்க முடியவில்லை.  ஈசனிடம் வரம் வாங்கிக்கொண்ட சூரபத்மன் என்னும் அசுரனோ தன்னுடைய வரங்களின் மகிமை இருக்கும் வரை தன்னை எவராலும் எதுவும் செய்ய இயலாது என்று புரிந்து கொண்டு அட்டகாசம் புரிந்து வந்தான்.  தேவாதிதேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது தவித்தனர்.  ஈசனே தஞ்சம் என இருக்கும் நிலையில் அவரோ யோகத்தில் ஆழ்ந்துள்ளாரே.  இவர் யோகத்தைக் கலைத்து மீண்டும் உலகில் அமைதியை  ஏற்படுத்துவது எவ்வாறு? அதோடு ஈசன் யோகத்தில் இருக்கும் இந்நிலையில் உலகில் சிருஷ்டியில் பங்கம் ஏற்படலாயிற்று.  அனைத்து உயிர்களையும் மாயையில் மறைத்துப் பின் அருள் காட்டி அனுகிரஹிக்கும் எம்பெருமான் அன்னை இல்லாமல் சக்தியை இழந்த நிலையில் இருக்கவே சிருஷ்டியில் குறைபாடுகள் ஏற்பட்டு விண்ணுலகிலும், மண்ணுலகிலும் இன்னும் அனைத்து ஜீவராசிகளிடமும் காமம் என்னும் சிற்றின்ப உணர்வே இல்லாமல் இயக்கமே இல்லாமல் இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஈசன் தன் நிலைக்குத் திரும்பி சக்தியோடு ஐக்கியம் ஆனால் ஒழிய இந்நிலை மாற வாய்ப்பில்லை.அதோடு சிவசக்தி ஐக்கியத்தால் தோன்றப் போகும் குமாரனாலேயே சூரனுக்கு அழிவு என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.  எல்லாவற்றுக்கும் ஈசனின் தவம் கலையவேண்டும். என்ன செய்யலாம்?? ஆஹா, இதோ ஒரு வழி! மன்மதனை அனுப்பலாம்.  அவனுடைய கணைகளுக்கு மயங்காதவர் உண்டோ? மன்மதனை அனுப்பத் தீர்மானித்தனர்.  மன்மதனோ பயந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலை மாறவேண்டுமெனில் சிவகுமாரன் உதயம் ஆகவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-2955113604351514056?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/2955113604351514056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=2955113604351514056' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2955113604351514056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2955113604351514056'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/04/blog-post_16.html' title='நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, உமா மகேசர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-6676366422525827529</id><published>2011-04-13T04:39:00.000-07:00</published><updated>2011-04-13T04:41:44.645-07:00</updated><title type='text'>நமசிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க, சுகாசன மூர்த்தி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-VjEpJDuG66g/TaWLv1wnQEI/AAAAAAAAEWI/kjN1_PyjKAI/s1600/indexsukasana%2Bmurthy.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 224px;" src="http://2.bp.blogspot.com/-VjEpJDuG66g/TaWLv1wnQEI/AAAAAAAAEWI/kjN1_PyjKAI/s320/indexsukasana%2Bmurthy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595031766078799938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஈசன் பிரணவப்பொருளின் ஸ்வரூபம் ஆவார்.  எல்லாவற்றுக்கும் மூலமான வித்து பிரணவமே ஆகும்.  மிக மிக சூக்ஷ்மம் நிறைந்த இந்தப் பிரணவம் உலகின் அனைத்து ரூபங்களிலும் வியாபித்து உள்ளது.  இதை அறிந்தவர் பிரம்மத்தை அறிந்தவர் ஆவார் ; இதுவே பரப்பிரும்மம் என்றும் கூறப்படுகிறது.  இந்தப் பிரணவ மந்திரத்தை ஏகாக்ஷரம் எனவும் ஆதி மந்திரம் எனவும் அழைக்கின்றனர்.  அ+உ+ம இவை மூன்றும் சேர்ந்து உச்சரிக்கப்படுவதே பிரணவம் ஆகும்.  இதிலிருந்து வேதங்கள் தோன்றின.  முதலெழுத்தான “அ”காரம் ரஜோகுணத்துடன் கூடிய நான்கு முக பிரம்மாவை சிருஷ்டி செய்யும்.  “உ”காரமோ சத்வ குணத்துடன் கூடிய விஷ்ணு ரூபமாகவும் பிரக்ருதி எனப்படும் யோனியாகத் தோன்றி இவ்வுலகைக் காக்கும்.  “ம”காரமானது தமோ குணத்துடன் ருத்ரனாகத் தோன்றி சம்ஹரிக்கும் தொழிலைச் செய்யும்.  இதன் பிந்துவே மஹேஸ்வர ரூபமாக மறைத்தல் என்னும் திரோபாவத்தைச் செய்கிறது.  கடைசியில் தோன்றும் நாதமானது சதாசிவ மூர்த்தியாக எல்லாவற்றையும், அனுகிரஹம் செய்யும்.  இதுவே “நாத பிந்து கலாதி நமோ நம:”  எனப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அதி அற்புதமான பொருளைப் பூரணமாக அறிந்து கொள்ளவேண்டுமெனில் குருமூலம் தீக்ஷை பெற வேண்டும்.  மந்திரம், யந்திரம், தேவதை, பிரபஞ்சம், ஆகியவற்றின் மூலமாயும், குரு சிஷ்யன் என்னும் உறவினாலும் அந்தப் பரம்பொருளின் தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும்.  ஈசனை “ஓம்” என்னும் ஏகாக்ஷர சொரூபியாகத் தியானிக்கவேண்டும்.  குருவை தியானித்து வணங்கி அவர் மூலம் உபதேசம் பெற்றுத் தூய்மையான இடத்தில் பிரணவத்தை உச்சரித்துப் பஞ்சாக்ஷரம் ஜெபித்துப் பின்னர் முறைப்படி பூஜைகள் செய்து ஐக்கிய அநுசந்தானத்தை அடையவேண்டும்.  மூன்றையும் சேர்த்து ஓம் என உச்சரித்தலின் மூலம் சிவனையும், சக்தியையும் சிவசக்தியரின் அருளையும் பெறலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட பிரணவப் பொருளின் தத்துவத்தை உமாதேவியார் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி ஈசன் சுகாசனத்தில் அமர்ந்து அன்னைக்கு உபதேசித்தார்.  சுகாசனம் என்பது இடக்காலை மடித்து வைத்துக்கொண்டு வலக்காலைத் தொங்க விட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் கோலத்தைக் குறிக்கும்.  இவரின் இடத்தொடையில் அமர்ந்திருக்கும் அம்பிகையை “தர்மார்த்த காம மோக்ஷ பிரதாயினி” என அழைக்கப் படுவாள்.  இவ்விதம் வேதங்களையும் ஆகமங்களையும் அம்பிகைக்கு உபதேசித்த கோலத்தையே சுகாசன மூர்த்தி என்று சொல்கிறோம்.  பாடம் நடத்தியதோடு அல்லாமல் அம்பிகைக்குப் பரிக்ஷையும் வைத்தாராம் ஈசன்.  அது ஒரு திருவிளையாடல். தென் பாண்டிநாட்டில் நடந்தது.  அனைத்து ரகசியங்களையும் உபதேசித்த ஈசன் அம்பிகையிடம் தான் கூறியவற்றைக் குறித்து விளக்கம் அளிக்கக் கேட்டாராம்.  அன்னையவளால் பதில் சொல்ல இயலவில்லை.  ஆச்சரியமா இருக்கா? ஆம், நம்மை எல்லாம் அன்பால் அரவணைக்கும் அன்னைக்கு நாடகம் நடத்திப் புரிய வைக்கவேண்டி இருக்கும் எனத் தோன்றி இருக்கலாம்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-mpXJV0PzObY/TaWL0kjyv1I/AAAAAAAAEWQ/cYuhNka7W14/s1600/imagesmurthysuka.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/-mpXJV0PzObY/TaWL0kjyv1I/AAAAAAAAEWQ/cYuhNka7W14/s320/imagesmurthysuka.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595031847360970578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை எனில் ஓம் என்னும் மூல மந்திரத்தை அ+உ+ம் என உச்சரிக்காமல் வரிசையைச் சற்றே  மாற்றி, உ+ம்+அ என உச்சரித்தால் நாம் பெறுவது உமா என்னும் சொல்.  இது சக்திப் பிரணவம் என அழைக்கப்படும்.  மந்திரங்களுக்கெல்லாம் ஆதார சக்தியாகவும், அக்ஷரங்களின் ரூபமாகவும் இருப்பவள் சர்வேஸ்வரியே. ஆகவே இது சக்திப் பிரணவம் எனப்படுகிறது.  அப்படிப்பட்ட அவளுக்குத் தெரியாதா ஐயன் கூறியவற்றின் விளக்கம் !  எனினும் அம்பிகை விளக்கம் சொல்ல இயலாமல் தவிக்க ஐயன் அவளை பூலோகத்தில் ஒரு வேதியரின் மகளாய்ப் பிறந்து வேத ஆகமங்களைக் கற்றுக்கொண்டு வரச் சொல்லி அனுப்பிவிட்டார்.  உரிய காலத்தில் தாமே அவளை மணந்து கொள்வதாயும் வாக்குக் கொடுத்தார்.   அப்படி அதிர்ஷ்டம் செய்த ஊர் தென் பாண்டி நாட்டில் ராமநாதபுரத்திற்கு அருகே உள்ள திரு உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய ஊர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-6676366422525827529?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/6676366422525827529/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=6676366422525827529' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6676366422525827529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6676366422525827529'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/04/blog-post_13.html' title='நமசிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க, சுகாசன மூர்த்தி!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VjEpJDuG66g/TaWLv1wnQEI/AAAAAAAAEWI/kjN1_PyjKAI/s72-c/indexsukasana%2Bmurthy.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-7251733673711178474</id><published>2011-04-04T02:04:00.000-07:00</published><updated>2011-04-04T02:07:04.943-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! லிங்கோத்பவர் தொடர்ச்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-cZbcxnqCA7Y/TZmKIP8relI/AAAAAAAAETw/XUy8dvVjsho/s1600/%25E0%25AE%2588%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 231px;" src="http://3.bp.blogspot.com/-cZbcxnqCA7Y/TZmKIP8relI/AAAAAAAAETw/XUy8dvVjsho/s320/%25E0%25AE%2588%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5591652286681807442" /&gt;&lt;/a&gt;பிரம்மா படைப்புக் கடவுள் ஆவார்.  அதோடு அறிவுக்கு அதிபதியும் ஆவார். கலைமகளைத் தன் நாவில் கொண்டவர் ஆயிற்றே.  அத்தகைய அறிவு படைத்த பிரம்மா ஈசனின் முடியைத் தேடிச் சென்றார்.  அறிவு இருந்தால் பணிவும் இருக்கவேண்டும், விநயம் இருக்கவேண்டும், ஆனால் தனக்கு அறிவு இருப்பதால் அகந்தை கொண்டு பிரம்மா முடியைத் தேடிச் சென்றார் எனப் புராணங்கள் கூறுகின்றன.  மஹாவிஷ்ணுவோ செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீயைத் தன் மார்பில் தாங்கியவர்.  அனைத்துச் செல்வங்களும் அவரிடம்,.  எனினும் அவரும் செல்வத்தால் எதையும் சாதிக்க இயலாது என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும்,  ஈசனின் திருவடிகளையே நாடினார்.  காண முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளவும் செய்தார்.  ஆனால் அறிவினால் செருக்குற்ற பிரம்மாவோ, தான் முடியைக் கண்டதாய்ப் பொய்யைச் சொன்னார்.  அறிவினாலோ, செல்வத்தாலோ பரம்பொருளை அடைய முடியாது என்பதன் தாத்பரியமே இந்தப் புராணக் கதை. தான் என்ற அகந்தை நிறைந்த பிரம்மாவால் முடியைக் காண முடியாமல் போனது மட்டுமல்லாமல் செருக்கில் பொய்யும் உரைத்தார்.  வெறும் அறிவு இருந்தால் மட்டும் அனைத்தையும் வெல்ல முடியாது, அதிலும் ஈசனை அடைய முடியாது. கூடவே பணிவும், விநயமும் இருக்கவேண்டும் என்பதே இந்தக் கதையின் தாத்பரியம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் பெரியோர்கள் இந்தக் கதையைச் சொன்னதின் காரணமே நாம் நமக்கு மேம்பட்ட அறிவு இருக்கிறதென்றோ, நிறைந்தசெல்வம் இருக்கிறதென்றோ அகந்தை கொள்ளாமல்  செல்வத்தின் மூலமோ, அறிவின் மூலமோ ஈசனின் உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும் என எண்ணாமல்,  ஒரு வரைமுறைக்கு உட்படாத ஈசனின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த அறிவும், செல்வமும் போதும் என நினைப்பவர்களால் முடியாது என்பதே இந்த அடிமுடி தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் அலைந்ததின் உள்ளார்ந்த தத்துவம் ஆகும்.  அறிவு மட்டும் இருந்தாலோ, செல்வம் மட்டும் இருந்தாலோ இறைவனை அடையவே முடியாது.  இவை இரண்டும் சேர்ந்து இருந்தாலோ மனிதனுக்குத் தான் என்னும் அகங்காரம் ஏற்பட்டு விடும்.  இந்தத் தான் ஒழிந்தால் தான் அந்தத் தானாக மாறமுடியும், ஒன்றிப் போக இயலும்.  கல்வியினால் ஏற்படும் செருக்கு அல்லது அகந்தை பணத்தினால் ஏற்படுவதை விடவும் ஒரு பங்கு அதிகம் தான்.  அதனால் தானோ என்னமோ பிரம்மா தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.  விஷ்ணு மட்டும் ஒப்புக்கொண்டார்.  மேலும் அண்டத்தை எல்லாம் நிறைத்துக்கொண்டு பேரொளியாக நின்ற ஈசனின் தத்துவமானது அடி, முடி என ஒரு வரையறைக்கு உட்பட்டு இல்லாமல் எல்லை கடந்த ஒன்று என்பதே ஆகும்.   எல்லைகளே இல்லாப் பரம்பொருளைத் தியானிக்க அவனை ஒளிவடிவில் வணங்குவதும் ஒரு முறை ஆகும். நீள் வட்ட வடிவில் காணப்படும்   இந்த லிங்க பாணம் பிளந்து நடுவில் இருந்து தலையில் பிறையைச் சூடிய சந்திரசேகரர் வெளிப்படுவதாய்ச் சில லிங்கோத்பவ மூர்த்தங்களில் காணமுடியும்.  என்றாலும் இந்தச் சிற்பங்களிலும் அடியோ, முடியோ காண இயலாது.  சோழர்கள் காலத்தில் முதலாம் பராந்தகன் காலத்தில் எழுப்பிய சிவன் கோயில்களின் கருவறைக்குப் பின்னால் லிங்கோத்பவர் இடம் பெற்றிருந்ததாய்க் கேள்விப் படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;லிங்கோத்பவரின் மூர்த்தங்களில் சிலவற்றைக் காஞ்சீபுரம் கைலாயநாதர் கோயிலில் அழகாய்ச் செதுக்கி இருப்பதைக் காணமுடியும்.  ஆனால் அழிய ஆரம்பித்திருக்கிறது மன வருத்தத்தைத் தரும் செய்தி.  இதைத் தவிர குன்றக்குடி, சுசீந்திரம், தஞ்சைப் பெரிய கோயில் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் லிங்கோத்பவர் எழுந்தருளி இருப்பதாய்த் தெரிய வருகிறது. அடுத்து நாம் தரிசிக்கப் போவது அம்பிகைக்கு உபதேசம் செய்த ஈசனின் திருக்கோலம்.  ஆகமங்களை அம்பிகைக்கு ஈசன் உபதேசித்ததாய்க் கேள்விப் படுகிறோம். பர்வத ராஜகுமாரியாக அம்பிகை அவதரித்த அந்த நாட்களில் ஒருநாள் அம்பிகை ஈசனிடம் மந்திர தீக்ஷை அளிக்கச் சொல்லி விண்ணப்பிக்கிறாள்.  அப்போது பிரணவத்தின் பொருளும் உபதேசம் செய்யப் படுகிறது. அந்த உபதேசம் நடக்கும் நேரம் அம்பிகை ஈசனின் இடப்பாகத்தில் , அவரின் இடத்தொடையில் அமர்ந்த வண்ணம் காட்சி அளிப்பாள்.  காணக்கிடைக்காத அபூர்வமான இந்த மூர்த்தியின் வடிவமே சுகாசன மூர்த்தி ஆகும்.  அதைக் குறித்து வரும் நாட்களில் காணலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-7251733673711178474?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/7251733673711178474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=7251733673711178474' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7251733673711178474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7251733673711178474'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/04/blog-post.html' title='நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! லிங்கோத்பவர் தொடர்ச்சி'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-cZbcxnqCA7Y/TZmKIP8relI/AAAAAAAAETw/XUy8dvVjsho/s72-c/%25E0%25AE%2588%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-7212066710639431313</id><published>2011-03-29T05:56:00.001-07:00</published><updated>2011-03-30T08:29:09.541-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!  லிங்கோத்பவர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-OMWRCl9hxs8/TZNME-_F8-I/AAAAAAAAETQ/4ZuPHNfAnsc/s1600/images%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 194px; height: 259px;" src="http://2.bp.blogspot.com/-OMWRCl9hxs8/TZNME-_F8-I/AAAAAAAAETQ/4ZuPHNfAnsc/s320/images%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5589895211007734754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;லிங்கோத்பவர் நாம் நன்கறிந்தவர்.  லிங்கம் என்பது உருவம்.  அந்த லிங்கம் வெளிப்பட்டதையே லிங்கோத்பவம் என்று கூறுகின்றனர்.  உருவே அற்ற பரம்பொருள் ஒரு உருவைத் தாங்கி நம்மையெல்லாம் உய்விக்க வந்ததையே லிங்கோத்பவம் என அழைக்கின்றனர்.  பிரளய காலத்தின் முடிவில் உலக உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கையில் ஈசன்  தம்மிலிருந்து பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞாந சக்தி, க்ரியா சக்தி ஆகியோரைத் தோற்றுவிக்கிறார்.  ஐந்து சக்திகளில் இருந்தும் தோன்றும் தத்துவங்களை சதாசிவ தத்துவம் என்றழைக்கப் படும்.  இந்த சதாசிவ தத்துவத்தில் முதலில் சூன்யமாக ஒன்றுமில்லா நிலையில் உருவற்று இருந்த பரம்பொருளானது பின்னர் மின்னலைப் பழிக்கும் ஒளியாக மாறி, அந்த ஒளி அனைத்தும் சேர்ந்ததொரு ஒளித்தூணாக ஆகி, அந்தத் தூணிலிருந்து வெடித்துக்கிளம்பும் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்ட ஈசனாக வந்து பின்னர் நான்கு முகங்களோடும், எட்டுக்கரங்களோடும் காட்சி அளித்துப் பின்னர் ஐந்து முகம் கொண்ட சதாசிவராக காட்சி அளிப்பார்.  இப்படித் தான் ஒன்றுமற்ற சூன்யத்தில் இருந்து நமக்குக் காட்சி தரும் ஈசனின் வடிவம் உற்பத்தி ஆனது என்பதை லிங்கோத்பவம் என்று அழைக்கின்றனர்.  ஒளித்தூணாகக் காட்சி தருவதே ஜ்யோதிர்லிங்கம் என்பார்கள்.  லிங்கமே ஜோதிவடிவாகும்.  இந்த லிங்கோத்பவம் நிகழ்வு சிவராத்திரியின் போது நிகழ்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது.  ஆகவே சிவராத்திரியின் மூன்றாவது காலம் லிங்கோத்பவ காலம் என வழிபாடுகள் நடக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒளித்தூணாக நின்ற ஈசனின் அடி, முடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் சென்று அவற்றை அவர்களால் காணமுடியவில்லை என்ற கதையை நாம் நன்கறிவோம்.   அந்த நிகழ்வு நடந்த இடம் திருவண்ணாமலை ஆகும்.  ஈசனின் இந்த ஜோதிவடிவே ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் திருக் கார்த்திகை தீபமாக வழிபடப் படுகிறது.  அதை நினைவூட்டவே அன்று மலைமேல் தீபமும் ஏற்றப் படுகிறது.  திருவண்ணாமலைக் கோயிலின் இரண்டாம் பிரஹாரத்தில் இதை நினைவூட்டும் வண்ணம் ஒரு சந்நிதி கோயிலாக விளங்குகிறது.  ஐயனும், அம்பிகையும் ரிஷபவாகனத்தில் அமர்ந்திருக்க பின்னால் தீபச்சுடர் ஒளிவீச, உச்சியைக் காண முயலும் அன்னமான பிரம்மாவும், அடியைத் தேடும் வராஹமான விஷ்ணுவும் காணமுடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருஞானசம்பந்தரின் திருவண்ணாமலைத் தேவாரத்தின் கீழ்க்கண்ட பதிகம் பிரம்மாவும், விஷ்ணுவும் அடி முடி தேடிச் சென்றதையும் அம்மை இடப்பாகம் கொண்டதையும் சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பாடல் எண் : 9&lt;br /&gt;விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்&lt;br /&gt;கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்&lt;br /&gt;அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்&lt;br /&gt;தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.&lt;br /&gt;&lt;br /&gt;பொழிப்புரை :&lt;br /&gt;விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;லிங்கோத்பவர் தொடருவார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-7212066710639431313?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/7212066710639431313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=7212066710639431313' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7212066710639431313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7212066710639431313'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/03/blog-post_29.html' title='நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!  லிங்கோத்பவர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-OMWRCl9hxs8/TZNME-_F8-I/AAAAAAAAETQ/4ZuPHNfAnsc/s72-c/images%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-2760261741391997164</id><published>2011-03-28T06:10:00.000-07:00</published><updated>2011-03-28T06:19:58.898-07:00</updated><title type='text'>நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க ஏக பாதர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-G1nR0-OOD8o/TZCKzGyiy8I/AAAAAAAAETA/5K1GtLDxMaU/s1600/images%25E0%25AE%258F%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 202px;" src="http://1.bp.blogspot.com/-G1nR0-OOD8o/TZCKzGyiy8I/AAAAAAAAETA/5K1GtLDxMaU/s320/images%25E0%25AE%258F%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5589119748167355330" /&gt;&lt;/a&gt;ஏகபாத மூர்த்தியை அடுத்துக் காணலாம்.  ஈசனின் வடிவங்களில் முக்கிய ஐந்து மூர்த்திகளான ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரில் ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோரை சிவபெருமானாகவே வணங்கி வருகிறோம்.  ருத்ர வழிபாடுகள் அனைத்தும் சிவனுக்குச் செய்யப்படுவதே ஆகும்.  ஏனெனில் ருத்ரன் ஈசனின் நெஞ்சிலேயே ஒடுங்கி இருப்பதாய்க் கூறுவார்கள்.  ஈசனின் உருவே ருத்ரனின் திருவுருவமாக வழிபடப் படும்.  ருத்ரவழிபாடுகள் அனைத்துமே ஈசனைச் சென்றடையும்.  ஆனால் இவர்கள் அனைவருமே பிரளய காலத்தில் ஈசனிடமே ஒடுங்குவார்கள்.  ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது உலகமே நீரில் மூழ்கி அழியும் என்று சொல்லப் படுகிறது.   பிரம்மனின் பகல் முடிந்து இரவு ஏற்படும்போது ஊழிக்காலம் ஏற்படும் என்று கூறுவார்கள்.  அதன் கணக்கு வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;நமது ஒருவருடத்தை தேவர்களின் ஒரு நாளாகக் கணக்கிடப்படுகிறது.  தேவர்களின் ஒரு ஆண்டு என்பது நமக்கு 365 வருடங்கள் ஆகும்.  இது மாதிரிக் கிட்டத்தட்ட பனிரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தால் தேவர்களின் ஓர் ஊழிக்காலம் ஆகும்.  இப்படி 4,000 ஊழிக்காலம் முடிந்தால் பிரம்மாவின் ஒரு பகல் பூர்த்தி அடையும் என்கின்றனர்.  ஆகவே பிரம்மாவின் இரவின் போது மஹா பிரளயம் ஏற்படும்போது மஹாவிஷ்ணு, பிரம்மா முதற்கொண்டு அனைவருமே ஈசனிடம் ஒடுங்கிவிடுவார்கள்.  ஈசனின் வலபாகத்தில் பிரம்மாவும் இடபாகத்தில் விஷ்ணுவும், நெஞ்சில் ருத்ரனும் ஒடுங்குவார்கள்.  அப்போது ஈசன் ஒற்றைக்காலோடு ஏகபாதராய்க் காட்சி தருவார் என்று கூறுகின்றனர்.  இவரே ஏகபாதமூர்த்தி.  அதாவது இந்த உலகமாகிய இகம் முடிந்து அனைத்துமே பரமாகிய தத்துவத்தில் கலந்து பரமாக நிலைத்து நிற்பதைக் குறிக்கும் என்று ஆன்மீகப் பெரியோர்கள் கூற்று.  அனைத்து உயிர்களும் ஈசனின் திருவடியில்  ஒடுங்கி இருக்கையில் வலக்கரத்தில் சூலத்தை ஏந்தியவண்ணம், இடக்கரத்தில் மழுவோடும், முன் வலக்கரத்தில் அபய ஹஸ்த முத்திரை காட்டியவண்ணம்  முன் இடக்கரம் வரத முத்திரைக் காட்ட புலித்தோல் உடுத்தியவண்ணம் மணிமாலைகளை அணிந்துகொண்டு ஜடாபாரத்தில் சந்திரன் விளங்க கங்கையோடு தோற்றமளிக்கிறார் ஏகபாத மூர்த்தி. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஏகபாத மூர்த்தியின் சிறப்பைக் குறித்து திருஞானசம்பந்தர் தம் திருமறைக்காடு தேவாரத்தில் கீழ்க்கண்ட வண்ணம் பாடி உள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;பாடல் எண் : 7&lt;br /&gt;இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு&lt;br /&gt;பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட&lt;br /&gt;இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்&lt;br /&gt;மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே.&lt;br /&gt;&lt;br /&gt;பொழிப்புரை :&lt;br /&gt;&lt;br /&gt;பேரூழிக்காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண் புனலில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க, வளி ஆகாயத்தில் ஒடுங்க, பரந்துபட்ட இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும் அழிய, அதுபோது பிரம விட்டுணுக்களது முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன், வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம் அமரும் பரமன் ஆவான்.&lt;br /&gt;&lt;br /&gt; இவ்வுலகை மீண்டும் படைக்கும் திருவுள்ளம் கொண்டு ஈசன், ஏகபாதராய்த் திருவடிவம் ஏற்றபின்னர், நெஞ்சில் இருந்து தம்மில் ஒரு கூறாய் ருத்ரரைத் தோற்றுவிக்கிறார்.  பின்னர் வலப்பாகத்திலிருந்து பிரம்மாவையும், இடப்பாகத்தில் இருந்து விஷ்ணுவையும் தோற்றுவிக்கிறார்.  இவ்விதம் மூர்த்திகள் தோன்றும் வண்ணம் வடிக்கப்பட்ட அரிய சிற்ப அற்புதம் திரிபாத மூர்த்தி எனப்படுகிறது.  மஹாபாரதத்தில் இவ்வடிவத்தைப் பற்றிய விவரங்கள் கிடைப்பதாய்க் கூறுகின்றனர்.  பார்க்கணும், எந்த பருவத்திலேனு தெரியலை!&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலையில் இந்த திரிபாதமூர்த்தியாக ஈசன் தோன்றும் காட்சியை விழாவாக நடத்துவதாகவும், அவ்விழாவில் அம்பிகைக்கு ஈசன் முதலில் ஏகபாதராகவும், பின்னர் திரிபாதமூர்த்தியாகவும், பின்னர் திரிமூர்த்தியாகவும் காட்சிதருவதாய் ஐதீகம்.  ஈசன் மூன்று முறை வீதிகளில் திருவுலா வரும்போதும் பிரம்மா விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவராக மூன்று முறை வலம் வருவதாயும் கூறுகின்றனர்.  நாசிக் அருகே உள்ள ஜ்யோதிர்லிங்க க்ஷேத்திரமான த்ரியம்பகேஸ்வர்ரில் மும்மூர்த்திகளும் ஜ்யோதிர்லிங்கத்தின் ஆவுடையாரில் அடக்கம் என்றும் தெரியவருகிறது.  அடுத்து நாம் அனைவரும் நன்கறிந்த லிங்கோத்பவர் வருகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-2760261741391997164?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/2760261741391997164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=2760261741391997164' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2760261741391997164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/2760261741391997164'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/03/blog-post_28.html' title='நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க ஏக பாதர்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-G1nR0-OOD8o/TZCKzGyiy8I/AAAAAAAAETA/5K1GtLDxMaU/s72-c/images%25E0%25AE%258F%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-6463151263470990020</id><published>2011-03-23T02:56:00.000-07:00</published><updated>2011-03-23T02:57:16.697-07:00</updated><title type='text'>அங்காளம்மனின் மயானக் கொள்ளை</title><content type='html'>அங்காளம்மனை ஆதி பராசக்தி என்றே கூறுகின்றனர்.  ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரத்தை அம்பிகை எடுத்ததாகவும் சக்தி உபாசகர்கள் கருத்து.   இதைத் தான் முதல் சக்தி பீடம் எனவும் கூறுகின்றனர்.  சிருஷ்டியை அம்பிகை இங்கிருந்தே ஆரம்பித்ததாயும் ஐதீகம்.  கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் கர்ப்பிணிக் கோலத்தில் அம்பிகையைத் தரிசிக்கலாம் எனவும் கூறுகின்றனர்.  ஆனால் அங்கெல்லாம் போய்ப் பார்க்க முடியவில்லை.  கோயிலின் நுழைவாயிலில் ஒரே கூட்டம்.  அங்கிருந்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப் பட்டோம்.  ஆனால் கோயிலின் சில ஊழியர்கள் தனியாகப் பணம் வாங்கிக்கொண்டு நேரே அழைத்துச் செல்கிறோம் என வற்புறுத்துவதையும் காண முடிந்தது.  யாராயிருந்தாலும் உள்ளே போய்ப் புற்றுக்கருகே கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டே ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நாங்கள் நுழைவுச் சீட்டே வாங்கிக்கொண்டு, குழுவினர் அனைவரும் வரிசையில் நின்றோம்.  சிறிது தூரம் சம தரையில் சென்றதும் பின்னர் படிகள்.  மரப்படிகள்.  அதன் பின்னர் மேலே ஒரு பால்கனி போன்ற அமைப்பு, பின்னர் கூண்டு மாதிரியான இடத்தைக் கடந்து சென்றால் மேலேஏஏஏஏஏ உயரமான பாலம்.  அதைக் கடக்கையில் கோயிலின் கீழே நடப்பதை நன்கு காண முடிந்தது.  அவ்வாறு கண்டபோது முன் மண்டபத்தில் ஒரு அம்மன் சிலையை வைத்து அலங்கார, அபிஷேஹங்கள் செய்து வழிபாடுகள் நடத்தப் பட்டுக்கொண்டிருந்தன.  இது கோயிலைச் சேர்ந்ததே இல்லை என்றனர்.  கோயில் பரம்பரையாகப் பூசாரிகள் வசம் இருப்பதாயும், அவர்களில் சிலர் இம்மாதிரித் தனியாக வழிபாடுகள், பிரார்த்தனைகளை நடத்தித் தருவதாயும் கூறினார்கள்.  இன்னும் சற்று முன் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் ஒரு பெரிய ஸ்ரீசக்கரம் போன்ற அமைப்புக் கல்லினால் செதுக்கப் பட்டிருந்தது.  அதற்கு முன்னால் அங்கேயும் ஒரு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு ஒரு பெண்மணி அதற்கு வழிபாடுகள் நடத்திக்கொண்டு கோயிலுக்கு வரும் பெண்களை எல்லாம் அங்கேயும் வந்து வழிபட்டாலேயே வழிபாடு பூர்த்தி அடையும் எனச் சொல்லிப் பணம் பிடுங்கிக்கொண்டிருந்தார்.  ஸ்ரீசக்கர அமைப்பில் படுக்கத் தனியாகச் சீட்டுப் பணம் செலுத்தி வாங்க வேண்டும்.  அதை வாங்கிக்கொண்டு சிலர் ஒவ்வொரு இடத்தில் தங்கள் தலையை வைத்துப் படுத்துக்கொண்டு இருந்தனர்.  அதைச் சுற்றி ஒரு கூண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் நாங்கள் கீழே இறங்கிச் சந்நிதியின் பின் பக்கம் இருந்த பெரிய புற்றினருகே வந்துவிட்டோம்.  இங்கே சில கோயில் ஊழியர்கள், (இந்தக் கோயிலில் கவனிக்கத் தக்கவை அனைத்து ஊழியர்களும், பெண்களே, அவர்களுக்கு உதவிக்கு மட்டும் ஆண்கள், கூட்டத்தைச் சமாளிக்க, எதையாவது எடுத்து வர என) புற்றின் மேல் போடப் பட்டிருந்த மஞ்சள் பொடிக்கும், மஞ்சள் கயிற்றுக்கும் பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.  மக்களின் பக்தி அங்கே வியாபாரமாகிக்கொண்டிருந்தது.  அதையும் வாங்கப் போட்டாபோட்டி.  கயிற்றின் தரத்துக்கு ஏற்பப் பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை வசூலிக்கப் பட்டது.  அங்கே நுழைவிடம் வேறே குறுகல்.  ஆகவே நெரிசலில் மாட்டிக்கொள்ள நேரிடுமே எனக் கவலை வந்தது.  நல்லவேளையாக முன்னாலிருந்தவர்களில் சிலர் எங்கள் குழுவினர் என்பதால் கொஞ்சம் ஆறுதலாயும் இருந்தது. ஒரு மாதிரியாக உள்ளே போய் அம்பாளைத் தரிசித்தால், ஒரே தள்ளு!  போங்கம்மா, போங்கப்பா, பார்த்தது போதும், போங்க, போங்க, அடுத்தவங்க பார்க்க வேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;அடக் கடவுளே, ஒரு விநாடி கூடப் பார்க்க முடியலையே? ஏமாற்றம் மனதில் சூழ்ந்தது.   என்றாலும் அவசரம் அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக்கொண்டு அம்பிகை நீயாவது என்னைப் பார்த்துக்கோ அம்மானு சொல்லிட்டு அங்கிருந்து திருவண்ணாமலைக்குக் கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் பற்றி விசாரித்ததில் கிடைத்த மேலதிகத் தகவல்கள். மாசி மாதம் சிவராத்திரி அன்று லிங்கோத்பவம் எனக்கொண்டாடினாலும் இந்தக் கோயிலில் மட்டும் அன்றிரவு  ஈசன் அம்மனின் சூரையை எதிர்நோக்கி வருகிறார்.  மறு நாள் அமாவாசையன்று இரவே  அம்மன் மயானத்தில் உள்ள பூதங்கள், ஆவிகள், பேய், பிசாசுகள் அனைத்துக்கும் உணவளிப்பதாயும், அவ்வாறு அளிக்கும் உணவை வாரி இறைப்பதையே சூரை எனவும் கூறுகின்றனர்.  இதைப் பத்து நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.  அம்மன் வரலாற்றைக் கூறும் விழாவாக இங்கே மட்டுமே கொண்டாடப் படுவதாயும் கூறுகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-6463151263470990020?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/6463151263470990020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=6463151263470990020' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6463151263470990020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6463151263470990020'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/03/blog-post_23.html' title='அங்காளம்மனின் மயானக் கொள்ளை'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-3185952104646584811</id><published>2011-03-10T01:11:00.001-08:00</published><updated>2011-03-10T01:17:38.281-08:00</updated><title type='text'>அங்காளம்மனின் மயானக் கொள்ளை!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-wul3t9o29YE/TXiXBxWMxGI/AAAAAAAAERQ/G7hTNPy0PoI/s1600/images%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-wul3t9o29YE/TXiXBxWMxGI/AAAAAAAAERQ/G7hTNPy0PoI/s320/images%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5582377794807841890" /&gt;&lt;/a&gt;தென்னாங்கூரிலிருந்து நாங்கள் சென்றது மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலயம். வழியில் சில சமண ஆலயங்கள் வயல்களுக்கு நடுவே கண்களில் பட்டன.  ஆனால் இறங்கிச் சென்று தான் பார்க்கவேண்டும்.  அதற்குக் குழுவினர் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமே.  எல்லாமே பழைய ஆலயங்கள் எனப் பார்த்த மாத்திரத்தில் புரிந்தது.  இன்னொரு சமயம் வாய்க்கவேண்டும்.  சமண ஆலயங்கள் பற்றிக்குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு செல்லவேண்டும். ராஜஸ்தான், குஜராத்தில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பார்த்ததில்லை. இனி அங்காளம்மனின் வரலாறு.  சக்திபீடம் என்றும், உலகின் சிருஷ்டி முதன்முதல் இங்கே தான் ஆரம்பித்தது என்றும் இவள் ஆதிபராசக்தி என்றும் கூறுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மன் ஆதிபராசக்தி ஆவாள்.  சதுர்யுகங்களுக்கும் முன்னால் இருந்த சிருஷ்டியின் ஆரம்பமான மணியுகத்திற்கும் முன்னரே சுயம்புவாய்த் தோன்றிய அன்னை, அந்த யுகத்தின் முதல் மூர்த்தியான சிவனின் பிரமஹத்தி தோஷத்தை நீக்கினாள் என்று சொல்லப் படுகிறது.  அருள் மிகு அங்காளம்மன் முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் தன்னிடம் கொண்டவளாக முப்பெருந்தேவியரின் அம்சமும் கொண்டவளாக, மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மாபெரும் ஆதி பராசக்தியாக முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்தவளாகவும், காணப்படுகிறாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய இவள் தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுகதத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவானவள் அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;தாக்ஷாயணி அவதாரத்தில் தக்ஷனின் யாக குண்டத்தில் விழுந்து உயிரை விடத் துணிந்த சக்தியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்த ஈசனின் துயரத்தைக் கண்டு சகிக்கமாட்டாமல் மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவள் உடலைத் துண்டு துண்டுகளாக அறுந்து விழும்படிச் செய்தார்.  அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது.  அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர்.  இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பிகையின் உடலைத் தூக்கிக்கொண்டு சிவன் தாண்டவம் ஆடியபோது அறுந்து துண்டாக விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல் மலையனூர் என்று கூறப்படுகிறது.  இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர்.  ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருக்கிறதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய, சிவனுக்கே பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.  கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது.  ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில்  அம்பிகையானவள் பிக்ஷை போட்டு அந்த  பிக்ஷையை ஏற்கும்போது  எந்த ஊரில்  மண்டை ஓடு அகலுமோ அங்கே  பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த  ஈசன் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிக்ஷை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை.  அங்காளியானவள் அன்று தன் பூரண வலுவோடும், பலத்தோடும் இருப்பாள்.  அனைத்துக்கும் மூலாதார சக்தியான அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் போன்ற அனைவருக்கும் சூரை இடும் நாள் ஆகும்.  அதுவே மயானக்கொள்ளை என்றும் கூறப்படுகிறது. சூரை என்பது உணவு அளிப்பதையே இங்கே குறிக்கும்.  அப்போது உலகெங்கும் சுற்றி வந்த சிவன் அங்கே வந்து சேரும் தினம் மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசையாக இருக்கவே அன்று அங்காளியம்மன் சூரையின் முதல் கவளத்தை பிரம்ம கபாலத்தில் இட, பிரம்மஹத்திக்கு  உணவு கிடைக்க அது சாப்பிடுகிறது.  இரண்டாவது கவளமும் கபாலத்திலேயே அன்னை இடுகின்றாள்.  உணவின் ருசியில் தன்னை மறந்த பிரம்மஹத்தி  அதையும் உண்ண, மூன்றாவது கவளத்தைச் சூரையாகச்  சுடுகாட்டில் இறைக்கும்போது ஈசனைப் பற்றி இருந்த பிரம்ம ஹத்தி அந்தச் சூரையைச் சாப்பிட வேண்டி ஈசன் உடலில் இருந்து இறங்க, கையில் இருந்த கபாலத்தில் புகுந்து கொண்டு கீழே இறங்கியது.  கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி, தாண்டவேஸ்வரர் ஆக  அந்த ஊரிலேயே  அமர்ந்தார்.  அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார, என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரம்ம கபாலத்தினுள் புகுந்த பிரம்மாவின் பிரம்மஹத்தியானது சாப்பிட்டு முடிந்ததும் ஈசனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு விண்ணில் பறக்க ஆயத்தமானது.  அங்காளி இதைக் கண்டு கோபம் கொண்டு அதற்கும் மேல் தானும் விஸ்வரூபம் எடுத்து பிரம்மாவின் கபாலத்தை பிரம்மஹத்தியோடு சேர்த்து அழுத்தித் தன் கால்களால் மிதித்தாள்.  அவள் கோபத்தைக் கண்டு மஹாவிஷ்ணு தலையை மிதித்த அங்காளியை அவ்வண்ணமே பூமிக்குள் தள்ளி மூடி மறைத்துவிட்டார்.  சற்று நேரத்தில் பூமிக்கு மேல் சுயம்புவாகப் புற்று உருவாகி அதில் ஒரு நாகமும் குடிகொண்டதாய்த் தலவரலாறு கூறுகிறது.  இந்த நாகத்தின் படம் சுருங்காமலே பல யுகங்கள் இருந்ததாயும் கலி யுகத்திலே தேவர்கள் அனைவரும் தேர் உருவில் வந்து வணங்கவும் நாகத்தின் படம் சுருங்கி உள்ளே சென்று அங்காளம்மனாக அமர்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-3185952104646584811?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/3185952104646584811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=3185952104646584811' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3185952104646584811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3185952104646584811'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/03/blog-post_10.html' title='அங்காளம்மனின் மயானக் கொள்ளை!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-wul3t9o29YE/TXiXBxWMxGI/AAAAAAAAERQ/G7hTNPy0PoI/s72-c/images%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-1823387776098566755</id><published>2011-03-06T01:30:00.000-08:00</published><updated>2011-03-06T01:35:58.979-08:00</updated><title type='text'>ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-4TzHf06uRsM/TXNVbQlDl3I/AAAAAAAAERI/oWciVrIdIpI/s1600/images%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 189px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-4TzHf06uRsM/TXNVbQlDl3I/AAAAAAAAERI/oWciVrIdIpI/s320/images%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580898290037397362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயிலில் ஸ்ரீசக்கரத்தின் அதி தேவதைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றனர்.  இந்த அதிதேவதைகள் அனைவரும் ஒரே வடிவில், "மஹா ஷோடசி"யாகக் காட்சி தருகின்றனர்.  கோயிலின் பின்புறம் ஞானானந்த சுவாமிகளின் மடம் உள்ளது.  அங்கேயும் போய் பார்த்தோம்.  அங்கே ஸ்ரீ ஹரிதாஸ்கிரி அவர்களுக்கு என ஒரு பிருந்தாவனம் அமைக்கப் பட்டுள்ளது.  மேலும் கோயிலில்  ஸ்ரீ சக்ரத்தின் பிரிவுகளின் தெய்வங்களூக்கு விக்ரஹங்களும் உள்ளன.   கோயிலினுள் நுழையும்போது காணப்படும் பதினாறு கால் மண்டபத்தில் கருடாழ்வார் காணப்படுகிறார்.  மஹாமண்டபம் சொர்க்கலோகமோ என்னும்படி அதி செளந்தரியத்துடன் காணப்படுகிறது. வட இந்தியப் பாணியில் அலங்கரிக்கப் பட்டு இருக்கிறது.   இங்கு பெருமாளுக்கு சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.  இந்த திருக்கல்யாண உற்சவம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் கலந்து நடத்தப் படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பாண்டுரங்கன் ஞாயிற்றுக் கிழமைகளில், மதுராபுரியை ஆளும் அரசனாக  ராஜாங்க சேவையிலும், வியாழக்கிழமையில் அவன் பாத தரிசனம் கிட்ட வேண்டி எளிமையாகப் பாண்டுரங்க விட்டலனாகத் தன் திருவடிகளை அடியார்க்குக் காட்டிக்கொண்டும், வெள்ளிக்கிழமைகளில் முழுதும் வெள்ளியால் ஆன கவசத்தால் மூடிக்கொண்டு வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும் அருள் பாலிக்கிறார்.  ஒவ்வொரு தமிழ் வருஷப் பிறப்பிலும் சித்திரை விஷுக்கனி உற்சவம் நடக்கிறது.  அப்போது  முழுதும் பழங்களாலேயே அலங்கரிக்கப் படுகிறார்.  கோகுலாஷ்டமி தினத்தன்று முத்தங்கி சேவையும் காணலாம்.  இதைத் தவிரவும் மக்கள் மனம் கவர்ந்த கோபாலன் ராஜகோபாலனாகவும், கோவரத்தனகிரியைத் தூக்கிப்பிடித்த வண்ணம் கிரிதாரியாக, கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்த வண்ணம் பார்த்த சாரதியாகவும் காணப்படுகிறார் என்றும் சொன்னார்கள்.  இது எல்லாம் பத்தாது என்னும்படி தன் நெஞ்சம் கலந்த ராதையோடு ராதா கிருஷ்ணனாகவும் அருள் பாலிக்கிறார். இக்கோயிலின் தல விருக்ஷம் தமால மரம் என்று சொல்லப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தைப் பற்றி விசேஷமாய்ச் சொல்ல அனைவரும் சென்று பார்த்தோம்.  மதுராவிலேயே அதிகம் காணக்கிடைக்கும் என்றும் கிருஷ்ணன் இம்மரத்தின் கீழ் நின்று புல்லாங்குழல் வாசிப்பான் எனவும், கோபிகைகள் மட்டுமின்றி ராதையும் அதைக் கேட்டு மயங்கியதாகவும் புராணங்கள் கூறுவதாய்த் தெரிய வருகிறது.  வட மாநிலங்களிலேயே காணப்படும் இந்த விருக்ஷம் அதிசயமாக தென்னாட்டில் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.  இங்குள்ள துவாரபாலகர்கள் பஞ்சலோகத்தில் ஆனவர்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;பாண்டுரங்கன் மிகவும் எளிமையானவன்.  என் அப்பா, அம்மாவுக்குப் பணிவிடை செய்துவிட்டு நான் வரும் வரைக்கும் காத்திரு என பக்தன் தூக்கிப் போட்ட அரைச் செங்கல்லில் கால் கடுக்க நின்று பக்தனுக்குக் காட்சி கொடுத்தவன்.  இன்றும் அதே அரைச்செங்கல்லில் நின்ற வண்ணமே பண்டரிபுரத்தில் காட்சி கொடுக்கிறான். அங்கே பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனைத் தொட்டுத் தடவிப் பார்க்க முடியும்.  இங்கே தள்ளி நின்று தான் பார்த்தோம்.  ஆனாலும் இங்கு ஆகிருதியோடு காட்சி அளிக்கிறான் என்பதால் தள்ளி நின்று பார்க்கச் சொல்கின்றார்களோ?  தன் பக்தர்களுக்காகக் கால் நோக நடந்து தூது மட்டுமா போனான்?? எந்தவிதமான அஹங்காரமும் இல்லாமல்,"பாண்டுரங்கன் வந்திருக்கேன்." என்று தான் சொன்ன பிறகும், யாரானால் என்ன? நான் வர வரைக்கும் இதிலே நில் என்ற வண்ணம் அரைச் செங்கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டுத்  தன் கடமைகளை முடித்துவிட்டு பக்தன் வரும்வரையில் காத்திருந்து தரிசனமும் கொடுத்தான் அல்லவா?  இந்த எளிமை அவனை வழிபடுவதிலும் காட்டினாலே போதுமானது.  பலரும் பலவிதங்களில் வழிபட்டாலும், தன் நாமத்தை ஒருவன் மனப்பூர்வமாய் உணர்ந்து ஓதினாலே வேண்டியதை அள்ளித்தரக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன். &lt;br /&gt;&lt;br /&gt;நம்மை மறந்து, நம் இருப்பை மறந்து, அவன் நாமம் ஒன்றே நினைந்து, ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல, பண்டரிபுர விட்டல, ஹர ஹர விட்டல என்று பாடித் துதித்தால் இதோ இருக்கேன் என்று ஓடி வருவான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-1823387776098566755?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/1823387776098566755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=1823387776098566755' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/1823387776098566755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/1823387776098566755'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/03/blog-post_06.html' title='ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4TzHf06uRsM/TXNVbQlDl3I/AAAAAAAAERI/oWciVrIdIpI/s72-c/images%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-6986592808312209733</id><published>2011-03-04T20:55:00.000-08:00</published><updated>2011-03-05T00:19:12.720-08:00</updated><title type='text'>ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-RPuYmbN3H-o/TXHxj9GHSiI/AAAAAAAAEQ0/6H_a-m4yyOo/s1600/images%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 241px;" src="http://2.bp.blogspot.com/-RPuYmbN3H-o/TXHxj9GHSiI/AAAAAAAAEQ0/6H_a-m4yyOo/s320/images%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580507013286677026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சத்குரு ஞாநாநந்தகிரியின் பூர்வீகத்தை ஆராய்ந்ததில் அவர் கர்நாடகத்தை சேர்ந்த மங்களகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் எனவும், அவர் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதும் தெரிய வருகிறது.  பள்ளிச் சிறுவனாக இருந்த போதில் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர் ஊரை விட்டுக் கிளம்பிக் கால்நடையாகவே பண்டரிபுரம் வந்து சேர்ந்து சந்திரபாகா நதியில் நீராடி விட்டலனைத் தரிசித்துக்கொண்டிருந்திருக்கிறார்.  ஒரு நாள் தூங்கும்போது முன்பின் தெரியாத அந்தணர் ஒருவர் அவரை எழுப்பி,  குருநாதர் தேடுவதாய்ச் சொல்லி மறைய திகைத்த சிறுவனான ஞானாநந்தர் சந்திரபாகா நதிக்குச் சென்று நீராடிவிட்டு விட்டலனையே சரணடைய, அப்போது தான் அவ்வூருக்கு ஜ்யோதிர்மடத்தில் இருந்து வந்திருக்கும் பீடாதிபதிகள் ஆன ஸ்ரீஸ்ரீ சிவரத்னகிரி ஸ்வாமிகள் அவ்வூரில் எழுந்தருளி இருப்பதை நினைவு கூர்ந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அவரே தான் தேடும் குரு என உள்ளுணர்வு உறுத்த, உடனே சென்று அவரைச் சந்திக்க, ஞான ஆநந்த கிரி என்ற தீக்ஷை நாமத்தோடு அவருக்குத் துறவு அளித்தார் சிவரத்னகிரி ஸ்வாமிகள்.  அதன் பின்னரே குரு சேவையுடன் கூடவே புண்ய தல யாத்திரையும், ஜ்யோதிர்மடத்தில் வேதாந்த விசாரங்களும் மேற்கொண்டார் ஞான ஆநந்த கிரிஸ்வாமிகள்.  பின்னர் குருவின் மறைவுக்குப் பின்னர் இமயமலைப்பகுதியில் யோக தவங்கள் செய்வதிலும் அங்குள்ள சித்தர்கள், மகாபுருஷர்களைத் தரிசித்து வணங்குவதிலும் நாட்களைக் கழித்தவர் அங்கிருந்து தான் கதிர்காம ஸ்வாமிகளோடு ஸ்ரீலங்கா சென்றிருக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி சீர்காழிக்கு வந்த இருவரில் கதிர்காம ஸ்வாமிகள் அங்கேயே தங்க, ஞான ஆநந்தரை ஈர்த்தது சித்தலிங்க பீடம்.   அங்கே உள்ள வ்யாக்ரபாதேஸ்வரர் என்னும் திருநாமம் பூண்ட ஈசனை இங்கே வணங்க முடியும்.  வ்யாக்ரபாதர் தவமிருந்தது இந்த சித்தலிங்க பீடத்தில் தான் என்று சொல்கின்றனர். இங்கே இவர் நடத்திய அருளாட்சியும், இவரின் சீடரான ஹரிதாஸ்கிரியால் நாம சங்கீர்த்தன மகிமை பரவியதையும் நன்கறிவோம். இனி தென்னாங்கூர்.&lt;br /&gt;&lt;br /&gt; காஞ்சீபுரத்திலிருந்து நேரே முதலில் தென்னாங்கூர் தான் சென்றோம்.  காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தென்னாங்கூர் இருக்கிறது.  ஞானாநந்தரின் சீடரான ஹரிதாஸ்கிரி அவர்கள் பண்டரிபுரத்தில் தமக்களிக்கப் பட்ட சிலைகளைப் பிரதிஷ்டை செய்யத் தேர்ந்தெடுத்த இடம் இது.  கோயிலுக்குள் நுழையும்போது பார்க்கும் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியில் காணப்படுகிறது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-VQGu5CammT8/TXHxzoxbLSI/AAAAAAAAEQ8/LMBJX2qR0Wg/s1600/index%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 244px; height: 207px;" src="http://1.bp.blogspot.com/-VQGu5CammT8/TXHxzoxbLSI/AAAAAAAAEQ8/LMBJX2qR0Wg/s320/index%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580507282709097762" /&gt;&lt;/a&gt; கருவறைக்கு மேல் காணப்படும் விமானத்துடன் கூடிய கோபுரம் பூரி ஜெகந்நாதர் கோயிலின் அமைப்பை ஒட்டியது என்கின்றனர். பண்டரிபுரத்தில் கிடைத்த சிலைகளை உற்சவ மூர்த்திகளாக வைத்திருக்கின்றனர்.  மூலஸ்தானத்தில் குடிகொண்டிருக்கும் பாண்டுரங்கன் பனிரண்டு அடிக்கு உயரமாய்க் காணப்படுகிறார்.  ரகுமாயி இங்கே தனி சந்நிதி கொள்ளாமல் அருகேயே காட்சி அளிக்கிறாள்.  பண்டரிபுரத்தில் தனியாக சந்நிதி உண்டு. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு அலங்காரம் என்று செய்கின்றனர்.  நாங்கள் சென்றது ஞாயிறன்று என்பதால் முதல்நாள் செய்த திருப்பதி வேங்கடாசலபதி அலங்காரம் கலைக்கப் படவில்லை. சற்று நேரத்தில் ராஜாங்க கோலத்தில் தரிசனம் தருவார் என்றனர்.  அதற்கு ஒரு கதையும் சொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாங்கூர் ஷடாரண்யம் என அழைக்கப்பட்ட ஆற்காடு க்ஷேத்திரங்களுள் முக்கியமான ஒன்று எனச் சொல்கின்றனர்.  அதிலும் பாண்டிய அரசனோடு சம்பந்தம் கொண்ட முக்கிய வரலாறு.  ஆம், மதுரையை ஆண்ட மலயத்வஜ பாண்டியன் தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று யாகம் செய்தபோது தேர்ந்தெடுத்த இடம் இந்தத் தென்னாங்கூர் தான்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-avjCfiK06IY/TXHwhUbsXhI/AAAAAAAAEQs/x0iZ1ZQi17o/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25B7%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 157px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-avjCfiK06IY/TXHwhUbsXhI/AAAAAAAAEQs/x0iZ1ZQi17o/s320/%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25B7%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580505868499967506" /&gt;&lt;/a&gt;  இங்கே தான் யாகம் செய்கையில் யாக குண்டத்திலிருந்து மீனாக்ஷி தோன்றியதாகவும், அவளை அழைத்துக்கொண்டு மன்னன் மதுரை சென்றதாகவும் புராணங்கள் கூறுவதாய்த் தெரிய வருகிறது.  சப்தரிஷிகளின் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த இடத்தைக் காஞ்சி மகாமுனிவர் "மீனாக்ஷி தோன்றிய இடம்" என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-6986592808312209733?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/6986592808312209733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=6986592808312209733' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6986592808312209733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6986592808312209733'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/03/blog-post.html' title='ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-RPuYmbN3H-o/TXHxj9GHSiI/AAAAAAAAEQ0/6H_a-m4yyOo/s72-c/images%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-440908600877847766</id><published>2011-02-25T01:37:00.001-08:00</published><updated>2011-02-25T03:29:13.634-08:00</updated><title type='text'>ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-YIQDfHxcu20/TWeQrKSfnpI/AAAAAAAAEPY/7Nge8wEH5_k/s1600/T_500_128%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/-YIQDfHxcu20/TWeQrKSfnpI/AAAAAAAAEPY/7Nge8wEH5_k/s320/T_500_128%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577585734692347538" /&gt;&lt;/a&gt;அம்பத்தூரை விட்டுக் கிளம்பியதும், காஞ்சீபுரத்தில் காலை உணவு சாப்பிட்டு விட்டு நாங்கள் முதலில் சென்றது தென்னாங்கூர் தான்.  வழியிலே பல சமணக் கோயில்கள் கண்களில் பட்டன.  ஆனால் இறங்கிப் பார்க்கும்படியாகத் தனியாகச் செல்லவில்லை.  சுற்றுலாக் குழுவோடு சென்றோம்.   திருவண்ணாமலை குறித்து இன்னமும் நிறையவே எழுத இருக்கிறது.  ஆனாலும் நாங்கள் உண்ணாமுலை அம்மனைத் தரிசித்த போதே மாலை ஆறே முக்கால் ஆகிவிட்டபடியால் எங்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சாப்பிட்டுவிட்டு ஏழரை மணிக்குள்ளாகக் கிளம்பினால் தான் அம்பத்தூருக்கு இரவு பனிரண்டு மணிக்குப் போய்ச் சேருவோம் என்று கூறிவிட்டார்.  ஆகவே பார்த்த வரையிலும் போதும் என்று கிளம்பவேண்டியவர்களாகிவிட்டோம்.  அந்தப் பயணத்தில்தான் மேற்கண்ட படி நாங்கள் தென்னாங்கூருக்கு முதலில் போனோம்.  திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பாண்டுரங்கன் கோயில் உள்ளது என்றும் விட்டலாபுரம் என்ற பெயரிலேயே இருப்பதாயும் கேள்விப் பட்டிருக்கிறேன்.    பார்த்ததில்லை.  ஆனால் இந்தக் கோயில் சமீப காலங்களில் எழுப்ப பட்டுள்ளது.  காஞ்சீபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் உள்ளது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-6Ox2OoIO5JA/TWeQdnKR9kI/AAAAAAAAEPA/CswtwsIeazY/s1600/images%25E0%25AE%259E%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 60px; height: 101px;" src="http://1.bp.blogspot.com/-6Ox2OoIO5JA/TWeQdnKR9kI/AAAAAAAAEPA/CswtwsIeazY/s320/images%25E0%25AE%259E%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577585501924357698" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஞாநாநந்தரின் பிரதம சீடரான ஸ்ரீஹரிதாஸ்கிரி அவர்களால் கட்டப் பட்டது இந்தக் கோயில்.  நுழைவாயில் நம் தென்னிந்தியக் கட்டடக் கலையைப் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது.   ஆனால் சின்ன கோபுரம் தான்.  விட்டலன் இருக்கும் மூலஸ்தானத்தின் மேல் எழுப்பப் பட்டிருக்கும் கருவறை விமானமோ நல்ல உயரமாய்க் காட்சி அளிக்கிறது.   அசைப்பில் பூரி ஜெகந்நாதர் கோயில் கோபுரம் போன்ற அமைப்பு.   பூரியை இன்னும் பார்க்கவில்லை.  என்றாலும் கோபுரத்தைப் படங்களில் கண்டது.  ஸ்ரீஞானாநந்தர்ஜ்யோதிர்மடத்தில் இருந்து   காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்ததாயும் பண்டரிபுரம் வந்த சமயம் ஞான சித்தி கிடைத்தது எனவும் கேள்விப் படுகிறோம்.  அவருடன் கதிர்காம ஸ்வாமிகளும் சென்றதாயும்  இலங்கை கதிர்காமத்துக்கே இருவரும் சென்று தரிசித்து சீர்காழியில் கதிர்காம ஸ்வாமிகளும், திருக்கோயிலூரில் ஞானாநந்தரும் ஆசிரமம் அமைத்துக்கொண்டதாயும் கூறுகின்றன.   ஞானாநந்தருடைய முக்கிய சீடர் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள்.  ஞானாநந்தரிடம் தீக்ஷை பெற்றுக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று நாம சங்கீர்த்தனத்தின் பெருமையைப் பரப்பிக்கொண்டிருந்தார்.  அப்போது ஒரு சமயம் அவர் மஹாராஷ்டிரத்தில் பயணம் செய்தபோது மங்கள்வாடி என்னும் கிராமத்தில் இரவு தங்கி இருக்கையில் கனவில் குரு ஞானாநந்தர் தோன்றிப் பண்டரிபுரம் செல்லப் பணிக்கிறார்.  அப்படியே பண்டரிபுரம் சென்ற ஹரிதாஸ்கிரியிடம் அங்கிருந்த அர்ச்சகர், முதல்நாள் கனவில் பாண்டுரங்கன் தோன்றி, இந்தச் சின்னப் பாண்டுரங்க விக்ரஹத்தை ஒப்படைக்கும்படி கூறியதாய்ச் சொல்லி ஹரிதாஸ்கிரியிடம் ஒரு பாண்டுரங்க விக்ரஹத்தைக் கொடுக்கிறார். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-cTWpHzBkWGU/TWeQm6EKswI/AAAAAAAAEPQ/r8_ik3jvNNo/s1600/index%25E0%25AE%25B9%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 107px; height: 166px;" src="http://3.bp.blogspot.com/-cTWpHzBkWGU/TWeQm6EKswI/AAAAAAAAEPQ/r8_ik3jvNNo/s320/index%25E0%25AE%25B9%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577585661617812226" /&gt;&lt;/a&gt;  அந்த விக்ரஹம் பண்டரிநாதனிடம் குழந்தைப்பேறு வேண்டி நிறைவேறிய ஒரு தம்பதிகள் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்திருந்தார்கள்.  தினமும் அந்த விக்ரஹத்திற்கும் வழிபாடுகள் செய்யப் பட்டு வந்தது.     அந்த விக்ரஹத்தை ஹரிதாஸ்கிரியிடம் ஒப்படைத்த அர்ச்சகர் தம் கனவையும் இறைவன் கட்டளையையும் அவருக்குத் தெரிவிக்க அதை எடுத்துக்கொண்டு வந்த ஹரிதாஸ்கிரி விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்யவும், கோயில் கட்டவும் தேர்ந்தெடுத்த இடமே தென்னாங்கூர். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-4_KmyP0CvOQ/TWeQh4CWW-I/AAAAAAAAEPI/nftzI8ULQX0/s1600/images%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 241px;" src="http://3.bp.blogspot.com/-4_KmyP0CvOQ/TWeQh4CWW-I/AAAAAAAAEPI/nftzI8ULQX0/s320/images%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577585575173970914" /&gt;&lt;/a&gt;தென்னாங்கூர்க் கோயிலை நாளை சுற்றிப் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-440908600877847766?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/440908600877847766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=440908600877847766' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/440908600877847766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/440908600877847766'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/02/blog-post_25.html' title='ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-YIQDfHxcu20/TWeQrKSfnpI/AAAAAAAAEPY/7Nge8wEH5_k/s72-c/T_500_128%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-6571331676554074800</id><published>2011-02-16T01:26:00.001-08:00</published><updated>2011-02-16T01:29:42.293-08:00</updated><title type='text'>அண்ணாமலைக்கு அரோஹரா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-KSzTXCdeh_4/TVuYg1T25cI/AAAAAAAAEOE/IwhJfsXfjS0/s1600/images%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 274px; height: 184px;" src="http://3.bp.blogspot.com/-KSzTXCdeh_4/TVuYg1T25cI/AAAAAAAAEOE/IwhJfsXfjS0/s320/images%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574216653634725314" /&gt;&lt;/a&gt;பிரம்மதீர்த்தக்கரையிலிருந்து மேற்கே திரும்பி வந்தால் அதன் இருபக்கங்களிலும் காணப்படும் சந்நிதிகளில் தெற்கே யானை திறை கொண்ட விநாயகரும், வடக்கே சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர்.  இந்த விநாயகர் கனவில் வந்து மிரட்டி யானையைக் கப்பமாய்க் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம்.  இதெல்லாம் நின்று பார்க்க நேரமில்லாமல் அவசரமாய்த் தான் பார்க்கவேண்டி வந்தது.  வேறு வழியில்லை.   குழுவிலிருந்து பிரிந்தால் அவங்களுக்கும் கஷ்டமே.  குழுவோடு வராமல் தனியாக வந்து நான்கு நாட்களாவது தங்கி இருந்து பார்க்கவேண்டும்.  எப்போ முடியுமோ தெரியலை!   இந்தப் பகுதியில் ஆட்சி புரிந்த கொடுங்கோல் மன்னன் ஒருவனின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் துன்பப் பட்டுக்கொண்டிருந்தனர்.  இந்தக் கோயில் விநாயகரிடம் முறையிட்டு அழ, விநாயகர் மன்னன் கனவில் வந்து அவனை மிரட்டினாராம்.  பயந்து போன மன்னன் மறுநாளே இந்தச் சந்நிதிக்கு வந்து தன் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு யானைகளை வாங்கிக் காணிக்கை செலுத்தினானாம்.  யானைகளைக் கப்பமாய்ப் பெற்றுக்கொண்ட்தால் யானை திறையாகக் கொண்ட விநாயகர் என்ற பெயர் இவருக்கு.  இங்கே தான் சுப்பிரமணியர் கம்பத்து இளையனார் என்ற பெயரோடு விளங்குகிறார்.  இந்தக் கோயிலில் பெரியவர் அண்ணாமலையாரே.  அவர் பெரு நெருப்பு.  அந்தப் பெரு நெருப்பிலிருந்து தோன்றிய சின்னஞ்சிறு நெருப்பான முருகனை இங்கே  அவர் குழந்தை என்பதாலும், அப்பாவை விடச் சின்னவர் என்பதாலும் இளையனார் என்றே அழைக்கின்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து நிலைகளோடு கூடிய கிளி கோபுரத்தின் திருப்பணிகளைச் செய்தது திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜேந்திரசோழன் என்று கல்வெட்டு குறிப்ப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகிறது.  கிளிகோபுரத்தின் கதை தான் ஏற்கெனவே சொல்லியாச்சு.  அருணகிரியார் இங்கே கிளி வடிவில் ஞானம் பெற்று அந்த வடிவிலேயே இன்னமும் அந்தக் கோபுரத்தின் மீது வீற்றிருந்து அருள் புரிவதாய் ஊர் மக்களின் ஐதீகம்.  மேலும் அம்பிகையில் தோள்களில் காணப்படும் கிளியும் இவரே எனவும் கூறப்படுகிறது.   ஞானக்கிளியான அருணகிரியைத் தம்மிடமிருந்து அன்னைக்கு முருகன் கொடுத்ததாயும் ஐதீகம்.   கிளி கோபுரத்தின் நேரே காணப்படுவது நாம் தொலைக்காட்சிகளில் காணும் தீபதரிசன மண்டபம்.   பதினாறு கால் மண்டபம் ஆன இது எவரால் கட்டப்பட்டது என்று கேட்க ஆச்சரியம் மிகுந்தது.  பாண்டிமாதேவி என அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் சிறப்பித்துச் சொல்லப்படும் மங்கையர்க்கரசியாரால் கட்டப்பட்டிருக்கிறது.  இங்கு தான் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் பஞ்சமூர்த்திகளோடு அர்த்தநாரீசுவரரும் ஆடிக்கொண்டு வந்து பொது மக்களுக்குக் காட்சி கொடுக்கிறார்கள்.  இதைக் காட்சி மண்டபம் எனவும் அழைப்பதாய்த் தெரிய வருகிறது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-kjqlwt0rTHE/TVuY0Vk7bUI/AAAAAAAAEOM/9CZj7535jRg/s1600/images%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25AA%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 183px;" src="http://2.bp.blogspot.com/-kjqlwt0rTHE/TVuY0Vk7bUI/AAAAAAAAEOM/9CZj7535jRg/s320/images%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25AA%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574216988713774402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கிளி கோபுரத்தைத் தாண்டியதும் வரும்  பிரகாரத்திலிருந்து பார்த்தால்  அம்மன் சந்நிதி காணப்படுகிறது.  உண்ணாமுலை அம்மனை தரிசிக்கச் சென்றோம்.  உண்ணாமுலை அம்மனை என்னவோ பெரியவளாக, எங்க புக்ககத்து ஊரான கருவிலியின் சர்வாங்கசுந்தரியைப் போல் உயரமும், பருமனுமாக ஒரு ஆகிருதியோடு இருப்பாள் என நினைத்துப் போனால் என்ன ஆச்சரியம்?  சின்னஞ்சிறு பெண் போல சித்தாடை இடை உடுத்திக் காணப்பட்டாள் உண்ணாமுலை அம்மன்.  பார்க்கப் பார்க்க்க் கண்கொள்ளாக் காட்சி அம்மனின் அலங்காரம்.  கையில் அள்ளிக்கொள்ளலாம் போல சிறு உடல். கண்ணெதிரே ஒரு வாலைக்குமரி தான் நின்றாள். &lt;br /&gt;ஆனால் நின்று பார்க்கத்தான் விடவில்லை.  இத்தனைக்கும் கூட்டம் என்னமோ குறைவு தான்.  நாங்க ஒரு பதினைந்து பேர் இருந்தோம்.  அதைத் தவிர சில சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களுமே காணப்பட்டாலும் அர்ச்சகர் விரட்டினார்.  எனக்குக் கோபம் வந்து வருஷக் கணக்காய்க் காத்திருந்து சிறப்பு தரிசனச் சீட்டும் வாங்கிக்கொண்டு வந்திருக்கோம்.  அதுவும் தூரத்திலே இருந்து.  பார்க்க விடமாட்டேங்கறீங்களேனு கேட்க, அங்கே வாக்குவாதம் வேண்டாம்னு ரங்க்ஸ் என்னைப் பிடிச்சு இழுக்க, நான் அடம் பிடிக்க அர்ச்சகர் என்னை மாதிரி  எத்தனை பேரைப் பார்த்திருப்பார்?  நீங்க அங்கே வெளியே போய் அந்த மேடையிலே நின்றுகொண்டு எத்தனை மணி நேரம் வேணாலும் பாருங்கனு விரட்டிட்டார்.  அந்த மேடை கர்ப்பகிரஹத்திலிருந்து தள்ளி வெளிவாசலுக்கு அருகே இருந்தது.  ஏற்கெனவே பத்துப்பேர் நின்னுட்டு இருந்தாங்க. அவங்க எல்லாம் தர்ம தரிசனம் போலிருக்கு.  உள்ளே வரமுடியாமல் அங்கே நின்னு பார்த்தாங்க.  நாம தான் சீட்டு வாங்கி இருக்கோமேனு கோபம் வந்தாலும் ஒண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணும் பண்ணமுடியலை.  இதுக்குப் பழநி மலையில் பரவாயில்லை போலிருக்கு.  சிறப்பு தரிசனச் சீட்டுனு காட்டியதுமே சந்நிதிக்கு எதிரே பத்து நிமிஷம் உட்காருங்க. நின்று கொண்டு பார்த்தால் பின்னால் பார்க்கிறவங்களுக்கு மறைக்கும். நாங்க எழுப்பற வைக்கும் உட்கார்ந்து பார்க்கலாம்னு சொல்லிட்டு நாங்க கொண்டு போன பால், போன்றவற்றை அபிஷேஹமும் செய்து வைத்து அர்ச்சனையும் பண்ணிக் கொடுத்தாங்க.  அதுக்கே  குறைப்பட்டேன் இல்ல?? நல்லா வேணும்னு தோன்றியது இப்போ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-6571331676554074800?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/6571331676554074800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=6571331676554074800' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6571331676554074800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/6571331676554074800'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/02/blog-post_16.html' title='அண்ணாமலைக்கு அரோஹரா!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-KSzTXCdeh_4/TVuYg1T25cI/AAAAAAAAEOE/IwhJfsXfjS0/s72-c/images%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-5011629878552930438</id><published>2011-02-08T01:03:00.000-08:00</published><updated>2011-02-08T01:11:56.610-08:00</updated><title type='text'>அண்ணாமலைக்கு அரோஹரா!</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt; 1.10.1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;98 &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாமலைக் கோயிலில் மலை மேல் தீபம் ஏற்றும் உரிமை பர்வதராஜ குலம் எனப்படும் மீனவ குலத்தவருக்கே உரிமை உண்டு.  ஈசன் மீனவனாய்ப் பிறந்து செய்த திருவிளையாடலை நினைவு கூரும் வண்ணமாயோ? தெரியலை.  கொடி ஏற்றுவது தேவாங்கர் இனத்தவர்.  அவங்க  நெய்து கொடுக்கும் துணியில் தான் கொடி ஏற்றப்பட்டு விளக்கு ஏற்றத் திரிக்குத் துணியும் பெறுகின்றனர்.  கார்த்திகை தீபத் திருவிழா வெகு கோலாகலமாய் நடைபெறும்.  தேரோட்டம் அப்போது தான் நடக்கும்.  அண்ணாலையார், விநாயகர், சுப்ரமணியர், உண்ணாமுலை அம்மன், சண்டேஸ்வரர் ஆகியோர் தேரில் வீதி வலம் வருவார்கள்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்படும் செட்டியார்களால் அதிகமாய்த் திருப்பணி செய்யப்பட்ட கோயிலும் இதுவாகும்.  இந்த ஊரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரதோஷ அபிஷேஹம் நடைபெறும்.  என்றாலும் அண்ணாமலையார் ஆலய மஹாநந்திக்கு நடக்கும் பிரதோஷ அபிஷேஹமே சிறப்பு வாய்ந்தது.  இங்கே  உலக நன்மைக்காகப் பிரார்த்தித்துக்கொண்டு ஒவ்வொரு பிரதோஷத்திலும் வேத கோஷங்களோடு திருமுறைகளும் ஓதப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வழிபாடுகள் செய்வார்கள்.  காணக்கிடைக்காத காட்சி என்கின்றனர்.  கூட்டத்தை நினைச்சால் தான் பயமா இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தமிழ்நாட்டின் அனைத்து சிவன் கோயில்களிலும் காமதகனம் நடைபெறுவதில்லை.  ஆனால் இந்தக் கோயிலில் காமதகனம் நடைபெறும்.  இந்தக் கோயில் கிரிவலம் அண்ணாமலையாரே செய்து வந்ததாய் ஐதீகம்.  அதை ஒட்டி இப்போதும் ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள்.  உண்ணாமுலை அம்மனின் ஊடலைத் தீர்க்கும் திருவூடல் உற்சவம் அப்போது நடைபெறும்.  மலையைச் சுற்றுவதால் ஈசனுக்கு மலையைச் சுற்றும் மஹாதேவன் என்ற பெயரும் உண்டு.   இங்கே கிரிவலப்பாதையில் உள்ள அநேக கோயில்களைத் தவிர பல பெரியோர்கள், சித்தர்கள், சுவாமிகள் போன்றோரின் ஆசிரமங்கள் உண்டு.  இங்கே இருந்து உலகோருக்கு ஆன்மீகத்தைப் போதித்த பலரில் பகவான் ஸ்ரீரமண ரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், இசக்கி சுவாமிகள், ஆலமரத்து சாமிகள், காட்டு சிவா சுவாமிகள், கயிறு சாமி, பிரும்மானநந்த சுவாமி, ஜடை சாமி போன்றோர் ஆசிரமங்களும் சமீப காலத்தில் வாழ்ந்த யோகியான ராம்சூரத்குமார் அவர்களின் ஆசிரமமும் இருக்கின்றன.&lt;a href="http://2.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TRgai-mgMgI/AAAAAAAAD8A/Z8FNyONlY30/s1600/DSC00474.JPG"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TRgai-mgMgI/AAAAAAAAD8A/Z8FNyONlY30/s320/DSC00474.JPG" alt="" style="clear: both; float: left; margin: 0px 10px 10px 0pt;" border="0" /&gt;&lt;/a&gt;   இது பகவான் ஸ்ரீ ரமணரின் ஆசிரமத்தில் எடுத்த படம்.  இங்கே உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தோமானால் நம்முள்ளே பல அரிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுகின்றனர். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TVEIbMrl1sI/AAAAAAAAEE8/rT1CSSHXnRc/s1600/DSC00481.JPG"&gt;&lt;img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TVEIbMrl1sI/AAAAAAAAEE8/rT1CSSHXnRc/s320/DSC00481.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5571243477387564738" border="0" /&gt;&lt;/a&gt; நாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்தோம்.  தியானம் செய்ய நேரமெல்லாம் கொடுக்கவில்லை.  சீக்கிரமாய்க் கிளம்ப வேண்டி இருந்த்து.   மற்ற ஆசிரமங்களையும் பார்க்க நேரமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பெயரும், புகழும் பெற்றது இந்தத் திருவண்ணாமலையில் தான்.  அருணகிரியார்  சம்பந்தாண்டான் என்பவன் தூண்டுதலின் பேரில் அரசனால் பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கட்டளை இடப்பட்டார்.  கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தி கைவரப் பெற்ற அருணகிரியார் தன் உயிரைத் தன் உடலில் இருந்து நீக்கிச் செத்த ஒரு கிளியின் உடலில் செலுத்திக்கொண்டு பாரிஜாதத்தைக் கொண்டு வருகிறார்.  ஆனால் அதற்குள் அருணகிரியாரின் உடலை எரித்துவிடுகிறான் சம்பந்தாண்டான்.  ஆஸ்தான புலவன் ஆன சம்பந்தாண்டானின் பொறாமையைப் புரிந்து கொள்ளாத மன்னனும் முதலில் அருணகிரி இறந்துவிட்டார் என்றே நம்புகிறான்.  பின்னர் கிளி வடிவில் அங்கு வந்து சேர்ந்த அருணகிரியார், கிளி கோபுரத்தில் அமர்ந்த வண்ணமே கந்தரநுபூதியைப் பாடினார்.  கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான்.  அந்தக் கோபுரம் கிளி கோபுரம் என்று அது முதல் அழைக்கப் படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் குகை நமசிவாயரின் சீடரான குரு நமசிவாயர் குருவின் ஆலோசனைப்படி திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் தியானத்துக்கு அமர்ந்தார்.  தியானம் முடிந்ததும் பசி எடுக்க உண்ணாமுலை அம்மனை நினைந்து “அண்ணாமலையார் அகத்துக்கு இனியாளே, உண்ணாமுலையே, உமையாளே, உண்ணச் சோறு கொண்டுவா!”  என்று பாட அப்போது தான் கோயிலில்  தங்கத் தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கலை அர்ச்சகர்கள் நிவேதனம் செய்து கொண்டிருக்க, தாம்பாளத்தோடு பொங்கல் குரு நமசிவாயரை வந்தடைகிறது.  தங்கத் தாம்பாளத்தைக் காணாமல் திகைத்த அர்ச்சகர்கள் மனம் கலங்கி நிற்க, அங்கிருந்த ஒரு குழந்தையின் உடலில் புகுந்து கொண்ட அம்பிகை தங்கத் தாம்பாளத்தைப் பொங்கலோடு தான் குரு நமசிவாயருக்குக் கொடுத்த்தையும், தாம்பாளம் இப்போது ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் இருப்பதையும் சொல்லி அங்கிருந்து தாம்பாளத்தை எடுத்து வரச் சொல்ல, அவ்விதமே சென்று பார்த்தவர்களுக்குத் தாம்பாளம் கிடைத்த்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-5011629878552930438?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/5011629878552930438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=5011629878552930438' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/5011629878552930438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/5011629878552930438'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/02/blog-post.html' title='அண்ணாமலைக்கு அரோஹரா!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TRgai-mgMgI/AAAAAAAAD8A/Z8FNyONlY30/s72-c/DSC00474.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-5923551594403468784</id><published>2011-01-23T01:14:00.001-08:00</published><updated>2011-01-23T01:17:01.512-08:00</updated><title type='text'>அண்ணாமலைக்கு அரோஹரா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TTvxlylZt7I/AAAAAAAAECE/Jq1--0RSV-E/s1600/DSC00484.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TTvxlylZt7I/AAAAAAAAECE/Jq1--0RSV-E/s320/DSC00484.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565307396082481074" /&gt;&lt;/a&gt;2,668 அடி உயரமும் எட்டு மைல் சுற்றளவும் உள்ள திருவண்ணாமலையில் அரிய மூலிகைகளும், குகைகளும் உள்ளன.  இந்த மலை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜதம் என்னும் ஈசனின் ஐந்து முகங்களை நினைவூட்டும்  பஞ்சகிரி என்றும் கூறுகின்றனர்.  கிரிவலம் வரும்போது ஒரு இடத்தில் இந்த ஐந்து முக தரிசனத்தைக்  காணலாம். கிழக்குத் திசையில் கிளம்புகையில் பார்க்கும்போது ஒன்றாய்த் தெரியும் மலையானது சுற்றும்போது இரண்டு, மூன்று என்று ஆரம்பித்து முடிக்கையில் ஐந்தாய்த் தெரியும் என்றனர்.  இந்தப் பஞ்சமுக தரிசனம் எங்களால் பார்க்க முடிந்தது.  அது கிடைத்தாலும் கிரிவலம் நடந்து செய்யவில்லை என்பதால் திசைகள் சரிவரப் புரியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  திடீர்ப்பயணம் என்பதோடு இரவே ஊர் திரும்பும் திட்டமும் கூட.  இரண்டு நாட்களாவது தங்கி இருந்து பார்க்கவேண்டும். அண்ணாலையில் அடிக்கு ஆயிரம் லிங்கங்கள் என்ற வழக்குச் சொல்லும், அதை ஒட்டிய ஐதீகமும் இருப்பதால் ஊரில் பெரும்பாலோர் செருப்பணிந்து நடப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அருணாசலேஸ்வரரின் மற்றப் பெயர்கள்: “லிங்கோத்பவர், இமயலிங்கம், பிரம்மலிங்கம், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாண சுந்தரர், அருணாசலேஸ்வரர், ஈசானலிங்கம், சிதம்பரேஸ்வரர், அக்னி லிங்கம், சம்புகேஸ்வரர், சநாதனேஸ்வரர், நாரதேஸ்வரர், சந்ந்தேஸ்வரர், வால்மீகீஸ்வரர், சநத்குமாரர், சனகேஸ்வரர், வியாச லிங்கம், வசிஷ்ட லிங்கம், குபேர லிங்கம், வாமரிஷீஸ்வரர், சஹஸ்ர லிங்கம், கெளசிகேஸ்வரர், குத்சரிஷீஸ்வரர், வைசம்பாதனேஸ்வரர், வருண லிங்கம், தும்புரேஸ்வரர், காசிலிங்கம், சதலிங்கம், விக்ரபாண்டீஸ்வரர், வாயுலிங்கம் ஆகியன. மேலும் இங்குள்ள மூலஸ்தானத் திருமேனியை ஸ்வர்ணபந்தன முறையில் பிரதிஷ்டை செய்யப் பட்டதாயும் கூறுகின்றனர்.  இங்கு மலையே லிங்கம் என்பதால் அருணாசலேஸ்வரர் சந்நிதியில் உள்ள நந்தியெம்பருமான் மலையைப் பார்த்த வண்னமே அமர்ந்துள்ளார்.  கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களின் நந்திகளும் அவ்வாறே மலையைப் பார்த்த வண்ணமே உள்ளன.  இங்கு உள்ள 106கல்வெட்டுக்களிலும் அருணாசலேஸ்வரரை, திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மஹாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என்று குறிப்பிடப் பட்டுள்ளார்.  நாட்டிய சாஸ்திரத்தின் தாண்டவ லக்ஷணம் என்னும் நூற்றியெட்டு நாட்டிய நிலைகளையும் விளக்கும் சிற்பங்கள் ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பாதாள லிங்கேஸ்வர்ர் சந்நிதியில் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது.  இதை எல்லாம் நிதானமாய்ப் பார்க்கவேண்டும். :( &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோயிலில் சித்ரகுப்தருக்குத் தனிச் சந்நிதி உள்ளது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. இங்கு உள்ள திருக்குளமும் சிவகங்கை என்ற பெயராலேயே அழைக்கப் படுகிறது.  இந்தக் குளத்துக்கு இறங்கும் வாயிலருகே கம்பத்து இளையனார் சந்நிதி உள்ளது.  இங்கே முருகப்பெருமான் வில்லேந்திய கோலத்தில் காட்சி அளிக்கிறான்.  அருணகிரியாரின் வேண்டுகோளின்படி பிரெளடதேவனுக்கு முருகன் காட்சி அளித்த இடம் இது தான் என்கின்றனர். கோப்பெருங்சிங்கன் என்னும் அரசன் அருணாசலேஸ்வரருக்குக் காதணிகள், ரத்தினமுடி, பிரபாவளி என்னும் ஆபரணம், கல்பவிருக்ஷம், முத்து விதானம், ரத்தினக் கட்டில் ஆகியவற்றையும் உண்ணாமுலை அம்மனுக்காக கற்கள் பதித்த அங்கியும் முருகனின் மயிலுக்குத் தங்க்க் கவசமும் செய்து வைத்திருக்கிறான். அண்ணாமலையாரை வேண்டி குழந்தைப் பேற்றுக்காகப் பல பக்தர்கள் வருகின்றனர்.  அவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் கரும்புக்கட்டுகள் மற்றும் புடவைத் தொட்டில் கட்டிக் குழந்தையைப் படுக்க வைத்து மாடவீதிகளை வலம் வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைச் செல்வம் இல்லாத வல்லாள மஹாராஜாவுக்கு அண்ணாமலையாரே ஒவ்வொரு வருடமும் சிராத்தம் செய்து வருகிறார்.  வல்லாள மஹாராஜா இறைவனை வேண்டிக் குழந்தைப் பேற்றுக்காகப் பிரார்த்திக்க ஈசன் ஒரு சிவனடியாராகக் காட்சி அளிக்கிறார்.  சிவனடியாரை வணங்கி அவருக்கு வேண்டிய சேவைகள் செய்த மஹாராஜாவிடம், தன்னுடன் தங்க ஒரு பெண் வேண்டும் என்று அடியார் கேட்கத் தன் மனைவியான சல்லமாதேவியை அனுப்பி வைக்கிறான் வல்லாளன்.  அங்கே சென்ற சல்லமாதேவியோ அடியாரைக் காணாமல் ஒரு பச்சிளங்குழந்தையைக் கண்டு திகைக்கிறாள்.  மன்ன்னை அழைக்க வியப்படைந்த மன்னன் வந்து பார்க்க, அசரீரியாய்க் குரல் கேட்கப் பின்னர் ரிஷபாரூடராய் ஈசன் காட்சி அளித்து, இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாத வல்லாள ராஜனுக்குத் தாமே குழந்தையாய் வந்ததாயும், அவனுக்குரிய ஈமக்கடன்களைத் தாமே செய்யப் போவதாயும் கூறி மன்னனை மகிழ்விக்கிறார் ஈசன்.  அது முதல் ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் மக நக்ஷத்திரத்தில் கொண்டப்பட்டு என்னும் கிராமத்தில் வல்லாளராஜனுக்கு ஈமக்கடன்கள் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் அங்கே எழுந்தருளுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்க வாசகர் இங்கே வந்து தங்கி இருக்கையில் தான் திருவெம்பாவையைப் பாடினார் என்பது குறிப்பிடத் தக்கது.  இவரைத் தவிர கணம்புல் என்னும் புல்லை விற்று அண்ணாமலையாருக்குத் தினமும் தீபம் ஏற்றி வந்த கணம்புல்லாநாயனார் என்பவருக்கு ஒரு நாள் புல்லே விற்காமல் விளக்கு எப்படி ஏற்றுவது என யோசித்துத் தன் தலை முடியையே திரியாக்கி எரிக்க, அவரின் பக்தியைக் கண்டு ஈசன், அன்னையோடு அவருக்குக் காட்சி அளித்த தலம் திருவண்ணாமலையே ஆகும்.  எல்லாவற்றுக்கும் மேல் அருணகிரியாருக்கு முருகன் குருவாக வந்து அவரும் முருகன் மேல்  திருப்புகழ் பாடக் காரணமாய் அமைந்த கோபுரம்  இந்தக் கோயில் கோபுரமே.  அதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TTvxxi392yI/AAAAAAAAECM/A11RF1kUIO8/s1600/DSC00478.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TTvxxi392yI/AAAAAAAAECM/A11RF1kUIO8/s320/DSC00478.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565307598023809826" /&gt;&lt;/a&gt;ஸ்ரீரமணாஸ்ரமத்தின் தியான மண்டபம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-5923551594403468784?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/5923551594403468784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=5923551594403468784' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/5923551594403468784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/5923551594403468784'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/01/blog-post_23.html' title='அண்ணாமலைக்கு அரோஹரா!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TTvxlylZt7I/AAAAAAAAECE/Jq1--0RSV-E/s72-c/DSC00484.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-7487304055673832422</id><published>2011-01-04T23:49:00.000-08:00</published><updated>2011-01-05T00:12:12.167-08:00</updated><title type='text'>அண்ணாமலைக்கு அரோஹரா, திருக்கார்த்திகை தீபம் தொடர்ச்சி</title><content type='html'>&lt;a href='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TSQigR7LlLI/AAAAAAAAD-M/KvD3qYh3rOo/s1600/DSC00225.JPG'&gt;&lt;img src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TSQigR7LlLI/AAAAAAAAD-M/KvD3qYh3rOo/s320/DSC00225.JPG' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;div style='clear:both; text-align:LEFT'&gt;&lt;a href='http://picasa.google.com/blogger/' target='ext'&gt;&lt;img src='http://photos1.blogger.com/pbp.gif' alt='Posted by Picasa' style='border: 0px none ; padding: 0px; background: transparent none repeat scroll 0% 50%; -moz-background-clip: initial; -moz-background-origin: initial; -moz-background-inline-policy: initial;' align='middle' border='0' /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சென்ற வருடத் திருக்கார்த்திகை  தீபத் திருநாளன்று  எங்கள் வீட்டில் ஏற்றிய விளக்குகள் ஒரு சிறு பகுதி மட்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;திருக்கார்த்திகை தீபம் பிரமனுக்கும், மாலுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணம் மற்றுமில்லாமல் அம்பிகையானவள் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தன்று மாலை நேரம் வழிபாடுகள் செய்து திருவண்ணாமலை உச்சியில் ஈசனை ஜோதி வடிவாகப் பார்த்ததாக ஐதீகம் என்பதாலும் கொண்டாடப் படுகிறது.  அப்போது தான் முதல் முதல் அம்பிகை திருவண்ணாமலையை கிரிவலமும் வந்து சிவபெருமானின் இடப்பாகத்தையும் வேண்டி பெற்றாள்.  திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசனம் செய்வது பற்றி அருணாசல புராணம் கூறுவதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி&lt;br /&gt;மலை நுனியில் காட்டா நிற்போம்&lt;br /&gt;வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி&lt;br /&gt;இல்லாது உலகில் மன்னி வாழ்வார்&lt;br /&gt;பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு&lt;br /&gt;தவிரும் இது பணிந்தோர் கண்டோர் &lt;br /&gt;கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு&lt;br /&gt;முத்திவரம் கொடுப்போம் என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்கிறது.  தாய் வழிப் பத்துத் தலைமுறையும் தந்தை வழிப் பத்துத் தலைமுறையும் நம்முடைய தலைமுறையும் சேர்ந்து இருபத்தி ஒன்று ஆகும். அல்லது தாய்வழி ஏழு, தந்தை வழி, நம் வழி ஏழு எனவும் கொள்ளலாம்.  இது மிகப் பழங்காலம் தொட்டே கொண்டாடிய ஒரு புராதனமான விழா என்பது திருஞானசம்பந்தரின்  பதிகம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது.  மயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்பவர் தம் மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க எண்ணி இருந்தார்.  ஆனால் பூம்பாவையோ பாம்பு தீண்டி இறந்துவிட்டாள்.  மகளின் எலும்புகளை ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார் சிவநேசர்.  திருஞானசம்பந்தர் மயிலை வந்தபோது இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அந்தக் குடத்தை எடுத்து வரச் செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கபாலீஸ்வரர் திருமுன்னே அந்தக் குடத்தை வைத்து பதிகம் பாடி, எலும்பாய் இருந்த பூம்பாவையை உயிர்த்து எழச் செய்தார்.  அப்போது பாடிய பதிகம் ஒன்றில்,&lt;br /&gt;&lt;br /&gt;"தொல் கார்த்திகை நாள் &lt;br /&gt;தளத்தேந்து இளமுலையார்&lt;br /&gt;தையலார் கொண்டாடும்&lt;br /&gt;விளக்கீடு காணாதே&lt;br /&gt;போதியோ பூம்பாவாய்!" என்று கார்த்திகைத் திருநாள் தொல் கார்த்திகை என்று குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதில் இருந்து அது மிகவும் புராதனமான ஒன்று என்று தெளிவாகிறது.  மேலும் ஈசனின் அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திரிபுர சம்ஹாரம் நடந்ததும் கார்த்திகை மாசம் என்றும் கூறுவார்கள்.  ஆகவே திரிபுரத்தை ஈசன் எரித்ததை நினைவூட்டும் விதமாய் முன் காலத்தில் எல்லாச் சிவன் கோயில்களிலும் பனை ஓலைகளால் கூடு அல்லது கோபுரம்போல் கட்டி அதைக்கொளுத்துவார்கள்.  இதைச் சொக்கர் பனை என்று சொல்லி வந்தது நாளடைவில் சொக்கப் பானை என்று மாறிவிட்டது.  சொர்க்கத்தில் இருந்த அரக்கர்களை எரித்ததே சொர்க்கப் பனை என்பது சொக்கப் பானை என்று மாறிவிட்டதாயும் தெரியவருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிவன் இப்படின்னா விஷ்ணுவுக்கும் கார்த்திகை முக்கியம் தானே.  மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தில் அவர் மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்கச் சென்ற போது மஹாபலிச் சக்கரவர்த்தி தீபங்களால் தன் மாளிகையை அலங்கரித்து இருந்தானாம்.  அதன் பின்னர் அவருக்கு மோக்ஷம் கிட்டியதும், அவர் இருந்த இடம் அசுரர்களால் தூய்மை இழந்ததால் எரிக்கப் பட்டதாயும், பின்னர் மஹாபலியின் வேண்டுகோளின்படி அவர் செய்தது போலவே நாடெங்கும் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என மஹாவிஷ்ணு அருள் பாலித்ததாயும் ஒரு கூற்று.  அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, "கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!"  என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள்.  இப்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது! :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-7487304055673832422?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/7487304055673832422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=7487304055673832422' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7487304055673832422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/7487304055673832422'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2011/01/blog-post.html' title='அண்ணாமலைக்கு அரோஹரா, திருக்கார்த்திகை தீபம் தொடர்ச்சி'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TSQigR7LlLI/AAAAAAAAD-M/KvD3qYh3rOo/s72-c/DSC00225.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-218345024719487724</id><published>2010-12-29T04:39:00.001-08:00</published><updated>2010-12-29T04:41:22.784-08:00</updated><title type='text'>அண்ணாமலைக்கு அரோஹரா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TRssRXuNnbI/AAAAAAAAD90/fWX6bKvInpM/s1600/DSC00483.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TRssRXuNnbI/AAAAAAAAD90/fWX6bKvInpM/s320/DSC00483.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556083242228882866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருக்கைலை மலை.  ஐயனும் அன்னையும் தனிமையில்.  ஐயன் அன்னைக்குப் பிரணவப்பொருள் உரைக்க அன்னையோ விளையாட்டாக இறைவன் கண்களைப் பொத்த, அகில உலகமும் நிலை தடுமாறுகிறது.  சூரிய, சந்திரர்களாக இருகண்களும், நெற்றிக்கண் அக்னியாகவும் விளங்கியவற்றைப்பொத்தவும் எங்கும் இருள் சூழ்ந்தது.  அஞ்சிய அம்பிகை தன் கைகளை எடுக்க உலகில் மீண்டும் ஒளி பிறந்தது.  ஜோதி வடிவான ஈசனைத் தான் மறைத்ததுதான் காரணம் எனப் புரிந்துகொண்டாள் அன்னை.  அந்த ஒரு கணம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் காரணம் தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்தன. ஆகையால் அன்னையைப் பாவம் சூழ்ந்துகொள்ள ஈசனை வேண்டினாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன்.  அன்னையும் காஞ்சீபுரம் வந்து மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டுத் தவமும் புரிந்தாள்.  அன்னையின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போக அன்னைக்கு அருள் வழங்கினார் ஈசன்.    மேலும் திருவண்ணாமலைக்கும் வந்து தவம் இயற்றினால் தம் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் கூறினார்.  ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள்.  கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள்.  மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள்.  முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம்.  மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அர்த்த நாரீசுவரர் தோற்றம் இன்னொரு வகையாகவும் கூறப்படுகிறது.  திருக்கைலை மலையில் ஐயனும் அன்னையும் அமர்ந்திருக்கையில் சிவனடியார்கள் அனைவரும் வந்து வணங்கிச் சென்றனர்.  ரிஷிகள் முனிவர்கள், தேவாதிதேவர்கள் வந்து வணங்குகின்றனர்.  அவர்களில் ஒருவர் பிருங்கி முனிவர்.  அந்த பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர்.  ஐயனை மட்டுமே வணங்குவார்.  அன்னையை வணங்க மாட்டார்.  ஐயனும், அன்னையும் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒரு ஈயின் உருவெடுத்துக்கொண்டு சென்று ஐயனை மட்டுமே வலம் வருவார்.  அன்னைக்கு இது கொஞ்சம் உறுத்தலாய் இருந்த்து.  அவரிடம் தன்னையும் வணங்கச் சொல்ல, அவரோ மறுத்தார்.  உடனேயே அவர் உடலின் சக்தியையெல்லாம் நீக்கினாள் அன்னை.  நிற்கக் கூட முடியாமல் உடலின் சக்தி அனைத்தும் போய் எலும்புக்கூடாக ஆனார் பிருங்கி முனிவர். அவருக்கு நிற்க ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தார் ஐயன்.  அப்படியும் பிடிவாதமாய் அவர் இருக்கவே அன்னை ஐயனை வேண்டிப் பிரார்த்திக்க உடலின் இடப்பாகத்தைப் பெற்றாள் என்பதும் ஒரு ஐதீகம். &lt;br /&gt;&lt;br /&gt;திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் சிறப்பாய்க் கொண்டாடப் படும்.  பதினேழு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில்  கொடியேற்றத்தோடு முதல் திருவிழா ஆரம்பம் ஆகிறது.  முதல் மூன்று நாட்கள் விநாயகர், ஸ்ரீபிடாரி, ஸ்ரீதுர்கை ஆகியோருக்காகக் கொண்டாடப் படுகின்றன.  காலை, மாலை இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகளும் வீதி உலா வருகின்றனர்.  ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வாகனத்தில் ஈசன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  பத்தாம் நாள் அதிகாலை நான்கு மணி அளவில் மலைமேல் மலை தீபம் ஏற்றும் முன்னர் பரணி தீபம் போடப் படும்.  உலகத்து மக்கள் அனைவரும் நன்கு சீரோடும், சிறப்போடும் வாழப் பிரார்த்தித்துக்கொண்டு ஏற்றப் படும்.   அன்று மாலையே மஹா தீபம் ஏற்றப்படும்.  தீப தரிசன மண்டபத்தில் மக்கள் கூட்டம் குவிந்திருக்கப் பஞ்சமூர்த்திகளும் காத்திருக்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் அர்த்தநாரீசுவரர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு வெளியே வந்து ஆடலோடு பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காட்சி தர அந்தக் கணம் பஞ்சமூர்த்திகளுக்கு தீப ஆராதனை எடுக்கப் பட்டு மலை உச்சியில் மஹாதீபமும் ஏற்றப்படும்.  அனைவரும் அண்ணாமலைக்கு அரோஹரா என்னும் முழக்கம் விண்ணைத் தொடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-218345024719487724?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/218345024719487724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=218345024719487724' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/218345024719487724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/218345024719487724'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2010/12/blog-post.html' title='அண்ணாமலைக்கு அரோஹரா!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TRssRXuNnbI/AAAAAAAAD90/fWX6bKvInpM/s72-c/DSC00483.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33343731.post-3938888227218687384</id><published>2010-12-16T00:25:00.000-08:00</published><updated>2010-12-16T00:41:43.181-08:00</updated><title type='text'>அண்ணாமலைக்கு அரோஹரா ! 5</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TQnQcu3YgFI/AAAAAAAAD4Y/kit3VtOkJdQ/s1600/images%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://2.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TQnQcu3YgFI/AAAAAAAAD4Y/kit3VtOkJdQ/s320/images%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551197207746084946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சோணகிரி வலம் வருதல் பிறவி எனும்&lt;br /&gt;பெருங்கடற்குத் தோணி ஆகும்&lt;br /&gt;ஏழ்நரகக் குழி புகுதாது அரிய முத்தி&lt;br /&gt;வழிக்கு ஏற ஏணி ஆகும்&lt;br /&gt;காண் அரிய தவத்தினுக்கும் அறத்தினுக்கும்&lt;br /&gt;அரும்பொருட்கும் காணி ஆகும்&lt;br /&gt;வாள் நுதல் மின் இடத்திருக்கும் கண்ணுதலை&lt;br /&gt;மனம் உருக்கும் மகிழ்ச்சியாகும்.”&lt;br /&gt;&lt;br /&gt;என்னும் தலப் புராணப்பாடல் ஒன்று கிரிவல மகிமையைக் கூறுகிறது.  இத்தகைய பெருமை வாய்ந்த கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் கோயில்களையும் அஷ்டலிங்கங்களையும் பார்ப்போமா?? தேயு எனப்படும் அக்னியே இங்கே ஜ்யோதிர்லிங்க வடிவாகி ஸ்ரீசக்ர வடிவில் உள்ள இந்தப் பூவுலகின் உன்னதமான ஒப்பற்ற மேருவாக அருணாசலேஸ்வரர் என்ற பெயரில் விளங்குகிறார்.  இம்மலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் சிவபதம் கிடைக்கும் எனவும், திங்கள்கிழமை வலம் வந்தால் இந்திரனைப் போன்ற சிறப்பான வாழ்க்கையும், செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் பிறவிப் பிணி நீங்கிவிடும் எனவும், புதன்கிழமை வலம் வந்தால் தேவர்களாகும் தகுதி கிடைக்கும் எனவும், வியாழனன்று வலம் வந்தால் மேலான பதவி சுகம் கிடைக்குமெனவும், வெள்ளியன்று வலம் வந்தால் விஷ்ணு பதவி கிடைக்குமெனவும், சனிக்கிழமை வலம் வந்தால் நவக்ரஹ தோஷங்களும் நிவர்த்தி அடையும் எனவும் புராணங்கள் கூறுகின்றன.  இனி கிழக்குத் திசையில் உள்ள ஸ்ரீ இந்திர லிங்கத்தைப் பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரிவலம் வரும்போது எந்த இடத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது நம் வசதியைப் பொறுத்தது என்றாலும் இப்போது எழுதும் வசதிக்காகக் கிழக்கே இருக்கும் இந்திரலிங்கத்தில் ஆரம்பிக்கிறேன்.  அறியாமை நீங்கவும், இருள் நீங்கவும், ஏன் அறியாமையே இருள் தானே? ஆகவே அவற்றை ஒழிக்க வஜ்ராயுதம் தாங்கிக் காட்சி அளிக்கிறார் இங்கே ஈசன்.  நாம் அறவழியில் செல்ல வேண்டி நம் வாழ்க்கைக்கே த்த்துவமான அறநெறியை அள்ளித்தருகிறார்.  இந்திரன் ஈசனை வணங்கி வழிபட்ட லிங்கம் என்று சொல்லப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துத் தென் கிழக்குத் திசை. நீங்கள் கிழக்கே பார்த்து நின்றால் உங்கள் வலப்பக்கம் மூலையில் வரும்.  இது அக்னி மூலை எனப்படும்.  அக்னி அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான ஒன்று.  வேள்வியில் மூட்டப்படும் அக்னிதேவன் ஏழுவகைப்படுவான் எனவும் ஏழு நாக்குகள் உண்டெனவும் கூறுவார்கள். நம் சார்பில் இறைவனிடம் வேண்டுதலை வைப்பவன் அக்னி பகவான்.  அக்னி ஒவ்வொரு யுகங்களிலும் மாறாமல் தொடர்ந்து வந்து இணைப்புச் சங்கிலியாய் இருக்கிறது.  இங்கே அக்னி வழிபட்டதாய்க் கூறப்படுகிறது.&lt;br /&gt;  &lt;br /&gt;அடுத்துத் தென் திசை.  ம்ருத்யு எனப்படும் மரணத் தெய்வம் ஆன யமனின் திசை.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TQnQis9_xWI/AAAAAAAAD4g/uzN4RQkHnOw/s1600/images%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://1.bp.blogspot.com/_g9Ssbl03NHs/TQnQis9_xWI/AAAAAAAAD4g/uzN4RQkHnOw/s320/images%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551197310316168546" /&gt;&lt;/a&gt;  நம் மனதைப்  பரிசுத்தப் படுத்தினால் மீண்டும் பிறவி ஏற்படாது.  மாயையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் பிறவியும், மறுபிறவியும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.  அத்தகையதொரு துன்பத்திலிருந்து காப்பவர் யமலிங்கம்.  ஆன்மாவைக் கண்டருள உதவி செய்வதோடு ஈசனோடு ஆன்மா இரண்டறக் கலக்கவும் உதவுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துத் தென்மேற்குத் திசை.  நாம் செய்யும் அனைத்துக் கெட்ட செயல்களிலிருந்தும் விடுதலை பெற இவரை வழிபட வேண்டும்.  ஸ்ரீநிருதிலிங்கமான இவரை வழிபட்டால் நம் பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.  ஆத்மார்த்தமாக அமர்ந்து ஒரே முனைப்போடு இவரை வழிபட்டால் உள்ளத்தினுள்ளே ஜோதிமயமான தரிசனம் ஏற்படும் என ஞாநிகள் கூற்று.  தென் திசையிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பும் மலைப்பாதையில் அமைந்துள்ளது ஸ்ரீநிருதி லிங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவருணலிங்கம் இங்கே மேற்குத் திசையில் காட்சி அளிக்கிறார்.  நீரின்றி அமையாது உலகு என்பதற்கொப்ப இந்தப் பரந்த உலகில் மட்டுமல்லாது மூவுலகிலும் உள்ள நீருக்கெல்லாம் அதிபதியாக விளங்கும் இவர் வழிபட்ட இந்த ஸ்ரீ வருணலிங்கத்தை வழிபட்டால் நாடு செழிக்கும். நீர்நிலைகள் நிரம்பும், அனைவரையும் மகிழ்வோடு வாழ வைக்கும் ஸ்ரீவருணலிங்கத்தை வருணன் ஸ்தாபித்ததாய்க் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வடமேற்குத் திசையில் உள்ள ஸ்ரீவாயுலிங்கம் நம் ஜீவன் என்றே கூறலாம்.  காற்றில்லாமல் யாருக்கும் மூச்சு விடமுடியாது.  காற்றுத் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவனாய் விளங்குகிறது.  காற்றில்லை எனில் இவ்வுலகம் இயங்குவது எவ்வாறு? காற்று கண்ணுக்குத் தெரியவில்லை எனினும் எங்கும் வியாபித்து இருக்கிறது.  நிலைத்தும் இருக்கிறது.  இயக்குவதும், இயங்குவதும் இவரே. நமக்கெல்லாம் சுவாசத்தை அளிக்கும் வாயுலிங்கத்தை ஸ்தாபித்தவர் வாயு என்று கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துக் குபேரதிசையான வடகிழக்கு மூலை.  இங்கே ஈசான்ய லிங்கமும் குடி கொண்டிருக்கிறார். ஈசான்ய மூலை என்றும் கூறுவார்கள்.  குபேரன் ஈசனுக்கு நெருக்கமானவன்.  குபேரன் ஸ்தாபித்த இந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வத்துக்குக் குறைவிருக்காது என்று கூறுகின்றனர்.  ஈசான்யலிங்கமோ எனில் உடல் முழுதும் திருநீறணிந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.  பூதகணங்கள் சூழ்ந்திருக்க முக்கண்ணோடும் ஜடாமுடியோடும், புலித்தோலில் அமர்ந்த வண்ணம் ஏழு ருத்ரர்களில் ஒருவராய்க் காட்சி தருகிறார் இவர்.  மலையே இங்கு ஈசன்.  ஈசனின் ஜோதி ஸ்வரூபமே மலை என்று முன்னரே பார்த்தோம்.  அத்தகைய மலையைச் சுற்றி அமைந்துள்ள இந்த அஷ்ட லிங்கங்களின் அமைப்பும் அந்த அந்த தேவர்கள் ஈசனை வழிபட்டதைக் குறிக்கிறது.  ஸ்ரீவருண லிங்கத்தை அடுத்து உள்ள ஆதி அண்ணாமலையார் ஆலயத்தை மஹாவிஷ்ணு ஸ்தாபித்ததாய்க் கூறுகின்றனர்.  கார்த்திகை தீபத் திருநாளின் மூன்றாம் நாள் அருணாசலேஸ்வரர் இந்தக் கோயிலுக்கு வருவார் என்றும் மலையை அம்பிகையோடு சேர்ந்து அவரும் வலம் வருவார் என்றும் தெரிய வருகிறாது.  அடுத்து நாம் காணப்போவது கார்த்திகை தீபச் சிறப்பும், ஈசனின் அர்த்த நாரீசுவரக் கோலத்தின் சிறப்பும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33343731-3938888227218687384?l=aanmiga-payanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aanmiga-payanam.blogspot.com/feeds/3938888227218687384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33343731&amp;postID=3938888227218687384' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3938888227218687384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33343731/posts/default/3938888227218687384'/><link rel='alternate' type='text/html' href='http://aanmiga-payanam.blogspot.com/2010/12/5.html' title='அண்ணாமலைக்கு அரோஹரா ! 5'/><author><name
