tag:blogger.com,1999:blog-33343731.post423543986278159924..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-33343731.post-32763610229640895412016-05-27T03:45:31.346-07:002016-05-27T03:45:31.346-07:00மிகவும் அன்பான பதில். இதை படிப்பதர்கே புண்ணியம் செ...மிகவும் அன்பான பதில். இதை படிப்பதர்கே புண்ணியம் செயத்திருக்கவேண்டும்.கயிலை நாதரின் அருள் உங்களிடம் உள்ளது.<br /><br />Baskaranhttps://www.blogger.com/profile/13769107045519589226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-53699422895008880202016-05-27T03:38:19.617-07:002016-05-27T03:38:19.617-07:00நம்மிடையே உள்ளார் பாஸ்கரன். திருக்கயிலையில் ஆஞ்சநே...நம்மிடையே உள்ளார் பாஸ்கரன். திருக்கயிலையில் ஆஞ்சநேயரும், தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக உலாவி வருவதாகப் பெரியோர்கள் கூற்று. திருக்கயிலையில் நாங்க சென்ற பரிக்ரமாவை வெளிச்சுற்று என்பார்கள். அதைத் தவிர உள் சுற்று என ஒன்று உள்ளது. அது இந்த வெளிச்சுற்றை ஏழு முறை முடித்தவர்கள் தான் சுற்றச் செல்லலாம் என்னும் விதி இருப்பதாகவும் கேள்விப் பட்டேன். <br /><br />இதைத் தவிரவும் இந்திய வழிக் கயிலைப் பயணத்தில் ஆதி கயிலைக்கு அருகே பாதாளத்தில் ஓர் அற்புதமான கோயில் இருப்பதாகவும் அங்கே போய்ப் பார்த்துவிட்டு வந்தவர்கள் படங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் எத்தனையோ அற்புதங்கள் இருக்கின்றன. பல வெளிவரவே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-18759965242455394012016-05-27T01:49:19.608-07:002016-05-27T01:49:19.608-07:00நான் என்னத்தை சொல்லுறது...
சிவன் எங்கு உள்ளார் என...நான் என்னத்தை சொல்லுறது...<br /><br />சிவன் எங்கு உள்ளார் என்று யாருக்கு தெரியும்.<br /><br />sree Gurudev DathaBaskaranhttps://www.blogger.com/profile/13769107045519589226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-80243214243788026132007-11-02T20:06:00.000-07:002007-11-02T20:06:00.000-07:00எப்போதும் போல நிறைந்த தகவல்கள்...நன்றி கீதாம்மா.எந...எப்போதும் போல நிறைந்த தகவல்கள்...நன்றி கீதாம்மா.<BR/><BR/>எந்த இடக்கும் இல்லாமல், நேர்மையாக, மரியாதையுடன் தனது கருத்துக்களை சொல்லியிருக்கும் பலூன் மாமாவுக்கும் நன்றிகள் பல.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-17515597045956133502007-11-02T03:19:00.000-07:002007-11-02T03:19:00.000-07:00நிச்சயமாய் நீங்கள் என்னைப் புண்படுத்தவில்லை, பலூன்...நிச்சயமாய் நீங்கள் என்னைப் புண்படுத்தவில்லை, பலூன் மாமா, உங்களின் கருத்துக்களுக்கும், என்னோட உணர்வுகளைப் புரிந்து கொண்டதற்கும் மிக மிக நன்றி. பதிவின் போக்கை மாற்ற வேண்டாம் என்பதே என் கருத்து. ரொம்பவே நன்றி மீண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-50211796219555398332007-11-02T02:15:00.000-07:002007-11-02T02:15:00.000-07:00கீதா,நிச்சயம் எனது மனம் புண்படவில்லை. அதுபோல் உங்க...கீதா,<BR/>நிச்சயம் எனது மனம் புண்படவில்லை. அதுபோல் உங்களையும் ,உங்கள் நம்பிக்கைகளையும் புண்படுத்த வேண்டும் என்று எந்த எண்ணமும் இல்லை.விவாதங்கள் முடிவே இல்லாதவை , மேலும் அவை முன் முடிவுகளுடன் ஆரம்பிக்கப்படுவையாதலால் அதில் ஈடுபடுவதும் இல்லை. <BR/><BR/>தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றி நீங்கள் "சிதம்பர இரகசியத்தில்" சொன்னபோது அவர்களின் மறுபக்கத்தையும் சொல்வது நல்லது என்ற எண்ணத்தில் போட்டு வைத்தேன். <BR/><BR/>நான் பர்ப்பனிசம் என்று சொல்வது பூணூல் போன்ற வெளி அடையாளங்களை அல்ல. பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டும் மனங்களையே.<BR/><BR/>உங்களின் ஆன்மிகப் பயணத்தை தொடருங்கள். <BR/><BR/>நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-51516907416724877462007-11-02T01:20:00.000-07:002007-11-02T01:20:00.000-07:00பலூன் மாமா, முதலில் நடராஜர் இவர்களை அழைத்து வந்ததா...பலூன் மாமா, முதலில் நடராஜர் இவர்களை அழைத்து வந்ததாய்ச் சொல்லவே இல்லை, கைலையில் நடராஜரைக் காணோம்னு தேடிட்டு வந்து, காசியை அடைந்து, சிதம்பரத்தில் இருப்பது தெரிந்து வந்தார்கள் எனத் தான் சொல்லி இருக்கேன். தவிர, இந்தப் பதிவை நான் ஒரு விவாதக் களமாக ஆக்க விரும்பவில்லை. <BR/><BR/>அவங்க சாப்பாடு, தினசரிச் செலவுகள் என்று எல்லாமே நடராஜர் கோவிலில் இருந்து தான். வாழ்க்கையே நடராஜருடன் தான் பின்னிப் பிணைந்துள்ளது. அதை அவங்களும் மறுக்கவில்லை, மற்ற விவரங்களுக்குள் போய், இதை ஒரு அரசியல் கட்டுரையாக மாற்ற நான் விரும்பவில்லை. நான் பலமுறை சிதம்பரம் சென்றிருக்கிறேன் என்பதோடு சிறு வயதுத் திருமணங்களில் இருந்து அனைத்தும் நன்றாக அறிந்தும் வைத்திருக்கிறேன். இந்தப் பதிவு அது எதையும் குறித்து அல்ல. தீட்சிதர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி இந்தப் பதிவு எழுதவில்லை! ஆனாலும் தீட்சிதர்கள் பற்றி எழுதும்போது இம்மாதிரியான விமரிசனங்களையும் எதிர்பார்க்கவே செய்தேன். இறைவன் தன்னைப் பார்ப்பனன் என்று ஒருநாளும் சொன்னதில்லை, சொல்லுவதும் இல்லை, சொல்லப் போவதும் இல்லை! பூநூல் தரித்தவர்கள் எல்லாரும் பார்ப்பனர்களே என்ற அறியாமையே இதற்குக் காரணம். இதைக் கூட நான் இங்கே தவிர்த்திருக்கத் தான் வேண்டும், என்றாலும் எழுதி விட்டேன், இனி மாற்றப் போவது இல்லை! உங்கள் ஆதரவுக்கும், கருத்துக்கும் ரொம்பவே நன்றி பலூன் மாமா! அடிக்கடி வந்து விமரிசனம் செய்யுங்கள். உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-70093473560149369312007-11-01T21:49:00.000-07:002007-11-01T21:49:00.000-07:00கீதா,உங்கள் வீட்டிற்கு நான் வரும்போது கூடவே எனது வ...கீதா,<BR/>உங்கள் வீட்டிற்கு நான் வரும்போது கூடவே எனது வீட்டுச் சமையல் அலுவலர்களை அழைத்து வந்து, இங்கும் இவர்கள்தான் எனக்குச் சமைப்பார்கள்..நீங்கள் சும்மா வேடிக்கை பாருங்கள்... என்று சொன்னால் அது உங்களுக்கு நான் செய்யும் அவமரியாதை.<BR/><BR/>இமயத்தில் இருந்து வந்த கடவுள், தங்கப்போகும் இடத்தில் பாட்டுப்பாட சில கோஸ்டிகளை கூடவே அழைத்து வந்தார். அந்த கோஷ்டிகள் புனிதமானவர்கள் அவர்களுக்குத்தான் எல்லா உரிமையும் என்று நந்தியிடம் சொன்னார்... என்ற ரீதியில் வரலாறு (புனைவு/கதை) இருக்கிறது என்றால் நான் அதை அவமானமாகவே கருதுகிறேன். மேலும் அது இறைவனின் பார்பனிசமாகவும்* கருதுகிறேன். :-(( <BR/><BR/>**<BR/><BR/>இன்று குறைந்த பட்சம் எனது எதிர்ப்பை பதிவு செய்யாவிட்டால் நாளை நந்தியிடம் சொன்னார் எனபது போல் கீதாவும் பிளாக்கில் சொல்லியுள்ளார் என்று வலுச்சேர்க்கும். :-))<BR/><BR/>***<BR/><BR/>சிதம்பர இரகசியத்தில் தீட்சிதர்கள் பெருமையை மட்டுமே பார்க்காமல் ,பூசை செய்யும் உரிமைக்காக பால்ய விவாகம், விதவை மறுமணம் மறுப்பு ... etc என்று ஒரு இனம் செய்யும் சீர்கேடுகளையும் பதிவு செய்யுங்கள். <BR/><BR/>பார்ப்பனிசம்:* <BR/>நிறம் அடிப்படையில் Discriminate செய்வது Racism.<BR/><BR/>பிறப்பின் அடிப்படையில் Discriminate செய்வது Parpanisam.<BR/><BR/>பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்வாகவும் ஒரு சிலரைத் தாழ்வாகவும் நினைப்பது பார்ப்பனிசம்.<BR/>இந்த எண்ணம் இல்லாத அனைவரும் மரியாதைக்குரியவர்களே irrespective of their family beliefs (beliefs of their father/mother etc.,)Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-25825924082736358072007-10-31T08:11:00.000-07:002007-10-31T08:11:00.000-07:00வாங்க பலூன் மாமா, என்ன பேரு, ஏன் இந்தப் பேருனு தான...வாங்க பலூன் மாமா, என்ன பேரு, ஏன் இந்தப் பேருனு தான் புரியலை! போகட்டும் நல்லாவே இருக்கு பேரு, உங்க வரவுக்கும், கருத்துக்கும் ரொம்பவே நன்றி, நீங்க சொன்ன சுட்டியைப் பார்க்காமலா இருப்பேன்? எப்போவோ வந்தது இல்லையா? இது எழுத ஆரம்பிக்கும் முன்னரே பார்த்துட்டேனோனு நினைக்கிறேன். ரொம்பவே நன்றி, நீங்க வந்ததுக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-85298062050589083162007-10-31T04:30:00.000-07:002007-10-31T04:30:00.000-07:00// காசியில் இருந்து 3,000/- பேராய்க் கிளம்பியதாய்ச...// காசியில் இருந்து 3,000/- பேராய்க் கிளம்பியதாய்ச் சொல்லப் பட்ட இவர்கள் //<BR/><BR/>//தங்களின் குடும்பச் சொத்தாக ஒவ்வொரு தீட்சிதர் குடும்பமும் நினைக்கும் இந்தக் கோயிலின் நிர்வாகமும் அவர்களிடம் தான் உள்ளது. //<BR/><BR/>//தங்களில் ஒருவராய் நடராஜரைக் கருதும் இவர்களுக்குத் தான் இந்தக் கோயிலில் பூஜை செய்யும் முழு உரிமையும் இன்று வரை உள்ளது. சிதம்பர மகாத்மியம் நூலில் இறைவனே இவ்வாறு நந்தியிடம் கூறுவதாயும் சொல்லுகின்றனர். //<BR/><BR/>:-))<BR/><BR/>**<BR/><BR/>நாளைய தலைமுறை (3000 வருடம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பொழுது போகாத போது 2000 -2007 -ல் எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்களைப் பார்த்து...<BR/><BR/>"நம் முன்னோர்கள் காதலிக்கும் போது துணை நடிகர்களுடன் மரத்தைச் சுற்றியும், ரோட்டிலும் ஆடித்தான் காதல் செய்தார்கள். அப்படித்தான் டைரக்டர் சங்கர் படத்தில் சொல்லியிருக்கார்" என்று சொல்லக்கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல நாம் இருக்க மாட்டோம். <BR/><BR/>இறைவன் நந்தியிடம் சொன்னார் தொந்தியிடம் சொன்னார் என்று சொல்லும் வர்ணனைக்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசம் "நம்பிக்கையாளர்களுக்கு" தெரியப்போவது இல்லை.<BR/><BR/>உழுதவனுக்கு நிலம் சொந்தம் எனபது போல் பூசை செய்தவனுக்கு வழி வழியான உரிமைகள் வந்து இருக்கலாம். அல்லது அந்தக் கால இராசமார்கள் தானமாக எழுதி வைத்து இருக்கலாம்.<BR/><BR/>நந்தியிடம் சொன்ன இறைவன் ஏன் அவனின் பக்தனிடம் சொல்லாமல் அடி வாங்க வைக்கிறார். இறைவனே தெளிவாக பக்தர்களிடம் சொல்லிவிட்டால் அங்குதான் நின்று பாடுவேன் என்று அடம்பிடிக்காமல் அவரவர் பொழைப்பைப் பார்த்துக் கொண்டு போவார்கள்.<BR/><BR/>**<BR/><BR/>தீட்சிதர் வட்டங்களில் நடக்கும் கொடுமைகளை நீக்க அந்தக் கடவுள் இன்னொருமுறை வருவாரா? அல்லது நந்தியிடம் சொல்வாரா?<BR/><BR/>//சிறுவயதுத் திருமணம் என்பதால் சிறுவயது முதலே கருவுறுதல், குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன. விதவையான பெண்களுக்கு மறுமணத்தை இந்த இனக்குழு அனுமதிப்பதில்லை.<BR/>//<BR/><BR/>//..சிறுவயதுத் திருமணங்கள், பெண்களுக்குக் கல்வி உரிமை மறுப்பு, அடிப்படை உரிமைகள் மறுப்பு, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் குறுகிய அகமண முறை ஆகியவை இன்னமும் தொடர்கின்றன ...//<BR/><BR/>பார்க்க:<BR/>சிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம் <BR/> http://thoughtsintamil.blogspot.com/2006/06/blog-post_23.html<BR/><BR/>**Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.com