
கோபியரிடம் வெண்ணெய் திருடி உண்டவனுக்குக் கள்ளன் வேஷம் தரிப்பதில் என்ன கஷ்டம்? அவன் இஷ்டப் படும் வேஷம் அல்லவோ அது?? கள்ளனைப் பார்த்த மன்னனுக்கு அவன் பேரில் கோபமே வரவில்லை. என்ன காரணமோ பரிவும், அன்பும், பாசமும், பக்தியுமே மேலிட்டது. திகைத்த மன்னன் கள்ளனைப் பார்த்து, "இது என்ன மாயம்? நீயோ கள்ளன், என்னால் தண்டிக்கப் படவேண்டியவன். ஆனால் எனக்கு உன்னிடம் அளவுகடந்த பக்தியும், பாசமும் மேலிடுகின்றதே?" எனக் கேட்டான். கள்ளன் அதற்குப் பதில் சொன்னான்.
"அரசே! பணத்திற்கு என இருக்கும் பங்காளிகள் நான்குவகைப்படுவர். முதலாவது தர்மம், இரண்டாவது, அக்னி, மூன்றாவது அரசன், நான்காவது திருடன். இதில் உன்னுடைய அரசால் சம்பாதிக்கப் படும், உரிய வகையில் செலவிடப் படவில்லை. தர்மத்தின் பாதையில் உன் அரசாங்க சம்பாத்தியம் செல்லவில்லை. அதை உனக்கு உணர்த்தவே நாம் இவ்விதம் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினோம்." என்று உரைத்துத் தம் சுயரூபத்தைக் காட்டினார்.
மன்னனுக்கு உண்மை புரிந்தது. அன்றிலிருந்து தன்னுடைய கஜானாவின் பணம் எல்லாம் உரிய நேர்மையான வழியில் செலவிடப் படுகின்றதா என்று கவனித்துச் செலவிட்டான். திருடனை மன்னித்துவிட்டான். அரசனும், திருடனும் இறை அருளால் ஞானம் பெற்றனர். பெருமானுக்கோ கள்ளருக்கெல்லம் பிரான் என்ற பட்டப் பெயர் நிலைத்து நின்றது. அன்றிலிருந்து கள்ளபிரான் என அழைக்கப் படுகின்றார் இவர்.

600 அடி நீளமான கோயிலின் உட்புறத்து கர்ப்பகிருஹத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை சூரியன் சித்திரை, ஐப்பசி மற்றும் பெளர்ணமி தினங்களில், தன்னுடைய கிரணங்கள் பகவான் காலடியில் படும்படி வந்து தரிசிப்பது சிறப்பாய்க் கருதப் படுகின்றது. மார்கழி மாசம் நடக்கும் திரு அத்யயன உற்சவம் பின் பத்து நாட்களில் பரமபத வாசல் திறப்பு, படியேற்றம், பத்தி உலா, கற்பூர சேவை போன்றவை காணக் கிடைக்காத காட்சி எனச் சொல்லப் படுகின்றது. சுவர்க்கத்திலிருந்து ஆஸ்தானம் புறப்பாடு வெள்ளித் தோளுக்கினியானில் பனிக்காக குல்லாய், வெல்வெட் போர்வையுடனே கிளம்பி பத்தி உலா நடக்கும். சிம்ம கதி, சர்ப கதியுடன், தாள வாத்தியங்கள் முக வீணை முழங்க படியேற்றமும் கற்பூர சேவையும் நடைபெறுகிறது. சாதாரணமாய் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும் இந்த சேவை இங்கே ஒரு விநாடிக்குள் பெருமான் ஆஸ்தானத்தில் சேவை சாதிப்பதும், ஒரு நிமிஷத்திற்குள் கற்பூர சேவையும் நடந்து முடிகின்றது.
அடுத்து வரகுணமங்கை என்னும் நத்தம் செல்லுகின்றோம்.
4 comments:
தாமிரபரணிக்கரையில் சில நாட்கள். பதிவு மிகவிளக்கங்களுடன் நன்றாக போகிறது. ஆமாம் எப்போது தாமிரபரணிக்கரையில் வசிப்பவர்களுடன் சில நாட்கள் பதிவு வரும்
migavum arumai!!
பதிவு மிகவும் அருமை. தங்கள் சேவை தொடரட்டும். இறைவனை வேண்டிகொள்கிறேன்.
பதிவு மிகவும் அருமை. தங்கள் சேவை தொடரட்டும். இறைவனை வேண்டிகொள்கிறேன்.
Post a Comment