எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, August 20, 2013

அரங்கனின் பாண்டியன் கொண்டை வந்த வரலாறு




அரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை.  முக்கியத் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே வெளிவருவார்.  இந்தப் பாண்டியன் கொண்டை என்பது சுந்தரபாண்டியனால் அளிக்கப் பட்டது என்பார்கள்.  ஆனால் அது பழுதாகி விட்டதாம்.  அப்போது அரங்கனே தன் பக்தர்களில் ஒருவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொன்னாராம். அவரோ பரம ஏழை.  உஞ்சவ்ருத்தி எடுத்துப் பணம் சேர்த்து இந்தப்பாண்டியன் கொண்டையைச் செய்து கொடுத்தாராம். அவர் யாருனு பார்ப்போமா?

நம்ம தமிழ் நாட்டில் சங்கீத மும்மூர்த்திகளாக தியாகராஜ சுவாமிகளையும், முத்துசாமி தீக்ஷிதர், ச்யாமா சாஸ்திரிகள் ஆகியோரைச் சொல்கிறோம்.  தமிழிசையில் மூவராக அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத் தாண்டவர் ஆகியோரையும் சொல்கிறோம்.  இவர்கள் மூவரும் தியாகராஜர், ச்யாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீக்ஷிதர் ஆகியோரை விடவும் காலத்தால் மூத்தவர்கள்.  அப்படித் தெலுங்கிலும் மும்மூர்த்திகள் உண்டு. ஆந்திர நாட்டில் இப்படிச் சொல்லப்படுபவர்கள் தலப்பாக்கம் அன்னமாசார்யா, பத்ராசலம் ராமதாசர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி ஆகியோர்.  

கிருஷ்ணா நதி பாயும் மாவட்டத்தில் அல்லூரு என்னும் ஊரில் வசித்து வந்த ஶ்ரீவெங்கையாவுக்கும், ஶ்ரீமதி வெங்கம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார் வேங்கடாத்ரி. 1806- ஆம் வருடம் தமிழ் அக்ஷய வருடத்தில் பங்குனி மாசம் பெளர்ணமி திதியில் பாரத்வாஜ கோத்திரத்தில் உத்தர பால்குனி நக்ஷத்திரத்தில் அவதரித்தார் வேங்கடாத்ரி சுவாமிகள்.  அவர் தாயின் கர்பத்தில் இருக்கையிலேயே இறை அருளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்.  மிகச் சிறு வயதிலேயே சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முறையான கல்வி பெறும் முன்னரே கற்றார்.  பெற்றோருக்கு மகனின் சிறப்பும், தனித்தன்மையும் நன்கு புரிந்து மனம் சந்தோஷம் அடைந்தனர்.  ஆனால் அவர் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்ய முயல அவரோ பார்த்த பெண்ணையே சீதாப் பிராட்டியாக எண்ணிக் காலில் விழுந்து வணங்கித் துதிக்கப் பெற்றோர் பின்னர் வற்புறுத்தவில்லை. அந்த ஊரின் நரசிம்ம சுவாமியை வணங்கி சேவை செய்து வந்த வேங்கடாத்ரிக்கு மனதுக்குள்ளே தேடல் மிகுந்தது.  தன் தேடலுக்கு ஒரு குரு தேவை என்பதைப் புரிந்து கொண்ட அவர் தக்க குருவுக்குக் காத்திருந்தார். அப்போது அவருக்குக் கிடைத்தவர் தான் துமு நரசிம்ம தாசா என்பவர்.  இந்த நரசிம்ம தாசர் ஶ்ரீபத்ராசலம் ராமதாசரின் சீடர் என்று சொல்கின்றனர்.  

வேங்கடாத்ரிக்குத் தாரக மந்திர உபதேசம் செய்த நரசிம்ம தாசர் அவருக்குத் தம் சலங்கைகளைக் கொடுத்து, தம்புரா, தாளம் போன்றவையும் கொடுத்து, தம் ஆசிகள் என்றென்றும் தொடரும் என ஆசீர்வதித்தார். வேங்கடாத்ரி சுவாமியும் ஒரு கோடி ராமநாமம் எழுதிச் சமர்ப்பித்து ராமன் திருவுருவையே நினைந்து நினைந்து மனம் உருகித் துதித்துக் கொண்டிருந்தார். விரைவில் அவருக்கு ஶ்ரீராமன், சீதாபிராட்டியின் தரிசனமும் கிடைக்கப் பெற்றது. பின்னர் அவர் அங்கிருந்து திருமலை சென்று திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டுப் பாமாலைகளாலும் பூமாலைகளாலும் துதித்து வந்தார். பின்னர் அவர் காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு அங்கேயே நித்ய வாசம் செய்ய எண்ணினார்.  தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை, தான்யங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப்பெருமாளின் சந்நிதிக்குக்ப் பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி வரதனுக்கு மாலை கட்டிக் கொடுத்து, சந்தனம் அரைத்துக் கொடுத்து, அமுது சமர்ப்பித்து எனப் பல்வேறு கைங்கரியங்களையும் செய்து வந்தார். இதைத் தவிரவும் பல வேத பாடசாலைகளையும் திறந்து வைத்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி வைத்தார்.  நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு தீண்டியது.. அவர் சற்றும் அஞ்சாமல் பெருந்தேவித் தாயார் சந்நிதிக்குச் சென்று பல கீர்த்தனைகளைப் பாடி அங்கேயே மயங்கி விழுந்தார்.  பின்னர் தூங்கி எழுந்திருப்பவர் போல் எழுந்து பெருமாள் சந்நிதிக்கும் சென்று பிரசாதங்கள் வாங்கிக் கொண்டார். கொடிய பாம்பின் விஷமும் அவரை ஒன்றும் செய்யவில்லை என்பதை அனைவரும் கண்டு வியந்தனர்.


படம் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்.

தகவல்கள் உதவி:  விக்கி பீடியா


12 comments:

ஸ்ரீராம். said...

அன்னமாச்சார்யா, ராமதாசர் தெரியும். வேங்கடாத்ரி தெரியாது. ராமதாசர் சீடர்தான் இவருக்கு உதவினார் என்றால் காலத்தால் அவருக்குப் பிற்பட்டவர். ராமதாசர் கீர்த்தனைகள் முதலிடத்திலும், அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் இரண்டாமிடத்திலும் பிடிக்கும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அரங்கனின் பாண்டியன் கொண்டை வந்த வரலாறு தெரிந்து கொண்டோம்.

தகவல்கள் சேகரித்துக் கொடுத்துள்ளதற்கு பாரட்டுக்கள்.

Geetha Sambasivam said...

வாங்க ஶ்ரீராம், வேங்கடாத்ரி சுவாமிகள் காலம் 1806 ஆம் வருடம் பிறந்தவர் எனக் குறிப்பிட்டிருக்கேன். தியாகராஜருக்கு முன்னால் என்கின்றனர். :))))

Geetha Sambasivam said...

வாங்க வைகோ சார், இவர் அரங்கனுக்கு நிறையத் தொண்டு செய்திருக்கிறார். :)))

இராஜராஜேஸ்வரி said...

நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு தீண்டியது.. அவர் சற்றும் அஞ்சாமல் பெருந்தேவித் தாயார் சந்நிதிக்குச் சென்று பல கீர்த்தனைகளைப் பாடி அங்கேயே மயங்கி விழுந்தார். பின்னர் தூங்கி எழுந்திருப்பவர் போல் எழுந்து பெருமாள் சந்நிதிக்கும் சென்று பிரசாதங்கள் வாங்கிக் கொண்டார். கொடிய பாம்பின் விஷமும் அவரை ஒன்றும் செய்யவில்லை என்பதை அனைவரும் கண்டு வியந்தனர்.

பிரமிக்கவைக்கும் வரலாறு..
பாண்டியன் கொண்டைக்கு..

Geetha Sambasivam said...

வாங்க ராஜராஜேஸ்வரி. மிச்சமும் போடணும். :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

இன்றைய [15.10.2013] வலைச்சர அறிமுகத்தில் தங்கள் தளத்தினைக்கண்டேன். மிக்க மகிழ்ச்சி கொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான வாழ்த்துகள்.

http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html

அன்புடன் VGK

Geetha Sambasivam said...

அனைவருக்கும் நன்றி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோமுகவரி-http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_11.html?showComment=1389400067941#c4442535171104740770

--------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
--------------------------------------------------------------------------------------------------------------------------------

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோமுகவரி-http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_11.html?showComment=1389400067941#c4442535171104740770

--------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
--------------------------------------------------------------------------------------------------------------------------------

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!