எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, April 06, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

இம்முறை ஒரு மாறுதலுக்காக அரங்கன் ஊர் சுற்றிவிட்டுத் திரும்பி வந்த காலத்தில் தங்கிய ஊரைக் குறித்து நண்பர் திரு ஒரு அரிசோனன் என்பவர் எழுதியதும், அவர் எடுத்த படங்களும். இந்த ஊரைக் குறித்த மேல் அதிக விளக்கம் அடுத்த பதிவில் நான் எழுதி இருக்கிறேன்.  அதையும் சேர்த்து வெளியிடுகிறேன். படங்கள் இரண்டு பதிவுகளிலுமாக வருகின்றன. படங்கள் தெரியவில்லை எனில் சொல்லவும்.


















நான்  சில ஆண்டுகள் முன்பு திருவெள்ளறை சென்றிருந்தேன்.  அப்பொழுது சிறப்புக்கட்டணம் எதுவும் கேட்கவில்லை.  பட்டாச்சாரியார் தான் ஆண்டுமுழுவதும் மாதமாதம் அருச்சனை செய்கிறேன் என்று நன்கொடை கேட்டார்.  கொடுத்துவிட்டு வந்தேன்.  அதைச் சிறப்புக்கட்டணம் என்று சொல்லிவிட முடியாது.

திருச்சி துறையூர் அருகில் "அழகிய மணவாளம்" என்ற ஒரு சிற்றூர் உள்ளது.  அங்கு உயர்ந்து ஓங்கி எட்டடி உயர உருவமாக அழகிய மணவாளப் பெருமாள் (சுந்தரராஜன்)  திருமலைகள் நிலமகளுடன் நின்றகோலத்தில் தரிசனம் தருகிறார்.  கொள்ளை அழகு.  வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கட்டணம் எதுவே இல்லை.

கோவில் கருவறை பத்தடிக்குப் பத்தடி மட்டுமே உள்ளது.  அர்த்த மண்டபம் பத்தடிக்குப் பதினைந்தடி இருக்கலாம்.  கூட்டம் அதிகமானால் [?!] நிழல்தரும் கொட்டகை உண்டு.  என் மாமியாரின் பாட்டனார் என்பது தொண்ணூறு ஆண்டுகளுக்குமுன் எழுப்பிய கொட்டகை அது.  இன்னும் அவர் பெயர்கொண்ட கொடை அறிவிப்பு தொங்குகிறது.

கோவில் வாசலில் கைகள் உடைக்கப்பட்ட நரசிம்மர் சிலை ஒன்று இருக்கிறது.  அமைதியான் சூழ்நிலை.  அங்கிருந்து பார்த்தால் திருவரங்க ராஜகோபுரம், திருச்சி மலைக்கோட்டை தெரிகின்றன.  அருகில் ஒரு பழமையான பாழடைந்த, கருவரைமட்டு உள்ள செங்கல் கோவில் தென்படுகிறது.  அருகில் செல்ல இயலாதவாறு முட்புதர்கள் வளர்ந்து கிடக்கின்றன.

கோவில் எப்பொழுதுமே பூட்டித்தான் இருக்கும்.  கோவில் முன்பு இருக்கும் தெருவில் குடியிருக்கும் பட்டாச்சாரியாரின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினால், அவர் கோவிலைத் திறந்து தரிசனம் செய்விக்கிறார்.  வயதில் முதியவரான அவர் பாதுகாப்புக் கருதியே கோவிலைப் பூட்டி வைத்திருப்பதாகச் சொல்கிறார்.  அவர்க்கு என் மனைவியாரின் மூதாதையாரைத் தெரிந்திருக்கிறது.  என் மாமியாரின் பெயரையும் அறிந்துவைத்திருப்பது வியப்பையே அளித்தது.

மின்தமிழ் உடன்பிறப்புகள் விரும்பினால் நான் எடுத்த படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

நான்

சிரமத்தைப் பாராது சென்று அழகிய மணவாளரின் அருமையான கோலத்தை நின்று நிதானமாகக் தரிசிக்க வேண்டிய கோவில் அது.

ஒரு அரிசோனன்


படங்களும், எழுத்தும்: திரு அரிசோனன் அவர்கள்

படங்கள் அடுத்த பதிவிலும் தொடர்கின்றன.

No comments: