![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCwbJQASLoQmZpx5eSt39QrJ9HnizPYhKofhrucJrF3PvCOBs_BZGx7fUb896CLcdqvtHtR_vcSXMkwf3tsBhr8VxHXgWPxoDbuHPXt378-mleyCBaOwdgpIDjGea0IqMtEiQzNQ/s320/CTCAJ7ASGCCAIC420MCASK4ET5CAIU4EDTCAD6BP48CA4S4XI1CA00IJ6MCA5U95YICAXYIQAGCAFTS5LZCA5RUFUGCACNUWUMCAVH8MVACAI6PKU4CAH8U9OTCA4FY925CAZBXWRRCASRKRW1.jpg)
அதிலும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே ஈசன் ஆடிய ஆட்டத்தை நினைத்து, நினைத்து நந்தி எப்போதும் தன் தலையை ஆட்டிக் கொண்டே வேறே இருந்தாராம். (மாடுங்களெல்லாம் அதான் தலையை ஆட்டுதோ??)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFe2yiyKvoH2iFjSrcj5exoO0OlCe73YzOXleqn6YDoqhxzHBfMnsUnP5K1MKPH7zjrrCkJ-cQ_I2suagg7BddiW0RFCYNV6iHt9e6UWAPR4QznUs-p5BSvAg0RPhN3sQjcuDAbA/s320/ZXCAV1MYXFCAQDSHUPCAKIWLD6CA41ZLZOCAZWMJO3CAITHIDECAQHYPV8CA55DLZYCAV7E56KCA26PBKECA8H48SGCA6ETFJ5CASZJJ09CAMZ65MYCAFN7Y4MCAH6QNTDCA12HSX3CA1VGI7U.jpg)
இருவருடனும் ஈசன் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது வியாக்ரபாதர் தன்னுடைய புலிக்காலின் மகிமையைப் பற்றிச் சொல்லி, ஈசனைப் போல் தானும் தாளம் தப்பாமல் ஆட வசதியாக இந்தப் புலிக்கால்கள் இருக்கும் என்றும், அந்தக் காரணத்தினால் தானே ஈசனின் நடனத்தை முழுமையாய் ரசித்ததாயும், ஈசனும் அதைப் புரிந்து கொண்டே அவ்வளவு ஆனந்த நடனம் ஆடியதாயும் சொல்ல, நந்தி சிரிக்கின்றார். "புலி, இது என்ன பெரியவிஷயம்?? பிரதோஷ காலத்தில் என்னோட கொம்புகளுக்கு இடையே ஆடறாரே அதைவிடவா? அவர் ஆடி முடிச்சப்புறம் கூட எனக்குக் கண்ணு முன்னாலே அந்த நடனமே தெரியும். சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கும். எனக்காகத் தானே அவர் அப்படி ஆடினார்? அதை நினைவு வச்சுட்டுத் தான் அந்த ஜதிக்கேற்றமாதிரி என் தலையைக் கூட ஆட்டிக்கிறேனாக்கும்?" என்று சொன்னார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB3U2NZ2bCCuoBVddpwvFeLolvbExV1AR5Zzb68FL-xRU3I8Qcuk6t12aWTrR70ZkYwnjnll0Afb8EEax360wOPYOyMVOf2i6OSTF9vB-rkP55tZ7WFEjK-nqHUFn1Pv_K0DKtEg/s320/images.jpg)
இருவரும் பதஞ்சலியைப் பார்த்து, "உனக்குக் கொம்பும் இல்லை, கால்களும் புலிக் கால்கள் இல்லை, ஆகவே ஈசனின் ஆட்டத்தையும் உன்னால் எங்கே ரசிக்க முடியும்?" என்று கேலியாய்ப் பேசினார்கள். பதஞ்சலியின் முகம் வாட்டம் அடைந்தது.
No comments:
Post a Comment