எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 05, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இப்போக் கொஞ்ச நாட்களா எங்கேயும் பக்திச் சுற்றுலா போக முடியலை. அடுத்து இந்தப் பக்கத்திலே என்ன எழுதறதுனு கொஞ்சம் யோசனை. திருவாரூரே முற்றுப் பெற வில்லை. ஏனென்றால் கோயிலை முழுமையாகப் பார்க்கமுடியலை. சாயந்திரம் வரைக்கும் இருந்து பார்க்கலாம் என்றால் இவர் கீழே விழுந்து அது வேறே வேதனை. ஆகையால் உடனடியாகத் திரும்பிட்டோம். பின்னால் வாய்ப்புக் கிடைத்தால் கமலாம்பிகை அருளினால் திருவாரூர் பற்றிய தொகுப்பை இன்னும் விரிவாக எழுத எண்ணம். சித்தர்கள் பற்றி எழுதச் சொல்லி ஒரு ந்ண்பர் கேட்டிருக்கிறார். இன்னும் சிலரும் அதை ஆமோதித்திருக்கிறார்கள். முதல்லே நான் சித்தர்கள் பற்றி நல்லாப் படிச்சுத் தெரிஞ்சுக்கறேன். அப்புறமா எழுதறேன். ஆகவே இப்போ நாம் அனைவரும் அறிந்த ஒன்றைத் தெரிந்து கொள்வோமா? இவை ஏற்கெனவே ஒரு குழுமத்துக்கு எழுதி அனுப்பிச்சது. அதோட வேறொரு நண்பரின் இணைய தளத்திலும் சில பகுதிகள் வந்திருக்கின்றன. ஆகையால் அங்கே படிச்சவங்க பொறுத்துக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஈசனின் வடிவம் அறுபத்து நான்கு என்று சொல்கின்றனர். அவற்றில் சில வடிவங்கள் பற்றித் தெரிந்து கொள்வோமா???
************************************************************************************


அண்டமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமானுக்கு உருவம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி எல்லாம் இல்லை. இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் "சிவன்" என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. வடிவம் எப்படி ஏற்பட்டாலும் இன்றைக்கு முழுமுதல் வழிபாட்டில், சிவலிங்க வழிபாடும், நடராஜர் வழிபாடும், சோமாஸ்கந்தர் வழிபாடும் சிறப்பாகப் பேசப் படுகிறது.

இறைவனைக் கண்ணார, மனதாரக் கண்ட ஞானியர்கள் கூற்றுப் படி இறைவனின் வடிவங்களை உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் உருவம் ஆன கருத்தின் படி பிரம்மா என்னும் நான்முகனும், திருமால் என்னும் காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவும், ருத்ரன், மகேசன் என்னும் அழித்து அருளும் வடிவங்களும் அடங்கும். அருவம் என்பது வடிவே இல்லாதது. இதில் அடங்குபவை சிவம், சக்தி,நாதம், பிந்து ஆகியவை. இந்த நான்கையும் வைத்து இறைவனை யோக முறையில் பூசித்தவர்களே சித்தர்கள் எனப் படுவார்கள். என்றாலும் சாதாரண மானிடர் ஆன நமக்கு ஒரு உருவம் வேண்டும் இல்லையா?
அப்படி உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இறைவனைப் பூசிக்கும் ஒரு வடிவமே சிவலிங்க வழிபாடு. இந்தச் சிவலிங்க வழிபாட்டிலே முக லிங்கங்களும் உண்டு. சில சிவன் கோயில்களிலே லிங்கத்தில் முகம் இருக்கும். சிலவற்றில் முகம் இருக்காது. இந்த முகலிங்கங்கள், மற்றும் லிங்கங்கள் பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்.

3 comments:

எல் கே said...

நாதன் தாள் வாழ்க.

Maalini said...

http://siththarkal.blogspot.com

Geetha Sambasivam said...

@எல்கே, நன்றி.

@முனி, என் கிட்டே சித்தர்கள் பற்றிய தொகுப்புக்கட்டுரைகள் இருக்கு, என்றாலும் இந்தச் சுட்டிக்கும் நன்றி.