எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, July 27, 2008

சிதம்பர ரகசியம்- சில தகவல்களும், பதில்களும்!

பல புத்தகங்களும் வாங்கிப் படிக்கமுடியவில்லைதான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதற்காகச் சான்றுகள் ஏதும் இல்லாமலும் எதுவும் எழுதவில்லை. என்னிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே எழுதுகின்றேன். இதில் காய்தல், உவத்தல் பார்ப்பது அவரவர் கண்ணோட்டமே அன்றி என் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. காதில் காலிப்ளவர் வைக்க முடியாட்டாலும், குறைந்த அளவுக்கு ஒரு கனகாம்பரமாவது வைக்கலாம் என்று எண்ணம். மற்றபடி இங்கே தெரிவிக்கப் பட்ட கருத்துகள் அனைத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலே தொடருகின்றேன்.
*************************************************************************************
இரண்டாம் குலோத்துங்கன் மகாவிஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியது பற்றிப் பார்த்தோம். இதுபற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை இருப்பது பற்றி நண்பர் கொடுத்த தகவல்களிலேயே இருக்கின்றது. என்னுடைய வேலைப் பளுவினால் என்னால் சரிவரப் பதிவு போடமுடியாததால் தாமதம் ஆகிவிட்டது. மேற்கண்ட தகவல்கள் இருப்பது இவற்றால் சிற்றம்பலமான சிவாலயவழிபாட்டையும், தெற்றியம்பலமான சித்திரகூட வழிபாட்டையும், முறைப்படிபுரிந்து வந்தவர்கள் தில்லைமூவாயிரவர் என்பது விளக்கமாம்" (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III (1938-39) பகுதி I) என்று ஆராய்ச்சியாளரும், வைணவரும் ஆன திரு மு.ராகவ ஐயங்கார் அவர்கள் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகின்றது. குலோத்துங்கன் விஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியதை வைத்து அவன் வைணவத்துக்கு எதிரி எனச் சித்திரிக்கப் பட்டதும் தவறு என்று (பிற்காலச் சோழர் சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 95,96 பார்க்க).சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது.

கிருஷ்ணதேவராயர் காலத்திற்குப் பின்னர் அச்சுதராயர் காலத்தில் மறு பிரதிஷ்டை செய்யப் பட்டதும், அரசனால் நியமிக்கப் பட்ட வைணவர்களே விஷ்ணுவுக்குப் பூஜை, வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர். அப்போதில் இருந்து இங்கே வைகானசமுறையில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. பின்னர் கொண்டமநாயக்கன் காலத்தில் இந்தச் சந்நிதித் தனிக்கோயிலாக மாறும் பெருமையப் பெற்றது. தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இதை ஆட்சேபித்து நடராஜருக்கே என உரிய கோயிலில் விஷ்ணுவிற்குத் தனிக் கோயில் வேண்டாம் எனச் சொல்லியும், போராட்டங்கள் நடத்தியும், கொண்டம நாயக்கன் கோயிலைக் கட்டினான் என்றும், தீட்சிதர்கள் சிலர் அப்போது நடந்த போராட்டத்தில் கொண்டமநாயக்கனின் வீரர்களால் சுடப்பட்டு இறக்க நேரிட்டது எனவும், அதை நேரில் பார்த்த ( Jesuit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரிற் கண்டு வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார்


The Aravidu Dynasty by Father Heras (P. 553)
1. A notable instance of the struggle between the two sects is the lamentable event that took place at Chidambaram in 1597 A.D. While Krishnappa Nayaka of Jinji, himself a Staunch Vaishnava was there superintending the improvements which he had ordered at the temple of Govinda Raja within the great Saiva Temple. Father N. Pimenta, who passed through Chidambaram at this time narrates in one of his letters that on this occasion a great controversy arose as to "Whether it were lawful to place the signe of Perumal in the temple at Chidambaram. Some refused, others by their legates importunatly urged and the Naiks of Gingee decreed to erect in the temple" These last words of Pimenta indicate that after the restoration of the idol to the temple by Rama Rayan it had again been removed and its shrine probably destroyed. In order to re-install it with due honour, Krishnappa Nayaka ordered the old shrine to be repaired and even perhaps enlarged'
This was the cause of the whole trouble. "The priests of the Temple which were the Treasuries" Continues, Pimenta (were) with standing, and threatening if it were done, to cast down themselves from the top. The Brahmanes of the temple swore to do the like after they buried the former, which yet after better advice they performed not". But Krishnappa Nayaka was unmoved by any such threat when the reconstruction of the shrine was carried on with out hesitation where upon the priests climbing one of the high Gopurams of the temple started to cast themselves down while the Nayak was in the temple, "About twenty has perished in that precipitation on that day of our departure, whereat the Naichus angry, caused his gunners to shoot at the rest which killed two of them. A woman also was so shot in this Zealous quarrel that she cut her own throat". Naturally Krishnappa Nayaka accomplished his purpose in spite of this opposition.

தொடரும்.

8 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தகவல்கள் பல உள்ளடக்கிய தில்லைப் பதிவுக்கு நன்றி கீதாம்மா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கிருஷ்ணப்ப கொண்டம நாயகன் என்னும் கொடுங்கோலன் செய்த அக்கிரமத்தால் இன்று தெற்றியம்பல அளவு கோவிந்தராசர் சன்னிதி, ஈசனின் சன்னிதி வரை நீண்டு விட்டது! :(

நான் முன்பே உங்கள் பதிவில் சொன்ன தில்லை வரலாற்றுச் சுருக்கம் தான். மீண்டும் பதிக்கிறேன்!

//பின்னாளில் கிருஷ்ணப்ப கொண்டம நாயகன் என்னும் அதிகாரி ஒருவன் சில அடாத வேலைகளில் ஈடுபட்டான்! அவன் வைணவப் பித்து தலைக்கேறியவன்! வைணைவக் குலோத்துங்கன் என்று சொன்னாலும் தகும்!

அவன் பெருமாள் ஆலயத்தை ஏதோ விரிவுபடுத்துவதாக எண்ணிக் கொண்டு, நடராஜர் ஆலயம் வரை அதை இழுத்து விட்டான்! தெற்றி அம்பல அளவில் இருந்த திருச்சித்ரகூடம், அவன் செய்த அடாத செயலால் நீண்டு விட்டது! தீட்சிதர்கள் சிலர் இதை எதிர்த்து கோபுரத்தின் மேல் இருந்து குதித்து உயிர் விட்டனர்! பிற்பாடு இரு தரப்பும் உடன்படிக்கை செய்து கொள்ள ஒருவழியாக அமைதி திரும்பியது!

இப்படி ஒன்றுக்கும் உதவாத விசயத்துக்கு அடித்துக் கொள்ள வேண்டாம் என்று தான் இராமானுசர் முதலான குருமார்களே வீம்பு பார்க்காமல், அமைதியாக பிரச்சனையை மறக்க வைத்தனர்!

ஆனால் பின்னாளில், பிரச்சனைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, கடவுள் தங்களைக் காப்பாற்றுவது போய், தாங்கள் கடவுளைக் காப்பாற்றி விட்ட அற்ப சந்தோஷத்தில் சில மானிடர்கள் திளைத்து விட்டனர்!//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தெற்றியம்பலமான சித்திரகூட வழிபாட்டையும், முறைப்படிபுரிந்து வந்தவர்கள் தில்லைமூவாயிரவர் என்பது விளக்கமாம்" என்று ஆராய்ச்சியாளரும், வைணவரும் ஆன திரு மு.ராகவ ஐயங்கார் அவர்கள் எழுதி இருப்பதாய்//

உண்மை!
இதை யாரும் மறுக்கவில்லை!

இப்படித் தாமே வழிபட்ட ஒரு இறைவனை, தர்ம சாஸ்திரம் அறிந்த தீட்சிதர்கள் எப்படி அப்புறப்படுத்த துணிந்தார்கள்?
இல்லை அப்படி அப்புறப்படுத்திய மன்னனுக்குக் குறைந்தபட்சம் எதிர்ப்பாவது தெரிவித்தார்களா?

இது பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகப் புத்தகம் என்ன சொல்கிறது கீதாம்மா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//These last words of Pimenta indicate that after the restoration of the idol to the temple by Rama Rayan it had again been removed and its shrine probably destroyed.//

ஆகா! அச்சுத ராயர் மீண்டும் நிறுவிய ஒன்று மீண்டும் அழிக்கப்பட்டதா என்ன?

//In order to re-install it with due honour, Krishnappa Nayaka ordered the old shrine to be repaired//

உம்ம்ம்...
பழைய சன்னிதி என்று சொல்லும் போதே, அது இருந்தது புலனாகிறது!

//and even perhaps enlarged'
This was the cause of the whole trouble//

மிகவும் தவறு! இருந்தது இருந்தபடியே இருந்தால் பிரச்சனை இல்லை!
விரிவுபடுத்தறேன் பேர்வழின்னு சரிவு படுத்தியுள்ளான் கொண்டம நாயக்கன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குலோத்துங்கன் விஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியதை வைத்து அவன் வைணவத்துக்கு எதிரி எனச் சித்திரிக்கப் பட்டதும் தவறு//

:)
பெருமாளுக்குத் தீட்சிதர்கள் செய்ய வேண்டிய பணிகளுக்குப் போட்டியாக வேறு சிலர் வந்து உரிமை கொண்டாடுகிறார்களே...

அவர்களை அப்புறப்படுத்த முடியவில்லையே!

சரி, பெருமாளையே அப்புறப்படுத்திடுவோம்-னு தான் குலோத்துங்கன் அப்புறப்படுத்தினான்!

இதை வைத்து எல்லாம் அவனை எதிரி என்று எப்படிச் சொல்ல முடியும்?
He just maintained law and order! :)

பிரச்சனைகள் வருகிறதே என்று நியாயமான கவலையில் கண்ணகி சிலையை அப்புறப்படுத்தலாம் :)

பிரச்சனைகள் வருகிறதே என்று நியாயமான கவலையில் ராம ஜென்ம பூமி - பாப்ரி மஸ்ஜித்தை அப்புறப்படுத்தலாம் :)

இதனால் எல்லாம் எதிரி என்று அவரவர்களைச் சொல்லிவிட முடியுமா என்ன?
அவரவர்கள் wanted to maintain law and order! :)))

சரி தானே கீதாம்மா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//About twenty has perished in that precipitation on that day//

மனிதர்கள் தெய்வங்களையே காப்பாற்றும் சக்தி படைத்தவர்கள்! அதான் இந்தக் கொடூரங்கள் எல்லாம்! :(

இப்படிச் செய்ததை வைத்து மட்டுமே கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கனைச் சைவத்துக்கு எதிரி என்று சித்தரிக்க முடியாது - என்றெல்லாம் நான் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு இருக்க மாட்டேன்!

அவன் எதிரி தான்!
சைவத்துக்கு மட்டும் அல்ல!
வைணவத்துக்கும் அவன் எதிரி தான்!

அவன் பேர் குலோத்துங்கன் ஆகட்டும் இல்லை கிருஷ்ணப்ப கொண்டமன் ஆகட்டும்!
மனித நேயம் அறியாதவன் மானுடத்துக்கும் எதிரி!
இறைவனுக்கும் எதிரி!

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
எந்தப் பல்கலைக்கழகப் புத்தகம் பக்கம் 95&96 அல்ல!

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனம்மா மட்டும் சொல்லிக்கறேன்.

கோவை விஜய் said...

புகைப்படபேழைக்கு தங்களின் அன்பு வருகைக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.

அன்பு ஆசிர்வாதத்துக்கு நன்றி

தி.விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com