எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 23, 2007

ஓம் நமச்சிவாயா -30

நட்புப் பாலம் வந்ததுமே எங்கள் வண்டி ஓட்டிக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொள்ளப் பணம் உதவி செய்து விட்டு அவரைக் கைகுலுக்கி நன்றி தெரிவித்து விட்டுப் பின் நாங்கள் நடையில் பயணத்தைத் தொடர்ந்தோம். கிட்டத் தட்ட 2 கிலோ மீட்டருக்கு மேல் கடைத் தெருக்களில் நடந்து பின் அங்கே உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரவேண்டும். கடைகளில் யாரும் எதுவும் வாங்கும் மனநிலையில் இல்லை. சீக்கிரம் காட்மாண்டு போக வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லாரிடமும். பாஸ்போர்ட் அலுவலகத்தில் எல்லாரும் பழையமுறையில் வரிசையில் நின்று சீனாவை விட்டு வெளியேறுவதற்கான பதிவைச் செய்து கொண்டு மீண்டும் நடந்தோம். இப்போது நேபாளப் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வந்து சேர்ந்ததற்கான பதிவு செய்து கொள்ள வேண்டும். இது வரை எங்களுக்கு உதவி செய்து வந்த ட்ராவல்ஸ்காரர்கள் இந்த இடத்தில் எங்களை நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டதால் சற்றுத் தடுமாறிப் போனோம். பின் அங்கே ஆங்கிலமும், ஹிந்தியும் செல்லும் என்பதால் வழிமுறைகளைக் கேட்டறிந்து பின் அங்கே வந்து சேர்ந்ததற்கான பதிவை முடித்துக் கொண்டு விட்டால் போதும் என்ற நினைப்புடன் எங்களுக்காகத் தயாராக இருக்கும் வண்டிகளை நோக்கி நடந்தோம். வண்டிகள் கிட்டத் தட்டப் பேருந்துகள் தயாராக நின்றன. எல்லாரும் வண்டிகளில் ஏறிக் கொண்டதும் அவை புறப்பட்டன. மீண்டும் ஒரு மலைப் பயணம். மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்யும் எல்லாரும் எப்போது கீழே இறங்குவோம் என்ற மன நிலையில் இருந்தார்கள்.

அப்போது ட்ராவல்ஸ்காரரில் திரு கிருஷ்ணா என்ற எங்கள் ஒருங்கிணைப்பாளர் மறுநாள் எங்களுக்கு எல்லாம் விமானத்தில் டெல்லி திரும்புவதற்கான பயணச்சீட்டு உறுதி செய்யப் பட்டுத் தகவல் வந்து இருப்பதாயும் எங்களில் யார், யார் "முக்தி நாத்" பயணம் செய்யப் போகிறார்கள் என்றும் கேட்டார். நாங்கள் எல்லாருமே "முக்தி நாத்" பயணத்தில் ஆர்வமாய் இருந்தோம். அதற்கு அவர் நாளை முக்திநாத் செல்ல ஏற்பாடு செய்யப்படும் ஹெலிகாப்டரில் மொத்தம் 24 பேர்தான் போகலாம் என்றும் அதில் இருவர் விமான ஓட்டிகள், மற்ற இருவர் பயணிகளின் தேவைகளைக் கவனிப்பவர் என்றும் மற்றபடி 20 பேர்தான் போகலாம் என்றும் உங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டு தெரிவியுங்கள் என்றும் சொன்னார். இதற்கு நடுவில் ரெயிலில் வந்தவர்களும் மறுநாள் முக்தி நாத் போகவேண்டும் எனத் தெரிவிக்க அவர்களுக்கு ரெயில் கிளம்ப இன்னும் 2 நாள் இருப்பதால் அவர்களைப் பேருந்தில் "போக்ரா" போய் அங்கிருந்து ஹெலிகாப்டரில் அழைத்துப் போவதாய்ச் சொல்லவே ஒரு குழப்பம் வந்தது. ரெயில் பயணிகள் எங்களைப் பிரிக்கிறீர்கள்,விமானப் பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எனச் சொல்லவே ஒரே விவாதம் வரவே சிலர் யாருக்கு உடல் நலமில்லையோ அவர்கள் வரவேண்டாம் எனச் சொல்ல நானும் இன்னும் உடல் நலமில்லாத சிலரும் தீவிரமாக மறுத்தோம்.

இது இப்படியே நிற்க, நாங்கள் அங்கே ஒரு மிகச் சிறந்த ஓட்டலில் சாப்பாடு முடித்துக் கொண்டு காட்மாண்டுவிற்கு மாலை 4 மணி அளவில் வந்து சேர்ந்தோம். அங்கே வந்ததும் அறைகள் கொடுத்ததும், மாலை மறுபடி ஒரு மீட்டிங் நடப்பதாயும் அனைவரும் வரவேண்டும் எனவும் கூறினார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு கிட்டத் தட்ட 15 நாட்கள் கழித்து எல்லாரும் நன்றாகக் குளித்தோம். கடைகளுக்குச் செல்பவர்களும், தொலைபேசச் செல்பவர்களுமாக ஒரே மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது. மாலை 6-00 மணி அளவில் மீட்டிங் துவங்கியது. பயணிகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு எல்லாருக்கும் அவரவர் புகைப்படத்துடன் கூடிய கைலை சென்று திரும்பியதற்கான சர்டிஃபிகேட் வழங்கப் பட்டது. பின் மறுநாள் செல்லக் கூடிய பயணத்துக்கான விவாதங்களில் முடிவு ஒன்றும் எட்டப் படாமல் போகவே அவர்கள் 24 பேர் உட்காரக் கூடிய ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்வதாய்க் கூறினார்கள். ஒரு ஆளுக்கு இந்திய ரூபாயில் 13,500/- வீதம் எங்கள் இருவருக்குமாக ரூ.27,000/- கொடுத்தோம். பின் மானசரோவரில் இருந்து எடுத்து வந்த புனித நீர் தருவதாய்க் கூறினார்களே என எங்களுக்காகக் கேட்டோம். ஒரு 5 லிட்டர் பிடிக்கக் கூடிய கேன் 100ரூ/- கொடுக்க வேண்டும் எனவும், எங்கள் இருவருக்குமாக 250/-ரூ கொடுக்க வேண்டும் எனவும் சொன்னார்கள். அதிகம் 50ரூ ஒரு கேனுக்கு 25ரூ வீதம் 2 கேனுக்கு உள்ள பணம். நாங்கள் எடுத்து வந்த நீரே போதும் என்று சொல்லிவிட்டு கெளரிகுண்ட் நீர் மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டோம். பின் இரவுச் சாப்பாட்டுக்குப் பின் மறுநாள் காலை 7-30 மணிக்கு ஏர்போர்ட் புறப்பட வேண்டும் என்று சொல்லவே அதற்கும் மறுநாள் டெல்லி போகப்பிரயாணத்திற்குப் பொருட்களைப் பெட்டிகளில் பாக்கிங் செய்யவும் வேண்டும் என்று அறைகளுக்குப் போய் எங்கள் வேலையைத் துவங்கினோம். மறுநாள் காலை 7-30 மணிக்கு எங்கள் காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு நாங்கள் விமான நிலையம் போக பேருந்து வரவுக்குக் காத்திருந்தோம். காத்திருப்பின் நடுவில் ட்ராவல்ஸ்காரர் ஏற்பாட்டின் படி கிரிஸ்டல், பவளம், நவரத்தினம், முத்துக்கள் போன்றவற்றால் செய்யப் பட்ட மாலைகள், நெக்லஸ்கள் முதலியனவற்றை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு சிலர் வந்தனர். எல்லாரும் அவற்றை (விலை கொஞ்சம் நியாயமாயும் இருந்தது) வாங்கினர்.

பேருந்திலேயே போயும் முக்திநாத் போகலாம். அதற்கு மூன்று நாளோ என்னவோ மலைப் ப்யணம் செய்து "போக்ரா" என்னும் ஊரை அடைய வேண்டும். சிலர் இந்த ஊரில் இருந்தே மலை ஏறிப் போய் முக்திநாதரைத் தரிசனம் செய்வார்கள். நடக்க முடியாத சிலர் ஹெலிகாப்டரில் போவார்கள். ஆனால் போக்ராவில் இருந்து ஹெலிகாப்டருக்கு முன்பதிவு செய்யவேண்டும் என்பதோடு அல்லாமல் அங்கே இருந்து 5 பேர் அல்லது 10 பேர் மட்டும் போகக் கூடிய ஹெலிகாப்டர்களே கிடைக்கும். போக்ராவிலும் பார்க்கக் கூடிய இடங்கள் இருப்பதால் அவ்வழியே போகிறவர்கள் காத்திருக்கும் நேரம் அங்கே பார்க்கக் கூடிய இடங்களைப் பார்க்க முடியும். ஆனால் முக்திநாத் பயணத்தை முடித்துக் கொண்டு பின் போனால் தான் நல்லது. ஏனெனில் முக்திநாத் பயணம் அது எங்கே இருந்து செய்தாலும் சரி, முற்றிலும் மலைகளுக்கு நடுவே உள்ள அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழி வான் வழி மட்டும் தான். இல்லாவிட்டால் மலை ஏற வேண்டும். இரண்டுமே கடினமானது. ஏனெனில் காலநிலை ஒரு நேரம் போல் மற்ற நேரம் இருக்காது. முக்திநாத் கோவிலுக்கு விமானத்தில் போய் இறங்கும் போது வெயில் அடிக்கும். ஆனால் சில சமயங்களில் திரும்பும் போது மழை வந்து விடும். ஹெலிகாப்டர் கிளம்ப முடியாது. மழை இல்லாமல் மேகங்கள் சூழ்ந்தால் இன்னும் மோசம். மழை என்றாலும் அங்கே எல்லாம் பெய்யும் மழையில் ஒன்றும் செய்ய முடியாது. இது எல்லாம் திரும்பத் திரும்ப எங்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. நம் அதிர்ஷ்டம் எப்படியோ என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஏன் என்றால் அன்றே மாலை நாங்கள் டெல்லி திரும்பவேண்டும். எல்லாரையும் அறைச் சாவியைக் கொடுத்துவிட்டுப் போகும்படிச் சொல்ல நாங்களும் அறைச் சாவியைக் கொடுத்து விட்டோம். கையில் இருந்த பணத்தை மறுபடி அங்கேயே லாக்கரில் வைத்தோம். பேருந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டு முக்திநாத் போக விமான நிலையம் கிளம்பினோம்.

ஓம் நமச்சிவாயா -30

நட்புப் பாலம் வந்ததுமே எங்கள் வண்டி ஓட்டிக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொள்ளப் பணம் உதவி செய்து விட்டு அவரைக் கைகுலுக்கி நன்றி தெரிவித்து விட்டுப் பின் நாங்கள் நடையில் பயணத்தைத் தொடர்ந்தோம். கிட்டத் தட்ட 2 கிலோ மீட்டருக்கு மேல் கடைத் தெருக்களில் நடந்து பின் அங்கே உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரவேண்டும். கடைகளில் யாரும் எதுவும் வாங்கும் மனநிலையில் இல்லை. சீக்கிரம் காட்மாண்டு போக வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லாரிடமும். பாஸ்போர்ட் அலுவலகத்தில் எல்லாரும் பழையமுறையில் வரிசையில் நின்று சீனாவை விட்டு வெளியேறுவதற்கான பதிவைச் செய்து கொண்டு மீண்டும் நடந்தோம். இப்போது நேபாளப் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வந்து சேர்ந்ததற்கான பதிவு செய்து கொள்ள வேண்டும். இது வரை எங்களுக்கு உதவி செய்து வந்த ட்ராவல்ஸ்காரர்கள் இந்த இடத்தில் எங்களை நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டதால் சற்றுத் தடுமாறிப் போனோம். பின் அங்கே ஆங்கிலமும், ஹிந்தியும் செல்லும் என்பதால் வழிமுறைகளைக் கேட்டறிந்து பின் அங்கே வந்து சேர்ந்ததற்கான பதிவை முடித்துக் கொண்டு விட்டால் போதும் என்ற நினைப்புடன் எங்களுக்காகத் தயாராக இருக்கும் வண்டிகளை நோக்கி நடந்தோம். வண்டிகள் கிட்டத் தட்டப் பேருந்துகள் தயாராக நின்றன. எல்லாரும் வண்டிகளில் ஏறிக் கொண்டதும் அவை புறப்பட்டன. மீண்டும் ஒரு மலைப் பயணம். மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்யும் எல்லாரும் எப்போது கீழே இறங்குவோம் என்ற மன நிலையில் இருந்தார்கள்.

அப்போது ட்ராவல்ஸ்காரரில் திரு கிருஷ்ணா என்ற எங்கள் ஒருங்கிணைப்பாளர் மறுநாள் எங்களுக்கு எல்லாம் விமானத்தில் டெல்லி திரும்புவதற்கான பயணச்சீட்டு உறுதி செய்யப் பட்டுத் தகவல் வந்து இருப்பதாயும் எங்களில் யார், யார் "முக்தி நாத்" பயணம் செய்யப் போகிறார்கள் என்றும் கேட்டார். நாங்கள் எல்லாருமே "முக்தி நாத்" பயணத்தில் ஆர்வமாய் இருந்தோம். அதற்கு அவர் நாளை முக்திநாத் செல்ல ஏற்பாடு செய்யப்படும் ஹெலிகாப்டரில் மொத்தம் 24 பேர்தான் போகலாம் என்றும் அதில் இருவர் விமான ஓட்டிகள், மற்ற இருவர் பயணிகளின் தேவைகளைக் கவனிப்பவர் என்றும் மற்றபடி 20 பேர்தான் போகலாம் என்றும் உங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டு தெரிவியுங்கள் என்றும் சொன்னார். இதற்கு நடுவில் ரெயிலில் வந்தவர்களும் மறுநாள் முக்தி நாத் போகவேண்டும் எனத் தெரிவிக்க அவர்களுக்கு ரெயில் கிளம்ப இன்னும் 2 நாள் இருப்பதால் அவர்களைப் பேருந்தில் "போக்ரா" போய் அங்கிருந்து ஹெலிகாப்டரில் அழைத்துப் போவதாய்ச் சொல்லவே ஒரு குழப்பம் வந்தது. ரெயில் பயணிகள் எங்களைப் பிரிக்கிறீர்கள்,விமானப் பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எனச் சொல்லவே ஒரே விவாதம் வரவே சிலர் யாருக்கு உடல் நலமில்லையோ அவர்கள் வரவேண்டாம் எனச் சொல்ல நானும் இன்னும் உடல் நலமில்லாத சிலரும் தீவிரமாக மறுத்தோம்.

இது இப்படியே நிற்க, நாங்கள் அங்கே ஒரு மிகச் சிறந்த ஓட்டலில் சாப்பாடு முடித்துக் கொண்டு காட்மாண்டுவிற்கு மாலை 4 மணி அளவில் வந்து சேர்ந்தோம். அங்கே வந்ததும் அறைகள் கொடுத்ததும், மாலை மறுபடி ஒரு மீட்டிங் நடப்பதாயும் அனைவரும் வரவேண்டும் எனவும் கூறினார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு கிட்டத் தட்ட 15 நாட்கள் கழித்து எல்லாரும் நன்றாகக் குளித்தோம். கடைகளுக்குச் செல்பவர்களும், தொலைபேசச் செல்பவர்களுமாக ஒரே மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது. மாலை 6-00 மணி அளவில் மீட்டிங் துவங்கியது. பயணிகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு எல்லாருக்கும் அவரவர் புகைப்படத்துடன் கூடிய கைலை சென்று திரும்பியதற்கான சர்டிஃபிகேட் வழங்கப் பட்டது. பின் மறுநாள் செல்லக் கூடிய பயணத்துக்கான விவாதங்களில் முடிவு ஒன்றும் எட்டப் படாமல் போகவே அவர்கள் 24 பேர் உட்காரக் கூடிய ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்வதாய்க் கூறினார்கள். ஒரு ஆளுக்கு இந்திய ரூபாயில் 13,500/- வீதம் எங்கள் இருவருக்குமாக ரூ.27,000/- கொடுத்தோம். பின் மானசரோவரில் இருந்து எடுத்து வந்த புனித நீர் தருவதாய்க் கூறினார்களே என எங்களுக்காகக் கேட்டோம். ஒரு 5 லிட்டர் பிடிக்கக் கூடிய கேன் 100ரூ/- கொடுக்க வேண்டும் எனவும், எங்கள் இருவருக்குமாக 250/-ரூ கொடுக்க வேண்டும் எனவும் சொன்னார்கள். அதிகம் 50ரூ ஒரு கேனுக்கு 25ரூ வீதம் 2 கேனுக்கு உள்ள பணம். நாங்கள் எடுத்து வந்த நீரே போதும் என்று சொல்லிவிட்டு கெளரிகுண்ட் நீர் மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டோம். பின் இரவுச் சாப்பாட்டுக்குப் பின் மறுநாள் காலை 7-30 மணிக்கு ஏர்போர்ட் புறப்பட வேண்டும் என்று சொல்லவே அதற்கும் மறுநாள் டெல்லி போகப்பிரயாணத்திற்குப் பொருட்களைப் பெட்டிகளில் பாக்கிங் செய்யவும் வேண்டும் என்று அறைகளுக்குப் போய் எங்கள் வேலையைத் துவங்கினோம். மறுநாள் காலை 7-30 மணிக்கு எங்கள் காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு நாங்கள் விமான நிலையம் போக பேருந்து வரவுக்குக் காத்திருந்தோம். காத்திருப்பின் நடுவில் ட்ராவல்ஸ்காரர் ஏற்பாட்டின் படி கிரிஸ்டல், பவளம், நவரத்தினம், முத்துக்கள் போன்றவற்றால் செய்யப் பட்ட மாலைகள், நெக்லஸ்கள் முதலியனவற்றை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு சிலர் வந்தனர். எல்லாரும் அவற்றை (விலை கொஞ்சம் நியாயமாயும் இருந்தது) வாங்கினர்.

பேருந்திலேயே போயும் முக்திநாத் போகலாம். அதற்கு மூன்று நாளோ என்னவோ மலைப் ப்யணம் செய்து "போக்ரா" என்னும் ஊரை அடைய வேண்டும். சிலர் இந்த ஊரில் இருந்தே மலை ஏறிப் போய் முக்திநாதரைத் தரிசனம் செய்வார்கள். நடக்க முடியாத சிலர் ஹெலிகாப்டரில் போவார்கள். ஆனால் போக்ராவில் இருந்து ஹெலிகாப்டருக்கு முன்பதிவு செய்யவேண்டும் என்பதோடு அல்லாமல் அங்கே இருந்து 5 பேர் அல்லது 10 பேர் மட்டும் போகக் கூடிய ஹெலிகாப்டர்களே கிடைக்கும். போக்ராவிலும் பார்க்கக் கூடிய இடங்கள் இருப்பதால் அவ்வழியே போகிறவர்கள் காத்திருக்கும் நேரம் அங்கே பார்க்கக் கூடிய இடங்களைப் பார்க்க முடியும். ஆனால் முக்திநாத் பயணத்தை முடித்துக் கொண்டு பின் போனால் தான் நல்லது. ஏனெனில் முக்திநாத் பயணம் அது எங்கே இருந்து செய்தாலும் சரி, முற்றிலும் மலைகளுக்கு நடுவே உள்ள அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழி வான் வழி மட்டும் தான். இல்லாவிட்டால் மலை ஏற வேண்டும். இரண்டுமே கடினமானது. ஏனெனில் காலநிலை ஒரு நேரம் போல் மற்ற நேரம் இருக்காது. முக்திநாத் கோவிலுக்கு விமானத்தில் போய் இறங்கும் போது வெயில் அடிக்கும். ஆனால் சில சமயங்களில் திரும்பும் போது மழை வந்து விடும். ஹெலிகாப்டர் கிளம்ப முடியாது. மழை இல்லாமல் மேகங்கள் சூழ்ந்தால் இன்னும் மோசம். மழை என்றாலும் அங்கே எல்லாம் பெய்யும் மழையில் ஒன்றும் செய்ய முடியாது. இது எல்லாம் திரும்பத் திரும்ப எங்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. நம் அதிர்ஷ்டம் எப்படியோ என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஏன் என்றால் அன்றே மாலை நாங்கள் டெல்லி திரும்பவேண்டும். எல்லாரையும் அறைச் சாவியைக் கொடுத்துவிட்டுப் போகும்படிச் சொல்ல நாங்களும் அறைச் சாவியைக் கொடுத்து விட்டோம். கையில் இருந்த பணத்தை மறுபடி அங்கேயே லாக்கரில் வைத்தோம். பேருந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டு முக்திநாத் போக விமான நிலையம் கிளம்பினோம்.

Wednesday, January 17, 2007

ஓம் நமச்சிவாயா-28

அத்தியாயங்களின் எண்களைக் குறிப்பதில் தவறு நேரிடுகிறது. முக்கியக் காரணம் நான் இணையத்தில் இருக்கும்போது எழுதுவது இல்லை. நேரம் கிடைக்கியில் எழுதி வைத்து விட்டுப் பின் காப்பி, பேஸ்ட் செய்கிறேன். அப்போது இருக்கும் மன அழுத்ததில் சில சமயம் போஸ்ட் பப்ளிஷ் ஆனால் போதும் என்ற வரை ஆகி விடுகிறது. இணையப் பிரச்னை அவ்வளவு மோசமாக இருக்கிறது. சில சமயம் ஒரு நாள்பூராவும் முயற்சி செய்யும்படி ஆகி விடும். சில சமயம் மறுநாள் முயற்சி செய்ய வேண்டும். அப்போது எழுதிச் சேர்க்கும்போது தவறு நேருகிறது. இனிமேல் தான் சரி செய்யவேண்டும். கூகிளில் முத்தமிழ்க் குழுமத்துக்குக் கொடுக்கும்போதே கூகிள் இணைப்புப் போய் விடுகிறது. இதுவும் சிலருக்கு இருப்பதாய்ச் சொல்கிறார்கள். இதுக்கு நடுவிலே இந்த டாட்டா இண்டிகாம் தொந்தரவு வேறே. "டாட்டா இண்டிகாம்" இணைந்தால் இணையம் வராது. REFER DNS SERVER ERROR என்றே வரும். இல்லாட்டி டாட்டா இண்டிகாம் இணையாது. THE REMOTE COMPUTER DID NOT RESPOND என்றே வரும். இன்னிக்கு ஒரு சோதனைப் பதிவு கொடுத்தேன். போயிருக்கு. இதைப் பார்க்கணும்,என்ன ஆகிறது என்று. நிற்க.

"சாகா"வில் இருந்து "நியாலம்" போகும் போதும் எல்லார் மனதிலும் கவலையும், பயமும் தான் மேலிட்டு இருந்தது. மனதில் தைரியம் இல்லை. இன்னும் சிலபேர் ஊருக்குப் போனால் போதும் நல்லபடியாக என்ற மனநிலையில் இருந்தனர். அன்று பூராப் பயணம் முடித்து சாயங்காலம் "நியாலம்" போய்ச் சேர்ந்தோம். இம்முறை மாடியில் இல்லாமல் கீழேயே சற்று நல்ல முறையில் ஆன அறைகள் தரப் பட்டன. அங்கிருந்து சாப்பிடும் இடமும் கிட்டவே இருந்தது. எல்லாரும் கொஞ்சம் கவலையை மறந்து சந்தோஷமாகப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஷாப்பிங் செய்யவும், தொலைபேசவும் போனார்கள்.நாங்களும் தொலைபேசிவிட்டு வந்தோம். நான் முன்னமே சொன்னபடி நான் ஒரு மோசமான ஷாப்பர். அப்படி ஒண்ணும் பெரிசா வாங்க இல்லவும் இல்லை. நாங்கள் போகிற ஊர்களில் எல்லாம் இம்மாதிரிப் பொருட்களை வாங்கிக் குவித்தால் பணமும் நிச்சயம் வேஸ்ட் அதோடு நேரமும் வேஸ்ட். ஆகவே வாங்குபவர் சிலருக்கு மொழி புரியாத காரணத்தால் கொஞ்சம் உதவி விட்டு வந்து விட்டோம்.

அன்று இரவு "கூட்டுப் பிரார்த்தனை"யும் இறந்து போன ஸ்ரீலட்சுமிக்காக அஞ்சலிக்கும் ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் குழுவினர் அனைவரும் சேர்ந்து சமையலில் உதவிய ட்ராவல்ஸ் கார நண்பர்களுக்கும், மற்ற ட்ராவல்ஸ்காரர்களுக்கும் எங்களாம் முடிந்த பணம் போட்டு அவர்கள் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். இது தனியாக அவரவர் விருப்பத்தின் பேரில் செய்வது. ஆகவே கொஞ்சம் பணம் இதுக்குத் தனியாய் ஏற்கெனவே ஒதுக்கி வைத்திருந்தோம். இது மாதிரி எங்களுக்குப் பயணத்தில் கொடுத்த "பெப்ஸி, கோலா" போன்ற பானங்கள்,நாங்கள் மலை ஏற்றத்துக்கு வாங்கி வைத்த "ரெட் புல்" எனப்படும் சீன நாட்டுப் பானங்கள் எல்லாவற்றையும் எங்கள் வண்டி ஓட்டிக்குக் கொடுத்து விட்டோம். அந்தக் குழுவிலேயே "ரெட் புல்" குடிக்காத ஒரே பயணிகள் நாங்கள் இருவரும் தான். தவிர, டிரைவருக்கு எங்களுடன் வண்டி ஓட்டி நல்லபடிக் கொண்டு சேர்த்ததற்கு ஆளுக்கு 100 யுவான் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டோம். அன்றிரவு கழிந்து மறுநாள் எல்லாரும் உற்சாகத்துடன் புறப்பட்டோம்."போடோகுயிச்சி" (?) என்னும் ஆறு வழி நெடுக வரும். மிக மிக நீளமான ஆறு அது. நியாலத்தில் கொஞ்ச தூரத்தில் மலை ஏறும்போது கீழே ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆறு மலை இறங்க இறங்க கரை ஓரத்தில் வண்டிகள் போகின்றன. அப்போதும் வண்டிகள் கிட்டத் தட்ட 2,500 மீட்டர் உயரத்திற்கு மேல் இருக்கும்.

ஒவ்வொரு மலைப் பாதையும் முடிந்து நதிக்கரை வந்ததும் அந்தக் குறுகலான பாதையில் வண்டி போகிற போது மனம் பக், பக்கென்று அடித்துக் கொள்கிறது. இதில் எங்களுக்குள் விவாதம் வேறே. போகிறப்போ இந்த வழியில் போகவில்லை என்று என் கணவர் சொல்ல, நானும் திரு சங்கரனும் "இங்கே வேறு வழி ஏது? எல்லாம் இந்த வழி தான், இதோ இந்த இடம் பார்த்தோம், அந்த அருவி பார்த்தோம்" என்று நினவு படுத்திக் கொண்டே வந்தோம். இங்கே இருந்து கீழே நட்புப்பாலம் வழியாக நேபாளம், இந்தியா போன்ற நாடுகளுக்கு ட்ரக்கில் பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் வேறே அணி வகுத்து வரும். எதிரே ஒரு வண்டி வந்து விட்டால் அவ்வளவு தான். எல்லா வண்டிகளும் நின்று, எந்தப் பக்கம் முதலில் போகவேண்டுமோ அவர்களுக்கு வழி விட்டுப் பின் போகிற வரை சற்றுப் பயம் தான். அருவிகள் மேலே இருந்து கீழே விழ அருவியில் நனைந்து கொண்டே வண்டிகள் போகின்றன. ஒரு இடத்தில் அருவித் தண்ணீர் மிக வேகமாகக் கொட்டும். அங்கே போனதும் எல்லா வண்டிகளும் சற்று நின்று வண்டியை நன்றாகக் கழுவி விட்டுக் கொண்டு மேலே செல்கின்றன. இம்மாதிரி மலைகள் ஏறி, இறங்கி வரும் வழியில் ஒரு இடத்தில் திடீரென எங்கள் வண்டி நின்றது. அப்போது நாங்கள் ஒரு மலையில் உச்சியில் ஏறி விட்டோம். இனி மறுபக்கமாய்க் கீழே இறங்கிக் கரையைக் கடந்து வேறு மடிப்பு மலையின் பக்கம் போகவேண்டும். வண்டி நிற்கவே என்ன என்று பார்க்க என் கணவரும், திரு சங்கரனும் கீழே இறங்கினார்கள். வண்டிச் சக்கரத்தை வண்டியுடன் சேர்க்கும் இடத்தில் இருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேட் கழன்று விட்டிருக்கிறது. சற்றும் கவனிக்காமல் அந்த இடத்தில் வளைவில் வண்டியைத் திருப்பி இருந்தால் அதோ கதி தான். டிரைவர் வண்டியில் இருந்து ஏதோ லெதர் பெல்ட் போன்ற ஒன்றை எடுத்து அதைச் சக்கரத்தோடு சேர்த்துக் கட்டினார். இதற்குள் மற்ற டிரைவர்களும் வந்தார்கள். எல்லாரும் சேர்ந்து சக்கரத்தைக் கட்டி விட்டுப் பின் வண்டியைக் கிளப்பினார்கள். அந்த இடத்தில் ஊர் ஏதும் இல்லை. "ஜாங்மூ" என்னும் ஊர் வரும். அங்கே தான் நாங்கள் கஸ்டம்ஸில் மறுபடி பேர்களைப் பதிய வேண்டும். அது வருவதற்கு இன்னும் சற்று நேரம் ஆகும். அதற்குள் இப்படி. கொஞ்சம் கவலையாகத் தான் இருந்தது. இது வரை முன்னால் போய்க் கொண்டிருந்த வண்டி இப்போது சற்று மெதுவாகப் போக ஆரம்பித்தது.

"ஜாங்க்மூ" வந்ததும் சரி செய்து கொள்ளலாம் என நினைத்தோம். ஆனால் "ஜாங்க்மூ" வந்ததும் நாங்கள் கஸ்டம்ஸில் வேலையை முடித்துக் கொண்டுத் திரும்பி வண்டியில் ஏறினால் மறுபடி மலை ஏற்றத்தில் இதே தொந்திரவு. இம்முறை சக்கரம் கழன்றே வந்து விட்டது. பின்னாலும் முன்னாலும் வண்டிகள். வண்டியை ஒதுக்கினால் கீழே பாதாளத்தில் ஓடும் ஆறு. வண்டி ஒரு இஞ்ச் தள்ளி ஒதுங்கினாலும் அதோ கதி தான். மெதுவாக மற்ற வண்டிகள் போன பின் உதவிக்கு நின்ற 2 வண்டி டிரைவர்களின் உதவியுடனும் எங்கள் டிரைவர் சக்கரத்தை மறுபடி இறுக்கிக் கட்டினார். நட்புப் பாலம் எவ்வளவு தூரமோ? இன்னும் எவ்வளவு போகணுமோ என்று கவலைப் பட்டபோது கீழே இறங்கினதும் நட்புப் பாலத்துக்கு அருகே உள்ளே கடைத்தெரு வந்ததும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. இனிமேல் இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்து நட்புப் பாலம் வந்ததும் அங்கேயும் நாங்கள் திரும்பி விட்டதற்கான அடையாளப் பதிவு செய்து கொண்டுப் பின் நேபாள எல்லையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நாங்க்ள் நேபாளம் வந்ததற்கான பதிவையும் செய்து கொண்டுப் பின் 2 கி.மீட்டருக்கு மேல் நடந்து வண்டிகள் நிற்கும் இடம் போய் வண்டிகளில் ஏறிக் கொண்டு காட்மாண்டு செல்லவேண்டும். ஆனால் நட்புப் பாலம் வந்ததுமே எங்களில் பலர் ஆறுதல் அடைந்தோம். நேபாள் எல்லை வந்ததுமோ இந்தியாவே வந்து விட்டது போல் நிம்மதி வந்தது.

Saturday, January 13, 2007

ஓம் நமச்சிவாயா-27

எங்களை விட்டு அதிர்ச்சி விலகவே இல்லை. அடி ஏதும் பட்டிருந்தால்? மருத்துவ உதவிக்குக் கூட யாருமே இல்லை. இப்போது தான் "சக்தி விகடனில்" எங்களுக்கு ஒரு வருஷம் முன்னால் கைலை யாத்திரை மேற்கொண்ட திருச்சியைச் சேர்ந்த டாக்டர் கங்கா அவர்கள் எழுதியதில் தெரிந்து கொண்டேன். அவங்க குழுவில் ஒரு வண்டி இம்மாதிரிக் கவிழ்ந்து ஒருத்தருக்குக் கண்ணில் கண்ணாடித் துகள்கள் குத்தியும், வேறு இருவருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கிறது. டிரைவருக்குக் காயம் அதிகம் இருந்ததால் அவரை இன்னொருத்தர் துணையுடன் 1,000 கி.மீ கிழக்கே இருந்த தலைநகரான "லாசா"வுக்கு அனுப்பினாங்களாம். மற்றவர்களுக்கு டாக்டர் கங்காவும், அவங்க குழுவிலே வந்த மற்ற 5 மருத்துவர்களும் முதலுதவி செய்து இருக்காங்க. கைலை யாத்திரை முடிந்து திரும்பி டெல்லி வரும் வரை தினமும் மருத்துவம் செய்து இருக்காங்க. அவங்க எழுதி இருந்தது, "நான் குழந்தைகள் நல மருத்துவர், மற்றவர்கள் யாருமே கண் மருத்துவரோ அல்லது எலும்பு முறிவு மருத்துவரோ இல்லை. எங்களுக்குத் தெரிந்த வரை மருத்துவம் செய்தோம். கடவுள் அருளால் எங்க மருத்துவத்துக்குப் பயன் ஏற்பட்டது." என்று எழுதி இருக்கிறார்கள். அந்தக் குறைந்த பட்ச மருத்துவ உதவி கூட எங்களுக்குக் கிட்டாது. ரத்தம் வந்தால் வந்தது தான். அதோடு தான் கிட்டே இருக்கும் பர்யாங்கிலோ அல்லது மேம்பட்ட மருத்துவ உதவிக்காக லாசாவிற்கோ போகவேண்டும். எனவே, ஒரு சிறு சிராய்ப்புக் கூட இல்லாமல் நாங்கள் தப்ப முடிந்தது அந்தக் கைலை நாதன் திருவுளம் அன்றி வேறு ஏதும் இல்லை.

எங்கள் பயணம் தொடர்ந்தது. அன்றிரவு பர்யாங் வந்து சேர்ந்தோம். டாக்டர் நர்மதாவிற்கு உடலில் நீர்ச் சத்துக் குறைபாடு ஏற்பட்டது. அவங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்கள் திருமதி கல்பனாவும் அவள் கணவர் ஸ்ரீநிவாஸனும். இருவரும் இளம் வயதினராக இருந்தாலும் மிகப் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் டாக்டர் நர்மதாவிற்குச் சேவை செய்தார்கள். பர்யாங்கில் உடலில் க்ளூகோஸ் ஏற்ற வசதி இல்லை என்பதால் மறுநாள் சாகா போனதும் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முடிவு செய்யப் பட்டது. இரவில் பெரியவர் சங்கரனையும் அவருடன் சேர்ந்து அறையில் தங்கி இருந்த மற்ற நால்வரையும் சாப்பிட அழைக்க மறந்து போய் அவர்கள் இரவு 11 மணி வரை பார்த்துவிட்டுச் சமையல் பகுதிக்கு வந்து பார்த்தால் ஏதும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே ஸ்ரீலட்சுமியின் மரணத்தால் பாதிக்கப் பட்டிருந்த அவர்கள் எல்லாரும் உடனேயே திரு கிருஷ்ணாவையும், மனோகரனையும் கூப்பிட்டு மருத்துவ உதவி இல்லாமல் வந்ததற்கும், இப்போது சாப்பாடு சாப்பிடும்போது எல்லாரும் வந்தாச்சா என்று கவனிக்காததற்கும், அறைகள் சரியாகக் கொடுக்கப் படவில்லை என்றும் புகார் கொடுத்துத் திரும்பிப் போகும் போதாவது சரியாகக் கவனிக்கும்படிச் சொல்லி இருக்காங்க. எங்களுக்கு மறுநாள் காலை தான் திரு சங்கரன் சொல்லி இது தெரியும். நாங்கள் ஒரு 10 பேர் விடுதியின் மறுபக்கமாய்த் தங்கி இருந்தோம். விடுதின்னு தான் பேரு. எல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட அறைகள். ஆனால் படுக்க மெத்தை, போர்த்திக் கொள்ள ரஜாய், தலையணை கிடைக்கும். சற்றுக் குறை சொல்ல முடியாத விஷயம் இது ஒண்ணுதான். இல்லாவிட்டால் என்னதான் அவங்க கொடுத்த "ஸ்லீப்பிங் பாக்" உபயோகித்தாலும் தினமும் அதில் உள்ளே போய்ப் படுத்துவிட்டு வெளியே வருவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது.

மறுநாள் காலை எல்லாரும் "சாகா" நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். இப்போதும் எங்கள் வண்டி முன்னால் போய்க் கொண்டிருந்தது. அப்போது மறுபடி நல்ல வேளையாகச் சமவெளியில் போய்க் கொண்டிருக்கையில் ஒரு வண்டியின் சக்கரம் எங்களுக்கு முன்னால் ஓடி வந்தது. மறுபடி வண்டிகள் நிறுத்தப்பட்டுப் பார்த்தால் இம்முறை புனாவில் இருந்து வந்திருந்த திரு ராமச்சந்திரன் வந்த வண்டி அது. ஒரு பக்கச் சக்கரம் கழன்று ஓடியே போய் விட்டது. பின் ஒரு 2,3 பேர் அதை எடுத்து வரப் போக மற்ற டிரைவர்கள் வேறு சக்கரத்தை மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சக்கரம் மாற்றி வண்டி சரியாக இருக்கிறது என உறுதி செய்ததும் மறுபடி கிளம்பினோம். ஒரு வழியாக "சாகா" வந்தோம். சிலர் "பிரம்மபுத்ரா"வைக் கிட்டே போய்ப் பார்க்கப் புறப்பட நாங்கள் தொலைபேசப் போனோம். டாக்டர் நர்மதா அங்கே ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது. இரவு 9 மணி வரை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டுப் பின் விடுதிக்குத் திரும்பினார் டாக்டர் நர்மதா அவர்கள். அவங்க கணவரும் மனைவிக்குப் பணிவிடை செய்யச் சளைக்கவில்லை. சற்றும் அலுத்துக் கொள்ளாமல் அவங்க கூப்பிட்ட நேரத்துக்குக் கேட்ட உதவிகள் செய்து வந்தார். பின் மறு நாள் காலை "சாகா"வில் இருந்து "நியாலம்" நோக்கிப் புறப்பட்டோம். எல்லாரும் வழியில் மலை இறங்கும் போது பயப்பட்டிருக்கின்றனர். எல்லாரும் ஒரு முகமாய்ச் சொன்னது:போகும்போது இவ்வளவு தெரியவில்லை. இப்போ ரொம்பவே கஷ்டமாக இருக்கு." என்று தான். எல்லாம் "நியாலம்" போய்விட்டால் சரியாகி விடும் என்று நினைத்தோம். பின் அங்கிருந்து "நட்புப் பாலம்" கிட்டே தானே? நியாலம் போனாலே பாதி நிம்மதி என்ற நினைப்புடன் சாகாவில் இருந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.

Tuesday, January 09, 2007

ஓம் நமச்சிவாயா-26

திகில் தொடரா மாறிடுச்சேனு அட்லாண்டாவிலே இருந்து ஜீவாவும், கலிஃபோர்னியாவிலே இருந்து எஸ்.கே.எம்மும் கேட்டிருக்காங்க. எங்களுக்கு நேர்ந்த ஆபத்துக்களைத் தெரிவிச்சால் போறவங்க கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு செயல் படலாமேன்னு ஒரு எண்ணம் அதான், வேறே ஒண்ணும் இல்லை.

நாங்கள் பயணம் செய்த வண்டியின் டிரைவர் இருக்கிறதிலேயே ரொம்பவே அனுபவம் வாய்ந்தவர்னு எல்லாரும் சொல்வாங்க. எந்த வண்டியிலே பிரச்னை என்றாலும் இவர் முன்னாலே போயிடுவார் உதவி செய்ய. கடைசியிலே அந்த வண்டி கிளம்பினதும் தான் வந்து எங்க வண்டியைக் கிளப்புவார். ஆனால் எங்களை முன்னால் போய்ச் சேர்த்துடுவார். கிட்டத் தட்ட இருபது நாட்களாய்ப் பயணித்து வந்ததில் நாங்கள் ஒரு நெருக்கத்தையும், பாதுகாப்பையும் உணர ஆரம்பித்ததால் சற்றும் பயம் இல்லாமல் வண்டியில் உட்கார்ந்து தூங்க ஆரம்பித்தோம். ஆனால் டிரைவர் எப்போதும் போல் இல்லாமல் வண்டியின் முன்னே உள்ள சக்கரங்களைக் கவனிப்பதும், பின் வண்டியை ஓட்டுவதுமாய் இருந்தார். அமெரிக்க நாடு போல் இங்கே சீனாவிலும் இடது பக்கமாய் ஓட்ட வேண்டும். வெளியே பார்த்துக் கொண்டே வந்தார். பர்யாங்கை நோக்கிப் போக சில மலைகள் இறங்க வேண்டும். அவ்வாறு ஒரு 2 முறை மலை இறங்கி விட்டு, பள்ளத்தாக்கில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. சாலையில் இரு பக்கமும் மூன்று அடி அகல, ஆழத்தில் பள்ளங்கள் தோண்டிப் போட்டிருந்தது. எதற்கு என்று புரியவில்லை. ஆனால் வண்டிகள் போய்க் கொண்டிருந்ததால் அதைப் பற்றிச் சிந்தனை செய்யவே இல்லை. எங்கள் வண்டி இம்முறை சற்று முன்னால் போய்க் கொண்டிருந்தது.

நானும் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன். திடீரென வண்டி வேகம் எடுக்கிற மாதிரி ஒரு உணர்வு தோன்ற சட்டெனக் கண் விழித்தேன். வண்டியில் என் இருபக்கமும் உட்கார்ந்திருந்த என் கணவர் மற்றும் ட்ராவல்ஸ் காரப் பையன் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெரியவர் சங்கரனும் தூங்கிக் கொண்டிருந்தாப் போல் இருந்தது. வண்டி திடீரென ஒரு பக்கமாய் ஓட ஆரம்பித்தது. சாலை நடுவில் போகாமல் இம்மாதிரிக் குறுக்கே போய் முன்னால் போவது எங்கள் டிரைவரின் வழக்கம் என்பதால் நான் ஒண்ணும் கலவரமாய் உணரவில்லை. ஆனால் டிரைவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வண்டியை மெதுவாய்த் தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரப் போராடுவதை உணர்ந்தேன். அதே சமயம் வண்டி சாலையின் வலது பக்கம் உள்ள பள்ளத்திற்குள் போய் இறங்கி ஒரு பக்கத்துச் சக்கரங்கள் உள்ளே மாட்டிக் கொள்ள மற்ற சக்கரங்கள் மேலே தூக்கிக் கொள்ள வண்டி இரு சக்கரங்களின் உதவியால் அந்தப் பள்ளத்திற்குள் செங்குத்தாக நின்றது. நான் பயத்தில் அலறவே என் கணவரும், கூட வந்த பயணியும் விழித்துக் கொள்ளவே நிலைமையைப் புரிந்து கொண்ட சங்கரன் அவர்கள் என்னிடம், "கத்தாதீங்க, இந்தச் சமயததில் தான் தைரியமாய் இருக்கணும்." என்று சொல்லித் தேற்றவே, என் பக்கத்தில் இருந்த பையன் பள்ளத்தின் பக்கம் உட்கார்ந்திருந்ததால் வண்டியின் ஜன்னல் வழியாக மெதுவாக வெளியேறி எங்களையும் வெளியேற்ற முயன்றான். பெரியவரும் அந்தப் பக்கமாகவே மெதுவாக இறங்கினார்.

என் கணவரின் உயரம் காரணமாக அவரால் அந்தப் பக்கம் இறங்க முடிய வில்லை. இதற்குள் வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கிக் குதித்து எங்கள் பக்க ஜன்னலைத் திறந்து விட்டு என் கணவர் இறங்க உதவி செய்தார். அவர் மெதுவாய் இறங்கி விட்டுப் பின் என்னை இறக்கினார். ஏற்கெனவே சரியில்லாத வலது காலுடன் இருந்த நான் இப்போது குதிரையில் இருந்து விழுந்து அடி வேறு பட்டுக் கொண்டிருக்கிறேன். இறங்குவதற்குள் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். அவ்வளவு வலி. மற்ற வண்டிகள் நிறுத்தப் பட்டு, எல்லாரும் உதவிக்கு ஓடி வந்தார்கள். டிரைவர் ஆபத்தை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்ததால் அதிகம் அடியோ, காயமோ படாமல் நாங்கள் தப்பித்திருக்கிறோம். அந்தச் சமயம் அவர் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டதால் எங்கள் உயிர் மட்டும் இல்லாமல் உடல் காயமும் இல்லாமல் போனதை உணர்ந்தோம். இது இறை அருள் இல்லாமல் வேறு என்ன? பின் ரொம்பப் போராட்டத்துக்குப் பின் கயிறு, சங்கிலி எல்லாம் கட்டி இழுத்து வண்டியை வெளியே கொண்டு வந்து சக்கரங்களை மாற்றிப் பின் பயணத்தைத் தொடர்ந்தோம்.

Thursday, January 04, 2007

ஓம் நமச்சிவாயா-25.

இப்போ மறுபடி நாம் நம்ம பயணத்தைத் தொடர்கிறோம். தார்ச்சன் காம்பில் இருந்து திருமதி ஸ்ரீலட்சுமியின் உறவினர்கள், மற்றும் ட்ராவல்ஸ்காரர் ஒருத்தர், விசா கொடுக்குமிடத்தில் உதவ ஒருத்தர், மற்றும் குழுவில் இருந்து வெங்கடேசன் என்ற மும்பையில் இருந்து வந்த நண்பரின் தம்பி திரு வரதராஜன் ஆகியோர் போலீஸ் விசாரணை முடித்து உடனேயே ஸ்ரீலட்சுமியின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டுக் காட்மாண்டு கிளம்ப ஏற்பாடு செய்வதற்காக திரு மனோஹர் மற்றும் திரு கிருஷ்ணா ஆகியோர் தங்க, மற்ற குழுவினர் எல்லாரும் அவரவர் வந்த வண்டிகளில் ஏறி "அஷ்டப்த்" எனப்படும் எட்டு மலைகளுக்கு நடுவில் "திருக்கைலை"யும் அதன் எதிரே "நந்தி பீடம்" எனப்படும் நந்தி மலையின் தரிசனமும் பார்க்கப் புறப்பட்டோம். சற்றுச் செங்குத்தான மலை, குறுகலான பாதை. ஏற்கெனவே எல்லாரும் பரிக்ரமாவினால் சற்றுக் களைப்பாக இருந்தார்கள்.ஸ்ரீலட்சுமியின் மரணமும் சேர்ந்து கொண்டதால் எல்லார் மனதிலும் இனம் சொல்ல முடியாத பயம் நிழலாடியது. மேலும் அங்கே செய்ய வேண்டிய பூஜைகள், மற்றும் யாத்திரை முடிவில் செய்ய வேண்டிய பூஜைகள் என்று எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் எல்லாரும் புறப்பட்டோம்.

நல்ல உயரமான மேல் மலைக்குப் போன பின் ஒரு சமவெளி. அங்கே ஒரு ஆறு ஓடுகிறது. அது மானசரோவருக்குப் போவதாய்ச் சிலரும் இல்லை, கங்கா என்று சிலரும், பிரம்மபுத்ரா என்று சிலரும் சொன்னார்கள். எங்கள் டிரைவர் திபெத்திய மொழியில் சொன்னது எங்களுக்குப்புரியவில்லை. எங்களுடன் துணைக்கு எங்கள் ட்ராவல்ஸ் குழுவில் இருந்து யாரும் வர முடியவில்லை. அவர்கள் இன்றிரவு நாங்கள் தங்கும் மானசரோவர் கரையில் டெண்ட் போட்டுத் தங்குமிடம் அமைக்கும் பணிக்காகப் போய் விட்டார்கள். ஆகவே சொல்ல யாருமில்லை. குன்றின் உச்சியில் ஒரு பெளத்த ஆலயமும், திபெத்திய வழக்கப் படி முக்கோண முறையில் கட்டப் பட்ட கொடிகளும் இருந்தன. எல்லாரும் மேலே போனார்கள். என்னால் ஏற முடியவில்லை என்பதால் நான் ஏறவில்லை. எங்கள் டிரைவர்கள் எல்லாரும் அந்த நதியில் இறங்கி அத்தனைக் குளிரிலும் குளித்தார்கள். அவர்கள் குளியலே வேடிக்கையாக இருந்தது. ஒண்ணு,தலையை மட்டும் நனைத்துக் கொள்கிறார்கள் அல்லது பாதி உடலுக்குக் குளிக்கிறார்கள். அந்த மாதிரித் தான் சிலர் தலை மட்டும் நனைத்தும், சிலர் பாதி உடலுமாகக் குளித்தார்கள். நீர் நிரப்பிக் கொண்டார்கள். பின்னர் கைலை எதிரேயே ரொம்பக் கிட்டத்தில் இருக்கிறாப்போல் தெரிகிறது. ஆனால் போக 2 நாள் ஆகும் என்றார்கள். கைலை தரிசனம் முடித்து எதிரே உள்ள சிறிய பலிபீடம் போன்ற குன்றையும், அதற்கு எதிரே நந்தியின் தரிசனமும் (ஒரு குன்று தான் நந்தி போல் அமைப்பில் உள்ளது.) முடித்துக் கொண்டு எல்லாரும் கீழே இறங்கினோம். வண்டி ஒரு மயிரிழை நகர்ந்தாலும் கீழே அதல பாதாளம் தான். அவ்வளவு குறுகல். மேலும் நாங்கள் இத்தனை நாள் மலை ஏறி வந்த பாதை ஒன்றுமே இல்லை என்பது போல் ஒரே கற்களும், பாறையும், புழுதியும் உள்ள சாலை. ஏதோ போட்டிருக்கிறார்கள் தர்மத்துக்கு. பாதை என்ற பெயர் அவ்வளவு தான். கைலை வழி பூராவும் இப்படித்தான் பாதை இருக்கிறது. முந்தைய மத்திய அரசு இதற்குக் கொஞ்சம் வசதியான வழியாக மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்ததாயும், அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் சில எதிர்பாராத நிகழ்வுகளினாலும்,அரசியல் காரணங்களாலும் அதை நடைமுறைப் படுத்த முடியவில்லை எனவும், பின் ஆட்சி மாறி விட்டது எனவும் எங்கள் ட்ராவல்ஸ் குழுவின் பணியாளர்கள் கூறினர்.

"அஷ்டபத்"தில் இருந்து நாங்கள் கிளம்பி அன்று தங்க வேண்டிய இடமான மானசரோவர் ஏரிக்கரையை அடைந்தோம். இது மற்றொரு பக்கம். இதன் ஃபோட்டோ எடுத்தால் இந்தப் பக்கம் வரவில்லை. மறுபடி முயற்சி செய்கிறேன். இந்தப் பக்கம் ஏரிக்கரை கடற்கரை மாதிரி ஒரே மணலாக இருக்கிறது. நீண்ட கடற்கரை போன்ற அமைப்பு மட்டுமல்லாமல் ஏரித் தண்ணீரே அலை அடித்துக் கொண்டிருந்தது. இங்கே தான் பூஜைக்கு உகந்த கற்கள் கிடைக்கும் என்றும் சிலருக்கு லிங்கம் போன்ற அமைப்புள்ள சிற்பமே கிடைக்கும் என்றும் சொல்லி இருந்ததால் எங்கள் குழுவினர் சிலரும், என் கணவரும் லிங்கம் தேடப் போய்விட்டார்கள். மேலும் மானசரோவர் தீர்த்தம் எடுக்க என்று எல்லாரும் கிளம்பும்போது ட்ராவல்ஸ்காரர்களின் உதவி ஆள் ஒருத்தர் தாங்கள் நிறைய தண்ணீர் எடுத்து வைத்திருப்பதாயும், காட்மாண்டு வந்ததும் எல்லாருக்கும் ஒரு 5 லிட்டர் கேனில் தண்ணீர் கிடைக்குமென்றும் சொல்லவே சிலர் திரும்பி விட்டார்கள். ஆனால் என் கணவர் எதற்கும் இருக்கட்டும் என்று தண்ணீர் எடுத்து வரப் போனார். அப்போது எங்கள் டிரைவர் அங்கே இறங்க வேண்டாம் எனவும், ஆழம் அதிகம் என்றும் ஜாடையில் சொல்லித் தான் தண்ணீர் பிடித்து வைப்பதாய்ச் சொல்லிக் கேனை வாங்கிப் போய் அவர் தண்ணீர் பிடித்து வண்டிக்குள் வைத்து விட்டார். இது எவ்வளவு நல்லது என்று காட்மாண்டு போய்த்தான் எங்களுக்குப் புரிந்தது. அன்று எங்களுக்குத் தங்குமிடத்திற்கு மட் ஹவுஸ் எனப்படும் களிமண்ணால் கட்டிய வீடுகள் 2 மட்டுமே கிடைத்ததால், அதில் என்னைப் போல் உடல் நலம் சரியில்லாதவர்களைத் தங்க வைத்து விட்டு மற்றவர்கள் வெளியே டெண்டில் தங்க வைக்கப் பட்டார்கள். இந்த இடத்தில் மட் ஹவுஸுக்கு உள்ளேயே குளிர் தாங்க முடியவில்லை. டெண்ட்டில் உள்ளவர்கள் எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். ஒரு வழியாக அன்றிரவு முடிந்து நாங்கள் மறு நாள் "பர்யாங்" செல்ல (திரும்பும் வழியில் வரும் முதல் ஊர்) தயார் செய்து கொண்டோம். திரு கிருஷ்ணாவும், திரு மனோஹரனும் அதற்குள் வந்து விட்டார்கள். எங்களுடன் வண்டியில் ஆரம்பம் முதல் வந்த பிரெஞ்ச் வாலிபர் மற்ற வெளிநாட்டுக் காரர்களுடன் சேர்ந்து கொண்டதால் எங்கள் குழுவின் தலைமைச் சமையல்காரப் பையன் எங்களுடன் வந்தார். வண்டியும் கிளம்பியது. இரவு சரியாகத் தூங்க முடியவில்லை அதிகக் குளிரால். எங்களிடம் மிகுந்த "ரெட்புல்" பானத்தை (நாங்கள் இருவரும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை) எங்கள் டிரைவரிடம் கொடுத்தோம். வண்டியில் ஏறினதும் எங்களுக்குத் தூக்கமாக வந்தது. சற்று ஆட்டம் போட்டுக்கொண்டே இருந்தது வண்டியும். அதைப் பற்றியும் நினைக்காமல் டிரைவர் வெளியே பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினார், அதையும் சரியாகக் கவனிக்காமல் நாங்கள் அலுப்புடன் இருந்தோம். வண்டி போய்க் கொண்டிருந்தது,சற்று நேரத்தில் நேரப் போகும் ஆபத்தை எதிர்பார்க்காமல்.

Tuesday, January 02, 2007

ஓம் நமச்சிவாயா -24

கைலை மலையின் தோற்றங்களை நாம் நான்கு திசைகளிலும் பார்க்க முடிகிறது. உலகின் மையத்தில் இருப்பதாய்க்கூறப்படும் இந்தக் கைலையே "மஹா மேரு" என்றும் சொல்லப் படுகிறது. நான்கு திசைகளிலும் தோன்றும் 4 முகங்களும், மேல் நோக்கிய ஒரு முகமும் வருமாறு:
கிழக்கு நோக்கிய "தத்புருஷம்" என்னும் முகம் மின்னல் போல் ஒளி வீசும் ஸ்படிகம் என்றும்,
தெற்கு நோக்கிய "அகோரம்" என்னும் முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி வீசும் நீலக்கல்லாகவும்,
மேற்கு நோக்கிய "சத்யோஜாதம்" என்னும் முகம் செந்நிறம் கொண்ட மாணிக்கக் கல்லாகவும்,
வடக்கு நோக்கிய முகம் "வாம தேவம்" எனப்படும் பளபளக்கும் தங்கமாகவும்,
மேல் நோக்கிய "ஈசானம்" என்னும் முகம் கண்களை உறுத்தும் வெள்ளியாகவும் தோன்றுகிறது என்று வர்ணிக்கிறார்கள்.

இப்போ சமீப காலத்தில் தினசரிச் செய்திகளில் இந்தியாவும், சீனாவும் இணைந்து கைலைப் பிராந்தியத்தில் செய்யப் போகும் ஆய்வுகள் பற்றிய செய்திகள் வந்தன.அவை கங்கை, பிரம்ம புத்ரா, சிந்து, சட்லெஜ், கர்நாலி போன்ற நதிகள் எங்கிருந்து உற்பத்தி ஆகின்றன என்பதையும் கண்டுபிடிக்கவும்தான் என்று படித்தோம். கைலையின் ஈசான முகத்தில் இருந்து தான் கங்கை ஆறு உற்பத்தி ஆகி வருவதாயும், மற்ற ஆறுகள் கைலையின் மற்றப் பக்கங்களில் இருந்து உற்பத்தி ஆகி வருவதாயும் சொல்கிறார்கள். எல்லாம் வல்ல அந்த ஆதிப் பரம்பொருள் பத்மாசனத்தில் தன் தொடையில் தேவியை உட்கார்த்தி வைத்துக் கொண்டு நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம். கண்ணால் காணுதற்கு அரிய இந்தக் காட்சியைக் கண்டு கொண்டே 52 கி.மீ. தூரம் உள்ள "பரிக்ரமா"வை மேற்கொள்கிறோம். நிரம்பக் கொடுத்து வைத்தவர்களுக்கும், மிகுந்த மன உறுதி படைத்தவர்களுக்குமே இதை முடிக்க முடிகிறது என்பது உண்மை.

"தார்ச்சன்" என்னும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கும் முதல் நாள் பரிக்ரமா அவ்வளவாகச் சோதனைகள் இல்லாதது, கொஞ்சம் சமவெளி, சற்றுக் குன்றுகள், ஆறுகள் என்றுதான் இருக்கின்றன என்றாலும் சிலர் (எங்களைப் போல்) இதிலேயே களைப்படைந்து போகிறார்கள்.வழி நெடுகக் காணும் கைலையின் தரிசனத்தால் ஓரளவு புத்துணர்ச்சி பெற முடியும். தார்ச்சனில் உள்ள பழமையான பெரிய "பெளத்த ஆலயம்" சீனப் புரட்சியாளர்களால் தரைமட்டமாக்கப் பட்டிருக்கிறது. இரண்டாம் நாள் "பரிக்ரமா" இருப்பதிலேயே சற்றுக் கடினமானது. கட்டாயமாய் எல்லாரும் 7 கி.மீ. நடக்க வேண்டும். அதன்பின் ஒரு செங்குத்தான மலையைக் கடக்கிறார்கள். கிட்டத் தட்ட 19,000 அடி உயரம் உள்ள அந்தச் செங்குத்தான மலையை ஏறிக் கடப்பதுதான் இந்தப் பரிக்ரமாவின் முக்கியமான சாதனை. கட்டாயம் எல்லாருடைய மன உறுதியையும் சோதிக்கக் கூடிய பயணம். 18,600 அடி உயரத்தில் "டோல்மா பாஸ்" என்னும் இடம் வருகிறது. இது சாட்சாத் அம்பாளின் உறைவிடமாய்க் கருதுகிறார்கள். இதற்குப் பக்கத்தில் உள்ள "கெளரிகுண்ட்" இதை உறுதி செய்கிறது. அந்த கெளரிகுண்டிற்குப் போக எல்லாருக்கும் அனுமதி இல்லை. மனோதிடமுள்ள வெகு சிலரே அங்கு அனுமதிக்கப் படுகின்றனர். அங்கிருந்து நீர் எடுத்து வர எங்கள் குழுவில் உள்ள யாரும் போகவில்லை. ட்ராவல்ஸ்காரர்களே போய் நீர் எடுத்து வந்திருக்கிறார்கள்.

இந்த டோல்மா-பாஸில் தான் பிராணவாயு ரொம்பவே கம்மி. இங்கு தங்கப் பத்து நிமிஷங்களுக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை. அதற்குள் இதைக் கடந்து விடவேண்டும். பின் இந்தச் செங்குத்தான மலையில் இறங்க வேண்டும். இதுவும் ரொம்பவே கடினமானது தான். ஆனால் நம் கூட வரும் உதவி ஆளின் துணையுடன் இறங்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அன்று இரவு வரைக் கைலையின் தோற்றம் கிடைப்பதில்லை என்கிறார்கள். பின் மூன்றாம் நாள் முதல் நாள் பயணத்தைப் போல் சற்றுச் சுலபமானது. திரும்பவும் தார்ச்சனில் வந்து முடிகிறது. இதைத் தவிர உள்சுற்று எனப்படும் ஒரு பரிக்ரமா முறையும் உள்ளது கைலையில். இதன் தூரம் 28 கி.மீ. என்கிறார்கள். 13 முறை வெளிச்சுற்றை முடித்தவர்கள் (அதாவது 52 கி.மீ தூரம் உள்ள வெளிச்சுற்று) உட்சுற்றுக்குப் போகலாம் என்று கூறப்படுகிறது. கைலையின் மிக அருகில் போகவும், கரங்களால் தொடும் தூரத்துக்குப் போகவும் முடிகிற இந்தச் சுற்றை முடித்தவர்கள் சில பெளத்தத் துறவிகள் மட்டுமே என்று அறிகிறோம். உள்ளே அமர்நாத்தைப் போல் பனிலிங்க தரிசனம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். கைகளால் தொட முடிந்த தூரத்துக்குப் போனாலும் அந்த இடத்தின் புனிதம் கருதி யாரும் தொடுவதும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.