எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, July 20, 2008

சிதம்பர ரகசியம் - ரவிசங்கருக்கு பதில்கள்!


நாம சரியா எழுதினாலும் சில சமயம் சில கேள்விகளால் ஏற்படும் குழப்பம் இப்போது எனக்கும் ஏற்பட்டது. அதிலே முக்கியமான கேள்வியாக குலசேகர ஆழ்வார் காலமும், திருமங்கை காலமும் எப்போ என்ற கேள்வி தான். குலசேகர ஆழ்வாரும் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாளைப் பத்திப் பாடி இருக்கார்னு நானே எழுதி இருக்கேன் தான் இல்லைனு சொல்லலை. திருமங்கை அதன் பின்னரா, முன்னரா என்ற தெளிவு ஏற்படவில்லை. பொதுவாக ஆழ்வார்கள் காலமோ, நாயன்மார்கள் காலமோ கொஞ்சம் குழப்பமாய்த் தான் போகின்றது எனக்கு. ஒருமுறைக்குப்பலமுறைகள் சரி பார்த்த பின்னரும், ஏழாம் நூற்றாண்டா, எட்டா என்பதிலே ஆரம்பித்து, பாடினது அவங்கதானா என்பது வரையில் குழப்பம் வந்துவிடுகின்றது. இம்முறை அப்படிக் குழப்பம் இல்லாமல் எழுதினாலும் கே ஆர் எஸ் குழப்பிவிட்டார். அவர் கேட்ட கேள்வி இதோ கீழே! என்னுடைய பதில் அடுத்து வருகின்றது. இதை
தேவாரம் தளத்தில் இருந்து எடுத்திருக்கின்றேன்.

3. முக்கியமான கேள்வி
//தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)
என்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது//

குலசேகராழ்வார் காலகட்டம் வேறு!
திருமங்கை காலகட்டம் வேறு! திருமங்கை காலத்தால் பிந்தியவர்!

திருமங்கை சொல்லித் தான் பல்லவன் தனிச் சன்னிதி அமைத்தான் என்றால், அதுக்கு முன்பே குலசேகரர் எப்படி திருச்சித்ரகூடம் என்று பாடி இருக்க முடியும்?

தீட்சிதரிடம் இதை வினவினீர்களா கீதாம்மா? :)

July 18, 2008

//திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலயத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது.

இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்ழாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.

வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars - See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.)


கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. "நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்" என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.
"

பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த

செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த

தில்லைத் திருச் சித்திர கூடம்"
என்று

திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது.
"

தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த ....."
என்று

குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது.
திருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத் தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே" என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

வரகுணன் - சிவபக்தன்:

மாணிக்கவாசகர் - 863 இல் பல சாத்திரங்கள் அறிந்த சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தவர். 863க்குப்பின் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.//

ஆகவே மாணிக்கவாசகர் காலத்திலே விஷ்ணுவுக்குக் கோயில் நடராஜர் சன்னதிக்குப் பக்கத்திலே இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது அவரின் திருக்கோவையாரில் உள்ள திருச்சிற்றம்பலக் கோவையில் இருந்து.
"புரங்கடந்தானடி காண்பான் புவி விண்டு புக்கறியா
இரங்கி எடந்தாயென்றீ ரப்பத் தன்னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந்தானென்று காட்ட மற்றாங்கதுங்காட்டிடு என்று
வராய் கிடந்தான் தில்லை அம்பல முன் றிலம் மாயவனே!" என்று பாடி இருக்கின்றார். இந்தப் பாடல் தேவாரத்தில் எட்டாம் திருமுறையில் உள்ளது.

அடுத்து ரவிசங்கரின் கேள்வி இது:

//பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும்//

ஏன் போனது கீதாம்மா?
தமிழில் பாசுரங்கள் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஏதாச்சும் தடுத்தார்களா என்ன? அதனால் சண்டை மூண்டு, தனியாக அவர்கள் கைக்குப் போய் விட்டதா என்ன?

அடுத்த பதிவுக்கு வெயிட்டீங்க்ஸ் ஆப் அம்பத்தூர் :)))//

இப்போ வைணவர்கள் கைக்குப் போனவிதம் பற்றிக் கொஞ்சம் எழுதப் போறேன். அதற்கு முன்னால் நந்திவர்ம பல்லவனை ஏதோ நான் தான் பரம வைணவன் என்று சொல்லி இருப்பதாய்க் கே ஆர் எஸ் சொல்லி இருக்கும் மகா பயங்கரமான குற்றச்சாட்டுக்குப் பதில் இதோ! :P :P :P

தன் ஆட்சியின் முன்பகுதியில் சைவ, வைணவ சமயங்களில் சமநோக்குடையவனாகவே விளங்கிய நந்திவர்ம பல்லவன், பின்னாட்களில் திருமங்கை ஆழ்வாரின் சகவாசத்தால்தான், வைணவனாக மாறினான் என்றும், "முகுந்தன் திருவடிகளைத் தவிர மற்றொன்றிற்கு இவன் தலை வணங்கவே இல்லை." என தண்டந்தோட்டப் பட்டயம் கூறுவதாய்த் தெரியவருகின்றது. இவன் காலத்திலேயே திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் இருந்திருக்கின்றனர். இவனே முதன் முதல் விஷ்ணுவை இங்கே பிரதிஷ்டை செய்தது. பதஞ்சலி கேட்டதும், விஷ்ணு இங்கே வந்து நாட்டியம் பார்த்ததுக்குமான பதில் பின்னால் வரும். இப்போ கொஞ்சம் வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்!!

பணிந்த பல்லவன் எனத் திருமங்கை ஆழ்வார் நந்திவர்ம பல்லவனையே சிறப்பித்துக் கூறி இருக்கின்றார். இந்தக் கோயிலில் தில்லை மூவாயிரவர்களாலேயே வழிபாடுகள் நடந்து வந்தாலும், காலப் போக்கில், பிற்கால வைணவர்களில் சிலர் இதனால் காழ்ப்புணர்ச்சி கொண்டார்கள். அவர்கள் செய்த தொல்லையால், தில்லையில் நடராஜருக்கு வழிபாடுகள் செய்வதோடு மட்டுமின்றி, நாளாவட்டத்தில், கோயிலின் அனைத்து நடைமுறைகளிலும் இடர்கள் நேரிட ஆரம்பித்தன. அனைத்துப் பூஜைகளும் தடைபெற அதனால் மனம் நொந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், இத்தனைக்கும் காரணம் அங்கே விஷ்ணுவின் மூர்த்தம் கோவிந்தராஜராய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதும், அந்த மூர்த்தத்திற்கு, தீட்சிதர்கள் வழிபாடுகள் செய்துவருவது வைணவர்களுக்குப் பிடிக்காததாலுமே என்று அறிந்து கொண்டே அந்த மூர்த்தத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினான். இது அவன் அவைக்களப் புலவர் ஆன ஒட்டக்கூத்தரின் உலாவிலும், தக்கயாகப் பரணியிலும் குறிப்பிடப் பட்டுள்ளதாய்த் தெரியவருகின்றது. இரண்டையும் அலசணும். ஆகவே கொஞ்சம் வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்!!!!

35 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை குழப்பிட்டீங்க...

இன்னும் 2-3 கேள்வி-பதி பதிவுகள் வந்தால்நடராஜரும், பெருமாளுமே குழம்பிடுவாங்கன்னு நினைக்கிறேன் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் பதிவில் பதிலே ஒன்றும் சொல்லாமல்...
வெறுமனே அவர் குழப்பினார், இவர் குழப்பினார்...
அது வரை வெயிட்டீஸ், இது வரை வெயிட்டீஸ் என்று நோட்டீஸ் மட்டுமே ஒட்டினால் எப்படி கீதாம்மா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதற்கு முன்னால் நந்திவர்ம பல்லவனை ஏதோ நான் தான் பரம வைணவன் என்று சொல்லி இருப்பதாய்க் கே ஆர் எஸ் சொல்லி இருக்கும் மகா பயங்கரமான குற்றச்சாட்டுக்குப்//

நான் சொன்னது
பல்லவன் திருவடி வணக்கம் செய்தான் என்பதை வைத்து அவன் வைணவன் என்ற முடிவுக்கு வராதீர்கள் என்பது மட்டுமே!

இதோ உங்கள் சென்ற பதிவின் வரிகள்
//இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நீங்கள் தேவாரம் தளத்தில் இருந்து கொடுக்கும் தேதிகளை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் கீதாம்மா?
சார்பற்ற தளத்தில் இருந்தோ, வரலாற்றுத் தளங்களில் இருந்தோ தேதிகளைத் தாருங்கள்!

நானும் ஆழ்வார்கள் கலியுகத்துக்கு முன்பே தோன்றினார்கள் என்று திவ்ய சூரி சரிதத்தில் இருந்து எடுத்துத் தர முடியுமே! :))

//திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர்//

ஆக இருவருக்கும் ஒன்பது வயது தான் வித்தியாசம்!
குலசேகரர்-திருமங்கை இருவரும் சம காலத்தவர் என்று சொல்கிறீர்களா?இதை உங்களால் நிரூபிக்க முடியுமா? (சைவத் தளத்தில் இல்லாமல், வரலாற்றுத் தளத்தின் வாயிலாக)

குலசேகரர் சேர நாட்டு மன்னர் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்!
"கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன்" என்பது பாசுரக் குறிப்பு!

ஆக, ஒரு சேர மன்னன், நடு நாட்டில், பல்லவன் எழுப்பிய ஆலயத்துக்கு வருவது எங்கும் குறிக்கப்பட வில்லையா? அந்த நாட்களில் அரசர்கள், இன்னொரு அரசனின் நாட்டுக்கு ஃப்ரீயாக, முன்னறிவிப்பு இன்றிச் செல்ல முடியுமா? இந்தக் கேள்வியும் உடன் எழுகிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

The period of the Azhwars based on Indian Historians range from 500 A.D for Poigai Azhwar, Bhoothatth Azhwar, Pey Azhwar and Thirumazhisai Azhwar; 550 A.D. for Namm Azhwar and Madhurakavi Azhwar;
600 A.D. for Kulasekara Azhwar and Peria Azhwar;
650 A.D. for Sri Andal; 700 A.D. for Thoddaradippodi Azhwar and Thiruppaan Azhwar and
750 A.D. for Thirumangai Azhwar

டாக்டர் மா.இராசமாணிக்கனார்
பூர்ணலிங்கம் பிள்ளை
மு.இராகவ ஐய்யங்கார்
ஆகியோர்களின் வரலாற்றுக் குறிப்புகளை வாசிக்கவும்!

இல்லை பக்தி இலக்கியத்தை வைத்தே ஆழ்வார்களின் கால வரிசையையும் ஒரளவு கணித்துள்ளார்கள்!
(What you gave was an exact year of birth, which not much historians have fixed so far)

The Dates of the Twelve AzhwArs
Both VedAntha Desikan and MaNavALa Maamuni support the chronological
order of the twelve AzhwArs in this sequence :
1. Poygai AzhwAr
2. PUthatthAzhwAr
3. PEy AzhwAr
4. Thirumazhisai AzhwAr
5. NammAzhwAr-Mathurakavi
6. KulasEkarar
7. PeriyAzhwAr-Andal
8. TonDaradippodi
9. TiruPaaNAzhwAr
10. Thirumangai
http://venkateswara.freeservers.com/alvar.html

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரி, விசயத்துக்கு வருகிறேன்!

தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் நந்திவர்மன் திருமாலுக்கு என்று தனி ஆலயத்தை எழுந்தருள்வித்தான். இதை வரலாறு உறுதிப்படுத்துகிறது! யாரும் மறுக்க வில்லை!

நான் உங்களிடம் சென்ற பதிவில் என்ன கேட்டேன்?

//பரமனின் நடனத்தைச் சயனத் திருக்கோலத்தில் மனதால் கண்டு சேவிக்குங்கால், பெருமாளின் பாரம் தாங்காமல், ஆதிசேடன் வினவியதும், பதஞ்சலி வந்ததும்....
இதெல்லாம் இருக்கும் போது.....

தில்லையில் நந்திவர்ம பலவன் செய்தது என்ன?
சன்னிதி சமைத்தானா இல்லை கோவிந்தராசனையே சமைத்தானா? :)//

அது தான் பிரச்சனை.

தில்லையில் திருமால் ஆதியில் இருந்து பரிவார தேவதையாக இருந்து வருகிறார்! இதைப் பதஞ்சலி முதலானவர்களின் குறிப்புகள் காட்டுகின்றன!

பல்லவன் வேண்டுமானால் தனி ஆலயம் எழுப்பி இருக்கலாம்! ஆனால் நான் கேட்பது இது தான்!
1.தில்லைக்கும் பெருமாளுக்கும் புராணப்படியோ, ஆலயக் குறிப்பின் படியோ சம்பந்தமே இல்லையா?

2. திருமால் பரிவார தேவதையாக தில்லையில் இருந்ததே இல்லையா?

3. நந்திவர்மனால் மட்டுமே திருமால் என்னும் பரிவார தேவதை தில்லையில் "புகுத்தப்பட்டதா"?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நான் சொல்வது என்னவென்றால்:

கோவிந்தராசர் தில்லையில் அம்பலவாணர் தோன்றிய காலத்தில் இருந்து இருக்காரு! தனிச் சன்னிதி தான் இல்லை!

அம்பலவாணர் நடனத்தை முதலில் கண்டதே கோவிந்தராசர் தான்!
அது தான் பதஞ்சலி வருவதற்கே வழி வகுத்தது!

இதை உங்க முந்தைய பதிவுகளில் நீங்களே சொல்லி இருக்கீங்க! எதுக்கும் இன்னொரு தபா உங்க பதிவை நீங்களே போயி படிச்சிட்டு வாங்க! :)

குலசேகரர் தில்லைப் பெருமாளை பல்லவன் தனிச் சன்னிதி எழுப்பும் முன்னரே பாடி இருக்கின்றார்! அதுவும் திருச்சித்ரகூடத்து இராமன் உருவில்! அதனால் தான் திருச்சித்ரகூடம் என்றே பெயர்!

திருமங்கை ஆழ்வார் பாடிய தில்லைப் பாசுரம், சிவபெருமானுக்குப் பிரியமான சங்கராபரண ராகத்தில் தான் அமைந்துள்ளது!
பெருமாள், தில்லை ஈசனின் நடனக் கோலம் காண எழுந்தருளி இருப்பதால் தான் சங்கராபரண ராகமாக அமைத்துப் பாடினார்!

ஏதோ பல்லவன் தான் தில்லையில் பெருமாளைப் "புகுத்தி விட்டான்" என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே உங்களை நான் கேட்டுக் கொள்வது!

பெருமாள் பரிவார தேவதையாக இருப்பதால் அவருக்குத் தனியாக பிரம்மோற்சவம் என்பது ஆகம வழிப்படி சரி வராது என்பதையும் சென்ற பதிவிலேயே சொல்லி விட்டேன்! வரிந்து கட்டிக் கொண்டு தனி உற்சவம் நடத்த நினைப்பதும் தவறு என்றும் சொல்லி விட்டேன்!

அது சைவமோ/வைணவமோ, இல்லை வேறு ஏதேனும் ஒன்றோ....
அடியேனைப் பொறுத்த வரை நியாயம், நியாயம் தான்!

அதனால் தான் பிரம்மோற்சவம் தவறு என்று சொல்ல முடிகிறது!
ரங்கராஜ நம்பி கற்பனைப் பாத்திரம் என்றும் தனியாகப் பதிவிட முடிகிறது!
சார்ந்து எழுதி உண்மையை மறைப்பது அடியேன் சுபாவத்தில் இல்லை! சத்யம் பரம் தீமஹீ! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஓக்கே, கீதாம்மா...நான் ரெடி! :)

//அவர்கள் செய்த தொல்லையால், தில்லையில் நடராஜருக்கு வழிபாடுகள் செய்வதோடு மட்டுமின்றி, நாளாவட்டத்தில், கோயிலின் அனைத்து நடைமுறைகளிலும் இடர்கள் நேரிட ஆரம்பித்தன//

தில்லையம்பலத்து நடராசப் பெருமான், அம்பலவாணரின் பூசைக்கு என்னென்ன இடர்களை வைணவர்கள் செய்தார்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

தில்லைத் தீட்சிதர்கள் மூவாயிரவர்! இந்த வைணவர்கள் ஒரு கைப்பிடி கூட இல்லை! தீட்சிதர்கள் பிரச்சனையை மக்களாட்சியால் ஆன ஒரு அரசே சமாளிக்கக் கொஞ்சம் திணறுகிறது!

அப்படி இருக்க, சகல அதிகாரங்களுடன் கோலோச்சும் தீட்சிதர்களின் "தனிப்பட்ட சொத்தான" தில்லை ஆலயத்தில், கொஞ்சூண்டு வைணவர்கள் என்னென்ன இடையூறு செய்ய முடியும் என்பதை லாஜிக்காகச் சொன்னால் நாங்களும் புரிந்து கொள்வோம்! :)

//அனைத்துப் பூஜைகளும் தடைபெற அதனால் மனம் நொந்த இரண்டாம் குலோத்துங்க சோழன்//

பூசைக்குத் தடை என்று மனம் நொந்த மன்னன், மற்ற இடங்களில் எல்லாம் கூட வைணவப் பதர்களை ஓட ஓட விரட்டியதின் பின்னணி என்னவோ? :)

//இத்தனைக்கும் காரணம் அங்கே விஷ்ணுவின் மூர்த்தம் கோவிந்தராஜராய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதும், அந்த மூர்த்தத்திற்கு, தீட்சிதர்கள் வழிபாடுகள் செய்துவருவது வைணவர்களுக்குப் பிடிக்காததாலுமே என்று அறிந்து கொண்டே அந்த மூர்த்தத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்//

அடடா! என்ன ஒரு லாஜிக்!
பூசைக்குத் தடை செய்தால், தடை செய்பவர்களை அப்புறப்படுத்தலாமே! மன்னன் தானே! ஈசியாகச் செய்ய முடியுமே!
அதை விடுத்து எதற்கு இறைவனை அப்புறப்படுத்தினான்?
-இதுக்கு உங்கள் நேரடியான பதில் கிடைக்குமா? :)


சரி...இன்னொன்றும் கேட்கிறேன்!
கோவிந்தராஜரை தில்லை தீட்சிதர்கள் தானே முதலில் பூசை செய்து வந்தது?

தாங்களே வழிபாடு செய்யும் ஒரு மூர்த்தத்தை, அகற்றுதல் பாவம் என்று தீட்சிதர்களுக்குத் தோன்றவில்லையா? மன்னனின் யோசனைக்கு எப்படி தீட்சிதர்கள் உடன் பட்டார்கள்?

தீட்சிதர்கள் என்ன தர்ம சாஸ்திரம் அறியாதவர்களா? :)))
அம்பலம் ஏறக் கூடாது என்பதில் இந்தக் காலத்திலும் உறுதியாக நின்ற தீட்சிதர்கள், ஏன் பெருமாளை அகற்றக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக நிற்கவில்லை? அறியத் தருவீர்களா??

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை//

ஹிஹி
நம்பியாண்டார் நம்பி தெரியும் இல்லீங்களா?

மூவர் அருளிய தேவாரத்தைப் பூட்டி வைத்து நின்ற தீட்சிதர்களை, மன்னன் இராசராசன் உதவி கொண்டு கட்டுப்படுத்தியவர்!
பின்னர் அரும்பாடுபட்டு கரையானுக்கு உணவான தெய்வத் தமிழ்ப் பதிகங்களை வெளிக் கொணர்ந்தவர்!

அவர் காலத்தில் (அதாவது இராஜராஜன் காலத்தில்), தில்லையில் பெருமாள் இருந்தார் என்றால் ஒத்துக் கொள்வீர்களா?

தேவாரம் - பதினோராம் திருமுறை -
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் -
நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது!

வழுத்திய சீர்த் திருமால் உலகு
உண்டு வன் பாம்பு தன்னின்
கழுத்து அருகே துயின்றான் உட்கப்
பாந்தளைக் கங்கணமாச்
செழுந்திரள் நீர்த் "திருச் சிற்றம்
பலத்தான்" திருக் கையிட
அழுத்திய கல்லொத் தன் ஆய
னாகிய மாயவனே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தில்லைத் திருச்சித்ரகூடத்தில் திடீர் என்றோ, வேணும் என்றோ பெருமாள் ஓவர் நைட்டில் எல்லாம் தோன்றி விடவில்லை! புராண காலம் தொட்டு அவரும் ஈசனின் நடனத்தைக் கண்டு களித்துத் தான் வருகிறார்!

குலசேகராழ்வார், ஆலயம் தோன்றும் முன்னரே திருச்சித்ரகூடத்துப் பெருமாளைப் பாடி உள்ளார்!

இடையில் கோயில் இல்லாமல் இருந்த அவருக்கு, திருமங்கை ஆழ்வார் சொல்லி நந்திவர்மன் தனி ஆலயம் அமைத்தான்! இராஜராஜன் காலத்திலும் அது இருந்தது! மாணிக்கவாசகரும் அதைப் பாடி உள்ளார்!

இரண்டாம் குலோத்துங்கன், சமய வெறியால் அதைத் தரை மட்டமாக்கிப் பெருமாளைக் கடலில் விசினான்! உற்சவரை மட்டும் "திருட்டுத்தனமாக" திருமலை அடிவாரம் எடுத்துச் சென்றனர்!

இந்தத் தொல்லையே வேண்டாம், சமயப் பூசலால் ஒன்றுமறியா மக்கள் சிரமப்பட வேண்டாம் என்று இராமானுசர் முடிவு செய்து, திருமலை அடிவாரத்திலேயே கோவிந்தராசனுக்கு தனிக்கோயில் கண்டுவிட்டார்.

பின்னர் குலோத்துங்கன் மறைந்த பின்னர் கூட, தில்லையில் மீண்டும் பெருமாளை நிறுத்த இராமானுசர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை!
ஒரு சிலைக்காக விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாவதில் அவருக்கு என்றுமே உடன்பாடில்லை!

குலோத்துங்கன் காலம் தொட்டு, அச்சுத தேவராயர் காலம் வரை, நானூறு ஆண்டுகள் பெருமாள் தில்லையில் இல்லாமல் தான் இருந்தார்!

விசயநகர மன்னர் அச்சுதராயரே மூலவரையும் உற்சவரையும் புதிதாகச் செய்வித்து, தீட்சிதர்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையே மீண்டும் தில்லையில் நிறுவினார்! ஈசனுக்கு அவர் பழைய நட்பினை, ஆடல் கண்டு உகந்தானை மீண்டும் உருவாக்கித் தந்தார்!

இது தான் தில்லைக் கோயில் வரலாறு!

பின்னாளில் கிருஷ்ணப்ப கொண்டம நாயகன் என்னும் அதிகாரி ஒருவன் சில அடாத வேலைகளில் ஈடுபட்டான்! அவன் வைணவப் பித்து தலைக்கேறியவன்! வைணைவக் குலோத்துங்கன் என்று சொன்னாலும் தகும்!

அவன் பெருமாள் ஆலயத்தை ஏதோ விரிவுபடுத்துவதாக எண்ணிக் கொண்டு, நடராஜர் ஆலயம் வரை அதை இழுத்து விட்டான்! தெற்றி அம்பல அளவில் இருந்த திருச்சித்ரகூடம், அவன் செய்த அடாத செயலால் நீண்டு விட்டது! தீட்சிதர்கள் சிலர் இதை எதிர்த்து கோபுரத்தின் மேல் இருந்து குதித்து உயிர் விட்டனர்! பிற்பாடு இரு தரப்பும் உடன்படிக்கை செய்து கொள்ள ஒருவழியாக அமைதி திரும்பியது!

இப்படி ஒன்றுக்கும் உதவாத விசயத்துக்கு அடித்துக் கொள்ள வேண்டாம் என்று தான் இராமானுசர் முதலான குருமார்களே வீம்பு பார்க்காமல், அமைதியாக பிரச்சனையை மறக்க வைத்தனர்!

ஆனால் பின்னாளில், பிரச்சனைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, கடவுள் தங்களைக் காப்பாற்றுவது போய், தாங்கள் கடவுளைக் காப்பாற்றி விட்ட அற்ப சந்தோஷத்தில் சில மானிடர்கள் திளைத்து விட்டனர்!

தில்லையில் பிரச்சனைகள் இன்றும் வெவ்வேறு வகையாகத் தொடர்கிறது!
இதற்கு மூல காரணம் என்ன என்று பார்த்தால்.....

அன்றில் இருந்து இன்று வரை தீட்சிதர்களின் எதேச்சதிகாரப் போக்கே என்பது ஒருவாறு தெரிந்து விடும்! :(

குமரன் (Kumaran) said...

இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன். கோவிந்தராஜர் தில்லை வந்த வரலாறு என்று திருமங்கையாழ்வார் பாசுரத்தைக் காட்டி சொன்ன போதிலிருந்து கேள்விகளைக் கேட்க இடுகை வரை கை வந்துவிட்டு எதற்கு வம்பு என்று விட்டுவிடுகிறேன். ஆனால் குழப்பத்திற்கு மேல் குழப்பமாக வரலாற்று அடிப்படையில் இல்லாமல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று திருக்கோவிலின் திருப்பணிகளில் உரிமையுள்ளவர் சொன்னார் என்பதற்காக அதனை எல்லோரும் முழுமுதல் உண்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; ஏற்றுக் கொள்ளாதவர்கள் குழப்பவாதிகள் - தாங்களும் குழப்பிக்கொண்டு என்னையும் குழப்புகிறார்கள் - என்ற வகையில் எழுதப்பட்டு வருவதைக் கண்டு ஏதேனும் சொல்வதிலும் கேட்பதிலும் தயக்கம் கூடியது. இன்று அந்தத் தயக்கத்தை மீறி எழுதுகிறேன்.

இரவிசங்கர் கடைசியாகப் பட்டியல் இட்டிருப்பதில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடு உண்டு. திருமங்கையாழ்வார் பாசுரத்தை மட்டுமே வைத்துக் கொண்டு பல்லவன் தனிக்கோவில் கட்டினான் என்று சொல்கிறோமா அன்றி வேறு ஏதேனும் தரவு உண்டா? ஏன் இதனைக் கேட்கிறேன் என்றால் இங்கே எடுத்துக் காட்டப்பட்ட திருமங்கையாழ்வார் பாசுரம் 'பல்லவன் பணிந்தான்' என்று தான் சொல்கிறதே ஒழிய 'பல்லவன் ஆலயம் எழுப்பினான்' என்று சொல்லவில்லை. அதுவும் 'புதிதாக கொண்டு வந்து நுழைத்தான்' என்றும் சொல்லவில்லை. 'பல்லவன் பணிந்தான்' என்றால் அவன் ஒரு அரசனாக வந்து பணிந்தான் என்று சொல்கிறார் ஆழ்வார் என்று சொல்லலாம். கல்வெட்டின் அடிப்படையில் இந்த பாசுரப் பொருளையும் எடுத்துக் கொண்டு 'பல்லவன் பரம வைணவன்' என்று சொன்னால் அதனையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வேறு எந்தத் தரவும் இன்றி இந்தப் பாசுரத்தில் 'பணிந்தான்' என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு அவன் தான் கோவிந்தராஜரைக் புதிதாக தில்லையில் நிறுவினான் என்று அறுதியிட்டுக் கூற இயலுமா?

முன்பே ஒரு முறை கீழ்கண்ட கேள்விகளைக் கேட்டது நினைவிருக்கிறது. கீதாம்மா அவற்றிற்குப் பதில் சொல்லியிருக்கலாம் - தொடர்ந்து சில நாட்கள் வந்து பார்த்துவிட்டு பதிலைக் காணாமல் விட்டுவிட்டேன் - அதன் பின்னால் பதில் சொல்லியிருந்தால் கவனிக்கவில்லை.

- மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவரின் காலத்திற்கு முந்தையது என்ற ஆராய்ச்சிகளைப் பற்றிய கருத்து என்ன?
- திருமங்கையாழ்வார் தான் ஆழ்வார்களிலேயே காலத்தால் மிகவும் பின்னால் வந்தவர் என்ற வரலாற்றுச் செய்தியைப் பற்றிய கருத்து என்ன?

புதிதாக ஒன்று:

- திருமங்கையாழ்வாரும் சீர்காழிப்பிள்ளையாரும் ஒரே காலத்தவர் என்று வைணவ நூற்கள் சொல்கின்றன. சைவ நூற்கள் என்ன சொல்கின்றன?

குமரன் (Kumaran) said...

//இன்னும் 2௩ கேள்வி-பதி பதிவுகள் வந்தால்நடராஜரும், பெருமாளுமே குழம்பிடுவாங்கன்னு நினைக்கிறேன் :-)
//

வழிமொழிகிறேன். :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
//இன்னும் 2௩ கேள்வி-பதி பதிவுகள் வந்தால்நடராஜரும், பெருமாளுமே குழம்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்:-)
//

வழிமொழிகிறேன். :-))//

வழிமொழிதலை வழிமொழிகிறேன்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தாங்களும் குழப்பிக்கொண்டு என்னையும் குழப்புகிறார்கள் - என்ற வகையில் எழுதப்பட்டு வருவதைக் கண்டு ஏதேனும் சொல்வதிலும் கேட்பதிலும் தயக்கம் கூடியது. இன்று அந்தத் தயக்கத்தை மீறி எழுதுகிறேன்//

:)))))
கீதாம்மா, குமரன்
எனக்குச் சிரிப்பு தான் வருது!
நடராசப் பெருமானும், கோவிந்தராசனும் கூட குழம்பி விடுவார்கள் போல இருக்கே!

ஆனா அப்ப கூட அடியேன் குழம்ப மாட்டேன்! ரசம் இருக்க குழம்புவானேன்? :))

கீதாம்மா
ஆலயப் பணியில் உள்ளவர்கள் சொல்வதே வரலாறு ஆகி விடாது! தீட்சிதர்களைக் கேட்டு நீங்கள் எங்களுக்குப் பதில் தரும் சிரத்தையைக் கண்டு வியக்கிறேன்! மகிழ்கிறேன்!

அதே சமயம் கோயில் பணியில் உள்ளவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியாது! ஏன் என்றால் அவர்கள் நம்பகத்தன்மை மேல் கேள்வி வந்து விட்டது! அதனால் வரலாறு, ஆகமம், பதிகம், பாசுரம் என்று பொருத்திப் பார்த்து தான் எடுத்துக் கொள்ள முடியும்! இதை பேரா. நாகசாமி போன்ற வரலாற்று ஆசிரியர்கள் செய்து கொண்டு தான் உள்ளார்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரவிசங்கர் கடைசியாகப் பட்டியல் இட்டிருப்பதில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடு உண்டு//

நன்றி குமரன் :)

//திருமங்கையாழ்வார் பாசுரத்தை மட்டுமே வைத்துக் கொண்டு பல்லவன் தனிக்கோவில் கட்டினான் என்று சொல்கிறோமா அன்றி வேறு ஏதேனும் தரவு உண்டா?//

ஹா ஹா ஹா
அடி மடியிலேயே கையை வைக்கறீங்களே குமரன்!
நான் அமைதியாப் போகப் பார்த்தாலும்...இப்படி கேள்வி கேட்டு எதைச் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேனோ, அதைச் சொல்ல வைக்கறீங்களே! :))

பல்லவன் தனி ஆலயம் எழுப்பினானோ இல்லையோ...
அதற்கு முன்பே ஒரு பரிவார தேவதை சன்னிதி...
சரி வேணாம் விடுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவரின் காலத்திற்கு முந்தையது என்ற ஆராய்ச்சிகளைப் பற்றிய கருத்து என்ன?//

உம்ம்ம்.
இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதே மாணிக்கவாசகருக்குத் தானே! அப்படியானால் சம்பந்தர்-அப்பர்-சுந்தரர் மூவருக்கும் அவர் மூத்தவராக இருக்க வாய்ப்பு உளதா?

//புதிதாக ஒன்று:
திருமங்கையாழ்வாரும் சீர்காழிப்பிள்ளையாரும் ஒரே காலத்தவர் என்று வைணவ நூற்கள் சொல்கின்றன. சைவ நூற்கள் என்ன சொல்கின்றன?//

நானும் அறிய ஆவலாய் இருக்கேன்!

வெட்டிப்பயல் said...

//அதனால் மனம் நொந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், இத்தனைக்கும் காரணம் அங்கே விஷ்ணுவின் மூர்த்தம் கோவிந்தராஜராய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதும், அந்த மூர்த்தத்திற்கு, தீட்சிதர்கள் வழிபாடுகள் செய்துவருவது வைணவர்களுக்குப் பிடிக்காததாலுமே என்று அறிந்து கொண்டே அந்த மூர்த்தத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.//

அதெல்லாம் சரி...

கூரத்தாய்வார் கண்ணை எதுக்கு நோண்டினான்?

ராமனுஜர் குரு பெரிய நம்பிக்கு இப்படி கண்ணை நோண்டும் போது செத்துட்டாராமே... அதுக்கும் இப்படி ஏதாவது நியாயமான காரணம் இருக்கா?

அப்பறம் அப்புறப்படுத்தினா வேற ஊர்ல எங்கயாவது வைக்க வேண்டியது தானே? எதுக்கு கடல்ல போட்டான்???

விட்டா காதுல காளி ஃபிளவரே வைப்பீங்களே...

வெட்டிப்பயல் said...

அப்பறம் உங்க அப்பாவி தீட்சகர்கள் எதுக்கு தேவாரம், திருவாசகத்தை எல்லாம் தனி அறைல பூட்டி கரையான் பிடிக்க வெச்சாங்க?

ராஜ ராஜனே தில்லாலங்கடி பண்ணி தானே வாங்க முடிஞ்சிது...

நல்லவன் வரான் சொம்பை எடுத்து உள்ள வைனு சொல்ற மாதிரி இருக்கு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதற்கு மூல காரணம் என்ன என்று பார்த்தால்.....
தீட்சிதர்களின் எதேச்சதிகாரப் போக்கே என்பது ஒருவாறு தெரிந்து விடும்! :(//

இவ்வாறு சொன்னதற்கு அடியேனை மன்னிக்கவும் கீதாம்மா!

தீட்சிதர்களை நான் குற்றம் சாட்டுவது சிலருக்குப் பிடிக்காது தான்!
ஆனால் வேறெந்த சிவாலயத்திலும் இப்படி பிரச்சனைகள் உள்ளனவா என்று யோசித்துப் பாருங்கள்! நான் சொன்ன மூல காரணம் புரிந்து விடும்!

தீட்சிதர்கள் ஆதிநாள் முதலே தமிழ் மறைகளை முழு மனதோடு வரவேற்கவில்லை!
நம்பியாண்டார் நம்பி பட்ட பாடு உங்களுக்கே தெரியும்!
ஜிராவின் கற்சிலையும் பொற்குவையும் கதையையும் படித்துப் பாருங்கள்! குமரனின் தில்லைப் பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள்!

பின்னாளில் கோவிந்தராசப் பெருமாள் ஆலயத்திலும் பிரச்சனை வெடிக்க இதே காரணம் தான் என்பது என் "யூகம்"! ஆனால் தரவுகள் என்னிடம் இல்லை!

மற்ற எல்லாப் பெருமாள் ஆலயங்களிலும் தமிழ்ப் பிரபந்தங்கள் கருவறையில் ஓதப்படும் நிலை அந்தக் காலத்திலேயே இருந்தது!
ஆனால் தில்லைப் பெருமாள் ஆலயத்தில் தீட்சிதர்கள் தானே பூசை! கருவறையில் தமிழ் ஓத அவர்கள் தடையாய் நின்று இருப்பர் என்பதே என் துணிபு!

இதைச் சுட்டிக் காட்டியதால் தான் வைணவர்கள் சிலர் பூசைக்குத் தடை செய்கிறார்கள் என்று, இன்று போல் அன்றும் சொல்லி, எதேச்சதிகாரமாய் நடந்து கொண்டிருப்பர் - என்று நம்ப பலமான காரணங்கள் உள்ளன என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எது எப்படியோ.....
You can never go back into history and apply today's correction for yesterday's mistakes!

தலைவியிடம் அடியேன் விண்ணப்பம் என்னவென்றால்:
தில்லை வரலாற்றுத் தொடர் சிறந்த பணி!
அதில் இறைவனின் ஆட்டத்துக்கே முக்கியத்துவம் தாருங்கள்!
மனிதர்களின் ஆட்டத்துக்கு அல்ல!


பெருமாளைப் போலவே, நாங்களும் ஈசனின் நடனத்தைக் காணவே ஆவலாக இருக்கிறோம்!

அவர் கைகளில் இருந்து இவர் கைகளுக்கு எப்படி கோயில் போனது? - போன்ற அனாவசிய உள் அரசியல்களைத் தவிர்த்து விடுங்கள்!

தில்லைத் தொடரின் அடுத்த பாகங்களை விரைவில் தொடருங்க கீதாம்மா!
அடியேன் இத்துடன் அமைகிறேன்!

சிவ சிவ!
திருச்சிற்றம்பலம்!!!

இலவசக்கொத்தனார் said...

கீதாம்மா, நானும் சும்மா வந்தேன். படிச்சேனா புரிஞ்சுதான்னு எல்லாம் கேட்கப்பிடாது!!

மெளலி (மதுரையம்பதி) said...

//தீட்சிதர்களை நான் குற்றம் சாட்டுவது சிலருக்குப் பிடிக்காது தான்!
ஆனால் வேறெந்த சிவாலயத்திலும் இப்படி பிரச்சனைகள் உள்ளனவா //

யாருக்கு எது பிடிக்குதோ அதை அவரவர் பிளாக்கிலேயே எழுதக்கூடாது என்னும் போது, எல்லோருக்கும் பொதுவான கோவிலில் தீட்சிதர்களை அதுவும் பகுத்தறிவு மிகுந்த உலகில் யாரும் கேள்வி கேட்க கூடாது என்பது தவறுதான்.

அதே சமயத்தில் எல்லா கோவில்களிலும் ஏதானும் இவ்வாறு இருக்கத்தான் செய்கிறது ஆகவே, வேத/ஆகம வழி நடப்பவர்கள் தங்கள் வேலைகளை மாற்றிக் கொண்டுவிடுவதும் நலமே!!

மெளலி (மதுரையம்பதி) said...

//காதுல காளி ஃபிளவரே வைப்பீங்களே...//

காலி ஃபிளவர் என்ன இன்னும் பெரிசா ஏதாச்சும் சொல்லுங்க பாலாஜி, அதை சாற்றிக் கொள்ள அல்லது இந்த மாதிரி 1000-2000 வருடத்துக்கு முந்தைய விஷயங்களை எல்லாம் தோண்டி-அவரவர் இஷ்டத்துக்கு சொல்லி பழியை சுமக்கத்தான் ஒரு கூட்டம் இருக்கிறதே!! உங்களால் முடிந்த அளவு சேற்றினை இல்லை அதைவிட அசிங்கமானதை வீசுங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆகவே, வேத/ஆகம வழி நடப்பவர்கள் தங்கள் வேலைகளை மாற்றிக் கொண்டுவிடுவதும் நலமே//

அண்ணா
அடியேனை மன்னித்து விடுங்கள்!
இனி நான் இப்படிக் கேள்வி கேட்கவில்லை!

ஏற்கனவே ஆகமங்களை ஆத்மார்த்தமாக அறிந்து மக்களுக்குச் சொல்பவர்கள் குறைந்து வரும் வேளையில், இப்படி எல்லாம் நீங்களும் வெறுத்துப் போய் சொல்லி விடாதீர்கள்!

அரிரேவ அர்ச்சக சாட்சாத்!
அர்ச்சகரே, அரி ரூபமாக இருந்து, பகவத் அனுபவத்தை ஏற்படுத்தி வைக்கிறார் என்பது மரபு!

அவ்வாறு தில்லையில் தீட்சிதப் பெருமக்கள் இல்லையே என்ற ஆதங்கத்தில் தான் கேட்டேன்!

மெளலி (மதுரையம்பதி) said...

//அடியேனை மன்னித்து விடுங்கள்!
இனி நான் இப்படிக் கேள்வி கேட்கவில்லை!//

கே.ஆர்.எஸ், நாம் போனில் இது பற்றி பேசிவிட்டாலும், இங்கு நீங்க போட்டிருக்கும் பின்னூட்டத்துக்கு இங்கு ஒரு பதில் எழுதிவிடுவது நல்லது என்றே எழுதுகிறேன்.

எதற்கு என்னிடம் மன்னிப்பெல்லாம்?, இதெல்லாம் வேண்டாம், தயவு செய்து என்னை பெரியவனாக்காதீர்கள். நீங்க சொன்னதுக்கு நான் என் உணர்வுகளைப் பகிர்ந்தேன் என்பதே சரி.

கேள்வி கேட்பதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் உங்களது அசைவுகளை கவனித்து அதை தனக்கும் வழியாகக் கொள்ளக்கூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்க சொல்வதன் முழுப் பொருள் விளங்கியதா, அல்லது நீங்கள் எடுக்கும் எல்லா நிலைப்பாட்டினையும் அவர்களால் புரிந்து கொண்டு அதனை தமது வழியாகக் கொள்ள முடியுமா?

அவ்வாறு உங்களது எல்லா நிலைப்பாடுகளையும் அறிந்து-புரிந்து கொள்ளாத நிலையில் நீங்க கேட்கும் கேள்விகள் அவர்களுக்கு எந்தவித பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கொஞ்சம் கவனியுங்கள். [இதற்கு நீங்க நேரடி காரணம் இல்லை, ஆனால் உங்க கேள்விகள் ஒரு உந்து சக்தி, சரியா?]

நீங்க கேள்வி கேட்டால் அதன் விளைவாக பலரும் பலவிதத்தில் கேள்வி கேட்டும், பொதுப்படையாக பல சொற்களையும் பதிவினை கழக மேடையாக ஆக்குவது வேதனையாகி விட்டது.

உங்களுக்கும், வெட்டி/பாலஜிக்கும் எனது வார்த்தைகளால் ஏதேனும் மனவருத்தம் இருப்பின் அதற்காக நானும் எனது வருத்ததையும், மன்னிப்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனால் உங்களது அசைவுகளை கவனித்து அதை தனக்கும் வழியாகக் கொள்ளக்கூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள்//

நான் சொல்லுறதை நம்புறாங்களா?
அடக் கடவுளே! நம்ம பொழைப்பை இந்த ஒலகம் இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கு? :)

அண்ணே, பதிவுலகக் கவுன்சிலர் எலெக்சன்-ல கூட எனக்கு ஓட்டு போடுவாங்களா என்பது ஜந்தேகமே!
என்னைய வச்சி இப்படி காமெடி பண்ணிப்புட்டீயளே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவ்வாறு உங்களது எல்லா நிலைப்பாடுகளையும் அறிந்து-புரிந்து கொள்ளாத நிலையில் நீங்க கேட்கும் கேள்விகள் அவர்களுக்கு எந்தவித பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கொஞ்சம் கவனியுங்கள்//

அடியேன் கேள்விகளுக்கு எந்த மந்திரச் சக்தியும் இல்லையண்ணா! :)

அப்படியே நான் நியாயமான கேள்வி ஒன்றை முன் வைத்தாலும், பின்னாடியே வந்து
//You can never go back into history and apply today's correction for yesterday's mistakes//
என்று சொல்லியும் தெளிவுபடுத்தி விடுகிறேன்!

//அந்த மூர்த்தத்திற்கு, தீட்சிதர்கள் வழிபாடுகள் செய்துவருவது வைணவர்களுக்குப் பிடிக்காததாலுமே என்று அறிந்து கொண்டே அந்த மூர்த்தத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்//

தீட்சிதர்கள் செய்யும் பூசைக்குப் போட்டியாக கேவலம் சில மனிதர்கள் வந்ததால் தான்
இறைவனையே அப்புறப்படுத்தினான்! =
இப்படி ஒரு பெரும் தவறைச், சரியான ஆதாரங்கள் ஏதுமின்றி, பதிவில் வரிந்து கட்டிக் கொண்டு நியாயப்படுத்தியது தான், இத்துணை விவாதங்களுக்கும் காரணம்! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

வெட்டிப்பயல் said...

// மதுரையம்பதி said...

//காதுல காளி ஃபிளவரே வைப்பீங்களே...//

காலி ஃபிளவர் என்ன இன்னும் பெரிசா ஏதாச்சும் சொல்லுங்க பாலாஜி, அதை சாற்றிக் கொள்ள அல்லது இந்த மாதிரி 1000-2000 வருடத்துக்கு முந்தைய விஷயங்களை எல்லாம் தோண்டி-அவரவர் இஷ்டத்துக்கு சொல்லி பழியை சுமக்கத்தான் ஒரு கூட்டம் இருக்கிறதே!! உங்களால் முடிந்த அளவு சேற்றினை இல்லை அதைவிட அசிங்கமானதை வீசுங்கள்.//

அப்படியே அப்பாவிங்க மேல நான் பழியை போட்டுட்டேன். சும்மா பேசாதீங்க. இப்ப கூட தமிழ்ல பாடலாம்னு அரசானையோட வந்தவங்களை வழுக்கி விழ வைக்க கோவில் பிரகாரத்துலயும் சிற்றம்பலத்துலயும் எண்ணெயை ஊத்தல???

மேல ஏறன DSP யை தள்ளி விடல? இதையே தீட்சகர்களை தவிர எவன் பண்ணியிருந்தாலும் அங்க என்ன நடந்திருக்கும்னு தெரியுமா???

DSP கூட கோவில் ரூல்ஸை மதிக்கனும்னு சட்டையை கழிட்டிட்டு தான் மேல ஏறாரு. அவுங்களே கோவிலுக்கு மரியாதை கொடுக்கும் போது. அதுக்காகவே இருக்கறவங்க எப்படி நடந்துக்கிட்டாங்க?

அவுங்களுக்கு கொடுக்கற மரியாதையே அதிகம் தான்.

பெருமால் சிலையை தூக்கி கடல்ல போடறதுக்கு சொன்னவங்களுக்கு எல்லாம் நான் இவ்வளவு மரியாதை கொடுக்கறதே அதிகம் தான். அது தவறுனு சொல்லாம சப்பைக்கட்டு கட்டறது யாரா இருந்தாலும் என்னோட பதில் இது தான்.

இதே பதிவை எங்க அண்ணன் KRS எழுதியிருந்தார்னா அவர் பதிவுல இதை விட அதிகமா சண்டை தான் போட்டிருப்பேன். அவர் சொல்றது எனக்கு வேத வாக்கு இல்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Balaji
Cool down! Relax aavunga!

//இதே பதிவை எங்க அண்ணன் KRS எழுதியிருந்தார்னா அவர் பதிவுல இதை விட அதிகமா சண்டை தான் போட்டிருப்பேன். அவர் சொல்றது எனக்கு வேத வாக்கு இல்லை//

ஆகா
அடியேன் சொல்வது எனக்கே வேத வாக்கு இல்லை!
பூத வாக்கு!
பூதத்தாழ்வார் வாக்கு! :)))

****No more comments on this post plz!****

Geethamma, innuma adutha thillai post podala?
Tata Indicom, Geethammavai konjam kavaninga! :))

Sethu Subramanian said...

My two cents worth: Chronology is a real casualty in Thamizh religious history. Mythlogy and religion have been blended so well in (Thamizh) Hinduism that it is difficult to provide historical evidence for anything over 1000 years. So it is all handwaving and it is all a free-for-all affair. Kalki used to write about saivite vs vaishnavite altercation in "ponniyin selvan". It is still true in Cidambaram but not anymore between saivism and vaishnavism but between Dishitars (Sanskrit-oriented) and ThEvaram group. The Dikshitars think and proclaim Cidambaram is their personal property. This is similar to Israel claiming that the middle east is all their terriotory--Judaea and Samaria. We all need to wake up and sense the present.

Geetha Sambasivam said...

வாங்க நாரதரே, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டுனு சொல்லிக்கிறீங்க??? தில்லைக்கோயிலில் தீக்ஷிதர்கள் ஓதுவார்களைப் பாடவிடறதில்லைனு உங்களுக்கு யார் சொன்னது?? எத்தனை முறை போயிருக்கீங்க தில்லைக்கோயிலுக்கு??? போனப்போ எத்தனை கால பூஜைகள் பார்த்திருப்பீங்க?? தருமை ஆதீனமும், திருப்பனந்தாள் காசிமடமும் இணைந்து அங்கே நடத்தும் தேவாரப் பாடசாலையைக் கண்டிருக்கிறீர்களா? பிரஹாரத்தில் இருக்கு இந்தப் பாடசாலை, மாலைவேளைகளில் தீக்ஷிதர்களின் பிள்ளைகள் உட்படப் படிப்பாங்க அங்கே, பாடங்கள் எடுக்கப் படும், மேலும் இந்த ஆதீனங்கள் மாறி மாறி அவங்களோட செலவில் ஓதுவார்களை நியமித்து வருவதும், கோயிலுக்கு எனத் தனி ஓதுவார்கள் இருக்காங்கங்கறதும் தெரியுமா?? அங்கே தேவாரப்பாடல்கள் பாடப்படவில்லை என்பதே தவறான ஒரு கருத்து. தற்போதைய நிலவரப்படி கனகசபையில் தேவாரம் ஓதணும் என்பதே. அதைத் தமிழக அரசால் நியமிக்கப் பட்டவர் மாலை நடக்கும் கால பூஜைக்கு முன்னர் கனகசபைக்கு வந்து புத்தகத்தைப் பார்த்துப் படித்துவிட்டுப் போகிறார். கால பூஜைகள் நடக்கும்போது அங்கே நடக்கும் வைதீக வழிபாட்டு முறைகளைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அபிஷேஹங்கள் முடிந்து அலங்காரங்கள் நடக்கும்போது மட்டுமே ருத்ரம், சமகம் சொல்லப் படுகிறது. தீப ஆராதானைக்கு முன்னால் சொல்லப் படும் தேவாரம், திருவாசகங்களை தீக்ஷிதர்களும் கூடியிருக்கும் பொதுமக்களும் சேர்ந்து பாடுவதைக் காணமுடியும். ரொம்ப நன்றி முதல் வரவுக்கும் கருத்துக்கும்.

Geetha Sambasivam said...

My two cents worth://

அமெரிக்காவிலே இருந்து வந்திருக்கீங்க, கொடுக்கிறதை டாலரில் கொடுக்கக்கூடாதோ?? :P:P:P:P

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தில்லைக்கோயிலில் தீக்ஷிதர்கள் ஓதுவார்களைப் பாடவிடறதில்லைனு உங்களுக்கு யார் சொன்னது??//

அப்படி யாரும் சொல்லலையே!

//எத்தனை முறை போயிருக்கீங்க தில்லைக்கோயிலுக்கு???//

சுமார் பத்து முறை!

//போனப்போ எத்தனை கால பூஜைகள் பார்த்திருப்பீங்க??//

சுமார் பத்து முறை!

//தருமை ஆதீனமும், திருப்பனந்தாள் காசிமடமும் இணைந்து அங்கே நடத்தும் தேவாரப் பாடசாலையைக் கண்டிருக்கிறீர்களா?//

கண்டு இருக்கிறேன்!

//மேலும் இந்த ஆதீனங்கள் மாறி மாறி அவங்களோட செலவில் ஓதுவார்களை நியமித்து வருவதும், கோயிலுக்கு எனத் தனி ஓதுவார்கள் இருக்காங்கங்கறதும் தெரியுமா??//

தெரியுமே!

---------------------------------

ஒரே கேள்வி:

1. அம்பலவாணரின் கருவறையில் தேவாரம் ஓதப்படுகிறதா?

சரி, தீட்சிதர்கள் கருவறைக்குள் "அதையெல்லாம்" ஓத முடியாது-ன்னு சொன்னா...

2. கருவறைக்கு வெளியே பொன்னம்பலத்தில் ஆச்சும் ஓதப் படுகிறதா?

அதுவும் இல்லையென்றால்...
சரி, பூஜைகளோடு பூஜையாகத் தமிழை அர்ச்சகர்கள் ஓதத் தயக்கம் காட்டுகிறார்கள்! அப்படீன்னா குறைந்த பட்சம்...

3. ஓதுவார்களாச்சும், பொன்னம்பல மேடையில் இருந்தாச்சும் ஓத முடியுமா?

---------------------------------

//தீப ஆராதானைக்கு முன்னால் சொல்லப் படும் தேவாரம், திருவாசகங்களை தீக்ஷிதர்களும் கூடியிருக்கும் பொதுமக்களும் சேர்ந்து பாடுவதைக் காணமுடியும்//

உண்மை! இல்லை-ன்னு சொல்லலை!
ஆனால் கேள்வியை இன்னொரு முறை முழுமையாக உள் வாங்கிக் கொள்ளுங்கள்!

* எல்லாப் பூஜைகளும் முடிஞ்சாப் பிறகு,
* கருவறையில் ஓதாமல்,
* பொன்னம்பல மேடையில் ஓதாமல்
* நந்திக்கும் பின்னால்..படிக்கட்டுக்கும் கீழே இருந்து...ஏதோ நான்காம் தரக் குடி மக்கள் போல்...
* சரி, பூஜையெல்லாம் முடிஞ்சாச்சி...இப்போ உங்க தேவாரங்களை, அப்படியே, கீழே இருந்தே, ஓதிக்கோங்க என்பது போல் அல்லவா ஓதப்படுகிறது?
* ஓதுவாரும், கீழே இருந்தபடியே, "விதியே"-ன்னு பாடுகிறார்?

ஏன் இந்த Treatment?
இது தான் அடிப்படைக் கேள்வியே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கால பூஜைகள் நடக்கும்போது அங்கே நடக்கும் வைதீக வழிபாட்டு முறைகளைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை//

//அபிஷேஹங்கள் முடிந்து அலங்காரங்கள் நடக்கும்போது மட்டுமே ருத்ரம், சமகம் சொல்லப் படுகிறது//

ஏன்?
கால பூசைகளின் போதோ...
அபிடேகத்தின் போதோ...
அலங்காரத்தின் போதோ...

அபிடேக/அலங்காரத்துக்கு என்றே இருக்கும் சில தேவாரங்களைச் சொல்லக் கூடாதா?
தே+ஆரம் = தெய்வத்துக்கு+மாலை என்று பேரிலேயே அலங்காரம் உள்ளதே!

* பெருமாள் கோயில்களில் கருவறையில் பல்லாண்டு பல்லாண்டு-ன்னு ஓதறாங்களே?
* அபிடேக காலத்தில்...நாரணா நீ நீராட வாராய்-ன்னு பாசுரம் சொல்லப்படுகிறதே!
* அலங்காரத்தின் போது, தோமாலை சேவையாக, செண்பகப் பூச்சூட வாராய்-ன்னு ஓதுகிறார்களே?
* அதுவும் கருவறைக்குள் அர்ச்சகரே ஓதுகிறாரே? மக்களும் சொல்கிறார்களே!
* புறப்பாடு சமயங்களில், பாசுரங்களை ஊர் அறிய முன்னே சொல்லிக் கொண்டு போகிறார்களே? தமிழுக்குப் பின்னால் அல்லவா இறைவன் வீதியுலா வருகிறான்! அவனுக்கும் பின்னால் அல்லவா வேத கோஷங்கள் வருகின்றன?

- இதனால் எல்லாம் "புனிதம் கெட்டாற் போலவோ, ஆகமம் கெட்டாற் போலவோ" தெரியவில்லையே!
- அப்படி இருக்க, இங்கு மட்டும் ஏன் இந்த மனப்பான்மை? வேறுபாடு?

இது தான் கீதாம்மா, அடிப்படைக் கேள்வி!
மற்றபடி தமிழைக் கூண்டுக்கட்டாக கட்டி வெளியில் வீசிட்டாங்க-ன்னு எல்லாம் யாரும் புகார் பண்ணலை! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கீதாம்மா...
கூகுளில் எதையோ தேடப் போய் இந்தப் பக்கம் வந்து நின்னுது!
அட, தலைப்புலயே என் பேரை வச்சி இருக்காங்களே! என்ன அதிசயம்-ன்னு வந்து பார்த்தாக்கா, இது அந்தப் பழைய பதிவு-ன்னு ஞாபகம் வந்துருச்சி! :))

சேதுராமன் சார் வேற ஏதோ கேள்வி கேட்டிருந்தாரா...
நீங்களும் அவருக்குப் பதில் கொடுத்து இருந்தீங்களா...
அதான் நானும்...அந்த நாள் ஞாபகம்-ன்னு பின்னூட்டம் போட்டு விட்டேன்! கண்டுக்காதீங்க! :)