எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 03, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்!


ஆரம்பம் இங்கேஆந்திரப் பிரதேசத்தில் அஹோபிலம் உள்ளது. கர்னல் மாவட்டம், நந்தியால் தாலுகாவைச் சேர்ந்த இந்த அஹோபிலத்திற்குச் செல்ல நேரடி ரெயில் வழி இல்லை. அருகே இருக்கின்றது என்று சொல்லப் படும் இரு ரயில் நிலையங்கள், மும்பை-சென்னை வழியில் உள்ள கடப்பாவும், பங்களூர்-விசாகப் பட்டினம் வழியில் வரும் நந்தியால் நிலையமும் ஆகும். சென்னையில் இருந்து செல்வதென்றால் கடப்பா வரையில் ரெயிலில் சென்று அங்கிருந்து கிட்டத் தட்ட 110 கி.மீ. உள்ள அஹோபிலத்துக்குப் பேருந்துகளில் தான் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து நேரடியாகப் பேருந்துகள் இருப்பதாய்த் தெரியவில்லை. எங்கிருந்து சென்றாலும் அல்லகட்டா என்னும் ஊரைக் கடந்து அங்கிருந்தே 24 கி.மீ. தூரத்தில் உள்ள அஹோபிலத்தை அடைய வேண்டும். அல்லகட்டாவில் இருந்து அஹோபிலம் செல்ல பேருந்துகள், வேன்கள் கிடைக்கின்றன.

நாங்கள் சுற்றுலாத் திட்டத்தின் மூலம் சென்றோம். ஓம் ட்ராவல்ஸ் என்ற பயண அமைப்பாளர்கள் ஏற்பாடுகள் செய்யும் சுற்றுலாத் திட்டத்தின் மூலம் சென்றோம். இவர்கள் இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். நாங்கள் முதன்முதலாய் அஹோபிலத்துக்குச் செல்லவே இவர்களை அணுகினோம். தன்னந்தனியாகவோ, அல்லது இருவராகவோ சென்றால் கொஞ்சம் கஷ்டம் தான். முழுக்க முழுக்கக் காட்டுப் பயணம். காட்டில் சிங்கங்கள் இல்லை என்கின்றனர். ஆனாலும், சிறுத்தைகளும், கரடிகளும் மிகுதியாக இருப்பதாய்க் கூறுகின்றனர். ஆகவே குழுவாகப் பயணம் செல்வதே சிறந்தது. 23 அக்டோபர் 2008 ஏற்பாடு செய்யப் பட்ட பயணத்திட்டத்தில் செல்ல நினைத்து முன்பணம் கட்டி இருந்தோம். ஆனால் அதற்குச் சரியாகப் பத்து நாட்கள் முன்னதாய் எனக்குக் கையில் அடிபட்டுக் கைக்கட்டுப் போட்டு 21 நாட்கள் எடுக்கக் கூடாது என்று சொல்லி இருந்ததால் போக முடியவில்லை. பயண அமைப்பாளர்கள் முன்பணம் எவ்வளவு கட்டினாலும் திரும்பத் தரமாட்டோம் என்று எழுதியே கொடுத்துவிடுகின்றனர். ஆகவே பணம் கிடைக்காது என்று தெரிந்தாலும், வேறே யாராவது உறவினர்கள் செல்லட்டும் எனக் கேட்டுப் பார்த்தோம். யாரும் தயாராக இல்லை. ஆகவே பயண அமைப்பாளரிடமே யோசனை கேட்டதில் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் ஒரு குழு செல்ல இருப்பதாயும், எங்கள் பணத்தை அதற்கு முன்பதிவு செய்து கொள்ளுவதாயும் கூறினார். கொஞ்சம் ஆறுதல் அடைந்தோம்.

மெல்ல மெல்ல ஜனவரியும் வந்தது. கிளம்பும் நாளும் வந்தது. என்னோட அண்ணா(பெரியப்பா பையர்) வுக்கு ஜனவரி 23 அன்று தான் சஷ்டி அப்தபூர்த்தி திருக்கடையூரில். அங்கே சென்றால் திரும்பி வந்து கிளம்பமுடியாது என்று முன்னரே தெரிந்து கொண்டு அவர்களிடம் மன்னிப்பு மிக வேண்டிக் கேட்டுக் கொண்டு, அன்று கிளம்பினோம். அசோக் நகரில் வந்து பேருந்தில் ஏறிக் கொள்ளச் சொல்லி இருந்தார். ஆகவே அசோக் நகர் சென்றோம். பேருந்தைக் கண்டு பிடித்தோம். நாங்க தான் முதல் ஆட்களாய் போயிருக்கின்றோம் எனப் புரிந்தது. பேருந்து கும்பகோணம் "ரதிமீனா" நிர்வாகத்தைச் சேர்ந்தது. சரி, கொஞ்சம் வசதியாய் இருக்கும் என ஆறுதல் அடைந்தோம். எவ்வளவு தப்புனு போகும்போது தான் புரிந்தது. ஒவ்வொருவராய் வந்ததும் பேருந்தில் ஏறிக் கொண்டோம். பயண அமைப்பாளர் இப்போத் தான் உட்காருமிடம் ஒவ்வொருத்தருக்காகச் சொல்ல ஆரம்பித்தார். அநேகமாய் அனைவருமே முன்னம் பக்கம் கேட்க அவரோ எதுவுமே பேசாமல் அவர் இஷ்டத்துக்கு உட்கார வைத்தார். இதிலே ரொம்ப வயசானவங்க எல்லாம் பின்னால் போய் உட்காரும்படியும் சின்னவங்க எல்லாம் முன்னாலே உட்காரும்படியும் ஆகியும் அவர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு பக்கத்து இடம் பூராவும் சைதாப்பேட்டையில் ஏறுகிறவங்களுக்கு என்று ஒதுக்கி விட்டார்.

என்னோட கையைக் காரணம் ஏற்கெனவே காட்டி இருந்தாலும் கடைசி சீட்டே கொடுத்தார். நான் பிடிவாதமாய்ப் போக மறுத்து முன்னால் இருந்த மூவர் அமரும் சீட் ஒன்றில் அமர்ந்துவிட்டேன். கொஞ்சம் சொல்லிப் பார்த்துவிட்டு பேருந்தில் அனைவரும் ஆட்சேபிக்கவே பேசாமல் இருந்துவிட்டார். ஆனாலும் பேருந்தில் இடநெருக்கடி அதிகம். யாருக்குமே முன்னாலோ, பின்னாலோ உட்கார வசதியாகவே இல்லை. கைப்பிடிகள் கிடையாது. உடைந்து கிடந்தன. அவற்றைச் சரிசெய்யவே இல்லை. பேருந்து திரும்பும்போதெல்லாம் ஓரத்தில் உட்கார்ந்திருந்த நானும், என்னைப் போன்ற மற்றவர்களும் பிடிக்க ஆதாரமில்லாமல் ரொம்பவே கஷ்டப் பட்டோம். என்றாலும் ஓட்டுநர் மிகத் திறமைசாலி. கிட்டத் தட்டப் பத்துமணி நேரம் ஆகும் பிரயாணத்தை அவர் எட்டு மணி நேரத்துக்குள் கொண்டு வரப் பார்த்து ஓரளவு வெற்றியும் பெற்றார். காலை 6-30 மணி அளவில் அஹோபிலம் ஊர் போய்ச் சேர்ந்தோம். அங்கே போய் இறங்கிக் கொண்டு எங்களுக்கென ஏற்பாடு செய்திருக்கும் அறைகளுக்குக் காத்திருந்தோம்.

6 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

சே.வேங்கடசுப்ரமணியன் said...

அடுத்து என்ன ? ஆவலாய் உள்ளேன்.எனது நீண்ட நாள் ஆசை அகோபிலம் போகவேண்டும் என்பது.எழுத்தாளர் ஜெயமோஹனுக்குப் பிறகு உங்கள் பதிவு தான் அகோபிலம் பற்றி படிக்க கிடைத்தது.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

Geetha Sambasivam said...

வாங்க வலைப்பூக்கள், நன்றி. போய்ப் பார்த்துட்டு வந்தேன். ஆக்டிவேட் ஆகி இருக்கு.

Geetha Sambasivam said...

வாருங்கள் வேங்கட சுப்பிரமணியன், நானும் படிச்சேன், ஜெயமோகனின் கட்டுரையை. அவரோட கண்ணோட்டத்துக்கும், எனக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கும். நன்றி உங்கள் வரவுக்கு.

வல்லிசிம்ஹன் said...

கீதா, ரொம்ப சந்தோஷம் இந்தத் தொடரை ஆரம்பித்ததற்கு.

நன்றிம்மா.

Unknown said...

Fantastic Really supper Explanation anmigam is good I realise I am going there to dharsan i would like to move there
if the almighty permits me.

romba nandri amma

ennaala tamil la type panna mudiyala mannikkanum arumai ya irrukirathu enna kai maru seiya mudiyum ungalluku yennal intha anmiga arpanipukku

siddhar siva vakkiar padal varukirathu 550 padalgal
arumaiyai vanthirukkirathu kettal
nam yenna yellam Thedurom innu oru thelivu varum manathuku

viruppamum amaippum ullavankalluku sidhar sivavakkiar anugiram kidaikattum cd yum kidaikum

thodarpukku 97907 87789
mithun rajesh kannan

ithu viyaparam alla ithana blog spot la nalla visiyam gnanam irruku athanala en manam kaimara ithai seiyanum innu nenaikkuthu

intha thagaval than chinna kaimaru innu manathu solgirathu

cd (amount) villai patri thodarpu kollungal ennaku alla
meela ulla yennuku

ithai paditha athunai ullam kallukum siram thaalintha vanakkam

nandri
anbudan
Mettur Mohan MMM