எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 28, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணீந்தோம்!

உள்ளே நுழைந்தது ஒரு சேடிப்பெண். அவள் புன்னகையோடு வந்தவள் குல சேகரனை நேருக்கு நேர் பார்த்ததால் நாணம் அடைந்தாள். வெட்கத்துடன் தலை குனிந்த வண்ணம் ஒரு பேழையை எடுத்து அவனிடம் நீட்டினாள். அது என்ன எனக் கேட்ட குலசேகரனிடம் உள்ளே லேகியம் இருப்பதாகவும் அதை வேளா வேளைக்கு விழுங்குமாறூ கொடுத்தனுப்பியதாகவும் சொன்னாள். யார் கொடுத்தது எனக் கேட்ட குலசேகரனிடம் வித்வாம்சினி ஹேமலேகா தான் கொடுத்து அனுப்பியதாகவும் சொன்னாள்.  அந்தப் பெண்ணீற்குப் பதினைந்து வயதுக்குள் தான் இருக்கும். கூச்சம் நிரம்பியவளாக இருந்தாள்.  அவளீடம் தன் நன்றீயைத் தெரிவித்துக் கொண்ட குலசேகரனைப் பார்த்து அவள் உடம்பு எப்படி இருக்கிறது என வித்வாம்சினி விசாரித்து வரச் சொன்னதாகக் கூறீனாள்.

குலசேகரன் தான் இப்போது உடல் நலத்தோடு இருப்பதாய்ச் சொன்னான். அவளூக்கும் ஹேமலேகாவுக்கும் தன் நன்றீயையும் தெரிவித்துக் கொண்டான். அவள் திரும்பத் தயாரானபோது குலசேகரன் அவளாஇ மீண்டும் அழைத்துத் தான் ஹேமலேகாவுக்கு ஒரு செய்தி கொடுப்பதாகவும் அதை அவளீடம் தெரிவிக்க வேண்டும் என்றூம் கேட்டுக் கொண்டான். செய்தியைக் கேட்ட அவளீடம் அவன், "படிதும் மே தேஹி கஞ்சித் காவ்ய க்ரந்தம்" எனச் சொல்லும்படி கூறீனான். அவள் திகைப்புடன் மீண்டும் கேட்டாள். அதை அவள் தெலுங்கு என நினைத்தாள். ஆனால் குலசேகரன் அது தெலுங்கு இல்லை வடமொழி எனச் சொன்னான். அவள் உச்சரிப்பு வேறுபட்டிருக்கக் குலசேகரன் அதைத் திருத்தி ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லச் சொல்லி மறூபடி திருத்தினான்.

இரண்டு மூன்றூ முறாஇ அதைச் சொல்லிப் பார்த்த அந்தப் பணீப்பெண் அவனிடம் இதன் பொருள் என்ன எனக் கேட்டாள். குலசேகரன் அதற்கு ஹேமலேகா அதனைப் புரிந்து கொள்வாள் எனச் சொன்னான். அவள் பெயரைக் கேட்டுத்தெரிந்து கொண்டான் குலசேகரன். அபிலாஷிணீ எனத் தன் பெயரைச் சொல்லிவிட்டு ஓட்டமாகச் சென்றாள் அந்தப் பெண்.   அன்றீரவு குலசேகரன் பிரதிமா என்னும் நாடகத்தை ஓலைச்சுவடிகள் வழியாகப் படிக்கையில் கட்டியம் கூறூம் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தான். ராணீ கிருஷ்ணாயி வந்து கொண்டிருந்தாள். குலசேகரன் அவளாஇ உபசரித்து அமரச் செய்தான். அவன் உடல் நலம் குறீத்துக் கேட்டறீந்தாள் கிருஷ்ணாயி!

பிறகு அவன் படிப்பதை அறீந்து கொண்டவள் வாள் பிடித்துப் போர் செய்ய வேண்டியவன் இப்போது நூல் பிடிக்கிறான் எனக் கேலியும் கோபமும் கலந்து சொல்ல, குலசேகரன் தான் ஆரம்பத்தில் படித்துக் கொண்டு இருந்ததையும் ஶ்ரீரங்கத்தின் நிலைமையாலேயே வாள் பிடிக்க வேண்டி வந்ததையும் சொன்னான். ஆனால் தனக்குப் போரை விட இம்மாதிரிப் புத்தகங்கள் படித்து மன அமைதியுடனே இருக்கவே பெரும் விருப்பம் என்றூம் சொன்னான்.  ஆனால் கிருஷ்ணாயியோ காவியங்கள், புராணங்கள் படிக்க ஏற்ற சூழ்நிலை நாட்டில் இப்போது இல்லையே என்றாள்.  குலசேகரன் போன்ற வீரர்கள் அத்தகைய சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்றாள். மேலும் தொடர்ந்து இப்போதைய சூழ்நிலையில் இதை எல்லாம் படிப்பதற்குத் தடை போடவேண்டும் என்றூ சொன்னபடியே குலசேகரன் கையிலிருந்த ஓலைச்சுவடிகளை அவன் எதிர்பாரா வண்ணம் பிடுங்கி அங்கிருந்த விளக்கில் காட்டி எரிக்க ஆரம்பித்தாள்.

பதட்டத்துடன் குலசேகரன் அதைத் தடுக்க முயன்றான். ஆனால் அது முழுதும் எரிந்து முடிந்து விட்டது. குலசேகரன் கண்கள் கண்ணீரால் நிறாஇந்தது. மஹாராணீயோ அவனைப் பார்த்து ஹாஹாஹா எனச் சிரித்தாள். இந்த ஓலைச் சுவடியின் மீது இவ்வளவு வாஞ்சையா உனக்கு எனவும் கேட்டாள். குலசேகரன் அதற்கு அந்த ஓலைச் சுவடிகள் இன்னொருவர் சொத்து எனச் சோகமாகச் சொன்னான். அப்போது கிருஷ்ணாயி அந்த ஓலைச் சுவடிகள் யார் சொத்து எனச் சொல்லட்டுமா என்றூ கேட்டு விட்டு "படிதும் மே தேஹி......" என ஆரம்பித்தாள்.

குலசேகரனுக்கு அவளீடம் ஆத்திரமும் வெறூப்பும் ஏற்பட்டாலும் வெளீக்காட்டிக் கொள்ளவில்லை. தான் சேடியிடம் சொன்னது இவளூக்கு எப்படித் தெரியும்? ஒரு கால் இவள் வேலை தானா அது என்றேல்லாம் யோசித்தான். ராணீயோ குலசேகரனிடம் , " நீ வந்த வேலை என்ன என்பது தெரியுமல்லவா உனக்கு? எங்கள் பாதுகாப்புக்காகவே நீ வந்திருக்கிறாய்! அதை மறந்து வேறே வேலையில் ஈடுபடாதே!" என எச்சரித்தாள்.

4 comments:

ஸ்ரீராம். said...

அதற்கு என்ன அர்த்தம்?

வல்லிசிம்ஹன் said...

இப்படிக்கூட ராணிகள் இருப்பார்களா.
தொடர்கிறேன் கீதா.

Geetha Sambasivam said...

Thank you both!

//அதற்கு என்ன அர்த்தம்?// புரியலை ஶ்ரீராம்!

ஸ்ரீராம். said...


// /அதற்கு என்ன அர்த்தம்?// புரியலை ஶ்ரீராம்! //

படிதும் மே தேஹி கஞ்சித் காவ்ய க்ரந்தம்...